Monday, May 29, 2006

பசும்பழமும் ஜிகர்தண்டா சண்டையும்

கால்கரி பயணம் - முதல் பகுதி , இரண்டாம் பகுதி

சிவா வீட்டுக்குப் போயாச்சு. போன தடவை அவர் வீட்டைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான ஆளைப் பத்தி எழுத மறந்துபோச்சு. அது அவரு வீட்டில் வளரும் கிளி. அவர்தான் தன்னைப் பற்றிய குறிப்பில் முன்பு தானொரு பறவை ரசிகர் எனக் கூறியிருந்தாரே. அதன் பெயர் நீமோவாம். அழகாய் சுப்பிரமணி, கல்யாணி எனத் தமிழ்ப் பெயர் வைக்காமல் ஏன் இப்படி எனச் செல்லமாய் கடிந்து கொண்டேன். நல்லா பேசுமாம். ஆனால் எங்கள் கொட்டத்தைக் கண்டு அன்று சற்றே அடங்கியேயிருந்தது. என் மகனைக் கண்டவுடன் மட்டும் குஷியாய்க் கத்தத் தொடங்கியது. தன்னைப் போல் ஒரு சிறிய உருவமாய் இருந்ததால் நட்பா அல்லது போட்டிக்கு வந்த மாதிரியான எண்ணமாவெனத் தெரியவில்லை.

அதற்கான அறை, விளையாட்டுச் சாமான், போர்வை என நன்றாக செட்டில் ஆகியிருந்தது. இவ்வகை கிளிகள் 25 வருடங்கள் வரை வாழுமாம். இதோ அவரின் புகைப்படம்.



நீமோவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு பின் சிவாவின் வீட்டு முகப்பில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். மலையேறிவிட்டு வந்தது களைப்பாக இருந்ததாலும், வெய்யிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போனதாலும் சிவாண்ணா தங்கள் ஊரின் லோக்கல் சரக்கான கோக்கனி (Kokanee) என்ற பியரை கொடுத்து உபசரித்தார். பின் தங்கக்கழுகு, அரசமீனவன் போல் அதன் பெயரையும் தமிழ்ப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோக்கனி என்ற பெயரே தமிழ்தானே என்றவுடன் ஒரு மாதிரி என்னைப் பார்த்தவரிடம் கோக்கனி என்பதன் விளக்கம் பசும்பழம்தானே என்றேன். அவர் ரொம்ப ஓவாராகிவிட்டது என்று அதற்கு மேல் பசும்பழம் வேண்டாமெனக் கூறிவிட்டார். :-)

அடுத்தது சாப்பாடு. பாவம் அவங்க வீட்டம்மா. இவரு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வரவங்களப் பார்த்தா நல்லா நாலு விதமா சாப்பிட்டு வளர்ந்தவங்க மாதிரி தெரியுது. அதனால நீ லீவைப் போட்டு நல்லா சமைன்னு சொல்லி இருப்பாரு போல. அவங்களும் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாங்க. நாங்க ஊரைச் சுற்றி வந்த பசியில் போட்டோ எல்லாம் எடுக்காம புகுந்து விளையாடிட்டோம். சாரி துளசியக்கா, அதையெல்லாம் உங்க கண்ணில் காமிக்க முடியாம ஆகிப்போச்சு. ஆனாலும் மெனு சொல்லறேன் நோட் பண்ணிக்குங்க - காஞ்சீவரம் இட்லி, சட்னி, வெஜிடெபிள் புலவ், ரெய்தா, அப்புறம் நமக்காக அவரு அடி வாங்கி குறிப்பு போட்ட சால்னா (வெஜிடேரியன் வெர்ஷன்). நாங்க எல்லாம் சைவம் என்பதாலும் அன்று அவங்களுக்கு சைவ வெள்ளியாய் ஆனதாலும் கோழி / முட்டை எதுவும் இல்லை. சாப்பாட்டை பற்றி ஒரு வரி. ஒரு வரிதான். நன்றாக வெட்டினோம். திருமதி சிவா அவர்களே, மீண்டும் ஒரு முறை நன்றி.

சாப்பிட்ட களைப்பு தீர இளைப்பாறிவிட்டு, (யோவ், எதுக்குத்தான் ரெஸ்ட் என ஒரு நியாயம் இல்லையா எனத் திட்டுவோர்க்கு. அதுக்கெல்லாம் கால்கரி போய் ஒரு கட்டு கட்டினால்தான்யா தெரியும்!) பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜிகர்தண்டா. அவ்வளவு நேரம் உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொண்டிருந்த சிவாண்ணா வீறு கொண்டு எழுந்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் டேபிள் மீது தனக்கு தேவையான சாமான்களைப் பரப்பினார். எனக்கென்னவோ அவருக்கு இதற்கு முன் ஒரு வண்டியில் அடுக்கி வைத்த பிராக்டீஸ் இருந்த மாதிரி ஒரு பீலிங்!

முன்றைய தினம் ஊற வைத்த கடற்பாசியை கிளாஸில் விட்டு அதற்குமேல் நன்னாரி சர்பத்தையும் பாலையும் விட்டு கலக்கி ஜிகர்தண்டா செய்தார். அவரின் குறிப்பில் 'இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் இப்படி செய்தது நன்றாகவே இருந்தது. என் மனைவியார் ஜிகர்தண்டா குடித்தது அதுவே முதல்முறை. அதனால் அவர் கடற்பாசி வெஜிடேரியந்தானே என கேட்டு உறுதி செய்து கொண்டார். நன்றாகவே இருந்தது என நான் கூறியவுடன், சிவாண்ணா ஒரு முறை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அந்த வட்டக் கழுத்து டீ ஷர்ட்டில் அவர் அதை எப்படி செய்தாரோ தெரியவில்லை.

ஆனால் அவர் மனைவி 'இதெல்லாம் என்ன ஜிகர்தண்டா. பால்கோவா போடாத ஜிகர்தண்டாவெல்லாம் ஒரு ஜிகர்தண்டாவா?' என சவுண்ட் விட்டார். அட, இதைப் பற்றி அண்ணன் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே எனக் காதைத் தீட்டிக்கொண்டேன். இவரும் விடாமல் அதெல்லாம் மேட்டுக்குடிகளின் பழக்கம், ஏழைத் தொழிலாளிகள் குடிப்பது இதைப் போன்ற ஜிகர்தண்டாதான் என வாதாட. நிலமை தமிழ்மணம் போல் மாறத் துவங்கியதால் நான் இது நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாக இருக்கும் போலவே தோன்றுகிறது என ஒரு சாலமன் பாப்பையாத்தனமான தீர்ப்பைக் கொடுத்து தப்பித்துக் கொண்டேன். மதுரைக்காரய்ங்களா வந்து தீர்ப்பு சொல்லுங்க. இப்படி ஒரு சாப்பாடும் ஜிகர்தண்டாவும் குடித்த பின் நாங்கள் இருந்த நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளை அதற்கு முன் அவரின் தோட்டத்தில் எடுத்த ஒரு படம் இருந்ததால் தப்பித்தேன். இதோ எங்கள் நிலை.



அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் விடை பெற்றோம். சிவாண்ணா, ஒரு அருமையான மாலைப் பொழுதுக்கு ( சரி, சரி - அதற்கும் மூன்று பதிவெழுத மசாலா கொடுத்ததுக்கும்) நன்றி உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும். திரும்பி வரும் போது விமானப்பயணம் ஒரே கூத்து. அதை சொல்லணும்னா தனிப் பதிவுதான் போடணும். ஆனா அப்படி போட்டா உங்களில் நிறையா பேர் உதைக்க வருவீங்க என்பது தெரியும் என்பதால் ஒரே ஒரு வரி. பத்திரமாய் வந்து சேர்ந்தாச்சு. அவ்வளவுதான்.

254 comments:

  1. இத்துடன் கால்கரி பயணம் பற்றிய கட்டுரை இனிதே முடிந்ததுன்னு எழுத மறந்துட்டேன். அதே. அதே.

    ReplyDelete
  2. நல்ல வேளை முடிஞ்சு போச்சு.. அந்த பால்கோவா மேட்டர் யாரு சொல்றாங்கன்னு பார்ப்போம்...

    ReplyDelete
  3. என்ன பொன்ஸ். இன்னைக்கும் சாதம் சரியா வரலையா. உங்க கதைதான் சப்பென போச்சுன்னு பாத்தா உங்க பின்னூட்டமுமா? என்ன நடக்குது?

    ReplyDelete
  4. கொத்ஸ்,

    காஞ்சீபுரம் இட்டிலியா? அங்கே மாவு புளிச்சதா? தொன்னையிலே ஊத்துனாங்களா, இல்லே இட்டிலித் தட்டுலேதானா?

    ச்சும்மாத்தான் கேட்டேன்.

    சட்டினி என்ன மாதிரி? தேங்காயா இல்லெ....

    நல்லாச் சமைச்சிருந்தாங்க போல.
    ஹூம்.... எனக்குத்தான் அதைத் திங்க குடுப்பனை இல்லை .

    அடுத்தவருசம் கனடா ட்ரிப் இருக்கு. வுடக்கூடாதுல்லே:-))))

    ReplyDelete
  5. ஆகா! பசும்பழக் கோக்கனி என்று தமிழ்ப் படுத்திய தமிழ்ப் பற்றாளர் இலவசமே....வாழிர் நீவிர்.

    அப்படியானால் எனக்கு ஒன்று இப்பொழுது புரிகிறது. அமெரிக்கா சோழ நாட்டோடு சேர்ந்தது. கரிகால் பெருவளத்தான் காலத்தில் அமெரிக்கா சோழநாட்டுக்கு உட்பட்ட சிற்றரசாக இருந்ததும், அங்கு கரிகால் பெருந்தேவன் சார்பாக அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் இருந்து ஆண்டதை என்னால் அறிய முடிகிறது. எப்படி என்கிறீர்களா? கால்கரி என்பதைத் திருப்பிப் போட்டால் கரிகால். அதாவது இந்தியாவில் பகல் என்றால் அங்கு இரவு. இங்கு இரவென்றால் அங்கு பகல். அதனை அன்றே உணர்ந்த சோழர்கள் பெயரையும் அதற்கேற்றார்போல மாற்றியிருக்கிறார்கள். ஆகா....ஆகா.....பெரிய வரலாற்று உண்மையைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

    ReplyDelete
  6. மதுர ஜிகிர்தண்டாவுல கடல்பாசியெல்லாம் போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். மதுரைல ஏது கடலு? நுங்கு போடுவாங்க போல...ஆனா ஒன்னு..இதுவரைக்கும் நாஞ் சாப்பிட்டதில்லை. என்னைக்கு வாய்க்குதோ........

    ReplyDelete
  7. டீச்சர், உங்களுக்கான பதில்கள். சரியான்னு பார்த்து நல்லா மார்க் போடுங்க.

    //காஞ்சீபுரம் இட்டிலியா? அங்கே மாவு புளிச்சதா?//
    நாங்க போன போதுதான் நல்ல வெய்யிலே. புளிக்காம இருக்குமா?

    //தொன்னையிலே ஊத்துனாங்களா, இல்லே இட்டிலித் தட்டுலேதானா?//
    தட்டுதாங்க. வெளியூரில் வேறென்ன செய்யறது?

    //ச்சும்மாத்தான் கேட்டேன்.//
    சரி. சும்மாவே கேளுங்க.

    //சட்டினி என்ன மாதிரி? தேங்காயா இல்லெ....//
    ஆஹா. மாட்டிக்கிட்டேனே. தேங்காய் என்றுதான் ஞாபகம். ஆனா சிவப்பா இருந்தா மாதிரி ஒரு ஞாபகமும் கூட. காலையில் என் தங்கமணியிடம் கேட்டுச் சொல்கிறேன்.

    //நல்லாச் சமைச்சிருந்தாங்க போல.
    ஹூம்.... எனக்குத்தான் அதைத் திங்க குடுப்பனை இல்லை .//
    நல்லாவே சமைச்சிருந்தாங்க. அதான் அடுத்த வரியில் அங்க போறதா சொல்லிட்டீங்களே. உங்களுக்கும் கிடைக்கும். கவலை வேண்டாம்.

    //அடுத்தவருசம் கனடா ட்ரிப் இருக்கு. வுடக்கூடாதுல்லே:-))))//
    அப்படியே நம்மூர் பக்கமும் வாங்கக்காவ்.

    ReplyDelete
  8. இப்படி 'வரிக்குவரி' பதில் போட்டுப் பாசமழை பொழிஞ்சதை நினைச்சுப் பெருமையா இருக்குப்பா கொத்ஸ்.

    நல்லா இருங்கப்பா.

    ReplyDelete
  9. //வாழிர் நீவிர்.//

    ஜிரா அவர்களே, எல்லாம் உங்க ஆசிதான்.

    //பெரிய வரலாற்று உண்மையைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.//
    ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்து நம் சோழ நாட்டின் எல்லையை உலகின் மறுகோடி வரை கொண்டு சென்ற உமக்கு என்ன குடுத்தாலும் தகும். என்னாலானது 'எல்லைவிரித்தான்' என்ற பட்டத்தை தருகிறேன்.

    கால்கரி அமெரிக்காவில் இல்லை. கானடாவில்தான் இருக்கிறது என புறம் கூற வருவோர்க்கு ஒரு எச்சரிக்கை. எல்லைவிரித்தான் அவர்கள் அமெரிக்க கண்டத்தைதான் குறிப்பிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சோழ நாடு வளர்க. எல்லைவிரித்தான் வாழ்க.

    ReplyDelete
  10. //மதுர ஜிகிர்தண்டாவுல கடல்பாசியெல்லாம் போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். மதுரைல ஏது கடலு? நுங்கு போடுவாங்க போல...ஆனா ஒன்னு..இதுவரைக்கும் நாஞ் சாப்பிட்டதில்லை. என்னைக்கு வாய்க்குதோ........//

    அய்யா. சிவாண்ணா போட்ட முக்கியாமான பதிவு ஒண்ணை நீங்க படிக்கலை போல இருக்கே.

    கடல் பாசின்னா கடல் பாசி இல்லை. (மதுரக்காரய்ங்க எதத்தான் சரியாச் சொல்லுவாய்ங்க.அத விடுங்க கழுத.) அது பதாம் மரத்தின் பிசினாம். என்னா கத பாத்தீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்....

    ஜிகர்தண்டாவில் நுங்கு போடுவாங்களா? அடங்க்கொக்கமக்கா. இப்போதான் பால்கோவான்னாய்ங்க. இத யாருஞ்சொல்லலையே. இது ஒரு தனி பொஸ்தகம் போடற அளவு விசயம் இருக்கும் போலயிருக்கே. யாரு எழுதப் போறாங்களோ. சொக்கா.....

    ReplyDelete
  11. //இப்படி 'வரிக்குவரி' பதில் போட்டுப் பாசமழை பொழிஞ்சதை நினைச்சுப் பெருமையா இருக்குப்பா கொத்ஸ்.//

    பின்ன படிப்பு, பரீட்சைன்னா சும்மாவா? 10 கேள்வி குடுத்து 8 எழுதச்சொன்னா 10க்கும் பதில் போடற பரம்பரையாச்சே. சும்மாவா?

