Wednesday, February 25, 2009

புதசெவி - 02/25/2009

வழக்கம் போல புதிரைப் போட்டுவிட்டு விடையளிக்கும் முன் ஒரு புதசெவி பதிவு. ஆஸ்கார், பேரணி, அது இதுன்னு நடந்துக்கிட்டே இருக்கிறப்ப நாம தனியா புதசெவி பதிவு போடணுமான்னு நினைச்சேன். அப்புறம் அப்படி எல்லாம் பார்த்தா நாம பதிவு எண்ணிக்கையை ஏத்தறது எப்படின்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு.. இதோ உங்களுக்கான இந்த மாத புதசெவி பதிவு!

செய்தி 1
நைஜீரியா நாட்டு நடப்பு இது. கார் திருடர்கள் இருவரைப் பிடிக்க போலீஸர் அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். ஒருவன் தப்பிவிட அடுத்தவன் ஒரு நொடியில் தன்னை ஒரு ஆடாக மாற்றிக் கொண்டுவிட்டானாம். அதனால் அந்த ஆட்டைப் பிடித்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். விரிவான செய்தி இங்கே.

பஞ்ச்: ஆட்டையப் போட்டவங்களுக்கு பதிலா ஆட்டை போட்டாங்களா,,
நம்ம ஊர்லே கொலை கொள்ளை பண்ணவன் எல்லாம் காலாகாலத்துல அண்ணல் ஆகறதை அஞ்சாம பாத்தவங்க நாங்க! அண்ணனுங்க அண்ணல் ஆகும்போது ஆட்டைய போட்டவங்க ஆடு ஆக முடியாதா?

செய்தி 2
இது கனடா செய்தி. சமீபத்தில் துளசி ரீச்சர், ஒரு வீட்டை அப்படியே பெயர்த்து எடுத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கே பாருங்கள், பழங்கால வீடு ஒன்றை வாங்கியவர், அதனை உறைந்த ஏரியின் மேல் அப்படியே கொண்டு செல்வதை! அருமையான நகர்படம். பார்க்க இங்கே சுட்டுங்கள்.

பஞ்ச்: அரசியல்ல இல்ல போலிருக்கு! அதான் சொந்தமா வீட்டை வாங்கி அதைக் கட்டி இழுத்துகிட்டு இவ்ளோ கஷ்டப்படறாரு! நம்மக்கள் கிட்ட கத்துகிட்டிருந்தா இதே ஐஸ் வீட்டை (ஹவுஸ்னு சொல்லமாட்டேன்) தமிழ்வளர்ப்புக்கு உஷார் பண்ணி பர்மணண்ட்டாவே வச்சிருப்பாரு. ஆனா, நம்ம மக்களும் இவர்கிட்ட கத்துக்க மேட்டர் இருக்கு! ரெய்டு கிய்டு வந்தா வீட்டை ஓட்டிகிட்டே இருக்கலாம்!

செய்தி 3
இது இங்கிலாந்தில் நடந்தது. இந்த வார தினமலர் வாரமலரில் பிரியமான நடிகை புகைப்பிடிக்கையில் வட்ட வட்டமாக புகை விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இம்மாம் பெரிய வட்டம் விட முடியுமா? நல்ல வேளை இது நம்ம ஊரில் நடந்து இருந்தா அன்புமணி ரொம்பவே ரென்சன் ஆகி இருப்பாரு. எதானால் வந்தது எனத் தெரியாத இந்த ராட்சத புகைவட்டங்கள் பற்றிய செய்திக்கு இங்கே போகவும்.

பஞ்ச்: இந்த பஞ்ச் பயத்துக்கே பயத்தை காட்டறவன் - அவனுக்கு ஒரு மேட்டர்லே கருத்து சொல்ல பயம்னா பாதுகாப்பு வளையம், மலர்வளையம் இந்த மாதிரி வளையம் மேட்டர்தான்.. சோ, மீ த எஸ்கேப்பு!

செய்தி 4
ஜெர்மனி செய்தி. தேசீய லாட்டரியின் பரிசுத்தொகை 35 மில்லியன் யூரோக்களாக உயர்ந்து விட நாட்டில் அனைவரும் லாட்டரி மோகம் பிடித்து அலைகிறார்களாம். அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். ஏழ்மை ஒழிப்பு பற்றிய விவாதத்தின் பொழுது அந்நாட்டின் நிதி அமைச்சர் லாட்டரி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தற்பொழுதுள்ள தேக்க நிலை இவரையும் விட்டு வைக்கவில்லை போல. செய்தி இங்கே.

