Tuesday, February 28, 2006

உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்

உடன்பிறப்பே,

கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html என்ற தளத்திற்கு சென்று பின்னூட்டமிடு்.

இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு

கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.

Monday, February 27, 2006

பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2

இதுதான் எங்கள் விளம்பரம் - பாண்டி நாட்டு தங்கம்ஸ்.

விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.

தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)

வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)

எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )

நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)

பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு

நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)

தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா

ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)

டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க

இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)

இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?

Friday, February 24, 2006

புதிரா? புனிதமா? - விடைகள்

புதிரா? புனிதமா? - இதை பட்டிமன்ற தலைப்பா வெச்சிருந்தா சாலமன் பாப்பய்யா (ஓ! இப்போ இவரை பத்தி பேசக்கூடாதோ) கூட தேவையே இல்லாம புதிரே அப்படின்னு ஏகோபித்த முடிவா இருந்திருக்கும். இப்படி அமோக வரவேற்பைக் கொடுத்த மக்களுக்கு நம் நன்றி. சும்மா 200 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய நண்பர்களுக்கு நன்றியோ நன்றி. இவ்வளவுக்கும் தொடர்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றதென்னவோ பத்து பேர்கள் கூட இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ, கோ.இராகவன், சதீஷ், மதுமிதா, பெனாத்தல் சுரேஷ், கௌசிகன், பாலராஜன்கீதா - அவ்வளவுதான். அடிக்கடி வரும் பெரியவர் ஹரிஹரன்ஸ், சின்னவன், கைப்புள்ள, தியாக், சீமாச்சு போன்றவர்களைக் காணவே காணோம். என்ன விஷயமோ தெரியவில்லை.

இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)

ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.

விடைகளைப் பார்ப்போமா


1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்

அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு

ஆவோ - இந்திரா

சில கருத்துகள்

  • முதல் குறிப்பிற்கு ஒரு வீடு இரு வாசல் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. கேட்ஸ் என்றால் வாசல்கள்தானேன்னு விளக்கம் வேற. ஆனா படம் பேரு ஒரு வீடு இரு வாசல்கள் இல்லையே. அதனால இந்த பதிலை ஒத்துக்கொள்ளவில்லை.
  • திருட்டுப்பயலே ரிலீஸ் ஆகாததுனால ரொம்ப பேருக்கு தெரியலை. அந்த படம் ப்ரொடியூசர் நம்மளை தனியா கவனிக்கணும். கடைசியா பச்சோந்திதான் விடையை அவுட் பண்ணிட்டாரு.
  • பாகபிரிவினை குறிப்புதான் பெஸ்ட் அப்படின்னு அதிகம் பேர் சொன்னாங்க.
  • ஏழுமலை. இந்த குறிப்பை ஏழாவதாக வைத்ததும், உலகின் ஏழு உயரமான சிகரங்களை வரிசை படுத்தியதும் நான் செய்த சிறு நகாசு வேலைகள். உன்னிப்பாக இதையும் பார்த்து கண்டு பிடித்து விட்டார்கள் நம் மக்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
  • அதே போல் எட்டாவது குறிப்பில் உள்ள மலர்கள் எல்லாமே வேறு திரைப்பட பெயர்கள். இதையும் கௌசிகன் கண்டுகொண்டார்.
  • பத்தாவது குறிப்பில் ஒரு பெண் பெயரும், ஒரு ஆண் பெயரும் கலந்து, வருவதும் ஒரு ஆணின் பெயராக கொடுத்ததில் பலபேர் வழி தவறிவிட்டனர்.

Thursday, February 23, 2006

நான் பிடிச்ச நான்கு ஆட்கள்

ஏதோ ஓரமாய் இருந்த நம்மையும் இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டுடாரு நம்ம வைத்தியர் .

நம்மளும் சும்மா இல்லாம ''ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது) நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....சரி சரி போட்டுருவோம். :)" ன்னு பின்னூட்டம் போட்டாச்சு.

ஜாலியா எழுதலாம்ன்னு போய் இப்போ கொஞ்சம் சீரியஸாவே போன நம்ம லிஸ்ட்.