    (நைட் 12:30 ஆச்சு. தூக்கம் வரலை. இன்னிக்குன்னு பாத்து நம்ம ரன் ரேட் வேற கம்மியா இருக்கு. அதான் கிடைச்ச ஒண்ண இப்படி ஃபுல்லா உபயோகப்படுத்திக்கலாமேன்னு. ஹிஹி)

    ReplyDelete
  12. ஜீரா அவர்களே கடல் பாசி என்பது கடலில் இருந்து எடுக்கப்படுவதல்ல என்பது உமக்குத் தெரியுமென்பதை நானறிவேன் என்று நீங்களும் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
    :-)

    ReplyDelete
  13. //ஜீரா அவர்களே கடல் பாசி என்பது கடலில் இருந்து எடுக்கப்படுவதல்ல என்பது உமக்குத் தெரியுமென்பதை நானறிவேன் என்று நீங்களும் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
    :-)//

    இப்படி வேற இருக்கா? இதுக்கு என்ன குத்துன்னு பேருப்பா?

    ReplyDelete
  14. // //பெரிய வரலாற்று உண்மையைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.//
    ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்து நம் சோழ நாட்டின் எல்லையை உலகின் மறுகோடி வரை கொண்டு சென்ற உமக்கு என்ன குடுத்தாலும் தகும். என்னாலானது 'எல்லைவிரித்தான்' என்ற பட்டத்தை தருகிறேன். //

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் நமக்கும் வரும் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் கொத்சுக்கு நன்றி. எல்லைவிரித்தான் என்ற பட்டத்தைக் கொண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த சேவையைச் செய்ய முற்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆகவே சேவைக்குத் தேவையான பச்சரிசி மாவு, குக்கர், சேவை பிழிஞ்சி ஆகியவற்றை உடனடியாக எனக்குத் தந்து உதவ கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த உதவி தாமதமானால் என்னுடைய சேவை உங்களை அடைவதும் தாமதமாகும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். நான் செய்யும் சேவையில் ருசிக்காத சேவையெல்லாம் நான் தின்று விட்டு...ருசிக்கும் சேவையெல்லாம் உங்களுக்கே தருவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

    // கால்கரி அமெரிக்காவில் இல்லை. கானடாவில்தான் இருக்கிறது என புறம் கூற வருவோர்க்கு ஒரு எச்சரிக்கை. எல்லைவிரித்தான் அவர்கள் அமெரிக்க கண்டத்தைதான் குறிப்பிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். //

    அதே...அதே...சோழன் என்ன நாடு பிடிக்கிறவனா? கண்டங்களைக் கடப்பவன். அமெரிக்கா என்ற கண்டத்திற்கு அன்றே கண்டமாக நின்றவன் சோழன்.

    // சோழ நாடு வளர்க. எல்லைவிரித்தான் வாழ்க. //

    வாழ்ந்திருவோம்.

    ReplyDelete
  15. ஏம்ப்பா,
    இந்த ஜப்பான் சாப்பாடு சூஷி இருக்கே அதுக்கு கடல்பாசிதானே (நோரி) போடறாங்க. seaweed. இதைக் கடல்லே இருந்துதான் எடுக்கறாங்களாம். இப்ப கடல்பாசியைப் பத்தி சிபி என்னவோ சொல்றாரு.

    நான் நல்லா இண்டியனைஸ்டு சூஷி செய்வேன். ரெஸிபி வேணுமுன்னா சொல்லுங்க.

    ReplyDelete
  16. //ஆகவே சேவைக்குத் தேவையான பச்சரிசி மாவு, குக்கர், சேவை பிழிஞ்சி ஆகியவற்றை உடனடியாக எனக்குத் தந்து உதவ கேட்டுக் கொள்கிறேன்.//

    முதலில் பொன்னரசியிடம்தான் இந்த வேலையை ஒப்படைக்கலாமென்று இருந்தேன். ஆனால் இவ்வளவு டெக்னிக்கல் விஷயங்கள் தெரிய்மோ என்ற ஐயம் வர, இப்பொழுது வேறு ஆள்தான் பிடிக்க வேண்டும். இந்த பிழியற, சுத்தற வேலையில் யாரு கெட்டி? கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.

    //நான் செய்யும் சேவையில் ருசிக்காத சேவையெல்லாம் நான் தின்று விட்டு...ருசிக்கும் சேவையெல்லாம் உங்களுக்கே தருவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.//

    பழத்தைத் தின்று கொட்டையைத் தருபவர்கள் நடுவில் இப்படி கூறும் உம் பெருமையை என்னவென்று உரைப்பது. பிடியுங்கள் இன்னுமொரு பட்டம் - சேவாசிகாமணி. ஆனால் இந்த பட்டம் தமிழில் இல்லை என்று யாராவது சண்டைக்கு வந்தால் தமிழ்ப்படுத்திக் கொள்வது உங்கள் வேலை.

    //வாழ்ந்திருவோம்.//
    வரப்புயற என்பது போல் நீவிர் நல்லபடி வாழ்ந்தால்தான் எங்கள் வாழ்க்கையே. ஆகவே. மீண்டும் எல்லைவிரித்தான் வாழ்க.

    ReplyDelete
  17. //ஏம்ப்பா,
    இந்த ஜப்பான் சாப்பாடு சூஷி இருக்கே அதுக்கு கடல்பாசிதானே (நோரி) போடறாங்க. seaweed. இதைக் கடல்லே இருந்துதான் எடுக்கறாங்களாம். இப்ப கடல்பாசியைப் பத்தி சிபி என்னவோ சொல்றாரு.//

    டீச்சர். அதான் சொன்னேனே. மதுரைக்காரங்க எல்லாம் கொஞ்சம் வெவரமானவங்கன்னு. அவங்க ஊருல கடல் இல்லையாம். அதனால பாதாம் மரத்தின் பிசினை கடல்ப்பாசின்னு சொல்லுவாங்களாம். என்னா நெனப்பு பாருங்க. அது வேற. நீங்க சொல்லறது வேற. :)

    //நான் நல்லா இண்டியனைஸ்டு சூஷி செய்வேன். ரெஸிபி வேணுமுன்னா சொல்லுங்க.//

    அட என்னங்க நீங்க. அவங்கவங்க சாதம் வடிக்கறதுக்கும் வெந்நீர் போடறதுக்கும் பதிவு போட்டுட்டு சமயற்குறிப்பு போட்டதா பீத்திக்கறாங்க. நீங்க என்ன பெர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு. :D

    ReplyDelete
  18. துளசி அக்கா!

    ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படும் கடல் பாசி என்பது பாதாம்/வாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் கோந்து.

    கால்கரி சிவா அவர்களின் ஜிகர்தண்டா பதிவில் பார்க்கவும்.

    ReplyDelete
  19. சரிதான் சிபி. இப்படி இந்த பாதாம் பிசினைப்பத்தி பேசியே ஒரு 10 பின்னூட்டம் தேத்தியாச்சு.

    முருகா எல்லாரையும் காப்பாத்துப்பா.

    ReplyDelete
  20. சிபி,
    அதைத்தானேய்யா நானும் கேக்குறேன்.
    கடலுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சமாச்சாரத்தை ஏன்ய்யா கடல்பாசின்னு சொல்றீங்க?

    'மொட்டைக்காலுக்கும் முழந்தலைக்கும்' முடிச்சா?:-))))

    ReplyDelete
  21. நல்லா கேளுங்க டீச்சர். நல்லா கேளுங்க. ஆனா ஒண்ணு. உஷாரா மொட்டைத்தலை பத்தி பேசினீங்க. நீங்க மட்டும் இன்னொரு பழமொழியான அமாவாசைக்கும்.... பத்தி பேசி இருந்தீங்க, நம்ம திராக்கள் வந்து உங்களைப் பிச்சு எரிஞ்சிருப்பாங்க. :)

    ஆனாலும் நீங்க உஷாரு. என்ன எனக்கு ஒரு 25-30 பின்னூட்டம் லாஸ். :D

    ReplyDelete
  22. //'மொட்டைக்காலுக்கும் முழந்தலைக்கும்' முடிச்சா?//

    ம்ம் பழமொழியே ஒயுங்க சொல்ல வர்ல இவங்களுக்கு! பின்ன ஏன் டீச்சர்னு சொல்றாங்க எல்லாரும்?

    ReplyDelete
  23. அட கட்டதொர,

    எல்லாருக்கும் அப்பாவி பட்டம் கட்டற உமக்கே அப்பாவி பட்டம் கட்டணும் போல இருக்கே.

    அவங்க வெறும் பழமொழியா சொன்னாங்க. அதில் எவ்வளவு பெரிய உள்குத்து இருக்கு. அது தெரியாம இப்படி வாய் விட்டுட்டயேப்பா.

    அவங்க வெறும் வரலாறு சொல்லித்தர டீச்சர் இல்ல. தமிழ்மணத்தில் உயிர் பிழைத்தல் என்னும் கலை பற்றிப் பாடம் எடுக்கும் பேராசிரியையப்பா.

    ReplyDelete
  24. கோ மாதாவை விட்டு விட்டு, ஏன் இப்படியும் சொல்லலாமே..

    கோக்கனி -> கோ + கனி;
    கோ = அரசு /அரசன்
    ஃ கோக்கனி = அரசன்பழம்/ அரசம்பழம் /அரசுப் பழம்

    என் ஓட்டு அரசம்பழத்திற்கே!

    ????????//
    :-)))))

    ReplyDelete
  25. மூனு நாளு லீவுல நல்லா ஜிகர்தண்டா அடிக்கலாம்னு சர்பத், கடல்பாசில்லாம் வாங்கி ஊறவச்சேன். நாசமாப்போறவிங்க இந்தத் தடவ டூப்ளிகேட் கடல்பாசியக் குடுத்துப்புட்டாங்க.
    அதத் தண்ணியில போட்டா ஊறிப் பெருசாகாம 'டிஷ் வாஷிங் லிக்யூட்' மாதிரி ஆகிப்போயிடுச்சி. கொத்தனாரே, நீங்க குடிச்சத நினச்சி மனசத் தேத்திக்கிட்டேன்.

    அப்புறம் என்ன பால்ல ஆப்பிளை வெட்டிப்போட்டு சர்பத்தை ஊத்தி, மிக்ஸியில அடிச்சு ஐஸ் போட்டு புது விதமான டிர்ங்ஸ் தயார்பண்ணிக் கொடுத்தாரு நம்ம ஜெயக்குமாரு.

    ReplyDelete
  26. //என் ஓட்டு அரசம்பழத்திற்கே!//

    ஏம்பா மருதக்காரய்ங்களா, ஜிகர்தண்டாவைப் பத்தி அவ்வளவு பெரிய சந்தேகம் இருக்கும் போது அதை விட்டுட்டு இப்படி பேரு வைக்கறதுல மட்டும் முனைப்பு காட்டினா எப்படி?

    //அரசன்பழம்/ அரசம்பழம் /அரசுப் பழம்//

    அரசன்பழம் எனச்சொன்னால் பின்ன 85 வயசு பெரியவரு கொமரனாவா இருப்பாருன்னு சண்டைக்கு வருவாங்க. அதனால அது வேண்டாம்.

    அரசுப்பழம் - ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இந்த அரசு பழம் அரசான்னு பேச்சு வரும். அல்லது இது பழம் தின்னு கொட்டைப் போட்ட அரசா? எப்படியானாலும் நீ எதிர்கட்சி ஆளான்னு பேச்சு வரும். இதுவும் வேண்டாம்.

    அரசம்பழம் - இதுதான் கொஞ்சம் பரவாயில்லையாட்டும் இருக்கு.

    ஒண்ணு பண்ணலாம். நம்ம டாஸ்மாக் கடையில் வித்தா அரசம்பழம் எனவும் வெளிநாட்டில் இருக்கும் வரை பசும்பழம் எனவும் வெச்சுக்கலாம். ஓக்கேவா? :D

    ReplyDelete
  27. //அதத் தண்ணியில போட்டா ஊறிப் பெருசாகாம 'டிஷ் வாஷிங் லிக்யூட்' மாதிரி ஆகிப்போயிடுச்சி.//

    இங்கயும் அது ஒண்ணியும் நல்லா ஜவ்வரிசி மாதிரி வரலை. ஆனாலும் நீங்க சொல்லற அளவு மோசமாயில்லை. நம்ம சிவாக் கிட்ட எவ்வளவு கடற்பாசிக்கு எவ்வளவு தண்ணீர் விடணும், எவ்வளவு நேரம் ஊற வைக்கணும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இருந்தாலும் டேஸ்ட் நல்லாவே இருந்தது.

    ReplyDelete
  28. தருமி சாரின் அரசம்பழம் நல்லப் பெயர்தான். ஆனால் பசும்பழம் நல்ல பெயர். இந்த ஊர் பசுப்பையன்களின் பட்டினம் அல்லவா.

    எங்கள் வீட்டில் ஜிகர்தண்டா அருந்திவிட்டு ஜப்பான் சென்று திரும்பிய மலையாள நண்பர் ஒரு தங்க லேபிளை பரிசாக (காசு வாங்கிக் கொண்டு) தந்துவிட்டார். இது வலைப் பதிவாளர்களின் கவனத்திற்க்கு. முக்கிய மாக கார்த்திக் ஜெயந்த், சிங்கை சரவணா மற்றும் நாகை சூடான சிவாவிற்க்கு

    ReplyDelete
  29. //அதத் தண்ணியில போட்டா ஊறிப் பெருசாகாம 'டிஷ் வாஷிங் லிக்யூட்' மாதிரி ஆகிப்போயிடுச்சி.//
    மகேஸ், அட்ஜஸ்ட் மாடு பேக்கு

    ReplyDelete
  30. சட்னி தேங்காய் தான் என உறுதி செய்துவிட்டேன்

    ReplyDelete
  31. துளசி மேடம், வாங்க கனடாவிற்கு. நீங்க வி யா என் வி யா? வி என்றால் என் மனைவிற்க்கு மிக சந்தொசம்.

    ReplyDelete
  32. கொத்ஸ்,

    நீமோ உங்கள் மகனைப் பார்த்து உற்சாகம் அடைந்ததை எண்ணி இன்னும் ஆச்சரியத்தில் உள்ளோம்.

    நீமோவிற்க்கு ஒரு வரன் பார்க்க ஆரம்பித்து விட்டோம். கல்யாணத்திற்கு வலைப் பதிவு அன்பர்கள் அனைவரும் வரவும்

    ReplyDelete
  33. தொல்காப்பியத்தின் 4வது அதிகாரத்தின்படியும், நன்னூல் சூத்திரத்தின் 8வது அதிகாரத்தின் 7வது உட்பிரிவின்படியும்

    பசு + பழம் = பசுப்பழம் என்றுதான் வருமேயன்றி பசும்பழம் என்று வராது என்று எம் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.

    ReplyDelete
  34. //எல்லைவிரித்தான் என்ற பட்டத்தைக் கொண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த சேவையைச் செய்ய முற்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.//
    ஜி.ரா, முதல்ல, என்னையெல்லாம் உள்ளவிடமாட்டேன்னு சொல்லும் உங்க கம்பனி எல்லையை விரிக்கச் சொல்லுங்க..!!!!

