Wednesday, February 25, 2009

புதசெவி - 02/25/2009

வழக்கம் போல புதிரைப் போட்டுவிட்டு விடையளிக்கும் முன் ஒரு புதசெவி பதிவு. ஆஸ்கார், பேரணி, அது இதுன்னு நடந்துக்கிட்டே இருக்கிறப்ப நாம தனியா புதசெவி பதிவு போடணுமான்னு நினைச்சேன். அப்புறம் அப்படி எல்லாம் பார்த்தா நாம பதிவு எண்ணிக்கையை ஏத்தறது எப்படின்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு.. இதோ உங்களுக்கான இந்த மாத புதசெவி பதிவு!

செய்தி 1
நைஜீரியா நாட்டு நடப்பு இது. கார் திருடர்கள் இருவரைப் பிடிக்க போலீஸர் அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். ஒருவன் தப்பிவிட அடுத்தவன் ஒரு நொடியில் தன்னை ஒரு ஆடாக மாற்றிக் கொண்டுவிட்டானாம். அதனால் அந்த ஆட்டைப் பிடித்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். விரிவான செய்தி இங்கே.

பஞ்ச்: ஆட்டையப் போட்டவங்களுக்கு பதிலா ஆட்டை போட்டாங்களா,,
நம்ம ஊர்லே கொலை கொள்ளை பண்ணவன் எல்லாம் காலாகாலத்துல அண்ணல் ஆகறதை அஞ்சாம பாத்தவங்க நாங்க! அண்ணனுங்க அண்ணல் ஆகும்போது ஆட்டைய போட்டவங்க ஆடு ஆக முடியாதா?

செய்தி 2
இது கனடா செய்தி. சமீபத்தில் துளசி ரீச்சர், ஒரு வீட்டை அப்படியே பெயர்த்து எடுத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கே பாருங்கள், பழங்கால வீடு ஒன்றை வாங்கியவர், அதனை உறைந்த ஏரியின் மேல் அப்படியே கொண்டு செல்வதை! அருமையான நகர்படம். பார்க்க இங்கே சுட்டுங்கள்.

பஞ்ச்: அரசியல்ல இல்ல போலிருக்கு! அதான் சொந்தமா வீட்டை வாங்கி அதைக் கட்டி இழுத்துகிட்டு இவ்ளோ கஷ்டப்படறாரு! நம்மக்கள் கிட்ட கத்துகிட்டிருந்தா இதே ஐஸ் வீட்டை (ஹவுஸ்னு சொல்லமாட்டேன்) தமிழ்வளர்ப்புக்கு உஷார் பண்ணி பர்மணண்ட்டாவே வச்சிருப்பாரு. ஆனா, நம்ம மக்களும் இவர்கிட்ட கத்துக்க மேட்டர் இருக்கு! ரெய்டு கிய்டு வந்தா வீட்டை ஓட்டிகிட்டே இருக்கலாம்!

செய்தி 3
இது இங்கிலாந்தில் நடந்தது. இந்த வார தினமலர் வாரமலரில் பிரியமான நடிகை புகைப்பிடிக்கையில் வட்ட வட்டமாக புகை விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இம்மாம் பெரிய வட்டம் விட முடியுமா? நல்ல வேளை இது நம்ம ஊரில் நடந்து இருந்தா அன்புமணி ரொம்பவே ரென்சன் ஆகி இருப்பாரு. எதானால் வந்தது எனத் தெரியாத இந்த ராட்சத புகைவட்டங்கள் பற்றிய செய்திக்கு இங்கே போகவும்.

பஞ்ச்: இந்த பஞ்ச் பயத்துக்கே பயத்தை காட்டறவன் - அவனுக்கு ஒரு மேட்டர்லே கருத்து சொல்ல பயம்னா பாதுகாப்பு வளையம், மலர்வளையம் இந்த மாதிரி வளையம் மேட்டர்தான்.. சோ, மீ த எஸ்கேப்பு!

செய்தி 4
ஜெர்மனி செய்தி. தேசீய லாட்டரியின் பரிசுத்தொகை 35 மில்லியன் யூரோக்களாக உயர்ந்து விட நாட்டில் அனைவரும் லாட்டரி மோகம் பிடித்து அலைகிறார்களாம். அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். ஏழ்மை ஒழிப்பு பற்றிய விவாதத்தின் பொழுது அந்நாட்டின் நிதி அமைச்சர் லாட்டரி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தற்பொழுதுள்ள தேக்க நிலை இவரையும் விட்டு வைக்கவில்லை போல. செய்தி இங்கே.