பஞ்ச்: நாங்க எல்லாம் லாட்டரி நடத்துவோம். இப்போ எலக்‌ஷென் வருதேன்னு நம்ம பெயரில் இருக்கிறதை வேற பெயரில் மாத்தி வைப்போம். இப்படி பிச்சைக்காரன் மாதிரி லாட்டரி டிக்கெட் வாங்கிக்கிட்டு இருக்கறவன் எல்லாம் நிதி மந்திரியா இருந்தா அப்புறம் எப்படி அந்த ஊர் எகானமி இம்ப்ரூவ் ஆகுங்கறேன்.

செய்தி 5
பழங்கால கதைகளில் எல்லாம் ஒருத்தன் தவம் இருப்பான். கடவுள் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் சாகா வரம் வேண்டும் என்பான். ஆண்டவனும் சாரி அது என்னால முடியாதுன்னு சொல்லுவாரு. ஆனா இங்க ஒரு அண்ணாத்த சாகா வரம் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு பாருங்க. செய்தி இங்கே.

பஞ்ச்: சாகாவரம் எல்லாம் யாருக்கு கிடைக்குதுன்றதை பொறுத்து! கோவக்காரனுக்கு கிடைச்சா சண்டைக்கும் சாகாவரம் கிடைக்கும், அரசியல்வாதிக்கு கிடைச்சா வாரிசுக்கு வயிரெரியும், சாதா ஆளுக்கு கிடைச்சா போரடிச்சே செத்துப்போவான் ஆனா சாவமாட்டான். ஆமாம், இப்படி சாகாவரம் வாங்கிட்டு வந்ததுகளை அப்படியே வேகவச்சா வேகுமா வேகாதா?

செய்தி 6
அண்ணன் வெயிட் கிட்டத்தட்ட 325 கிலோ. வெளிய எல்லாம் போக முடியாது. ஆனா வீட்டில் இருந்துக்கிட்டே மருத்தவர் சீட்டு கொண்டு மட்டுமே வாங்க முடியும் மருந்துகளை எல்லாருக்கும் விற்பனை செஞ்சு மாட்டிக்கிட்டாரு. ஆள் மாட்டிக்கிட்ட பின்னாடி, என்னால் கோர்டுக்கு வர முடியாது நீதிபதியை வேணா விட்டுக்கு வரச் சொல்லு எனச் சொல்லி இருக்காரு. அது நடக்காமல் போகவே அண்ணன் கோர்ட்டுக்குப் போக வேண்டியதாப் போச்சு. எதுல போனாராம் தெரியுமா? வீடு மாற்றும் பொழுது சாமான்களைக் கொண்டு செல்லும் யூஹால் எனப்படும் லாரி ஒன்றில். நீதிபதி போனால் போகிறது என்று லாரியை நிறுத்திய இடத்திற்கு வந்து பெயில் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார். செய்தி இங்கே.

பஞ்ச்: மருத்துவர் சீட்டு வாங்கிகிட்டு ஆட்சியே நடத்தறாங்கப்பா எங்க ஊர்லே.. கேவலம் நீதிபதி வெளியே வந்தாராம் - இதெல்லாம் ஒரு மேட்டரு! சரி, கொடுக்கறதுதான் கொடுக்கறாரு, யாருக்கெல்லாம் கொடுப்பாரு? நடக்கறதுக்கே கஷ்டப்படற ஆளுக்கு மட்டுமா, ஸ்ட்ரைக் பண்ணி கஷ்டப்படுத்தற ஆளுங்களுக்குமா? லாரியில வந்த குண்டனுக்கு மட்டுமா, லாரியை ஹைஜாக் பண்ணிக்கிட்டு வர தொண்டர்களுக்குமா?

கடைசியா ஒரு நகர்படம்.

நியூசிலாந்தில் ஒரு விலங்கை இரு கைதிகளின் கையில் பூட்டியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் பொழுது இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குப் பின் நடந்தது நீதிமன்ற வளாக பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.



பஞ்ச்: கட்டுண்டோம் காத்திருப்போம்னு இருந்தாங்களா? நாமார்க்கும் குடியல்லோம்னு ஓடினாங்க ஓடினாங்க! பிணைப்பா, Post ஆ அப்படின்னு காம்படிஷன் வந்தா பிணைப்புதான் ஜெயிக்கும்ன்றது சங்ககாலம் முதல் சமீபகாலம்வரை வரலாறு! இது கூட தெரியாத முட்டாப்பசங்க!!

11 comments:

said...

இந்த முறை எனக்குப் பிடித்த பஞ்ச் அந்த வீடு சம்பந்தப்பட்டதுதான். உங்களுக்கு?

said...