    ஜி.ரா தவிர்த்த மற்ற அனைத்து கட்சி வலைபதிவு மக்களே.. இப்போ புரியலைன்னா விடுங்க, அந்த வரலாற்றுப் புகழ் மிக்கச் சந்திப்பைப் பத்தி நாளைக்கு எழுதறேன்!

    ReplyDelete
  35. //என்னா கத பாத்தீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்....//
    கொத்ஸ், எங்காளு ரசிகர் மன்றத் தலையா இருந்தா, நீங்க இப்படி பாசத்தைக் காட்டணும்னு அவசியம் இல்லைய்யா!!!

    வ.வா.சங்க மக்களுக்கு மட்டுமே உரித்தான இந்த அவ் என்னும் சொல்லைப் பயன் படுத்தியதற்காக காப்பீட்டு உரிமை பற்றிய வழக்கொன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் பதியவிருக்கிறேன்..

    ReplyDelete
  36. //கண்டங்களைக் கடப்பவன். அமெரிக்கா என்ற கண்டத்திற்கு அன்றே கண்டமாக நின்றவன் சோழன்.
    //
    எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை.. மதுரைக்காரய்ங்க பத்தின பதிவுல, இப்படி சோழ மன்னனைத் தூக்கி வச்சுக் கொண்டாடுறீயளே, இதக் கேக்கக் கூடவா ஒரு மதுரக்காரர் வரலை?!!! மதுரை நிலைமை இப்படியாகணுமா?!!

    ReplyDelete
  37. //பசு + பழம் = பசுப்பழம் என்றுதான் வருமேயன்றி பசும்பழம் என்று வராது என்று எம் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.
    //
    தருமி, எந்தச் சங்கத்துல கேட்டீங்க?!! எஸ்கே ரசிகர் மன்றத்தின் சார்பாக, பசும்பழம் என்பதே சரி என்று கூறிக் கொள்கிறேன். (எஸ்கே வந்து வேற மாதிரி மாத்தி சொல்வார்னு அர்த்தம்ங்க.. கொத்ஸ், எஸ்கேவின் கவனம் கவர்வது உங்க வேலைங்க!! ) :)

    ReplyDelete
  38. //முதலில் பொன்னரசியிடம்தான் இந்த வேலையை ஒப்படைக்கலாமென்று இருந்தேன். ஆனால் இவ்வளவு டெக்னிக்கல் விஷயங்கள் தெரிய்மோ என்ற ஐயம் வர, இப்பொழுது வேறு ஆள்தான் பிடிக்க வேண்டும். இந்த பிழியற, சுத்தற வேலையில் யாரு கெட்டி? கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
    //
    வவ்வால்னு ஒரு பதிவர் இருக்காருங்க.. அவர் நல்லா பிழிவாரு.. உதாரணங்கள் கௌசிகன் பதிவில் :)

    ReplyDelete
  39. தருமி ஐயா, நீங்கள் சொன்னால் சரி எதற்கு இவ்வளவு ஆதாரங்கள்

    ReplyDelete
  40. //கடல் பாசின்னா கடல் பாசி இல்லை. (மதுரக்காரய்ங்க எதத்தான் சரியாச் சொல்லுவாய்ங்க.அத விடுங்க கழுத.) அது பதாம் மரத்தின் பிசினாம். என்னா கத பாத்தீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்....//

    சிறிதளவு தண்ணீரீல் போட்டால் கடலளவு பெருகிவிடும். அதனால்தான் கடல் பாசி

    ReplyDelete
  41. //நான் நல்லா இண்டியனைஸ்டு சூஷி செய்வேன். ரெஸிபி வேணுமுன்னா சொல்லுங்க.//

    துளசி மேடம். சொல்லுங்களேன். சூஷி என்றால் ஏதோ சமைக்காமல் சாப்பிடும் மீன் என நினத்திருந்தேன்

    ReplyDelete
  42. //கால்கரி என்பதைத் திருப்பிப் போட்டால் கரிகால். அதாவது இந்தியாவில் பகல் என்றால் அங்கு இரவு. இங்கு இரவென்றால் அங்கு பகல். அதனை அன்றே உணர்ந்த சோழர்கள் பெயரையும் அதற்கேற்றார்போல மாற்றியிருக்கிறார்கள். ஆகா....ஆகா.....பெரிய வரலாற்று உண்மையைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
    //

    அரும்பெரும் உண்மைகளைச் சொல்லி ஒரு டாக்டர் பட்டமே வாங்கிவிடலாம் போலிருக்கே

    ReplyDelete
  43. //தருமி ஐயா, நீங்கள் சொன்னால் சரி எதற்கு இவ்வளவு ஆதாரங்கள் //
    ஊர்க்காரர்னா என்னவேணாலும் ஒத்துப்பீங்களா?
    அதெல்லாம் இல்லை..

    தருமியாக இருந்தாலும்,
    கால்கரி சிவாவாக இருந்தாலும்,
    நெற்றிக் கண் திறந்து என்னை கால் கிலோ கரியாக எரித்தாலும்,

    குற்றம் குற்றமே.. பசு+பழம் = பசும்பழமே!!!

    ReplyDelete
  44. //ஒரு தங்க லேபிளை பரிசாக (காசு வாங்கிக் கொண்டு) தந்துவிட்டார்//
    இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் கொடுத்த அல்வாவிற்கு காசு வாங்கிக்கொள்ளவில்லை.

    சிவா, இதையும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. எதை வெச்சுடா நம்மளைத் தாக்கலாம்னே ஒரு க்ரூப் அலையுது.

    ReplyDelete
  45. //மகேஸ், அட்ஜஸ்ட் மாடு பேக்க//

    அட என்னங்க இது. ஜிகர்தண்டா பதிவு போட்டா பசு,மாடுன்னு ஒரே கௌபாய் டாபிக்கா இருக்கே.

    இன்னிக்கு ஒரே ஒரு நாள் நம்ம பதிவையும் பத்திப் பேசுங்கப்பா. :D

    ReplyDelete
  46. //சட்னி தேங்காய் தான் என உறுதி செய்துவிட்டேன்//

    நன்றி சிவா. பாத்தீங்களா. வயசானாலும் நம்ம ஞாபக சக்தி குறையவே இல்லை. ஹிஹி.

    ReplyDelete
  47. //நீங்க வி யா என் வி யா? வி என்றால் என் மனைவிற்க்கு மிக சந்தொசம்.//

    அப்படின்னா என்.வி.ன்னா உங்களுக்கு சந்தோஷமா? சரியா சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  48. //நீமோ உங்கள் மகனைப் பார்த்து உற்சாகம் அடைந்ததை எண்ணி இன்னும் ஆச்சரியத்தில் உள்ளோம். //

    ஆச்சரியமா, போட்டி மனப்பான்மையா என்ற குழப்பத்தில் நான் இன்னும் இருக்கிறேன்.

    //நீமோவிற்க்கு ஒரு வரன் பார்க்க ஆரம்பித்து விட்டோம். கல்யாணத்திற்கு வலைப் பதிவு அன்பர்கள் அனைவரும் வரவும்//

    போட்டோ எல்லாம் போட்டு முதலில் எங்க அப்ரூவல் வாங்கிக்கோங்க.

    ReplyDelete
  49. //பசு + பழம் = பசுப்பழம் என்றுதான் வருமேயன்றி பசும்பழம் என்று வராது என்று எம் தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.//

    தமிழைச் சங்கம் வைத்து வளர்த்த மதுரையில் ஒரிஜினல் தமிழ்ப் புலவர்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா?

    சரி. சிம்பிளாவே சொல்லறேன்.

    பசு+பால் = பசும்பால்

    அதே மாதிரி பசு+பழம் = பசும்பழம்.

    ReplyDelete
  50. அல்வாக்கு அல்வா கொடுத்திடலாம். ஆனால் தங்க லேபிளுக்கு காசு உடனே கொடுத்திடனும். இன்னைக்கு தங்க லேபிளை தந்து விட்டு நாளைக்கு ஊதா லேபிளைக் கேட்டால் தலையில் துண்டு. தங்க லேபிள் 55 டாலர் ஊதாவோ 240 டாலர். அதுக்குத்தான் அவர் கேட்பதற்க்கு முன் நான் கொடுத்து விட்டேன்.

    பஜார்லே உஷாரா இல்லேன்னா நிஜாரே உருவிடுவாங்கப்பு

    ReplyDelete
  51. //இப்போ புரியலைன்னா விடுங்க, அந்த வரலாற்றுப் புகழ் மிக்கச் சந்திப்பைப் பத்தி நாளைக்கு எழுதறேன்!//

    ஜிரா சென்னைக்கு வந்த போது அவரைப் பார்க்கச் சென்று அவர்கள் கம்பெனியில் உங்கள் பின்னணி தெரிந்து உள்ளே விட மாட்டேன் என்று துரத்தியடித்த கதைதானே? எங்களுக்கு முன்பே செய்தி வந்தது. எங்கள் கட்சி உறுப்பினராகவோ அல்லது ர.ம.தவாகவோ இருந்தால் இது நேர்ந்திருக்குமா?

    ReplyDelete
  52. //வ.வா.சங்க மக்களுக்கு மட்டுமே உரித்தான இந்த அவ் என்னும் சொல்லைப் பயன் படுத்தியதற்காக காப்பீட்டு உரிமை பற்றிய வழக்கொன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் பதியவிருக்கிறேன்..//

    சிரிப்பான் சம்பந்தப்பட்ட வழக்கிற்காக எங்கள் வழக்குரைஞர்கள் உலக வர்த்தக சபைக்கு சென்றிருப்பதால் இப்போதைக்கு வாய்தா வாங்கிக்கலாம்.

    அதோடு இது பற்றிய கைப்பூவின் கருத்துக்கள் தெரியும் வரை நான் வாய் திறப்பதாய் இல்லை.

    ReplyDelete
  53. // எங்கள் கட்சி உறுப்பினராகவோ அல்லது ர.ம.தவாகவோ இருந்தால் இது நேர்ந்திருக்குமா?.. //
    இதுக்காக நான் உங்க கட்சியில் சேரணுமா? அதெல்லாம் தனியாப் போயிருந்த உள்ள விடுவாங்க தான்.. ராகவனைப் பார்க்கணும்னு சொன்னதும் சந்தேகம் வந்து முடியாதுன்னு சொல்லிட்டாங்க!!!

    ReplyDelete
  54. //தருமி, எந்தச் சங்கத்துல கேட்டீங்க?!! எஸ்கே ரசிகர் மன்றத்தின் சார்பாக, பசும்பழம் என்பதே சரி என்று கூறிக் கொள்கிறேன். //

    தருமி ஐயா (ரொம்ப நாளாச்சு இல்ல இப்படி கூப்பிட்டு),

    பொன்னரசிதான் புணர்ச்சி விதிகளின் நடமாடும் கோனார் நோட்ஸ். அதுவும் அவங்க நான் சொன்னது சரின்னு சொன்னதுனால அவங்களை நான் ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  55. //எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை.. மதுரைக்காரய்ங்க பத்தின பதிவுல, இப்படி சோழ மன்னனைத் தூக்கி வச்சுக் கொண்டாடுறீயளே, இதக் கேக்கக் கூடவா ஒரு மதுரக்காரர் வரலை?!!! மதுரை நிலைமை இப்படியாகணுமா?!!//

    அந்த சோழ மன்னர்களும் கால்கரியில் ஜிகர்தண்டா குடித்ததாக கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. ஆகையால் மதுரை நிலமை நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  56. //தருமி ஐயா, நீங்கள் சொன்னால் சரி எதற்கு இவ்வளவு ஆதாரங்கள்//

    மதுரைக்காரய்ங்க ஓண்ணு சேரராங்கப்பா. ஆனாலும் தப்பை தப்புன்னு சொல்லாம தப்புப் பண்ணித் தப்பிக்கிறவனில்லை இந்த இ.கோ.

    (ரொம்ப ஓவராப் போச்சோ?)

    ReplyDelete
  57. //சிறிதளவு தண்ணீரீல் போட்டால் கடலளவு பெருகிவிடும். அதனால்தான் கடல் பாசி//

    இல்லையே. அன்னைக்கு சின்னப் பாத்திரத்தில்தானே இருந்த ஞாபகம்.... :)

    ReplyDelete
  58. //துளசி மேடம். சொல்லுங்களேன். சூஷி என்றால் ஏதோ சமைக்காமல் சாப்பிடும் மீன் என நினத்திருந்தேன//

    எல்லா மீனுமே சமைக்காமல்தானே சாப்பிடும். இது என்ன புது கதை சொல்லறீங்க சிவா? :D

    ReplyDelete
  59. //அரும்பெரும் உண்மைகளைச் சொல்லி ஒரு டாக்டர் பட்டமே வாங்கிவிடலாம் போலிருக்கே//

    டாக்டர் பட்டம் வாங்க அரும்பெரும் உண்மைகள் எல்லாம் சொல்லவேண்டியது இல்லை. அதுக்கெல்லாம் நமக்கு நாமேன்னு ஒரு திட்டம் இருக்கு.அது தெரியாதா?

    ReplyDelete
  60. //குற்றம் குற்றமே.. பசு+பழம் = பசும்பழமே!!!//

    ஆமாம் என்றாம் ஆமாமே.

    அது சரி நாங்க கால்கரி சுத்திப்பாக்க போனம்போது ஒரு கரி இஞ்சின் ரயில் ஒண்ணு பாத்தோம். ஆனா அதில் கால் கால் கிலோவா கரி போடுவாங்களான்னு கேட்கலையே. :(

    ReplyDelete
  61. //பஜார்லே உஷாரா இல்லேன்னா நிஜாரே உருவிடுவாங்கப்பு//

    அதுக்காகத்தான் எங்க ஊரில் ஒருத்தர் நிஜாரே போடாம அலைவாரு. நாமளும் அதை பின்பற்றி அதையே ஒரு ஃபேஷன் ஆக்கிடுவோமா? :D

    ReplyDelete
  62. //ராகவனைப் பார்க்கணும்னு சொன்னதும் சந்தேகம் வந்து முடியாதுன்னு சொல்லிட்டாங்க!!!//

    விஷயம் அதுதானா? குன்ஸா ஒரு கெஸ் அடிச்சு போட்டு வாங்குனது வொர்க் அவுட் ஆகிடுச்சே. ஆஹா. பதிவைப்போடுங்க. எனக்கு ஜிராவின் பதிலைப் பாக்கணும்ன்னு இப்போவே ஆசையா இருக்கே.

    ReplyDelete
  63. //மகேஸ், அட்ஜஸ்ட் மாடு பேக்க//
    சிவா, ஏதாவது திட்றதா இருந்தா தமிழ்லேயே திட்டுங்க. :)))

    ReplyDelete
  64. அது ஒண்ணுமில்லை மகேஸ். அவர் வரவங்களுக்கு எல்லாம் ஜிகர்தண்டா கொடுக்க வேண்டியது இருக்கு. அதனால பால் அதிகம் தேவைப்படுது. அதனால ஒரு மாடு வேணும்டா முட்டாள்ன்னு கன்னடத்தில் மாடு பேக்குன்னு சுருக்கமா சொல்லறாரு.