நானிருந்த நாலு ஊர்கள்
1. கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
சென்னையில் பிறந்தாலும் சில நாட்களிலே அழைத்து வரப்பட்டு வளர்ந்த இடம். அப்பளத்திற்கு பெயர் போன ஊர். இப்பொழுது சினிமா ஷூட்டிங் பிரதான தொழிலாய் தெரிகிறது. நம் கிராம அனுபவங்களின் நிலைகளன்.
2. சென்னை மாநகரம்
பதின்ம வயதுகளில் மீண்டும் பிறந்த இடத்திற்கே வருகை. இதனால் நகர வாழ்க்கையின் சுவைகளையும் மிஸ் பண்ணவில்லை. நமக்கும் இங்கே ஒரு 50 லிஸ்ட் இருக்கே.
3. கோவை மாநகரம்
வேலை நிமித்தம். குடும்பத்துடன் இல்லாமல் எனது தனியான வாழ்க்கையை ஆரம்பித்த இடம். பின் திருமணமாகி தனியை விட்டுவிட்டு வாழ்க்கையை மட்டும் தொடர்ந்த ஊரும்கூட.
4. பெங்களூரு மாநகரம்
வங்கி வேலையை விட்டுவிட்டு மென்பொருளாளனாய் மாறிய இடம். என் மகன் பிறந்த இடம், எங்கள் அரண்மணை (சிறியதாகவே இருந்தாலும்) இருக்கும் இடம் என பல ஒட்டுதல்கள். இப்பொழுது அமெரிக்கவாசியாய் இருந்தாலும், சொல்வதற்கு விசேடமாய் எதுவுமில்லை.

செல்ல விரும்பும் நாலு இடங்கள்
1. பாரிஸ்
பல இடங்கள் போயிருந்தாலும், இதுவரை விமான நிலையம் வரைதான் இங்கு போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கும் ஓர் இடம்.
2. சிருங்கேரி, கர்நாடகா
மிக அமைதியான இடம். பல முறை சென்றிருக்கிறேன். ஆனாலும் சலிப்பைத் தராத இடம். சென்று வந்தவுடன் மனது லேசாகிவிடுவதென்னவோ நிஜம்.
3. ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து
ரொம்ப அல்பத்தனமான காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களிலும் கால் பதித்தாகிவிட்டது. அதனால் இங்கும் சென்றால் மக்கள் வாழும் அனைத்து கண்டங்களும் சென்றாகிவிட்டது என்ற ஒரு ஆசைக்காக.
4. ந்கோரோந்கோரோ தேசீயப் பூங்கா
ஒரு எரிமலையின் சிகரத்தில் அமைந்துள்ள இடம். வன விலங்குகளைக் காண இதைவிட சரியான இடம் இல்லை என்பது பொதுவான கருத்து. ஒரு முறையேனும் செல்ல வேண்டும்.

சென்று வியந்த நாலு இடங்கள்
1. ஐஸ்லாந்து
தீயும் பனியும் சேர்ந்திருக்கும் இடம். இயற்கை அழகை சொல்லி மாளாது. நடுங்கும் குளிரில் வென்னீர் ஊற்றுகளில் குளித்த அனுபவம் புதிது.
2. நயாகரா நீர்வீழ்ச்சி
அருகில் செல்ல செல்ல, நம்மை ஆவென்று பார்க்க வைக்கும் கம்பீரம். அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
3. கென்யா நாட்டின் சமவெளிக் காடுகள்
இயற்கையான சூழ்நிலையில் வனவிலங்குகளைக் காண முடிந்த அனுபவம். கைக்கெட்டும் தூரத்தில் சிங்கங்கள், காட்டானைகள், காண்டாமிருகங்கள் என மிரட்டிய அனுபவம்.
4. எகிப்திய பிரமிட்டுகள்
பண்டை காலத்தின் சுவடுகள். அதை பற்றிய கதையை சொல்லிய லேசர் ஷோ. மிகப்பெரிய நேஷனல் அருங்காட்சியகம். அதிலுள்ள பொருட்களை பார்த்தால், நமது பாரம்பரியத்துடனான தொடர்பு புரிகிறது. ஒரு வாரம் இருந்தும் கூட முழுதும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வந்த இடம்.

நமது நாட்டிலும் பல இடங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த இடங்களைப் பற்றி எழுதியது குறைவு என்பதால்தான் இப்படி. மற்றபடி, தாய் நாட்டின் பெருமை பற்றி அறியாதவன் என்றெல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள்.

பிடித்த நான்கு உணவு வகைகள்
1. தென்னிந்திய உணவு
2. மெக்ஸிகன் உணவு
3. தாய்லாந்து உணவு
4. இந்தோ சைனீஸ் உணவு

பின்ன என்னங்க. நம்மளைப்போய் நாலே நாலு உணவு வகைகளை சொல்லச் சொன்னா எப்படி. எதைப் போட்டாலும் சாப்பிடும் நமக்கு அதெல்லாம் சரி வராது. என்ன, முன்பெல்லாம் அசைவது, அசையாதது என்று எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது (கொன்றிருந்தது) போய் இப்பொழுது மரக்கறியாளனாய் மாறி விட்டேன்.

நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்
1. கமலஹாசன்
சமீபத்தில் இவரைப் பற்றி எல்லாருமே ரொம்ப பேசியாச்சு. தேவர்மகன், குணா, மை.ம.கா.ராஜன், சதி லீலாவதி. ரஜினியையும் பிடிக்கும்.
2. டி.எம்.கிருஷ்ணா
சமீப காலமாய் கேட்க ஆரம்பித்திருக்கும் கர்நாடக சங்கீதத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர். சஞ்சயையும் பிடிக்கும்.
3. இளையராஜா
நம்ம மொட்டை. இதுக்கு மேல என்ன சொல்ல. அவ்வளவுதான். இசை மட்டுமல்ல. அவர் குரலுக்கும்.
4. ஜெப்ரி ஆர்ச்சர்
அருமையாய் கதை எழுதுவார். படிக்கப் பிடிக்கும். தமிழில் சாண்டில்யன்.

சொல்லாத நான்கு
1. பார்த்த வேலைகள்
இன்னும் நாலு ஆகலையே. ஆனா பார்த்ததை வேற இடத்தில் சொல்லியாச்சு.
2. பிடித்த படங்கள்
இதையும் சைடிலேயே சொல்லியாச்சு
3. பிடித்த டீவீ நிகழ்ச்சிகள்
ரொம்ப டீவீ பார்ப்பதில்லை
4. அட போதுமப்பா

அழைக்க விரும்பும் நால்வர்
1. ஹரிஹரன்ஸ்
நம்ம பெரியவர். எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி. இப்போ பதிவு வேற போட ஆரம்பிச்சுட்டார்.
2. கௌசிகன்
இவர் அதிகம் எழுதாதது எனக்கு ரொம்ப வருத்தம்.
3. சின்னவன்
இவர் குசும்பு நமக்கு பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளாய் ஆளைக்காணும்.
4. நிலா
நிறைய நல்லா பண்ணறாங்க. இப்போ போட்டி எல்லாம் வேறே போட்டிருக்காங்க. அதான். ஹிஹி.

Friday, February 17, 2006

புதிரா? புனிதமா?

ரீபஸ் போடவேண்டாம் வேறு எதாவது எழுதுவோம் என்று நினைத்து எழுத உட்கார்ந்தேன். எல்லோரும் பக்தி சம்பந்தப்பட்டு எதாவது எழுதுகிறார்களே, நாமும் அதைப்போல செய்தாலென்ன என்று ஒரு நினைப்பு. அதெல்லாம் நமக்கு வருமா? அல்லது நமக்கு தெரிந்த புதிரையே போட்டுவிடலாமா என்று ஒரு தயக்கம். அதுதான் புதிரா? புனிதமா?

கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.

//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.

முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)

இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//

1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்

அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.

ஆவோ

Tuesday, February 14, 2006

ஏனிந்த சோதனை?

என்னடா இவன் வந்து பத்து பதிவு கூட போடலை அதுக்குள்ள ஒரு பதிவுக்கு 350+ பின்னூட்டம், இன்னுமொரு பதிவு 150+ பின்னூட்டம் வாங்கி ஓடுது. என்னடா இதுன்னு யார் யார் வயிறு எரிஞ்சாங்களோ தெரியல. அல்லது பிளாக்கரிலேயே இந்த அளவு பின்னூட்டம் வந்தது இல்லை. அதனால நம்ம பதிவு ஒரு Stress Testஆ போயி, அதுல பிளாக்கர் பெயில்லாச்சான்னு தெரியலை. :)

ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.

நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.

இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.

ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.

ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.

ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)

அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.

உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
பிராமி ந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்

Monday, February 13, 2006

11. ஆதியும் நானும்

ப்ளாக்கர் செய்த குழப்பத்தினால், பழைய பதிவும் பின்னூட்டங்களும் காணாமல் போய்விட்டன. அதனால் இந்த மீள்பதிவு. பொறுத்தருள்க.
___________________________________________________________________
ஒரு புதிரைப் போட்டு, கொஞ்சம் பின்னூட்டம் வாங்கி, பின் வைத்தியரோட ஒரு விளையாட்டு விளையாடி நிறையா பின்னூட்டம் வாங்கி, பின் சின்னவன், ஹரிஹரன்ஸ் என்று எல்லாரும் புதிர் போட்டு, முக்கி முனகி 200 பின்னூட்டத்தை தாண்டி, அப்புறம் ரொம்ப ஸ்பீடா 350-ஐ தாண்டி போயிட்டு இருக்கு நம்ம முந்தய பதிவு. 50 பின்னூட்டம் கூட தாண்டியிராத நமக்கு 350+ பின்னூட்டம் வரை போனது ஆச்சரியமாகவே இருக்கு, ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு. பின்னூட்டங்கள் போட்ட அனைவருக்கும் நம்ம நன்னி. பின்னூட்ட குலகுரு வைத்தியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்னி. விலாவாரியான நன்றி கூறலுக்கு பதிவு் பக்கம் போய் பாருங்க.

கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால், எப்போங்க அடுத்த பதிவுன்னு ஒரே தொந்தரவு. (தொந்தரவு பண்ணிய ரெண்டு மூணு பேருக்கு ரொம்ப நன்றி :) ). அதனால சூட்டோட சூடா அடுத்த பதிவு. இம்முறையும் ரீபஸ்கள்தான். இம்முறையும் திரைப்பட பெயர்கள்தான். மறுபடியும் சினிமாவா என்று கேட்பவர்களே - 'மறுபடியும்' சினிமாதானே! :). அதுதாங்க ஈசியா எல்லோரும் கண்டுபிடிக்கறாங்க. நமக்கும் போடரது சுளுவா இருக்கு. ஆனா அடுத்த பதிவு ரீபஸாக இருக்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.

வெள்ளியன்று இப்பதிவை போடுவதாக சொல்லியிருந்தேன். அதற்குள் வைத்தியரிடமிருந்து ஒரு மடல். வெள்ளியன்று வேண்டாமென்று. என்னவென்றால், நமது பதிவிற்கு வருகை தரும் பலருக்கும் அலுவலகத்தில்தான் இணைய வசதி இருக்கிறதென்றும், அதனால் வெள்ளி இரவு வெளியிட்டால் அதிகமானவர்களால் பார்க்க இயலாது போய்விடும். அதனால் பதிவை ஞாயிறு இரவிற்கு மாற்றும்படி உத்தரவு. மேலும் வாரக்கடைசியில் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். இணையத்தின் பக்கம் வரும் நண்பர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் ஒரு கருத்து. பின்னூட்டத்திலகம் அவர் கூறுவதை மறுக்க முடியுமா? (குமரன், அதிக பின்னூட்டம் வேண்டுமென்றால், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பதிவிடுவதை தவிர்க்கவும். நம் விதிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

ஆகவே இரு நாள் தாமதம். பல கோடி செலவில் வரும் ஆதியே ஒரு நாள் பிந்தி வரும் போது நம் பதிவு இரண்டு நாட்கள் பிந்தி வந்தால் பரவாயில்லையே. (அப்பாடா, தமிழ் படம் போல் சுற்றி வளைத்து தலைப்புக்கு தொடர்ப்பு கொடுத்தாயிற்று.)

என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம். தயவு செய்து விடைகளில் புதிருக்கான எண்ணை குறிப்பிடவும்.

முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)

இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?
முந்தைய பதிவில் கடைசியாக பெரியவர் போட்ட புதிர் இன்னும் விடுவிக்க படவில்லை. அதையும் பாருங்கள். அப்படியே அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் பதிவையும் பாருங்கள். (அவரின் உதவிக்கு ஒரு சிறிய கைம்மாறு இந்த விளம்பரம்.)

இனி புதிர்கள்...

1. உலேரியி
2. ரோஜா தாமரை
3. விளக்கு
4. மகோவில்னம
5. நியாயம் அன்பு
6. ம
7. டாக்டர்
8. மதுரை பொன்
9. பிராமி ந் தாதி
10. ஏழ்மை
11. பருத்தி
12. ஒற்றை சிங்கம்
13. ரெண்டு டஜன் காரட்
14. போர்ட்டர்
15. ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ்
___________________________________________________________________
பழைய பின்னூட்டங்கள்.

posted by இலவசக்கொத்தனார் at 6:47 PM on Feb 12 2006

இலவசக்கொத்தனார் said... வழக்கம் போல் முதல் பின்னூட்டம் நானே.
10:06 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
3. சரியான விடை
10:11 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,4. நெருங்கிட்டீங்க. ஆனா இது இல்லை10, 11, 15 - சரியான விடைகள்
10:15 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
13, 14 - சரியான விடைகள். 14க்கு இன்னுமொரு விடை கூட இருக்கே. அதையும் முயலுங்களேன்.
10:20 PM

இலவசக்கொத்தனார் said... 2, 12 - சரியான விடைகள்.
ரொம்ப ஈசியாப் போச்சோ?
10:23 PM

இலவசக்கொத்தனார் said... 1. சரிதான்.
கலக்கறீங்க. த.தா.ன்னா சும்மாவா. :)
10:29 PM

ஹரிஹரன்ஸ் said... ஏம்மா ஜெயஸ்ரீ, கொத்தனார் புதிரை மட்டும்தான் விடுவிப்பீர்களோ? என் புதிர்கள் என்ன பாவங்கள் பண்ணிட்றோ?
10:30 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ, இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது
1,2,3,10,11,12,13,14,15
போடவேண்டியது
4,5,6,7,8,9
நடத்துங்க.
10:32 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
9 - சரியான விடை.
ஆனாலும் நீங்க சூப்பருங்க.
10:34 PM

