Sunday, November 28, 2021

இதழில் கதை எழுதும் நேரமிது...

பத்தி 1 

எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும். தெருவில் ஒரு கட்டையையும் ரப்பர் பந்தையும் வைத்துக் கொண்டு நாம் எல்லாருமே விளையாடி இருப்போம். பள்ளி அணியிலோ கல்லூரி அணியிலோ விளையாடிய அனுபவம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் வீரராகப் பரிமளிக்க வேண்டும் என்றால் முறையாகக் கற்றுக் கொள்வது அவசியம். விளையாடும் நம்மை எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும், அணியில் நம் பங்கு என்ன, அதனைத் திறம்படச் செய்ய நம்மிடம் என்ன இருக்க வேண்டும், அதை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன, மைதானத்தில் நுழைந்தால் எங்கு நிற்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும், எங்கு ஓட வேண்டும், மட்டையை எப்படிப் பிடிக்க வேண்டும், எப்பொழுது எந்த விதமான பந்தை வீச வேண்டும் என இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய ஒவ்வொரு படியைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். 

பத்தி 2 

எல்லாரும் ஒன் பிட்ச் கிரிக்கெட் ஆடி இருப்போம். ஆனால் ஒன் டே கிரிக்கெட் விளையாட அதற்கான பயிற்சி வேண்டும். அதன் விதிகள் பற்றிய புரிதல் வேண்டும். 

முதல் பத்தியின் நீளம் கிட்டத்தட்ட நூறு சொற்கள். இரண்டாவதில் இருபது சொற்கள் கூட இல்லை. ஆனால் முதல் பத்தி சொல்லும் அனைத்தையும் சொல்லிவிடுகிறது. படிப்பவர்களைக் கவர்வது இரண்டாம் பத்திதான் என நிச்சயமாகக் கூற முடியும். 

நல்ல எழுத்திற்கு எளிமை, சொற்சிக்கனம், பயன்பாட்டில் உள்ள சொற்கள், எழுத்தில் ஒழுங்கு எனப் பல தேவைகள் உண்டு. எப்படி எழுத வேண்டும், எழுதியதை எப்படித் திருத்த வேண்டும், எழுத்தில் எத்தனை வகைகள் உண்டு, எங்கே எப்பொழுது எப்படி எழுத வேண்டும் என்பதை வருடக் கணக்காகத் தொடர்ந்து எழுதி அனுபவபூர்வமாகக் கற்றுக் கொள்ளலாம். அல்லது ஒரு ஆசிரியரின் துணை கொண்டும் கற்றுக் கொள்ளலாம். தமிழில் எழுதக் கற்றுத் தருவது என்பது மிக அரிதாகவே நடக்கும் ஒரு செயல். 

எழுத்தாளர் பாரா தொடங்கி இருக்கும் தமிழ் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அவரின் முப்பதாண்டு கால அனுபவத்தை எழுத ஆர்வம் கொண்டவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. அவ்வகுப்புகளின் முதல் பேட்ச்சில் சேரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

ஒரு கிரிக்கெட் கோச் களத்தில் இறங்கிச் சொல்லித் தருவது போல், எழுத்துக்கான விதிகளை, தனது எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் பாரா சொல்லி தந்தார். தகுந்த உதாரணங்களுடன் விளக்கியது இவ்விதிகளைப் புரிந்து கொள்வதை எளிதாக்கியது. கலந்து கொண்டவர்களை எழுத வைத்து, பின் அவற்றை திருத்தியது எங்கே தவறுகள் நிகழலாம் அவற்றைக் களைவது எப்படி என்பவற்றை உணரச் செய்தது. 