    ஆனா யாரை பேக்குன்னு சொல்லறாரோ தெரியலை.

    ReplyDelete
  65. //அவர் வரவங்களுக்கு எல்லாம் ஜிகர்தண்டா கொடுக்க வேண்டியது இருக்கு. அதனால பால் அதிகம் தேவைப்படுது. அதனால ஒரு மாடு வேணும்டா முட்டாள்ன்னு கன்னடத்தில் மாடு பேக்குன்னு சுருக்கமா சொல்லறாரு.//

    சொந்தச் செலவிலேயே சூன்யம் வச்சுக்கிட்டாரோ? :)))

    ReplyDelete
  66. //சொந்தச் செலவிலேயே சூன்யம் வச்சுக்கிட்டாரோ? :)))//

    இதுக்கு அவரே வந்து பதில் சொல்வார். ஆனா உங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கறேன். இந்த மாதிரி முழுசா எல்லாம் சொல்லக்கூடாது. சுருக்கமா சொ.செ.சூ. அப்படின்னு போடணும்.

    அப்போதான் வேற ஒருத்தர் வந்து அப்படின்னா என்னன்னு கேட்பாரு, நானும் விளக்கம் சொல்வேன். அநியாயமா ரெண்டு பின்னூட்டம் போச்சு பாருங்க.

    ReplyDelete
  67. ஐயா, இனிமேல் தமிழ் தவிர வேறு பாஷையில் பின்னூட்டமிடமாட்டேன்.

    பெங்களூரில் இருந்த ஒரு நண்பர் அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லி தன்னுடைய கன்னட புலமையை வெளிபடுத்துவார்.

    ReplyDelete
  68. //ஐயா, இனிமேல் தமிழ் தவிர வேறு பாஷையில் பின்னூட்டமிடமாட்டேன்.//

    வெரி குட்!

    //பெங்களூரில் இருந்த ஒரு நண்பர் அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லி தன்னுடைய கன்னட புலமையை வெளிபடுத்துவார்.//

    அவர் யாரை பேக்குன்னு திட்டுவாரு?

    ReplyDelete
  69. //அப்படின்னா என்.வி.ன்னா உங்களுக்கு சந்தோஷமா? சரியா சொல்லுங்கப்பா.
    //

    ஒருபாதி உண்மையேன்றால் மறுபாதியும் உண்மையே

    ReplyDelete
  70. //ஐயா, இனிமேல் தமிழ் தவிர வேறு
    பாஷையில் பின்னூட்டமிடமாட்டேன்//

    ச.பொ.போ

    என்ன கொத்தனாரே ஓகேயா?

    ReplyDelete
  71. //ஒருபாதி உண்மையேன்றால் மறுபாதியும் உண்மையே//

    அப்போ அன்னிக்கு சாப்பாடு உங்க வீட்டில் நீங்கதானா?

    ReplyDelete
  72. //என்ன கொத்தனாரே ஓகேயா?//

    எனக்கு ஓக்கேதான் மகேஸ். அடுத்தது யாராவது விளக்கம் கேட்கறாங்களான்னு பார்க்கணும்.

    ReplyDelete
  73. இ.கொ.

    தருமி உண்மையிலேயே வாத்தியாரா இருந்தாரான்னு சந்தேகமா இருக்கு

    பசுமை + பழம் = பசும்பழம் அல்லது பைம்பழம் என்று தான் வரும் இதற்குக் காரணம் பசுமையில் இறுதியில் உள்ள மெல்லினமே.

    அவர்ட்ட படிச்ச பசங்கள நெனச்சா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

    ReplyDelete
  74. //தருமி உண்மையிலேயே வாத்தியாரா இருந்தாரான்னு சந்தேகமா இருக்கு//

    அவரு வாத்தின்னுதானே சொன்னோம். தமிழ் வாத்தின்னு சொன்னோமா? இது என்னங்க அக்குறும்பு?

    //அவர்ட்ட படிச்ச பசங்கள நெனச்சா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..//

    அவரு சொல்லிக் குடுத்த சப்ஜெக்ட்ல மட்டும் எப்படின்னு கேட்டா நான் என்ன சொலலறது? சாய்ஸில் விடறேன். :)

    ReplyDelete
  75. மதுரையன்,
    பசுமை+ பழம்னு சொன்னா சரி, ஆனா, இவங்க, பசு+பழம்னு விலங்கு/தாவரக் கூட்டா இல்லை சொல்றாங்க.. அதுக்கு என்ன சொல்வீங்க?!!

    ReplyDelete
  76. //அதுக்கு என்ன சொல்வீங்க?!!//

    இப்போதான் உங்களை இப்படி சொல்லியிருக்கேன் - 'பொன்னரசிதான் புணர்ச்சி விதிகளின் நடமாடும் கோனார் நோட்ஸ்.'

    சும்மா வந்து நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்லுங்க.

    ReplyDelete
  77. என்ன கொத்ஸ், போட்டு வாங்குறது பத்தி இளவஞ்சி பாடம் எடுத்தும் நீங்க இந்தப் பதிவிலயே செய்முறை விளக்கம் கொடுத்தும் செய்யலைன்னா எப்படி?!

    மதுரையன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம் :)

    ReplyDelete
  78. எங்கள் அருமை பேராசிரியர் தருமிக்கே சவாலா? அவர் நித்திரையில் இருக்கிறார். தூங்கி எழுந்து சிங்கம் போல் வந்து உங்கள் தமிழ் சந்தேகங்களை ஆங்கிலத்தில் புரியவைப்பார். அவர் புதரக சாரி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிராகப் பணியாற்றியவர்

    ReplyDelete
  79. //அப்போ அன்னிக்கு சாப்பாடு உங்க வீட்டில் நீங்கதானா?
    //

    எப்பவுமே நாந்தான் விருந்தாளிகள் வந்தால் ஹி ஹி

    அதனால்தான் எல்லோரையும் வருக வருக என வரவேற்க்கிறேன்

    ReplyDelete
  80. //மதுரையன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம் :)//

    அவரு இந்தப் பதிவுக்கு உள்ளேன் ஐயா சொல்லிட்டுப் போயிட்டாரு. திரும்பி வராரான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  81. சிவா சார்,

    //முக்கிய மாக கார்த்திக் ஜெயந்த், சிங்கை சரவணா மற்றும் நாகை சூடான சிவாவிற்க்கு

    மன்னிச்சிகோங்க.. இன்னைக்கு என்னமோ தெரியல.. மண்டை ரொம்ப blank க்கா இருக்கு.. ஒண்ணுமே புரியல என்ன சொல்லவரிங்கன்னு..நமக்கு வார கடைசிலயே கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும்.இது லாங்க் வீக் என்டு வேறயா.சில பல கமிட்மென்ட்களை வேற முடிச்சதுனால செம தொங்கலா இருக்கு.. இதுல தமிழ் அறிஞர்களும், வரலாற்று ஆரய்ச்சியாளர்களும் ரொம்பவே வீடு காட்டிகொண்டு இருப்பதால் சுத்தமா ஒண்ணுமே புரியல.

    பல தடவ நான் படிச்சதுல புரிஞ்சது "நானும் பசு பட்டணத்துக்கு வரும் போது அதே மாதிரி வாங்கிட்டு வரணுமா. அப்படின்னா என்ன வாங்கிட்டு வரணும்ன்னு செப்புங்க"..

    ReplyDelete
  82. //புதரக சாரி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிராகப் பணியாற்றியவர்//

    என்னவே மருதைக்காரரே. நான் சொன்னது சரியாப் போச்சா? இப்பம் என்ன சொல்ல போறீரு?

    ReplyDelete
  83. //எப்பவுமே நாந்தான் விருந்தாளிகள் வந்தால் ஹி ஹி //

    என்கிட்டயே, அதுவும் இந்த பதிவிலேயே. நல்ல தைரியந்தான்யா உமக்கு.

    ReplyDelete
  84. கார்த்தித் தம்பி,

    ஒரேடியா பல கமிட்மெண்டுகளை சமாளிச்சா இப்படித்தான் கண்ணைக் கட்டும். பார்த்துப்பா.

    அது சரி, இந்த பால்கோவா மேட்டருக்கு உங்க ஊர்க்காரங்க இப்படி பயப்படறாங்களே, அது ஏன்?

    ReplyDelete
  85. கொத்ஸ் அண்ணா,

    அனுபவம் உள்ளவங்க சொல்லுறிங்க கேட்டுகிறேன்.. இன்னும் என்னமோ மண்டை blank க்காத்தான் இருக்கு.. இது தெளியுறதுக்குள்ளயே இந்த வார கடைசி வந்துடும் போலயே..

    பால் கோவா மேட்டருக்கு இந்த பதிவை ப்ரின்ட் அவுட் எடுத்து படிச்சாத்தான் என்னால் பதில் சொல்ல முடியும்..

    ReplyDelete
  86. //இது தெளியுறதுக்குள்ளயே இந்த வார கடைசி வந்துடும் போலயே.. //

    இந்த வாரமாவது அதிகம் கமிட்மெண்ட் இல்லாம பாத்துக்குங்க. :D

    //பால் கோவா மேட்டருக்கு இந்த பதிவை ப்ரின்ட் அவுட் எடுத்து படிச்சாத்தான் என்னால் பதில் சொல்ல முடியும்..//

    சரி. எடுங்க. படிங்க. சொல்லுங்க.

    ReplyDelete
  87. ஒரு அஞ்சு வரிக் கதை!
    இவரு போனாரு!
    கிளியைப் பாத்தாரு!
    சாப்பாட்டை ஒரு புடி புடிச்சாரு!
    ஜிகர்தண்டா சாப்டாரு!
    பத்திரமாத் திரும்பி வந்தாரு!

    இதுக்கு என்னா ஒரு பில்டப்!
    :))))))

    அப்புறம்,

    பசும்பழத்தோட ஆரிஜினே தப்பு, நம்ம தருமிஅய்யா சொன்னமாதிரி!

    கோ+கனி== அரசன்+பழம்== அரசம்பழம்

    'கோ'[KO]ன்னா அரசன்
    'கோ'[GO]ன்னா, பசு

    அப்போ, கோக்கனின்னா [kokkanee]அரசம்பழம்தன் சரி!

    பூவன்+பழம்== பூவம்பழம்
    அரசன்+பழம்=அரசம்பழம்

    ஆகவே, 'ம்'தான் வரும்!

    அப்புறம்,

    ராகவன், இந்த, "அங்கே பகல்னா இங்கே இரவு" அப்படீங்கறதுல்லாம்,
    இன்னிக்கு காலைல, பொன்ஸ் கதையைப் படிச்சதோட பாதிப்புதானே!

    "நள்ளிரவு 12 மணி" நல்லாவேதான் பாதிச்சிருக்கு!:))

    ReplyDelete
  88. வாங்க எஸ்.கே.

    அஞ்சு வரியில் கதையை முடிச்சிருந்தா நீங்க வந்திருப்பீங்க? அதான் இப்படி.

    //அரசம்பழம்தன் சரி!//

    சரி.. சரி... இனிப் பசும்பழம் அரசம்பழமென்றே அழைக்கப்படும். ஒரு சேஞ்சுக்கு தருமிக்கு பொற்கிழி கிடைக்கிறது. எனக்கு டபுள் ஓக்கே.

    //"நள்ளிரவு 12 மணி" நல்லாவேதான் பாதிச்சிருக்கு!:))//
    ஆக மொத்தம் இன்னைக்கு ஜிராவுக்கு ஆவி அடிச்சிட்டதுன்னு சொல்லறீங்க. பாவங்க அவரு.

    ReplyDelete
  89. //முக்கிய மாக கார்த்திக் ஜெயந்த், சிங்கை சரவணா மற்றும் நாகை சூடான சிவாவிற்க்கு

    //

    ஒரு புல் ஜானி நடையர் தங்க லேபிள் இருக்கு. அதைக் காலிபண்ணத்தான் அழைப்பு

    நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்

    ReplyDelete
  90. //ஜிராவுக்கு ஆவி அடிச்சிட்டதுன்னு சொல்லறீங்க. //
    என்னங்க இது, கஷ்டப் பட்டு கதை எழுதினது நான்.. 'ஆ.வி' அடிச்சதா சொல்றீங்க?!!! ம்ஹும்!!

    ReplyDelete
  91. இங்கேயும் தமிழ் வகுப்பு நடக்குது போலிருக்கு? சரி என் பங்குக்கு நான் "ஜிகர்தண்டா"வைத் தமிழ் படுத்தறேன்.

    ஜிகர் - அப்படின்னா உருது மொழியில இதயம்னு அர்த்தம். ரொம்ப பிரியமா இருக்கறவங்களை "ஜிகர் கா துக்டா"னு சொல்லறது வழக்கம். அதாவது "என் இதயத்தின் துண்டே/பகுதியே" அப்படின்னு.

    தண்டா - Thandaன்னா குளிர்ச்சியான. Coke adல Cool drinkங்கிற அர்த்தத்துல வரும்.

    அப்போ ஜிகர்தண்டான்னா "இதயம் குளிர்விப்பான்" அல்லது "உள்ளம் குளிர்விப்பான்" அப்படின்னு சொல்லலாம் இல்லியா?

    பன்மொழிப் புலவர் சங்கத்து ஆற்றலரசி பொன்ஸும், இந்திலயும் தமிழுலயும் பிஸ்த்தா இருக்குறவங்க தெளிவுபடுத்துவாங்கன்னு நெனக்கிறேன்.

    90 அடிச்சாச்சு கொத்ஸ். இந்த தரம் வெறும் நம்பர் மட்டும் போடலய்யா..கவனிச்சுக்கும்.

    ReplyDelete
  92. //இவரு போனாரு!
    கிளியைப் பாத்தாரு!
    சாப்பாட்டை ஒரு புடி புடிச்சாரு!
    ஜிகர்தண்டா சாப்டாரு!
    பத்திரமாத் திரும்பி வந்தாரு!
    //

    எஸ்.கே! இதே மாதிரி இராமாயணத்தை ரெண்டே வரில சொல்லுவாங்க! கேட்டிருக்கீங்களா?

    "விட்டான் ராமன், செத்தான் ராவணன்"

    ReplyDelete
  93. //அதைக் காலிபண்ணத்தான் அழைப்பு //

    அவரு இருக்கற கமிட்மெண்டுக்கே தலை சுத்திப் போய் உக்காந்து இருக்காரு. நீங்க வேற. ஆனா இப்படி எல்லாம் கூப்பிட்டா கட்டாயம் கால்கரி வருவாரு.

    ReplyDelete
  94. //ஜிராவுக்கு ஆவி அடிச்சிட்டதுன்னு சொல்லறீங்க. //

    ஒரு கிசு கிசு பதிவும் இதை உறுதி செய்யுது. :-)

    அந்த ஆவி இதயம் திருடும் ஆவியாமே!

    ReplyDelete
  95. //சரிதான் சிபி. இப்படி இந்த பாதாம் பிசினைப்பத்தி பேசியே ஒரு 10 பின்னூட்டம் தேத்தியாச்சு.
    //

    விவரமாய்த்தான் இருக்காங்க!