இலவசக்கொத்தனார் said... வாங்க சீமாச்சு
3. சரி4. ஜெயஸ்ரீக்கு சொன்னதே10. சரி11. சரி12. சரி6. மிக நல்ல முயற்சி. தனிமைன்னு சொல்லி இருக்கீங்க. அப்போ புதிர் மை என்றுதானே இருக்க வேண்டும். ஆனால் இது ம அல்லவோ.
தனிமைன்னு ஒரு படம் இருக்காங்க?
10:39 PM

இலவசக்கொத்தனார் said... மன்னிக்க வேண்டும் சீமாச்சு
உங்கள் விடையில் 12 என்றது 13-ம் கேள்விக்கு என்று நினைக்கிறேன். ஆனாலும் அது தவறான விடை.
10:44 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
5,8 - சரியான விடை.
ஹரிஹரன்ஸ் உங்களை ஏதோ கேட்கிறாரே. பதில் இல்லையா?
10:47 PM

Jayashree said... பெரியவரே,
அந்த பதிவில் பின்னூட்டங்கள் நீ......ண்டுகொன்டே போனதால் நடுவில் பதில் வந்து விட்டது என்று நினைத்தேன். அய்யா மன்னிக்க ...
10:52 PM

இலவசக்கொத்தனார் said... இராம்ஸூ, குருவே, நீங்கதானா. தூங்காம என்ன பண்ணறீங்க.
1,2,3,10,11, 15 - சரி4,12,14 - வேற பதில் குடுங்க.
10:55 PM

Jayashree said... 7. கலைஞன்
10:56 PM

இராமநாதன் said... 14. கூலி
11:00 PM

Jayashree said... )))
11:00 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,7 தப்புங்க
இங்கு தப்பென்பது அடியை குறிக்கவில்லை. தவறுகள் திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் தரப்படும். :)
11:01 PM

இலவசக்கொத்தனார் said... ராம்ஸ்,
14. கூலின்னு போட்டு இருக்கீங்க. நீங்க போட்டது சரியாத்தான் இருக்கு. நான் நினைத்தது வேற.
11:02 PM

இலவசக்கொத்தனார் said... என்ன ஜெயஸ்ரீ,
ஏன் சிரிப்பு? சொல்லிட்டு சிரியுங்க. வர பின்னூட்டதிலே தத்தளிக்கறேன்.
11:08 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
4. சரியா பிடிச்சுட்டீங்களே. சபாஷ்.
11:08 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது
1,2,3,4,5,8,9,10,11,12,13,14,15
போடவேண்டியது
6,7
ரெண்டுதானே. சீக்கிரம் போட்டு முடிச்சி பட்டத்தை வெல்லுங்க.
11:30 PM

இலவசக்கொத்தனார் said... மதுமிதா அக்கா,
மன்னிக்கவும். சற்று கண்ணயர்ந்து விட்டேன். இதோ உங்கள் விடைகளுக்கு பதில்.
1, 2, 3, 10, 11, - சரி.
மற்றும் ஒரு விடை சரியானது, ஆனால் தவறான கேள்விக்கு அதை அளித்துள்ளீர்கள்.
12 - ஐயோ.ஐயோ. இப்படி பண்ணறீங்களே. விடை படப் பெயருங்க. கொஞ்சம் யோசிங்கா.
14 - இராம்ஸுக்கு அளித்த பதிலை பார்க்கவும்.
மற்றவை தவறு. ட்ரை அகேன். :)
2:30 AM

இலவசக்கொத்தனார் said... அக்கா,இப்போ போட்டீங்களே, இது சரி. ஏன்னு புரிஞ்சுதுதானே. இப்போ மத்தது எல்லாம் போடுங்க.
2:44 AM

இலவசக்கொத்தனார் said... இரண்டு அனானி பதில்கள். ஒன்றி்ல் தியாக் என்ற பெயர். இரண்டும் அவர்தானா என்று தெரியவில்லை. எனவே தனித்தனி பதில்கள்.
முதலில் பெயரிலி அனானிக்கு,3,10,11,14 - நான்குமே சரி.14 - மற்றுமொரு விடை இருக்கிறதே. அதையும் சொல்லுங்களேன்.
2:54 AM

இலவசக்கொத்தனார் said... இப்போ தியாக்-கின் பதில்.
12. சரியான விடை
2:57 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,நீங்க போட்ட அரை டஜன் விடைகள் அனைத்தும் சரியே.
1,2,3,10,11,15.
மற்றவைகளையும் முயலுங்களேன்.
2:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,13. சரியான விடைதான்.
2:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,12. சரியான விடை.
பார்ம்முக்கு வந்துட்டீங்க போல இருக்கே. அடியுங்க. அடியுங்க. சூப்பர்.
3:01 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. தப்புங்க.
3:02 AM