சிறுகதை, நெடுங்கதை, நாவல், Non Fiction, பத்திரிகைக்கான எழுத்து, Editing என எழுத்தின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் இவ்வகுப்புகளின் உள்ளடக்கத்தைத் தயார் செய்திருக்கிறார். முப்பது மணி நேரம் தொய்வில்லாமல் சென்றது அவர் கற்றுத் தரும் பாணியின் வெற்றிதான். வெறும் பாடமாக இல்லாமல் தொடர்ந்து கருத்துப் பரிமாற இடம் தந்தது மாற்றுக் கருத்துகளை அறிந்து கொள்ளவும் உடனுக்குடன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் வழி வகுத்தது. பத்து மணி நேரம் நடந்த எடிட்டிங் பற்றிய வகுப்புகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை. எடிட்டிங் பற்றி பிரத்யேகமாக இன்னுமொரு வகுப்பு வேண்டும் என்பது என் ஆசை. 

எழுத ஆர்வமுடையவர்களும் பதிவர் என்பதில் இருந்து எழுத்தாளர் என அடுத்த படிக்கு நகர ஆசைப்படுபவர்களும் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்பு இவ்வகுப்புகள். விவரங்களுக்கு class@bukpet.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Tuesday, October 19, 2021

CSK - IPL Champions 2021!

What more can a fan ask? 


May be an image of Vijayakasi Viswanathan and sitting

After such a terrible season last year, the captain promised us a better performance. And we believed him. We believed the team would bounce back.
What a season it turned out to be. Not playing at home, a break in the middle, moving the tournament over to a foreign country, wins, losses, hits, misses, disappointments, revelations, dropped catches, centuries, ducks, splendid bowling, bad bowling, orange cap and birthday celebrations. There was even time for a marriage proposal (She said Yes!). It was such a ride.
How many nervous moments did we have to undergo, how many disappointments and how much joy. All leading to a splendid climax. What a performance in the play offs to top it all.
The captain reminded us to be humble and displayed that humility in his winning speech too. No controversies, no nonsense. There was a mission and it was a success.
CSK. Worthy champions. Back to where they belong.
This #IPL2021 has been a great season, a season of #yellove . Thank you #CSK for this.
Our prayers were answered.

May be an image of 2 people, child, people sitting and people standing

வாழ்த்துப்பா!

நண்பர்களும் நல்லாசிரியர்களுமான பெருமாள் முருகனும், பா ராகவனும் இந்த மாதம் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். அவர்களை வாழ்த்தி எழுதிய வெண்பாக்கள். 

May be an image of 1 person

அன்பும் அறமும் அவரிருக் கண்களாம்
என்றும் சிரிக்கும் எழில்முகத்தான் - நண்பர்
பெருமையைப் பாரென்றுப் பேசுமிப் பாரும்
முருகு தமிழதன் முத்து!

அக் 15 - பெருமாள் முருகன் பிறந்தநாள்

May be an image of Pa Raghavan, beard and eyeglasses

திறந்தவோர் புத்தகமாய்த் தீதின்றி வாழும்
சிறந்தவராம் பாரா, சிறப்புபல பெற்றே
அறத்தோடு வாழட்டும் ஆயிரம் காலம்!
பிறந்தநாள் வாழ்த்தாகப் பா!

அக் 8 - பா. ராகவன் பிறந்தநாள்


சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு

 கிரேசி. இந்தச்சொல்லை தன் அடையாளமாகவே எடுத்துக்கொண்டவர் கிரேசி மோகன் (Crazy Mohan). 



உண்மையிலேயே ஒரு பன்முக ஆளுமை. நாடகம், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி நடித்தது எல்லாரும் அறிந்தது . அழகாக படம் வரைவார் என்பதும் கூட இன்னும் சிலருக்குத் தெரிந்திருக்கும். மரபுக் கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர்.  

நான் எழுதிய வெண்பாக்களை அவரிடம் இராமு அண்ணா கொண்டு சேர்க்க, கிரேசியின் நட்பு கிட்டியது. எழுதி அனுப்பும் வெண்பாக்களை ரசிப்பார், விமர்சனம் செய்வார், மேலும் எழுத ஊக்குவிப்பார். பெரும்பாலும் பதிலும் வெண்பாவாகவே வரும். 