    ReplyDelete
  96. //இதுக்கு என்னா ஒரு பில்டப்!
    //

    SK சார் பில்டப் அதாவது கட்டுவது அதுதானே கொத்தனாரின் வேலை. தன் வேலையை திறம்பட செய்கிறார் அதுவும் இலவசமாக

    நட்பை நிலைநாட்டிவிட்டேன் :-)

    ReplyDelete
  97. //'ஆ.வி' அடிச்சதா சொல்றீங்க?!!! ம்ஹும்!!//

    சரி பேய் அடிச்சதா சொல்லட்டுமா? அப்படின்னா நீங்க அடிச்சதா நினைக்கப் போறாங்க. உங்களுக்குள்ள வேற முன் பகை இருக்கு.

    ஆனாலும் இங்கயிருந்து அங்க அடிச்சா, உங்களுக்கு கை நீளம்தாங்க. :)

    ReplyDelete
  98. //அப்போ ஜிகர்தண்டான்னா "இதயம் குளிர்விப்பான்" அல்லது "உள்ளம் குளிர்விப்பான்" அப்படின்னு சொல்லலாம் இல்லியா?//

    ஆக மொத்தம் நம்ம பதிவை சொல் ஒரு சொல் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டீங்க. குமரன் கோவப்படப்போறாருங்க.

    சரி, நாம ஜிகர்தண்டா மார்க்கெட் பண்ணினா இப்படி விளம்பரம் பண்ணலாம் இல்ல -

    ஜிகர்தண்டா - உள்ளம் குளிருமே More!

    ReplyDelete
  99. //"விட்டான் ராமன், செத்தான் ராவணன்"//

    பாருங்க எஸ்.கே. இது போதும் அப்படின்னு கம்பன் விட்டிருந்தாருன்னா அப்புறம் நமக்கு 'அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்' என்ற வரிகள் எல்லாம் கிடைத்திருக்குமா? அப்புறம் நம்ம பட்டிமன்ற பார்ட்டிகள் எல்லாம் என்ன செய்திருப்பாங்க, பாவம்.

    அதனால சில சமயம் பில்ட் அப் எல்லாம் வேணும் சார்.

    ReplyDelete
  100. //ஒரு கிசு கிசு பதிவும் இதை உறுதி செய்யுது. :-)

    அந்த ஆவி இதயம் திருடும் ஆவியாமே!//

    அட ஆமாங்க பார்த்தி. நான் கூடக் கேள்விப்பட்டேன். அதுவும் அடிக்கடி போன்கால் போன்கால்ன்னு ரிசீவருக்குள்ளையே தலையை விட்டுகிடறாராமே. ;)

    ReplyDelete
  101. //விவரமாய்த்தான் இருக்காங்க!//

    அட என்ன பார்த்தி. நம்ம பதிவுக்கு புதுசு மாதிரி பேசறீங்க. இதெல்லாம் நடக்கறதுதானே.

    ReplyDelete
  102. //SK சார் பில்டப் அதாவது கட்டுவது அதுதானே கொத்தனாரின் வேலை. தன் வேலையை திறம்பட செய்கிறார் அதுவும் இலவசமாக

    நட்பை நிலைநாட்டிவிட்டேன் :-)//

    ஆஹா. அதான் சோழ மன்னர், பிசின் போட்ட ஆந்தைன்னு எதோ சொல்லுவீங்களே. அதே.அதே.

    ReplyDelete
  103. இன்னொண்ணு கூட சொல்வாங்க, சிபி.

    இந்த இராமாயணக் கதை சொல்ற ஒருத்தரு அவசரமா ரயில் புடிக்க ஓடிக்கிட்டு இருந்தாராம்!

    அவரை வழி மறிச்சு ஒருத்தரு, எனக்கு இப்பவே இரமாயணக் கதையை சொல்லியாகணும்னு அடம் புடிச்சாராம்!

    வேற வழியில்லாம, அந்தக் "கதைசொல்லி", [நடுவுல இதுபோல அறிவுஜீவி வார்த்தைகளையும் விட்டுக்கணும்!] 'சரி கேளு'ன்னு இப்படிச் சொன்னாராம்!

    "அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஒருத்தன் ஆசைபட்டான்னா, அவனோட அண்ணன் - தம்பிங்க கூட உதவமாட்டாங்க!"

    அவனை எதுத்து நிக்கறவனுக்கு, மனுஷங்க மட்டுமில்ல, மிருகம், பறவையெல்லாம் கூட உதவி பண்ணும்.

    இதைப் புரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா நடந்துக்கோ'!!

    :))

    ReplyDelete
  104. கால்கரி சிவா,
    பில்டப்புக்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை!

    ReplyDelete
  105. பூவன்+பழம்== பூவம்பழம்
    அரசன்+பழம்=அரசம்பழம்
    ஆகவே, 'ம்'தான் வரும்!---SK

    சரி.. சரி... இனிப் பசும்பழம் அரசம்பழமென்றே அழைக்கப்படும். ஒரு சேஞ்சுக்கு தருமிக்கு பொற்கிழி கிடைக்கிறது. --கொத்ஸ்//

    தனி ஒருவனாக வந்து தருமியின் களங்கத்தைத் துடைத்த SK அவர்களுக்கு பொற்கிழியில் 50%. தருமிக்குக் கிடச்சதும் SKக்குப் parcel அனுப்பி வைக்கப்படும். சீக்கிரம் அனுப்புங்க கொத்ஸ்.

    அதுசரி மதுரையனுக்கு 'பசுமை' எங்கேயிருந்து வந்தது? நம்ம தமிழ்ச் சங்கத்தில இருந்து 'நோட்டீஸ்' அனுப்பச் சொல்லியாச்சு. "(மதுரக்காரய்ங்க எதத்தான் சரியாச் சொல்லுவாய்ங்க.அத விடுங்க கழுத.) - இப்படி ஒரு சொல்லை வாங்க வச்சிட்டாரே!

    அதோட, கொத்ஸ், சிவா கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க. உங்களப்பத்தின கமெண்ட் ஒண்ணு இருக்கு...மற்றபடி இது விளம்பரம் எல்லாம் ஒண்ணுமில்லை.

    ReplyDelete
  106. //தனி ஒருவனாக வந்து தருமியின் களங்கத்தைத் துடைத்த ஸ்K அவர்களுக்கு//

    களங்கத்தை எங்கப்பா துடைச்சாரு?? எப்படியும் நீங்க சொன்னது தப்புன்னு தானே அவரும் சொல்றாரு?!!

    வாத்தியார்னாலே தப்பை ஒத்துக்கிட மாட்டாங்களோ?!!

    ReplyDelete
  107. //பன்மொழிப் புலவர் சங்கத்து ஆற்றலரசி பொன்ஸும்//
    அண்ணாச்சி, அண்ணாச்சி, உங்க அன்புக்கு அளவே இல்லையா?!! எத்தனை பட்டம்யா ரெண்டு நாள்ல, தல கனக்குது!!

    இந்த ஊரு வேற ஓவராக் குளுருது.. நீங்க வேற?!!!

    ஆனாலும் கைப்ஸ் அண்ணாச்சி, நீங்க சொன்ன ஜிகிர்தண்டா, உள்ளம் குளிர்விப்பான் மொழிபெயர்ப்புதான் டாப்பு.. தல தலதான்னு நிரூபிச்சிட்டீங்க...!!!!

    ReplyDelete
  108. //
    "அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஒருத்தன் ஆசைபட்டான்னா, அவனோட அண்ணன் - தம்பிங்க கூட உதவமாட்டாங்க!"
    //
    ராமாயணக் கதைய மாத்திப்புட்டாரே.. ஒரு தம்பி மட்டும் தானே உதவலை? மத்த தம்பிங்க எல்லாம் ராவணன் சைடு தானே?!!!

    ReplyDelete
  109. //ராமாயணக் கதைய மாத்திப்புட்டாரே.. ஒரு தம்பி மட்டும் தானே உதவலை? மத்த தம்பிங்க எல்லாம் ராவணன் சைடு தானே?!!!
    //

    ம்ம் புரியுது பொன்ஸ்! இன்னிக்கு டார்கெட் எஸ்.கே வா?
    அங்க ஏற்கனவே சிபி கலாய்ச்சிகிட்டு இருக்கார்.

    ReplyDelete
  110. ஏம்மா, பொன்ஸ்,
    இப்பத்தான் முதல்முதலாக தருமி அய்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு நட்பை ஆரம்பித்து வைத்திருக்கிறேன்.
    அங்கு இட்டுவிட்டு, இங்கு வந்து பார்த்தால், எங்கள் இரண்டு பேருக்கும் இடையே ஒரு சண்டை மூட்டி விடுகிறீர்களே, நியாயமா?!

    அவர் சொன்னது சரி என்றுதானே நானும் சொல்லியிருக்கிறேன்!?

    சரியாகப் படிக்காமல்..... என்னம்மா இது!!!

    நான் இந்த அரசம்பழம் விவகாரத்துல தான் கருத்து சொன்னேன்!

    அவர் பசும்பழம் என்பதை விட அரசம்பழம் சரியானது என்றார்!
    நானும் அதைத்தானே ஆமோதித்திருக்கிறேன்!/


    மற்றபடி, அந்த மதுரய்யனுக்கும், இவருக்கும் இடையே நடந்த பசுப்பழம், பசும்பழம், பைம்பழம், இதுக்கெல்லாம் நான் ஒண்ணுமே சொல்லலியே!

    அதுக்கெல்லாம்தான் நீங்களே சொல்லிட்டீங்களே.....சரியா!!

    ReplyDelete
  111. //இதைப் புரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா நடந்துக்கோ'!!//

    இது அந்த கதை சொல்லி சொன்னாரா அல்லது நீங்க சிபிக்கு சொல்லறீங்களா?

    அவரு வேற கொஞ்ச நாள் தனியா இருந்தாரு....;)

    ReplyDelete
  112. //பில்டப்புக்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை!//

    சிவாண்ணா, நமக்கு அடிக்கடி இந்த மாதிரி பில்ட் அப் குடுங்க.

    ReplyDelete
  113. கட்டதுரை,

    கர்லாக்கட்டை சுத்தி ஆளு வளர்ந்திருக்கீங்களே தவிர, தமிழை வளத்துக்கலியே நீங்க!:))

    அண்ணன் தம்பிங்க கூட உதவ மாட்டாங்கன்னா,

    அவங்கல்லாம் இருந்தும் கூட உதவமாட்டாங்கன்னும் அர்த்தம்..... மன்னிக்க....பொருள் கொள்ளலாம்!!

    என்னமோ போங்க!

    ReplyDelete
  114. //சீக்கிரம் அனுப்புங்க கொத்ஸ்.//

    அதுக்கு நிலான்னு ஒருத்தங்க இருக்காங்களே. அவங்களைத்தான் காண்டாக்ட் பண்ணணும்.

    //அதோட, கொத்ஸ், சிவா கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க. உங்களப்பத்தின கமெண்ட் ஒண்ணு இருக்கு...//
    வந்தேன். எதைச்சொல்லறீங்கன்னு புரியலையே. எதோ லைட் பதிவுன்னு சொன்னீங்களே. அதுவா?

    //மற்றபடி இது விளம்பரம் எல்லாம் ஒண்ணுமில்லை.//
    ஆமாம் ஆமாம். ஒத்துக்கறேன். :)

    ReplyDelete
  115. //இது அந்த கதை சொல்லி சொன்னாரா அல்லது நீங்க சிபிக்கு சொல்லறீங்களா? //

    யாரு இவரு சிபிக்கு கதை சொல்வதாவது! சிபி இவரோட ஊருக்கே போயி பழைய கதையொண்ணை எடுத்து வெச்சிகிட்டு இவரை கலாய்ச்சிகிட்டு இருக்காரு!

    ReplyDelete
  116. //எப்படியும் நீங்க சொன்னது தப்புன்னு தானே அவரும் சொல்றாரு?!! //

    என்ன பொன்ஸ் சொதப்பறீங்க? தருமி சொன்னது சரின்னுதானே ஸ்.கே.யும் சொல்லியிருக்காரு.

    ReplyDelete
  117. கொத்ஸ், இதெல்லாம் அனியாயம், நல்ல வெட்டுனதுமில்லாம அதெ லிஸ்ட் போட்டு வேற சொல்லி அதோட நிறுதிக்காம டெஸ்ர்ட் வேற... கப கபன்னு வயிறு பசியிலெ எரியுது ;-)))

    ReplyDelete
  118. //இந்த ஊரு வேற ஓவராக் குளுருது.. நீங்க வேற?!!! //

    அட. இங்க கொஞ்சம் வாங்க. ரொம்ப சூடா இருக்கு.

    அப்புறம் பாத்து ஜல்ப்பு பிடிக்கப் போகுது.

    ReplyDelete
  119. //மத்த தம்பிங்க எல்லாம் ராவணன் சைடு தானே?!!!//

    அவர் சைடில் இருந்தாலும் காரியம் வெற்றியடைய உதவலை அப்படின்னு சொல்லறாருன்னு நினைக்கறேன்.

    சரியா எஸ்.கே.?

    ReplyDelete
  120. //ம்ம் புரியுது பொன்ஸ்! இன்னிக்கு டார்கெட் எஸ்.கே வா? //

    என்ன கட்டதுரை பொன்ஸ்தான் எஸ்.கே. ரசிகர் மன்ற தலைவி. அவங்க போயி கலாய்ப்பாங்களா? ஆனா அவங்களுக்கு கொளுகை எல்லாம் உண்டு. அதனால தப்புன்னு தோணிச்சுனா தட்டிக் கேட்பாங்க.

    ReplyDelete
  121. //அதுக்கெல்லாம்தான் நீங்களே சொல்லிட்டீங்களே.....சரியா!//

    கடைசியில் விட்டுக்குடுக்காமல் ஒரு சேம் ஸட் கோல் அடிச்சுட்டீங்களே. நல்ல தலைவர், நல்ல தொண்டர். நடத்துங்கப்பா.

    ReplyDelete
  122. //அண்ணன் தம்பிங்க கூட உதவ மாட்டாங்கன்னா,//

    ஆஹா. பொன்ஸ் கேட்ட கேள்விக்கு கட்டதுரைக்கு திட்டா? நல்லா இருங்க சாமி.

    ReplyDelete
  123. //யாரு இவரு சிபிக்கு கதை சொல்வதாவது! சிபி இவரோட ஊருக்கே போயி பழைய கதையொண்ணை எடுத்து வெச்சிகிட்டு இவரை கலாய்ச்சிகிட்டு இருக்காரு!//

    அதைப்பாக்கலையே. போய் பாக்கறேன்.

    ReplyDelete
  124. //கப கபன்னு வயிறு பசியிலெ எரியுது ;//

    என்ன தெகா? பசிச்சிதுன்னா சாப்பிட வேண்டியதுதானே. என்ன செய்யறதுன்னு தெரியலைன்ன ஒரு ரெண்டு பதிவு பின்னாடி போங்க பரோட்டா இருக்கு. இல்லை இணையத்தின் செல்லப் பிள்ளையை கேளுங்க. சாதம் வடிப்பது எப்படின்னு டி.வி.டி. அனுப்பி வைப்பாங்க.