Satheesh said... 7. Vasool Raja MBBS
3:03 AM

Satheesh said... 8. House Full (??)
7. Ramadoss (??)
3:19 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்
7, 8 இரண்டுமே சரியில்லையே. ஆனாலும் 8 எப்படிங்க ஹவுஸ் புல்? புரியலையே...
3:22 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,4. இதுவும் சரி இல்லைங்ககொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க.
3:24 AM

Satheesh said... 8. Mathurai Thangam (theatre) - Housefull movie was taken here (i think)
3:28 AM

இலவசக்கொத்தனார் said... அப்படியா சதீஷ். இது நமக்கு தெரியாது. இருக்கலாம். வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள். ஆமா விடை இவ்வளவு straight forward (தமிழில் என்ன?) இல்லை.
3:28 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்1. நீங்க சொன்னா மாதிரி படம் இருக்கா? கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச யோசிங்க.
2,13 - சரி
14 - ஆமாம் இன்னுமொரு விடை இருக்கு. ட்ரை பண்ணுங்க.
3:33 AM

Satheesh said... 14. Coulie or Thozhilali
3:35 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,திட்டாதீங்க. 14 - இன்னும் சரி இல்லைங்க.
3:38 AM

Anonymous said... 15. Niram maradha pookkal??
THYAG
3:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்15. இல்லை. இது ரொம்ப சுலபம். மண்டையை உடைச்சுக்காதீங்க.
3:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,8. இன்னுமொரு முறை அனுப்பறீங்களா? கொஞ்சம் spellcheck பண்ணுங்க. சரியா, தவறான்னு தெரியலை.
இணையத்துல கிரிக்கட் வர்ணனை பாக்கறதுனால தூங்கலை. அதான் உடனுக்குடன் பதில். :)
3:42 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,15. நான் சொல்லலை. நீங்கதானே சொல்லி இருக்கீங்க. :Dசரியான விடை.
சிலது சுலபமாவும் இருக்கணும். இல்லைன்னா இண்ட்ரஸ்ட் போயிடும் இல்லையா. அதுக்காகத்தான்.
3:44 AM

இலவசக்கொத்தனார் said... முயற்சியில் சிறிதும் மனம் தளராத சதீஷ் அவர்களே,
8. கரெக்ட்தான். :)
3:50 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
நீங்க சொல்லற மாதிரி படம் இல்லைங்க. ஆனா கான்செப்ட் அதுதான். யோ..சிங்க.
3:51 AM

Anonymous said... thanks. Got to go for a meet :-(((((
will try again later
Anyway other are difficult ;-)ESCAPEEEEEEEEEEEEEEE
thanks againTHYAG
3:56 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
ஐயாம் தி எஸ்கேப் எல்லாம் பண்ண முடியாது. மீட்டிங் முடிச்சிட்டு வாங்க. காத்திருப்பேன்.
கஷ்டமெல்லாம் இல்லைங்க. கொஞ்சம் வித்தியாசமா யோசிங்க. அவ்வளவுதான்.
3:57 AM

Anonymous said... before going.....
8 potta SATHISH ....... DOWN DOWN :-))))))))

THYAG
3:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,அப்படி போடுங்க. 4. சரி
1,2,3,8,10,11,12,13,15 - இதெல்லாம் நீங்க போட்டது.
4:00 AM

இலவசக்கொத்தனார் said... ஏங்க தியாக்,
உங்களுக்கு சதீஷ தெரியுந்தானே. இல்லைன்னா கோச்சுக்க போறாரு. :D
சதீஷ், நீங்க வேணா தியாக்கை திட்டுங்க. அதையும் போடறேன். (அட, பின்னூட்டத்திற்கு புது விதி. கொஞ்சம் யோசிச்சா, இது புதுசு இல்லையே.):(
4:04 AM

Satheesh said... 7. Kan kanda theivam!
4:24 AM

Satheesh said... 14. Ulaipaali (or) Panja Kalyani
4:24 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. ரொம்ப யோசிக்கறீங்க. ஆனா நீங்க கொடுத்த பதிலுக்கு காரணம் என்னன்னு யோசிங்க. அதுதான் விடை. :)
4:28 AM

