Monday, November 17, 2025

கள் தந்த போதை!

 

என்ன எழுத எனத் தெரியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டவனே அடி எடுத்துக் கொடுப்பான் என்பது நம் கலாச்சாரத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது. கந்த புராணம் எழுத கச்சியப்பச் சிவாச்சாரியாருக்கு, திருப்புகழ் பாட அருணகிரியாருக்கு எனப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. 

பண்புடன் இதழில் சிறார் இலக்கியச் சிறப்பிதழ் எனச் சொன்னவுடன் என்ன எழுதுவது என்று எனக்குக் குழப்பமாகவே இருந்தது. ஆசிரியர் குழுவில் இருக்கும் ஷாந்தி மாரியப்பனும், ஐயப்பனும் எழுதிய இரு குறிப்புகள் எனக்கு எழுத வேண்டிய தலைப்பை எடுத்துத் தந்தன. 

சிறார் இலக்கியச் சிறப்பிதழைக் கொண்டு வரக் காரணம் நவம்பரில் குழந்தைகள் தினம் வருவதால் என்று ஷாந்தி எழுதினார். ஒரே வரியில் சிறார் என்றும் குழந்தைகள் என்றும் எழுதி இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

அதற்கு முன்பு வேறு ஒரு குறிப்பில் ஐயப்பன் இவைகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். ஐயப்பன் கூட இந்தப் பிழையைச் செய்கிறாரே என்று திகைத்தேன். 

இந்த இரண்டு குறிப்புகளே பன்மை குறித்த விகுதிகளைப் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தன. ‘கள் தந்த போதை’ என்ற கட்டுரை இந்த இதழில் வெளி வந்திருக்கிறது. 

கட்டுரைக்கான சுட்டி இது

No comments:

Post a Comment

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!