//அப்புறம் அப்படி எல்லாம் பார்த்தா நாம பதிவு எண்ணிக்கையை ஏத்தறது எப்படின்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு.//

எனக்குப் பிடித்தது இதுதான்.

-அரசு

said...

தப்பிச்சு ஓடின அறிவாளி திருடனுங்க சூப்பர்! எங்கைய்யா புடிக்கறீங்க? :)

-டைனோ

said...

எனக்கு "ஆடு" தான் பிடிச்சிருக்கு.
வீடு மாற்றும் முறை "நிலத்தில்" பல முறை பார்த்துவிட்டதால் ஐஸ் மீது என்பது ஒன்றும் அதிசியம் இல்லை அதுவும் 2' ஆழம் உள்ள ஐஸ் மீது.
சாகாவரம் வாங்கியவைகளை வேகவைத்தால் நிச்சயம் வேகும். :-)
தப்பிக்கிறாங்களாம்!!ஏதோ மப்புல ஓடுகிற மாதிரி ஓடி மாட்டிக்கிட்டாங்களே!!

said...

//சாகாவரம் எல்லாம் யாருக்கு கிடைக்குதுன்றதை பொறுத்து! கோவக்காரனுக்கு கிடைச்சா சண்டைக்கும் சாகாவரம் கிடைக்கும், அரசியல்வாதிக்கு கிடைச்சா வாரிசுக்கு வயிரெரியும், //

இதான் எனக்குப் பிடித்தது. :-)

said...

//பிணைப்பா, Post ஆ அப்படின்னு காம்படிஷன் வந்தா பிணைப்புதான் ஜெயிக்கும்ன்றது சங்ககாலம் முதல் சமீபகாலம்வரை வரலாறு!//

Post-ங்கற சொல்லுல Pun-ஞ்ச்! கட்டாயம் இது தான்:-)))

said...

ஆனாலும் புத்திசாலி அய்யா நீர்.. எந்த பஞ்ச் பிடிச்சிருக்குன்னு கேட்டு பின்னூட்டம் போட வற்புறுத்தறீங்க பாருங்க.. அங்க நிக்கறீங்க!

எனக்கு பிடிச்ச பஞ்ச்: போஸ்ட் அ கமெண்ட்!

said...

ஏம்பா இலவசம் ! பஞ்ச் வுடு தம்பி! இதெல்லாம் எங்கேயிருந்து எப்ப்டி பிடிக்கிறே ! அதைச் சொல்லு.

said...

//ஜெர்மனி செய்தி. தேசீய லாட்டரியின் பரிசுத்தொகை 35 மில்லியன் யூரோக்களாக உயர்ந்து விட நாட்டில் அனைவரும் லாட்டரி மோகம் பிடித்து அலைகிறார்களாம். அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். ஏழ்மை ஒழிப்பு பற்றிய விவாதத்தின் பொழுது அந்நாட்டின் நிதி அமைச்சர் லாட்டரி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தற்பொழுதுள்ள தேக்க நிலை இவரையும் விட்டு வைக்கவில்லை போல. செய்தி இங்கே.//

நம்மூருல ஒரு காலத்துல K.A.S.சேகர், K.A.S.ராமதாஸ் போன்ற முகவர்கள் கொடி கட்டிப் பறந்ததை ஞாபகப் படுத்துது உங்க பதிவு.

said...

///இந்த முறை எனக்குப் பிடித்த பஞ்ச் அந்த வீடு சம்பந்தப்பட்டதுதான். உங்களுக்கு///

உடன்படுகிறேன்.


பிறகு

அந்த ரெண்டு கைதிகளும் ஒருத்தரை ஒருத்தர் கை (விலங்கு)விட முடியாம ஓடுரதை பொதுத் தேர்தல் சமயத்தில் போட்டு காங்கிரஸ் மற்றும் திமுக வை கிண்டல் பண்ணும் உம் நுகபிநி

said...

//செய்தி 3
இது இங்கிலாந்தில் நடந்தது. இந்த வார தினமலர் வாரமலரில் பிரியமான நடிகை புகைப்பிடிக்கையில் வட்ட வட்டமாக புகை விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இம்மாம் பெரிய வட்டம் விட முடியுமா? நல்ல வேளை இது நம்ம ஊரில் நடந்து இருந்தா அன்புமணி ரொம்பவே ரென்சன் ஆகி இருப்பாரு. எதானால் வந்தது எனத் தெரியாத இந்த ராட்சத புகைவட்டங்கள் பற்றிய செய்திக்கு இங்கே போகவும்.//

கரி எஞ்சின் புகைவண்டியில் உண்மையிலேயே வட்டவட்டமாக புகை வளையம் பார்த்திருக்கிறேன்.