    ReplyDelete
  125. //இணையத்தின் செல்லப் பிள்ளையை கேளுங்க. //
    இனி தாங்காதுய்யா.. குளிர் ஜுரம்.. ஆஸ்பிடல்ல சேரப் போறேன்.. நல்ல ஆஸ்பத்திரி எது இந்த ஊர்ல?!!

    ReplyDelete
  126. //கப கபன்னு வயிறு பசியிலெ எரியுது ;//

    கொத்ஸ்!
    அது பசியால வந்த எரிச்சல் இல்லை! இவரோட வலைப்பூவை யாரோ பதிவுலக விமர்சகன்னு சொல்லிகிட்டு ஒருத்தர் விமர்சனம் பண்ணுறேன் பேர்வழினு எதேதோ எழுதி வெச்சிருக்கார். அந்தெ எரிச்சல்தான் தெகாவுக்கு!

    ReplyDelete
  127. //இணையத்தின் செல்லப் பிள்ளையை கேளுங்க. சாதம் வடிப்பது எப்படின்னு டி.வி.டி. அனுப்பி வைப்பாங்க.//

    ;))))))))))))
    Beautiful!

    ReplyDelete
  128. ஓகே எஸ்.கே, நீங்க சொன்னதை நானும் ஒத்துக்கிடறேன்.. நீங்க தைரியமா போய் சிபியோட சண்டை போடுங்க.. நான் இங்கிட்டிருந்தே ஆதரவு கொடுக்கிறேன்..

    ReplyDelete
  129. ஏம்ப்பா, யாராவது ராகவனைத் தேடக் கூடாதா?!! அவர வேற காணோமே!! ஆவி தான் அடிச்சிடுச்சுன்னு என் மேல யாராச்சும் கேஸ் போடப் போறாங்க!!

    ReplyDelete
  130. ஏம்ப்பா, யாராவது ராகவனைத் தேடக் கூடாதா?!! அவர வேற காணோமே!! ஆவி தான் அடிச்சிடுச்சுன்னு என் மேல யாராச்சும் கேஸ் போடப் போறாங்க!!

    ReplyDelete
  131. //ஆஹா. பொன்ஸ் கேட்ட கேள்விக்கு கட்டதுரைக்கு திட்டா? நல்லா இருங்க சாமி.//

    thirukkuRaL 562.
    !!

    ReplyDelete
  132. //இனி தாங்காதுய்யா.. குளிர் ஜுரம்.//

    ஏம்மா பொன்னரசி. இதுவரை கிடைச்ச பட்டங்களின் லிஸ்ட் ஒண்ணு பதிவா போடுங்களேன். பார்க்கலாம்.

    ReplyDelete
  133. //யாரோ பதிவுலக விமர்சகன்னு சொல்லிகிட்டு ஒருத்தர் விமர்சனம் பண்ணுறேன் பேர்வழினு எதேதோ எழுதி வெச்சிருக்கார். அந்தெ எரிச்சல்தான் தெகாவுக்கு!//

    நீங்க சொன்னபிந்தான் போய்ப் பார்த்தேன். க்டசி வரியில் ஒரு உள்குத்து வைச்சு ஆப்படிச்சுட்டாரே மனுசன். அதையேதான் நம்ம துளசியக்காவிற்கும் பண்ணியிருக்காரு. இட்லிவடையார் நிலமை கொஞ்சம் பரவாயில்லை.

    ReplyDelete
  134. //;))))))))))))
    Beautiful!//

    டாங்க்ஸுங்கோ.

    ReplyDelete
  135. //இதுவரை கிடைச்ச பட்டங்களின் லிஸ்ட் ஒண்ணு பதிவா போடுங்களேன். பார்க்கலாம். //
    பட்டங்களைப் பராமரிக்கவும் அவ்வப்போது புள்ளிவிவரம் சேர்க்கவும் புதுசா ஆள் எடுக்கணும்.. பார்க்கலாம்.. இப்போ அதுக்கெல்லம் நேரமில்லை..

    பொதுவாழ்க்கையில் பட்டம் பெறுவதெல்லாம் சகஜமுங்கோ.. இப்போ நீங்க இல்லியா, பரோட்டா பதிவாளர், மீன்கொத்தி மன்னர்னு உங்களுக்கு எத்தனை பட்டம்?!!!

    ReplyDelete
  136. //நான் இங்கிட்டிருந்தே ஆதரவு கொடுக்கிறேன்..//

    ஆஹா. என்ன சப்போர்ட். ர.ம.த.ன்னா இப்படி இல்ல இருக்கணும். எனக்கும் ஒண்ணுக்கு ரெண்டா இப்போ இருக்காங்களே. ஒரு பிரச்சனைனா, உடனே பக்கத்தில் வந்து ரோட்டில் இறங்கிச் சண்டைப் போட்டு.....:)

    ReplyDelete
  137. //ஏம்ப்பா, யாராவது ராகவனைத் தேடக் கூடாதா?!! //

    அவருக்கென்ன. நல்லாத்தானே இருக்காரு. என்னது?
    ஆளக்காணுமா.
    அய்யய்யோ. பேயி, பிசாசுன்னு பேசும்போதே நினைச்சேன். இப்படி ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகப்போகுதேன்னு.

    சின்ன வயசு. நல்ல பிள்ளையாச்சே. எப்பப்பாரு முருகா முருகான்னுகிட்டே இருக்குமே. அதுக்கா இப்படி.

    என்னது? வீட்டில்தான் இருக்காரா. அதானே பார்த்தேன். அவருக்கு என்ன ஆகும். ராசா மாதிரி புள்ள.

    :-D

    ReplyDelete
  138. //thirukkuRaL 562.//

    எஸ்.கே. ஐயா,

    இது நாலு பேரு வந்து போற இடம். எல்லாரும் உங்க ர.ம.த. மாதிரி மெத்த படிச்சவங்க இல்லை. அதனால விளக்கமா சொல்லுங்கய்யா.

    குறளைத் தேடிப் போனா கடுதாசி, ஈ மெயில்ன்னு என்னமோ இருக்கு. சரின்னு விளக்கத்தைப் படிச்சா. தீர விசாரிச்சிட்டு சின்ன தண்டனையாக் குடுன்னு போட்டு இருக்கு.

    ஆனா பொன்ஸ் பண்ணின தப்புக்கு கட்டதுரைக்கு தண்டனை குடுன்னு போடலையே.

    இல்லை. நீங்க 'நான் தப்பு பண்ணிட்டேன். சுமால் தண்டனை, ப்ளீஸ்'ன்னு சொல்லறீங்களா?

    ஒண்ணுமே புரியலையே. ஒரு நம்பர் குடுத்து இப்படி புலம்ப விட்டுட்டீங்களே!

    ReplyDelete
  139. இ.கொ,

    //க்டசி வரியில் ஒரு உள்குத்து வைச்சு ஆப்படிச்சுட்டாரே மனுசன். அதையேதான் நம்ம துளசியக்காவிற்கும் பண்ணியிருக்காரு. இட்லிவடையார் நிலமை கொஞ்சம் பரவாயில்லை.//

    அப்புறம் critique-ன்னா என்னா அர்த்தம், ஹா? நல்லதையும் திருத்திக்க வேண்டியதையும் இல்லெ அவருக்கு தோணுனதை சொல்லிட்டு போவரு... அதினாலே... எது என்னமோ ஹையா...

    சிபி, வுமக்கு இருக்கிடியோவ் இந்த காட்டானுகிட்ட ;-)))))

    ReplyDelete
  140. //அப்புறம் critique-ன்னா என்னா அர்த்தம்,//

    சரிதான் தெ.கா. நல்லது கெட்டது எல்லாந்தான் சொல்லணும். ஆனா அவர் பதிவு அறிமுகம், நல்லதா நாலு வார்த்தை, ஒரு உள்குத்துன்னு ஒரு ஸ்டாண்டார்ட் டெம்பிளேட் வைச்சா மாதிரி இருந்தது. அதான் சொன்னேன்.

    நம்ம சன் டீவி திரைவிமர்சனம் மாதிரி ஆகக்கூடாதில்ல. அதான் சொன்னேன்.

    ReplyDelete
  141. //சிபி, வுமக்கு இருக்கிடியோவ் இந்த காட்டானுகிட்ட//


    பழி ஓரிடம், பாவம் ஓரிடம்!
    :-(

    ReplyDelete
  142. //நம்ம சன் டீவி திரைவிமர்சனம் மாதிரி ஆகக்கூடாதில்ல. அதான் சொன்னேன்.//

    :-)))) ஹேய், அந்த ரப்பர் கழுத்து அம்மா சன் ட்டி.வியெலெ ஒண்ணு தலைய அனியாயத்துக்கு ஆட்டி ஆட்டி ஒரு dis-order கணக்கா விமர்சிக்குமில்ல அதப் பார்த்தா எனக்கு அலர்ஜில்லெ சில நேரத்திலெ நான் space out ஆகிடுவேன் கொடுமை தாங்கமா...

    யாரவது சொல்லுங்கப்பா பின்னாடி கழுத்தை அது நிப்பாட்டனுமின்னு மெனக்கெட்டு முயற்சித்த கூட அது பாட்டுக்கு ஆடிக்கிட்டேடேடே இருக்கப் போது ;-))

    ReplyDelete
  143. தெ.கா,
    //யாரவது சொல்லுங்கப்பா பின்னாடி கழுத்தை அது நிப்பாட்டனுமின்னு மெனக்கெட்டு முயற்சித்த கூட அது பாட்டுக்கு ஆடிக்கிட்டேடேடே இருக்கப் போது ;-))
    //
    என்ன அம்சமா ஒரு சங்கதி வாய்ச்சிருக்கு, அடுத்த பதிவுக்கு?!! "ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டுப் போவீயளா, கொத்தனாருக்கு எடுத்துக் கொடுக்கறீரு?!!!

    ReplyDelete
  144. அந்தம்மா மட்டுமில்ல தெகா. அதுக்கு முன்னாடி இருந்த கோட்டு சூட்டாளரும் அந்த மாதிரித்தான். ஆனா நான் சொல்ல வந்தது அந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பைப் பற்றி. அதுவும் ஒவ்வொரு படத்துக்கும் கடைசியா ஒரு பஞ்ச் டயலாக் வேற குடுப்பாங்க. தாங்காது சாமி.

    ReplyDelete
  145. பொன்னரசி,

    அவங்க எதிர் கட்சியா இருக்கும் போது தைரியமா தங்கவேட்டை நிகழ்ச்சியை கலாய்ச்சது உண்மைதான். ஆனா இப்போ அவங்க ஆளும் கட்சி. அதனால விமர்சனமெல்லாம் பண்ணுணா ஆட்டோ வரும். அதையெல்லாம் தாங்கணும்ன்னா உங்க தலையைப் பதிவு போட சொல்லுங்க.

    ReplyDelete
  146. //அதையெல்லாம் தாங்கணும்ன்னா உங்க தலையைப் பதிவு போட சொல்லுங்க. //

    எந்தத் தலையை?? பல தரப்பட்ட கட்சியில, சில பல சங்கத்துல, ஒரு சில மன்றத்துலயும் இருக்கிறதுனால, எந்தத் தலை என்பதைத் தெளிவாக உரைக்கவும்...

    உங்க தலயப் போடச் சொல்லுங்க.. அவர் தான் ஆட்டோ வந்தாலும், டாக்ஸில போனாலும் முகமூடியைக் கழற்றவே மாட்டாரே!!

    ReplyDelete
  147. நீமோ படத்தை போட்டுட்டு இத்தனை மாசமா சிவா இதா நீமோ பத்தி எழுதறேன் எழுதறேன்,அதா எழுதறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தை எழுதலை.நீங்க எழுதின அளவுக்கு கூட அவர் நீமோ பத்தி எழுதலை.

    ReplyDelete
  148. /அதுவும் ஒவ்வொரு படத்துக்கும் கடைசியா ஒரு பஞ்ச் டயலாக் வேற குடுப்பாங்க. தாங்காது சாமி.//

    நல்லவேளை 3D மாதிரி ஏதாவது கையி வெளியில வந்து நான் பாட்டுக்கு தனியா இருக்கிற நேரத்தில பஞ்சு அது இதுன்னு தலையெ ஆட்டிகிட்டி வச்சுச்சுன்னு வைச்சுங்கோங்க மவளே பெட்டிக்குள்ளே கையை விட்டு இழுத்துப் போட்டுடுவேனாக்கும்... ப்ளாஸ்மா தெரிச்சாலும் சரின்னுட்டு ;-)))

    ReplyDelete
  149. என்னா சிபி, சேடு மூஞ்சி காமிச்சா விட்டுடுவோமின்னு பார்தீகளா... இந்த கதையெல்லாம் நடக்காதுப்பு... பேரூர்ல வைச்சு பாருமையா வும்மை... ;-))

    ReplyDelete
  150. //எந்தத் தலை என்பதைத் தெளிவாக உரைக்கவும்...//

    இதுக்குத்தான் ஒரே ஒரு கட்சியில் உங்களை அர்பணிச்சுக்கணம்கிறது. ஆனா அடிவாங்கற விஷயத்தில் ஒரே ஒரு தல தானே....

    ReplyDelete
  151. //ப்ளாஸ்மா தெரிச்சாலும் சரின்னுட்டு ;-)))//

    பாத்துக் கண்ணு 2000,3000ன்னு கொட்டி டீவிய வாங்கிப்புட்டு இப்படி எதாவது ஆகிடப் போகுது. சிம்பிளா ரிமோட் எடுத்து அணைக்கலாமில்ல.

    ReplyDelete
  152. //நீங்க எழுதின அளவுக்கு கூட அவர் நீமோ பத்தி எழுதலை.//

    அதான் நான் எழுதியாச்சே. விடுங்க. இப்போ அவரு வரன் பாக்கற விஷயத்தில் பிஸியா இருப்பாரு. அப்புறமா கவனிச்சுக்கலாம்.

    ReplyDelete
  153. //ஒண்ணுமே புரியலையே. ஒரு நம்பர் குடுத்து இப்படி புலம்ப விட்டுட்டீங்களே! //


    இப்ப, நமக்கு வேண்டப்பட்ட புள்ள ஒண்ணு, ஒரு தப்பு பண்ணுது!
    அப்ப அதை அடிக்கவும் மனசில்லை.
    ஆனா, கண்டிக்கணும்னு தோணுது!
    அப்ப என்ன செய்வோம்?
    அந்தத் தப்பை தானும் செஞ்சோ, அல்லது சொல்லிக் காட்டிக்கிட்டு வர்ற ஒரு அப்பாவிப் புள்ளையைப் புடிச்சு,
    நாலு சாத்து சாத்தினா,[!!!!]
    நம்ம புள்ளை, ஆகா! இது மாதிரி நடக்குமான்னு புரிஞ்சுக்கும்!
    ஏன்னா... அதான் நல்ல புள்ளையாச்செ! நம்ம புள்ளையாச்சே1

    அதைத்தான்,
    திருவள்ளுவரும் சொல்றாரு!