இலவசக்கொத்தனார் said... மது அக்கா,
ஆனாலும் உங்களுக்கு ஆசை.
1,2,3 - சரி4,5,6,7 - சரியான விடை இன்னும் வரலை8 - மதுரை பொன். என்ன விடை போட்டு இருக்கீங்க. அவிங்க அருவா எடுத்து சுத்தற பயலுக. போட்டுறப்போறாய்ங்க.பாத்து. 9 -தப்பு10,11,12,13 - சரி14-தப்பு15 - சரி
ஆக மொத்தம் நீங்க இன்னும் 7 போடணும். அக்காங்.
4:32 AM

இலவசக்கொத்தனார் said... இதப்பாருடா. மீட்டிங்ன்னு போன தியாக் அப்படியே ரிடர்ன்.
மீட்டிங்ல என்ன சாப்பிட கொடுத்தாங்களோ தெரியலையே. 1,8 ரெண்டுமே சரி. இப்போ சதீஷை திட்ட மாட்டீங்களே.
2,3,10,11,12,13,14,15 - இதுதானே நீங்க இதுவரை சரியா போட்டது?
4:36 AM

Anonymous said... Ayyayyooooo,
I don't know Mr.Sathish.
a big SORRY to sathish - I did not mean it -- ORU THADAVAI VENA THITTIKUNGA Mr.SATHISH:-))))))))))
4:38 AM

இலவசக்கொத்தனார் said... ஆமாய்யா. இப்படி மாத்தி மாத்தி திட்டிக்கோங்க. நமக்கு நிறையா பின்னூட்டம் வந்தா மதிரி கணக்கு காட்டறேன். ஆனா என்னை மட்டும் திட்டிராதீங்க. நான் ரொம்ப கோவக்காரன். ஆமா. சொல்லிப்புட்டேன். :)
4:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாகு,
சரியா பிடிச்சீங்களே.
14. இரண்டாவது விடையையும் கண்டுபிடித்து சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் 'ஓ'.
4:50 AM

இலவசக்கொத்தனார் said... யப்பா 50-வது பின்னூட்டம்ன்னு குதிக்காதீங்க. விடைகளை தாங்கி வந்தவைகளை கணக்கில் எடுத்தால் எங்கயோ. ஆனால் 100 நெருங்கும்போது சொல்லறேன். யாருக்கு 100வது பின்னூட்டம்ன்னு பாக்கலாம்.
4:53 AM

Satheesh said... 6. Meyyuluththu
5:05 AM

Agent 8860336 ஞான்ஸ் said... 12. ஒற்றைச் சிங்கம் = முகமூடி
7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)
5:08 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,6. மஇது உயிர்மெய் இல்லையா? இதுதான் இந்தப்பதிவிலேயே மிகக் கடுமையான புதிர் என்று நினைக்கிறேன். you need to think out of the box.
5:08 AM

இலவசக்கொத்தனார் said... ஞான்ஸ்,
வாங்க, வாங்க.
ரொம்ப சீரியஸா போகுதேன்னு பாத்தேன். அப்பாடா. அருமையான பதில்கள்.
12. ஒற்றைச் சிங்கம் = முகமூடிபேசவே பயம்மா இருக்கே. அடிதடி நடக்கும். No comments. :)
7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)அவரு அப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியராரு. எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு. ;)
நீங்க என்ன சொல்லாறீங்க?
5:14 AM

இலவசக்கொத்தனார் said... மக்களே,இது 96-ம் பின்னூட்டம்.அப்புறம் ஆரும் சொல்லலைன்னு சொல்லப்படாது.
5:16 AM

Satheesh said... 9. varna jaalam
5:19 AM

Satheesh said... 9.paalaivanathil pattam poochi or pattam poochi or vannathu poochi
5:21 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,வர்ண ஜாலம் - தவறான விடை.
5:21 AM

Satheesh said... 6. Aaru maname Aaru
5:21 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,எப்படி? ஆறு மனமே ஆறு? பிடிபட மாட்டேங்குதே....
ஆகா 100! :)
5:23 AM

Satheesh said... Nooru aachaa illaya?
5:24 AM

Satheesh said... Ethukkum innum onnu!!
5:24 AM

இலவசக்கொத்தனார் said... நீங்க ஜஸ்டுல மிஸ். 99, 101 ரெண்டுமே உங்களுது. :)
இது 102.
5:24 AM

இலவசக்கொத்தனார் said... எதோ சில பழைய பின்னூட்டங்கள் இப்பொழுதுதான் வருகின்றன. அதனால் 50 / 100 அடித்த கணக்கெல்லாம் ஆட்ட முடிவில்தான் அறிவிக்கப்படும்.
ஆனால் 100 தாண்டிவிட்டது. இது உண்மை.
5:47 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,//9.paalaivanathil pattam poochi or pattam poochi or vannathu poochi//
இதுவும் தவறான விடை. உங்க விடைகள் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேன்னில்ல?
5:49 AM