பஞ்ச்: நாங்க எல்லாம் லாட்டரி நடத்துவோம். இப்போ எலக்‌ஷென் வருதேன்னு நம்ம பெயரில் இருக்கிறதை வேற பெயரில் மாத்தி வைப்போம். இப்படி பிச்சைக்காரன் மாதிரி லாட்டரி டிக்கெட் வாங்கிக்கிட்டு இருக்கறவன் எல்லாம் நிதி மந்திரியா இருந்தா அப்புறம் எப்படி அந்த ஊர் எகானமி இம்ப்ரூவ் ஆகுங்கறேன்.

செய்தி 5
பழங்கால கதைகளில் எல்லாம் ஒருத்தன் தவம் இருப்பான். கடவுள் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் சாகா வரம் வேண்டும் என்பான். ஆண்டவனும் சாரி அது என்னால முடியாதுன்னு சொல்லுவாரு. ஆனா இங்க ஒரு அண்ணாத்த சாகா வரம் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு பாருங்க. செய்தி இங்கே.

பஞ்ச்: சாகாவரம் எல்லாம் யாருக்கு கிடைக்குதுன்றதை பொறுத்து! கோவக்காரனுக்கு கிடைச்சா சண்டைக்கும் சாகாவரம் கிடைக்கும், அரசியல்வாதிக்கு கிடைச்சா வாரிசுக்கு வயிரெரியும், சாதா ஆளுக்கு கிடைச்சா போரடிச்சே செத்துப்போவான் ஆனா சாவமாட்டான். ஆமாம், இப்படி சாகாவரம் வாங்கிட்டு வந்ததுகளை அப்படியே வேகவச்சா வேகுமா வேகாதா?

செய்தி 6
அண்ணன் வெயிட் கிட்டத்தட்ட 325 கிலோ. வெளிய எல்லாம் போக முடியாது. ஆனா வீட்டில் இருந்துக்கிட்டே மருத்தவர் சீட்டு கொண்டு மட்டுமே வாங்க முடியும் மருந்துகளை எல்லாருக்கும் விற்பனை செஞ்சு மாட்டிக்கிட்டாரு. ஆள் மாட்டிக்கிட்ட பின்னாடி, என்னால் கோர்டுக்கு வர முடியாது நீதிபதியை வேணா விட்டுக்கு வரச் சொல்லு எனச் சொல்லி இருக்காரு. அது நடக்காமல் போகவே அண்ணன் கோர்ட்டுக்குப் போக வேண்டியதாப் போச்சு. எதுல போனாராம் தெரியுமா? வீடு மாற்றும் பொழுது சாமான்களைக் கொண்டு செல்லும் யூஹால் எனப்படும் லாரி ஒன்றில். நீதிபதி போனால் போகிறது என்று லாரியை நிறுத்திய இடத்திற்கு வந்து பெயில் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார். செய்தி இங்கே.

பஞ்ச்: மருத்துவர் சீட்டு வாங்கிகிட்டு ஆட்சியே நடத்தறாங்கப்பா எங்க ஊர்லே.. கேவலம் நீதிபதி வெளியே வந்தாராம் - இதெல்லாம் ஒரு மேட்டரு! சரி, கொடுக்கறதுதான் கொடுக்கறாரு, யாருக்கெல்லாம் கொடுப்பாரு? நடக்கறதுக்கே கஷ்டப்படற ஆளுக்கு மட்டுமா, ஸ்ட்ரைக் பண்ணி கஷ்டப்படுத்தற ஆளுங்களுக்குமா? லாரியில வந்த குண்டனுக்கு மட்டுமா, லாரியை ஹைஜாக் பண்ணிக்கிட்டு வர தொண்டர்களுக்குமா?

கடைசியா ஒரு நகர்படம்.

நியூசிலாந்தில் ஒரு விலங்கை இரு கைதிகளின் கையில் பூட்டியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் பொழுது இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குப் பின் நடந்தது நீதிமன்ற வளாக பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.



பஞ்ச்: கட்டுண்டோம் காத்திருப்போம்னு இருந்தாங்களா? நாமார்க்கும் குடியல்லோம்னு ஓடினாங்க ஓடினாங்க! பிணைப்பா, Post ஆ அப்படின்னு காம்படிஷன் வந்தா பிணைப்புதான் ஜெயிக்கும்ன்றது சங்ககாலம் முதல் சமீபகாலம்வரை வரலாறு! இது கூட தெரியாத முட்டாப்பசங்க!!

Wednesday, February 18, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009

எல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்த நேரம் இல்லை. அதனால் கொஞ்சம் கவனமாகவே போடவும்! :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.




1
2
34

5
6






7
89


10


11
12




13

1415
16

17



இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.