    உன்னோட செல்வம்[நெடிதாக்கம், {பொன்ஸ்}] உன்னை விட்டுப் போகாம இருக்கணும்னா[நீங்காமை வேண்டுபவர்], தண்டிக்கணும்னு நெனைக்கும் போது, ரொம்பக் கடுமையா தண்டிக்கற மாதிரி காட்டி,
    குறைவாத் தண்டிக்கணும்னு![கடிதோச்சி மெல்ல எறிக]

    குறள்:
    கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டுபவர்.

    ReplyDelete
  154. //ஒண்ணுமே புரியலையே. ஒரு நம்பர் குடுத்து இப்படி புலம்ப விட்டுட்டீங்களே! //


    இப்ப, நமக்கு வேண்டப்பட்ட புள்ள ஒண்ணு, ஒரு தப்பு பண்ணுது!
    அப்ப அதை அடிக்கவும் மனசில்லை.
    ஆனா, கண்டிக்கணும்னு தோணுது!
    அப்ப என்ன செய்வோம்?
    அந்தத் தப்பை தானும் செஞ்சோ, அல்லது சொல்லிக் காட்டிக்கிட்டு வர்ற ஒரு அப்பாவிப் புள்ளையைப் புடிச்சு,
    நாலு சாத்து சாத்தினா,[!!!!]
    நம்ம புள்ளை, ஆகா! இது மாதிரி நடக்குமான்னு புரிஞ்சுக்கும்!
    ஏன்னா... அதான் நல்ல புள்ளையாச்செ! நம்ம புள்ளையாச்சே1

    அதைத்தான்,
    திருவள்ளுவரும் சொல்றாரு!

    உன்னோட செல்வம்[நெடிதாக்கம், {பொன்ஸ்}] உன்னை விட்டுப் போகாம இருக்கணும்னா[நீங்காமை வேண்டுபவர்], தண்டிக்கணும்னு நெனைக்கும் போது, ரொம்பக் கடுமையா தண்டிக்கற மாதிரி காட்டி,
    குறைவாத் தண்டிக்கணும்னு![கடிதோச்சி மெல்ல எறிக]

    குறள்:
    கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டுபவர்.

    ReplyDelete
  155. //நீமோ படத்தை போட்டுட்டு இத்தனை மாசமா சிவா இதா நீமோ பத்தி எழுதறேன் எழுதறேன்,அதா எழுதறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தை எழுதலை.நீங்க எழுதின அளவுக்கு கூட அவர் நீமோ பத்தி எழுதலை.

    //

    செல்வன்,

    நான் ரெடியா இருக்கேன். நீமோ பற்ரி ஒரு என்சைக்ளோபீடியா வாங்கிவிட்டேன். லைபரரியில் இருந்த 3 புத்தகங்களையும் படித்து விட்டேன். ஆனால் எங்க வீட்டுக் கார அம்மா ஸ்டிரிக்டா ஒரு கண்டிஷன் போட்டுதாஙக. என்னுடைய கற்கால காமிராவில் நீமோவை போட்டோ எடுக்கக் கூடாதாம். புத்தம் புது டிஜிடல் காமிரா வேண்டுமாம்.

    நான் டிஜிடல் காமிரா வாங்க போகும்பொதெல்லாம் அதைவிட நல்ல காமிரா என்னுடைய பட்ஜட்டுக்கு அப்பால் உள்ளது என்ன செயவது

    ReplyDelete
  156. பொன்னரசி,

    வாயயும் கையயும் வச்சுக்கிட்டு சும்மா இருக்காம பக்கத்தில இருக்கற எல்லாருக்கும் இப்படி அடிவாங்க்கித் தரயே. இது அடுக்குமா?

    எஸ்.கே. ஐயா,

    நீங்க அவங்களைக் கண்டிச்சிருந்தா (அது லேசா அதட்டியோ, பலமா அடிச்சோ) சரி. ஆனா இப்படி அப்பாவி கட்டதுரையை அடிச்சது தப்புதாங்க. வள்ளுவர் ஒண்ணும் பொன்ஸ் உங்க மன்றத்தில் இருக்கணமுன்னா பக்கத்து சங்கத்துக்காரனை அடின்னு சொல்லலையே.

    ReplyDelete
  157. அடடா. இப்படி ஒரு சாக்கா? பரவாயில்லை நான் எடுத்த படத்தைப் போட்டுக்குங்க. வேணும்ன்னா இன்னும் ஒண்ணு கூட இருக்கு தரேன்.

    பதிவப்போடய்யா..

    ஆமா, இந்த பால்கோவா மேட்டருக்கு யாருமே பதில் சொல்ல மாட்டேங்கறாங்களே என்ன விஷயம்?

    ReplyDelete
  158. போன பின்னூட்டம் ஒண்ணும் இல்லாம வந்துச்சுங்களா?

    அதான்.. கையும் வாயும் வச்சுகிட்டு சும்மா இருக்கேன்.. பயந்துட்டேன் :)

    ReplyDelete
  159. அட, நீங்க என்னங்க!

    பக்கத்து சங்கம், நம்ம சங்கம்னு என்னென்னமோ சொல்லிக் குழப்பறீங்க!

    கட்டதுர வேற நம்மளை எதேதோ சொல்லிக் கலாய்ச்சிக்கினு இருந்தாரா?

    அங்ஙனெ பாரு, இங்ஙனெ பாரு, இந்தாளு என்னமா அடி வாங்கறான்னு வேற போட்டுக் கொடுத்துக்கிட்டு இருந்தரா!

    பொன்ஸ் பின்னூட்டத்தை வெச்சு ஒரு கமென்ட் வேறா குடுத்தாரா!

    சரின்னு அவர் பேர போட்டு சொல்லிட்டேன்!

    கட்டதுர, நீன்ங ஒண்ணும் மனசில வெச்சுக்காதீங்க!

    நம்ம இ.கொ. எப்பவுமே இப்படித்தான்!

    என்ன நா சொல்றது!

    ReplyDelete
  160. கொத்ஸ், தருமிசாரின் பதிவில் நம்மைப் பற்றி இதோ



    “நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
    ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
    ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
    பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்

    ReplyDelete
  161. //ஆமா, இந்த பால்கோவா மேட்டருக்கு யாருமே பதில் சொல்ல மாட்டேங்கறாங்களே என்ன விஷயம்?
    //

    நான் அப்பவே சொல்லிட்டேன்லே இது மேல்தட்டு மக்களின் பழக்கம்ன்னு

    ReplyDelete
  162. //அதான்.. கையும் வாயும் வச்சுகிட்டு சும்மா இருக்கேன்.. பயந்துட்டேன் :)//

    உங்களைப் பார்த்தா பயப்படற ஆளு மாதிரி தெரியலையே. நான் சொல்லறது என்னன்னா, நல்ல படியா பேசுங்க எழுதுங்க. வம்புக்கு போகாதீங்க. அதுக்காக இப்படி ஒண்ணும் எழுதாத பின்னூட்டம் எல்லாம் போடாதீங்க. ஏற்கனவே பின்னூட்டத்துக்கு அலையறவன்னு எனக்கு பேரு. இந்த மாதிரி காலிப் பின்னூட்டங்கள் இன்னும் ரிப்பேர் ஆகப்போகுது.

    ReplyDelete
  163. என்ன எஸ்.கே.

    இப்படி நேரா சரணாகதி படலத்துக்குப் போயிட்டீங்க. எல்லாமே ஒரு தமாசுக்குத்தான்னு எல்லாருக்குமே தெரியுமே. இன்னும் கொஞ்ச நேரம் ஓட்டியிருக்கலாமே...

    ReplyDelete
  164. //நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்//

    நாங்களும் (அட்லீஸ்ட் நானும்) அப்படித்தான் இருந்தேன். ஆனாப் பாருங்க. இப்போ எல்லாம் மீன்கொத்தியோ அல்லது திராட்சை ரசமோதான் சரியா இருக்கு. எப்பவாவது ஒரு சிங்கிள் மால்ட். என்ன பண்ணறது.

    ReplyDelete
  165. //நான் அப்பவே சொல்லிட்டேன்லே இது மேல்தட்டு மக்களின் பழக்கம்ன்னு//

    உம்ம போட்டோ விளையாட்டைப் பார்த்தபின் நீர் சொல்லறதை நம்ப முடியவில்லையே. அதனால்தானே அடுத்தவங்களைக் கேட்கறேன். ஆனா அவங்க வாயே திறக்க மாட்டேங்கறாங்களே.

    ReplyDelete
  166. // பொன்ஸ் said...
    //எல்லைவிரித்தான் என்ற பட்டத்தைக் கொண்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த சேவையைச் செய்ய முற்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.//
    ஜி.ரா, முதல்ல, என்னையெல்லாம் உள்ளவிடமாட்டேன்னு சொல்லும் உங்க கம்பனி எல்லையை விரிக்கச் சொல்லுங்க..!!!! //

    ஆ! என்ன கேள்வி. என்ன கேள்வி! எங்கள் கம்பெனி எல்லையா விரிக்கச் சொல்கிறீர்கள். சென்னையின் எல்லையைச் செங்கல்பட்டையும் தாண்டி விரித்துக் கொண்டிருப்பதை உலகம் அறியும்.

    உங்களை உள்ளே விடவில்லை என்றால்...ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? ஏன் உங்கள் மீது அவர்களுக்கு அந்த அச்சம்? வவாச-வா? இல்லை வேறு ஏதும் காரணமா? அதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

    // ஜி.ரா தவிர்த்த மற்ற அனைத்து கட்சி வலைபதிவு மக்களே.. இப்போ புரியலைன்னா விடுங்க, அந்த வரலாற்றுப் புகழ் மிக்கச் சந்திப்பைப் பத்தி நாளைக்கு எழுதறேன்! //

    நாளை என்பது வெறுங்கனவு. இன்றே எழுதனும்! அதெற்கெல்லாம் துணிச்சல் வேண்டும். பொய்யும் புரட்டும் கலக்காமல் உண்மையை உள்ளபடிக்கு எழுதினால் படிக்கலாம்.

    ReplyDelete
  167. // //கண்டங்களைக் கடப்பவன். அமெரிக்கா என்ற கண்டத்திற்கு அன்றே கண்டமாக நின்றவன் சோழன்.
    //
    எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை.. மதுரைக்காரய்ங்க பத்தின பதிவுல, இப்படி சோழ மன்னனைத் தூக்கி வச்சுக் கொண்டாடுறீயளே, இதக் கேக்கக் கூடவா ஒரு மதுரக்காரர் வரலை?!!! மதுரை நிலைமை இப்படியாகணுமா?!! //

    யாதும் ஊரே. யாவரும் கேளிர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளதாதல்தானோ பொன்ஸை எங்கள் அலுவலகத்திற்குள் விடவில்லை. இப்பொழுது புரிகிறது.

    ReplyDelete
  168. // இலவசக்கொத்தனார் said...
    //இப்போ புரியலைன்னா விடுங்க, அந்த வரலாற்றுப் புகழ் மிக்கச் சந்திப்பைப் பத்தி நாளைக்கு எழுதறேன்!//

    ஜிரா சென்னைக்கு வந்த போது அவரைப் பார்க்கச் சென்று அவர்கள் கம்பெனியில் உங்கள் பின்னணி தெரிந்து உள்ளே விட மாட்டேன் என்று துரத்தியடித்த கதைதானே? எங்களுக்கு முன்பே செய்தி வந்தது. எங்கள் கட்சி உறுப்பினராகவோ அல்லது ர.ம.தவாகவோ இருந்தால் //

    சரியாச் சொன்னீங்க. அவங்க அலுவலகத்துல எனக்கு இருந்த வரவேற்பு என்ன...அடடா! அவங்க ஆபீசுல நம்ம பெருமை தெரிஞ்சிருக்கு.

    ReplyDelete
  169. // பொன்ஸ் said...
    //ஜிராவுக்கு ஆவி அடிச்சிட்டதுன்னு சொல்லறீங்க. //
    என்னங்க இது, கஷ்டப் பட்டு கதை எழுதினது நான்.. 'ஆ.வி' அடிச்சதா சொல்றீங்க?!!! ம்ஹும்!! //

    அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது பொன்ஸ். கஷ்டப்பட்டு கதை எழுதுனீங்க. அதனாலதான் மக்களும் கஷ்டப்பட்டு படிச்சிருக்காங்க. அப்புறம் ஆவியும் அடிக்கும். ஜூவியும் அடிக்கும். இப்பல்லாம் சுவி, அவி எல்லாம் அடிக்குதாம்.

    ReplyDelete
  170. // பொன்ஸ் said...
    ஏம்ப்பா, யாராவது ராகவனைத் தேடக் கூடாதா?!! அவர வேற காணோமே!! ஆவி தான் அடிச்சிடுச்சுன்னு என் மேல யாராச்சும் கேஸ் போடப் போறாங்க!! //

    ஏன்? இன்னொரு கத தயாரா இருக்கா?

    ReplyDelete
  171. //யாதும் ஊரே. யாவரும் கேளிர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளதாதல்தானோ பொன்ஸை எங்கள் அலுவலகத்திற்குள் விடவில்லை. இப்பொழுது புரிகிறது.
    //
    ராகவன்... ஸ்டாப் ஸ்டாப்.. ஸ்டாப்.. போதும்.. நம்ம ரெண்டுபேர் ஜென்டில் மேன் அக்ரிமென்டை இந்த கட்டத்தின் நினைவு கூர்கிறேன்.. சுதர்சன் கோபால் மால்/மயிலைப் பத்தி சொல்லி இருப்பதை எல்லாம் ராகவனைப் பற்றியது அல்ல என்று எந்தக் கோயிலில்/சர்ச்சில்/மசூதியில் வேண்டுமானாலும் சத்தியம் செய்ய எனது அலுவலகத்தில் நடந்த நமது வ.வா.ச.- ப.ம.க நல்லிணக்கக் கூட்டத்தின் அறிக்கைப் படி ஒப்புக் கொள்கிறேன்..

    இத்தோட நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஓகேவா?!!

    ReplyDelete
  172. //ஓகே எஸ்.கே, நீங்க சொன்னதை நானும் ஒத்துக்கிடறேன்.. //

    //ஜி.ரா, இத்தோட நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஓகேவா?!! //

    கொத்ஸ், இதனால் எல்லாம், "சவுண்டுவிட்டு ஜகா வாங்கும் மங்கையர் திலகம்" என்னும் பட்டத்தை எனக்குத் தாங்கள் அளித்தால், எங்கள் சங்கத்துப் புலி (அதாங்க ஒருத்தரு இருக்காரே இப்போ சூடான்ல, புலி) அதைக் கண்டித்து டீக் குடிப்பார்.. ச்சே.. தீக்குளிப்பார் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

    ReplyDelete
  173. அது பால்கோவா இல்ல...பாசந்தி!

    ஜிகர்தண்டா பத்தி நான் ஒரு Phd பண்ணப்போரேன்.அவ்வளவு விசயம் இருக்கு அதில... மொதல கடற்பாசி அப்புறம் கொஞ்சம் பாசந்தி ,கொஞ்சம் பாலடை அப்புறம் கொஞ்சம் பாசந்தி,கொஞ்சம் பாலடை,மேலே icecream அப்புறம் கொஞ்சம் பாசந்தி,கொஞ்சம் பாலடை...