Satheesh said... 6. Aaru (maava 90 degree clockwise thiruppunaa varum)- out of the box ok vaa?
5:58 AM

இலவசக்கொத்தனார் said... அப்பு, சதீஸு
out of the box think பண்ண சொன்னா out of the world think பண்ணறயே.
யப்பா....நடத்து..
6:00 AM

கைப்புள்ள said... நீங்க என் டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு பதிவுல கடைசியா போட்ட பின்னூட்டம், பின்னூட்ட வளர்ப்பு கலைக்கு இன்னொரு லெஸ்ஸன் போலிருக்கே. திட்டற மாதிரி, அதட்டற மாதிரி நம்ம பதிவுக்கு இழுக்கற இந்த டெக்னிக் சூப்பருப்பா!
7:09 AM

இலவசக்கொத்தனார் said... இதெல்லாமே நம்ம வாத்தியார் சொல்லிக்குடுத்ததுதான். பழைய பதிவுல இருக்கு பாருங்க.
7:16 AM

Anonymous said... 6. Magalir mattum
THYAG
7:24 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
காதலர் தின ஞாபகமா? சரியில்லவே.
7:31 AM

இலவசக்கொத்தனார் said... கைப்பு கைப்புதான்.
4 தப்பு14. இன்னுமொரு விடை இருக்கே15. நான் நினச்சது வேற1,2,3,5,10,11,12,13 - சரிதாம்வே
7:33 AM

கைப்புள்ள said... 14.கூலிக்காரன்
7:46 AM

இலவசக்கொத்தனார் said... கூலிக்காரன், உழைப்பாளி, தொழிலாளி எல்லாம் சொல்லிட்டாங்க. ஆனா நான் கேக்கற இரண்டு பதிலும் இது இல்லை.
7:49 AM

இலவசக்கொத்தனார் said... என்ன எல்லாரும் கிரிக்கெட் பாக்க போயிட்டீங்களா? யாரையும் கொஞ்ச நேரமாக் காணுமே.
8:37 AM

இலவசக்கொத்தனார் said... இது என்னமோ தமிழ்மணத்திலே புதுப்பிக்கப் பட மாட்டேங்குதே. :(
9:24 AM

கைப்புள்ள said... ஓய் கொத்தனார்,உம்ம பாணியிலே ஒரு பதிவு போடறேன். உமக்கு அட்வான்சா சொல்லிட்டேன் ஆமா! நல்ல புள்ளயா நாளைக்கு வந்துரும் வீட்டுப் பக்கம்.வர்ட்டா?
9:36 AM

இலவசக்கொத்தனார் said... கட்டாயம் வரேன். நானில்லாமலா?
9:37 AM

Anonymous said... 7. Kalaingan ?
Do not know how to spell (kamal movie)
THYAG
9:39 AM

கைப்புள்ள said... புதிர் போட இந்த பின்னூட்ட வெளயாட்டும் நல்லா இருக்குய்யா! பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம்...புதுசா வர்றவங்களுக்கும் ஆர்வமா இருக்கும். ஆனா என்ன ஒன்னு...ஒங்களுக்குத் தான் பெண்டு கழண்டிருக்கும். என்ன நான் சொல்றது?
9:41 AM

இலவசக்கொத்தனார் said... இல்லை தியாக்.
இன்னும் ட்ரை பண்ணுங்க.
9:43 AM

இலவசக்கொத்தனார் said... ஆமா கைப்பு. நேத்து நைட்டு தூங்கவே இல்லை. கிரிக்கெட் மாட்சை வேற பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நல்லா பொழுது போச்சு.
9:46 AM

இலவசக்கொத்தனார் said... கைப்பு,நீங்க தூக்கிப்போட்டது சரிதான். :)
9:57 AM

இராமநாதன் said... யோவ் கொத்தனார்,அதுக்குள்ள ரெண்டாவது செஞ்சுரிக்கு அடிபோடுறீரா.. ஒரு ரேஞ்சாத்தான் போய்கிட்டிருக்கீரு!
10:04 AM

இலவசக்கொத்தனார் said... வைத்தியரே,முன்ன சொன்னா மாதிரி இரண்டாவது செஞ்சுரி வந்தாச்சு. இப்போ இரண்டாவது டபுள் செஞ்சுரிதான் இலக்கு. :)
10:04 AM

Anonymous said... ஆட்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கு? யாராவது எல்லா விடையையும் சொன்னாங்களா?
11:02 AM

இலவசக்கொத்தனார் said... நல்லா போயிட்டு இருக்கு அனானி. தங்கத்தாரகை ஜெயஸ்ரீ இன்னும் ரெண்டு மீதம் வச்சு இருக்காங்க. அவங்கதான் அவ்வளவு கிட்ட.
11:05 AM