    இதுதான் ஜிகர்தண்டா செய்யுற வழிமுறை...
    ரெம்ப கவனமா ஒன்னு ஒன்ன சேர்க்கணும். இல்லனா டேஸ்ட் இருக்காது... (Layer by layer we need add this icecream and cheese,paasanthi)

    ReplyDelete
  174. //நாளை என்பது வெறுங்கனவு. இன்றே எழுதனும்! அதெற்கெல்லாம் துணிச்சல் வேண்டும். பொய்யும் புரட்டும் கலக்காமல் உண்மையை உள்ளபடிக்கு எழுதினால் படிக்கலாம்.//

    ஆக மொத்தம் பொன்ஸால எழுதமுடியாத மாதிரி பண்ணிட்டீங்க. சூப்பர்.

    ReplyDelete
  175. //யாதும் ஊரே. யாவரும் கேளிர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளதாதல்தானோ பொன்ஸை எங்கள் அலுவலகத்திற்குள் விடவில்லை. இப்பொழுது புரிகிறது.//

    அது பல காரணங்களில் ஒன்று என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  176. //அடடா! அவங்க ஆபீசுல நம்ம பெருமை தெரிஞ்சிருக்கு.//

    சும்மாவே நம்ம கட்சிக்காரங்களுக்கு எல்லா இடத்திலேயும் மருவாதி. நீங்க நம்ம முன்னணித் தலைவர்களில் ஒருத்தர். உங்களுக்கு இல்லாத வரவேற்பா? சிகப்பு கம்பளம் விரிச்சாங்களா? இல்லைன்னா சொல்லுங்க. பொன்னரசியின் சதின்னு ஒரு கண்டன அறிக்கை விடுவோம்.

    ReplyDelete
  177. //அதனாலதான் மக்களும் கஷ்டப்பட்டு படிச்சிருக்காங்க.//

    அப்படிப் போடுங்க அரிவாள! இதுக்கு மேல என்னத்த சொல்ல. :)

    ReplyDelete
  178. //ஏன்? இன்னொரு கத தயாரா இருக்கா?//

    கேஸ் போட்டா அடுத்தது கதைதானே. அவங்கதான் தான் எழுதற கதை எல்லாமே நிஜ வாழ்க்கையில் நடந்த விஷயங்களின் தாக்கம்தான்னு சொல்லறாங்களே.

    ReplyDelete
  179. //ராகவன்... ஸ்டாப் ஸ்டாப்.. ஸ்டாப்.. போதும்.. நம்ம ரெண்டுபேர் ஜென்டில் மேன் அக்ரிமென்டை இந்த கட்டத்தின் நினைவு கூர்கிறேன்.. //

    அது இவ்வளவு நேரம் ஞாபகம் இல்லையோ?

    //இத்தோட நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஓகேவா?!!//

    அப்போ இவ்வளவு நேரன் என்ன எனிமீஸா? சிறு பிள்ளத்தனமா இல்ல இருக்கு....

    ReplyDelete
  180. //இதனால் எல்லாம், "சவுண்டுவிட்டு ஜகா வாங்கும் மங்கையர் திலகம்" என்னும் பட்டத்தை எனக்குத் தாங்கள் அளித்தால்,//

    பட்டம் வேணும்னா நேரடியாக் கேட்க வேண்டியதுதானே. இப்படி பட்டம் பட்டமா கேட்டு வாங்கிக்கவேண்டியது. அப்புறம் குளிர் ஜுரம், கணக்கெடுக்க ஆள் வேணும்ன்னு பந்தா விடவேண்டியது. தாங்கலைடாப்பா.

    ReplyDelete
  181. //அப்போ ஜிகர்தண்டான்னா "இதயம் குளிர்விப்பான்" அல்லது "உள்ளம் குளிர்விப்பான்" அப்படின்னு சொல்லலாம் இல்லியா?//


    //கொத்ஸ், தருமிசாரின் பதிவில் நம்மைப் பற்றி இதோ



    “நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
    ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
    ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
    பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்

    //

    ////நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்//

    நாங்களும் (அட்லீஸ்ட் நானும்) அப்படித்தான் இருந்தேன். ஆனாப் பாருங்க. இப்போ எல்லாம் மீன்கொத்தியோ அல்லது திராட்சை ரசமோதான் சரியா இருக்கு. எப்பவாவது ஒரு சிங்கிள் மால்ட். என்ன பண்ணறது.//



    உ.கு.பா வே பின்னாடி தள்ளிட்டு உ.பா வே நைசா முன்னாடி கொண்டுவந்துண்டிங்க..

    தின(மும்) மலம் கழிக்கும் போது உ.பா வேண்டாம் உ.கு.பா வேண்டும் போலிருக்கிறது

    ReplyDelete
  182. //அது பால்கோவா இல்ல...பாசந்தி!//

    வாங்க இராம்,

    மதுரக்காரங்க மானத்தக்காக்க வந்த சிங்கமே. (அதுக்காக நான் மிருக ஜாதின்னு சொல்லறேன்னு அடிக்க எல்லாம் கூடாது!)

    //ஜிகர்தண்டா பத்தி நான் ஒரு Phd பண்ணப்போரேன்.//

    நீங்க இப்படி சொல்லறீங்க. ஆனா கேள்விக்கு உங்க ஊரு ஆளுங்க பதிலே சொல்ல மாட்டேங்கறாங்க.

    //இதுதான் ஜிகர்தண்டா செய்யுற வழிமுறை...
    ரெம்ப கவனமா ஒன்னு ஒன்ன சேர்க்கணும். இல்லனா டேஸ்ட் இருக்காது...//

    புதுசா பாலாடை, பாசந்தி கொண்டு வந்திருக்கீங்க. ஆனா ஜிரா சொன்ன நுங்கைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. கொஞ்சம் விவரமா சொல்லுங்கப்பா. எனக்கு சிவா, எதோ அரைகுறையா பண்ணிக்குடுத்து ஏமாத்திட்டாரோன்னு தோணுது இப்போ.

    //(Layer by layer we need add this icecream and cheese,paasanthi)//

    ஏங்க. இப்படி பண்ணினா அது ஃபலூடா மாதிரி ஆகிடது? நான் ஜிகர்தண்டா குடிக்கிற ஐட்டமுனில்ல நினைச்சேன். நீங்க சாப்பிடற ஐட்டமா மாத்துரீங்க?

    ReplyDelete
  183. //உ.கு.பா வே பின்னாடி தள்ளிட்டு உ.பா வே நைசா முன்னாடி கொண்டுவந்துண்டிங்க..//

    நானா பண்ணறேன் நம்ம மக்கள் அப்படி இருக்காங்க. கொத்ஸு பரோட்டா பத்தி எழுதினா அரசமீனவன் பத்திப் பேசறாங்க. இப்போ உ.கு. பத்தி எழுதினா உ.பா. பத்தி பேசறாங்க. என்ன பண்ணறது.

    அப்புறம் எப்போ எதைப்பத்தி யோசிக்கறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா? என்ன வேலை பண்ணினாலும் பண்ணற வேலையில் கான்ஸண்டிரேட் பண்ணுங்க சாமி.

    ReplyDelete
  184. ராமசந்திர மூர்த்தி பயங்கர மேல் குடியா இருக்காறே. எங்களை மாதிரி பாட்டாளி மக்களுக்கு நான் கொடுத்தது உண்மை உ.கு.பா

    ஜிரா கன்ப்யூஸ் ஆயிட்டாரு நுங்கு பதினிதான் உ.கு அல்ல

    ReplyDelete
  185. வணக்கம் அனைத்து நண்பர்க்கும்...
    பதனி அல்லது நுங்கு எல்லாம் சேர்ந்தா அது ஜிகர்தண்டா
    இல்லை.! அதுக்கு வேற ஏதாவது பேர் இருக்கும்.பாசந்தி எல்லாம் ரெம்ப விலை கிடையாது.. நான் சொன்ன மாதிரி செய்யணும்னா ஒரு கிளாஸ்க்கு 3ருபா தான் வரும்..

    ReplyDelete
  186. நானும் raamcmன்னு பார்த்தவுடனே முதலமைச்சர் ரேஞ்சுக்கு யோசிச்சேன். சிவா கரெக்ட்டா இராமச்சந்திரமூர்த்தின்னு பிடிச்சுட்டாரே. முன்னமே தெரியுமா?

    என்னங்க பாசந்தியே ஒரு காஸ்ட்லி ஸ்வீட்டு. அதைப் போட்டு மூணு ருபாய்க்கு ஜிகர்தண்டாவா? ஒண்ணும் சரியாப் படலையே.

    ReplyDelete
  187. பாசந்தி விலை எனக்கு தெரியாது... ஆனா காதல் படத்தில் வரும் ஜிகர்தண்டாகாரர் எனக்கு ஒரு தடவை சொன்னது அந்த தகவல்... அப்புறம் இன்னும் ஒரு தகவல் 5ருபாய்க்கு ஒரு டீ கிளாஸ் நெறய ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரையில் இன்னமும்...

    ReplyDelete
  188. இப்போ ரொம்ப கன்பியூஸ்டா இருக்கேன். அடுத்த முறை மதுரை போய் ஒரு ஜிகர்தண்டா குடிச்சிட்டு முடிவைச் சொல்லறேன்.

    ReplyDelete
  189. என்ன குழப்பம் உங்களுக்கு... நான் இன்னிக்கு மதுரை போறேன்.. உங்க முகவரியில் வேணும்னா பார்சல் அனுப்புறேன்...... :-)

    ReplyDelete
  190. //நானும் raamcmன்னு பார்த்தவுடனே முதலமைச்சர் ரேஞ்சுக்கு யோசிச்சேன். சிவா கரெக்ட்டா இராமச்சந்திரமூர்த்தின்னு பிடிச்சுட்டாரே. முன்னமே தெரியுமா?//

    அதெல்லாம் தெரியாது அவர் போலியா அல்லது போளியா என பார்க்க அவர் லிங்கை பிடித்து போனால் அவருடைய முழு சரித்திரம் கிடைத்தது.

    ரா.சா.மு ரூ 5 க்கு பாசந்தி என்றால் அது பாசந்தி ஆக இருக்க முடியாது. மைதா அல்லது கிழங்கு மாவு கலவை ஆக இருக்கும்

    ReplyDelete
  191. //என்ன குழப்பம் உங்களுக்கு... நான் இன்னிக்கு மதுரை போறேன்.. உங்க முகவரியில் வேணும்னா பார்சல் அனுப்புறேன்...... :-)//

    யாராவது நியூ ஜெர்ஸிப் பக்கம் வந்தா குடுத்து அனுப்புங்க. இப்படித்தான் பெண்களூரில் இருக்கும் போது ஊரிலிருந்து அல்வா வரவழைத்து சாப்பிட்டது....

    ReplyDelete
  192. //அதெல்லாம் தெரியாது அவர் போலியா அல்லது போளியா என பார்க்க அவர் லிங்கை பிடித்து போனால் அவருடைய முழு சரித்திரம் கிடைத்தது.//

    அவரு ஸ்வீட் பாயா இருக்காரு, அவரைப் போய் போளி பாசந்தின்னுகிட்டு.

    //ரா.சா.மு ரூ 5 க்கு பாசந்தி என்றால் அது பாசந்தி ஆக இருக்க முடியாது. மைதா அல்லது கிழங்கு மாவு கலவை ஆக இருக்கும்//

    அப்படிப் போடு. அப்படிப்போடு. இப்போ என்ன பதில் ராம்?

    ReplyDelete
  193. அம்மா பொன்ஸ்!

    //வவ்வால்னு ஒரு பதிவர் இருக்காருங்க.. அவர் நல்லா பிழிவாரு.. உதாரணங்கள் கௌசிகன் பதிவில் :)//

    ஒரு நான்கு நாட்கள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள போட்டுக்கொடுத்துடிங்களே !

    இலவச கொத்தனார் பதிவில ஜிகர் தண்டானு பார்த்தளே கே டிவி நியாபகம் தான் வருது அனியாத்துக்கு மறு ஒளிபரப்பா இருக்கும் :-)) அதனலா ரொம்ப அவதனிப்பது இல்லை( அப்போ அப்போ இப்படி கதை சொல்லினு எஸ்.கே சொன்னாப்போல போட்டா தான் கிரீடம் சூடுவாங்க)

    ஜிலேபி புழியரதுக்குலாம் இடமே தராம பின்னூட்ட நாற்றாங்காளே வைத்து இருப்பவர் இ.கோ இங்கே எனக்கு என்ன வேலை!(இரும்பு அடிக்கிற இடத்துல வவ்வால்கு என்ன வேலை!)

    ReplyDelete
  194. //இலவச கொத்தனார் பதிவில ஜிகர் தண்டானு பார்த்தளே கே டிவி நியாபகம் தான் வருது அனியாத்துக்கு மறு ஒளிபரப்பா இருக்கும் :-))//

    பதிவ பாருங்க மறு ஒளிபரப்பு மாதிரியா இருக்கு? நல்ல வேளை கே.டி.வின்னு சொன்னீங்க. சன் டீவின்னு சொன்னா அடுத்தது அழுகை சீரியலெல்லாம் போடணும்.

    //இரும்பு அடிக்கிற இடத்துல வவ்வால்கு என்ன வேலை!)//

    ஐயா, இது இரும்பு அடிக்கிற இடமில்லை. கரும்பு கடிக்கிற இடம். கட்டாயம் வாங்க.

    ReplyDelete
  195. கொத்ஸ்,

    சிவா சார்
    //ஒரு புல் ஜானி நடையர் தங்க லேபிள் இருக்கு. அதைக் காலிபண்ணத்தான் அழைப்பு
    நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்

    ஒரு வழியா இப்பத்தான் புரிஞ்சது..(அதுகுள்ள இந்த வாரம் வந்துடுச்சி.. ஸ்ஸ் அப்பப்பா இப்பவே கண்ணை கட்டுதே..) பெரியவங்க நீங்க அதனால சபைல அடக்கமா இருக்குறிங்க.. சின்ன பசங்க சலம்புறோம் :-) .. காலி ஆகிடுச்சினாலும் ஒண்ணும் மேட்டர் இல்ல.. வரும் போது கூடவே ஒருத்தனை கூட்டிகிட்டு வர்றேன் :-)

    மத்த படி இந்த பால்கோவா, பாசந்தி இது எல்லாம் மேட்டுகுடிகளின் பழக்கமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.. இது எல்லாம் நமக்கு எங்க தெரியுது.. வீட்டுல இட்லி சுடுறப்ப கூட அந்த கடைசி அடித்தட்டு இட்லிய தின்ன பய நானு..

    ReplyDelete
  196. வந்துட்டீங்களா வவ்வால், வாங்க வாங்க..

    இன்னும் சில பதிவுகளிலும் சீரியஸான விவாதங்கள் ஓடிகிட்டு இருக்கு.. உங்க தலைகீழ் விகிதங்களை எல்லா இடத்திலயும் போட்டுத் தாக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  197. இதோ வந்துட்டேன். வந்துகிட்டே இருக்கேன்.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!