விளையாட்டாக, ஆங்கிலம் கலந்தோ, தற்காலப் பேச்சுத் தமிழ் கலந்தோ, சென்னைத் தமிழ் போன்ற வட்டார வழக்குகள் கலந்தோ வெடித்துத் தெறிக்கும் பாக்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். எல்லா வித வார்த்தை விளையாட்டுகளையும் வெண்பாவில் கூடக் கொண்டு வந்துவிடுவார். நாம் செய்தாலும் மிகவும் ரசிப்பார். 

இன்று (அக் 16) அவர் பிறந்த நாள். 

பன்மொழிச் சொற்களில் பன்செய்யும் வித்தகர்
ஒன்லியெம் க்ரேசியவர் ஒன்டர்புல் மன்சன்ப்பா
வேரியஸ் வேக்களில் வேர்ட்ப்ளேயே செய்தவரும்
சீரியஸாய்த் தந்தார் சிரிப்பு. 

Photo: @premdavinci in twitter

Sunday, October 10, 2021

A Count of Accounts!

This is a follow up to my earlier post - Elavasam's Third Law of Accounting. If you have not read that, this would be a good time to do that. 

There was a question from a friend, after he read that post. "All I have is a bank account, What is this rent account you are talking about or the phone account. I dont have those accounts. I don't get what you are trying to say." 

In answering his question, I am going to peel yet another layer of the accounting onion here. 

I asked him if he had a habit of noting down his expenses. He said yes. It was a diary his financial transactions. Another name for a diary is a journal and in accounting, a list of transactions is called a journal.  See the image below, to see an accounting journal.  




It has the date, the particulars of the transactions and the amount is entered either in the debit column or in the credit column depending on whether you are spending it or receiving it. This is nothing but a record of all the transactions made. This could be a done on a piece of paper, in a notebook or using an app. 

If I asked my friend what is the total amount of rent he has paid this year, he would need to go through all the entries in his journal and sum up the amounts for the rent paid to get the total. That is not a very efficient way to get information. 

If he had a notebook and used one page in that notebook for each type of expenditure it would be easy to track. ‘How much did you spend on account of rent?’, could easily answered by looking at that page in the notebook. Hence that page is called the account. 

In a typical accounting process the transactions are first written in a journal and are then posted to the accounts. Let us take an example. On a particular day, let us assume, my friend had a cash balance of Rs. 100,000. During the day he paid rent of Rs. 30,000. He also bought groceries for Rs. 15,000 and ate out for Rs 5,000. He also received Rs. 1,000 as gift. 

His accounting journal for the day would look like 

Based on the journal above, we can see that he needs to track his cash, and have a page each for gifts received, rent, groceries and eating out. The choice of how many accounts need to be opened is his. He can choose to have all expenses under one account or he could have rent in one account and have groceries and food together in one account. For a corporate, however, there are rules that govern how these transactions need to be accounted and so they need to comply with those rules. 

The entries from the journal would be posted in these accounts. Since each account can either have a debit or credit, they are typically represented in the form of a T, with the debit entries posted on the left and the credit entries on the right. His cash account would look like this.


You can see that the account starts with a balance on the debit side. This is in line with the rule that says all assets have a debit balance. Cash on hand, is an asset to us and hence starts with a debit balance. The entries posted are to signify if cash is coming in or going out and are respectively debited and credited in this account. His expenses for rent, groceries and eating out would be accounted in the following manner and his income, in the form of gifts received, would look like this. 

Just a glance of these accounts would tell you what the total of transactions under that account is. You will also note that for every debit there is a corresponding credit. This is the basis of what is called as the double entry bookkeeping. You can create as many such accounts as it is required to record the transactions. These days, the accounting apps have a screen for input of the transaction and the updating of the journal and the accounts are automatically taken care of. 

Thus accounting is done in two steps, the first is to record all the transactions in an accounting journal and the second is to post these entries to the relevant accounts so that obtaining the totals and balances becomes an efficient process. 

From these accounts you can draw up the profit and loss statement and the balance sheet, but that is for another day. 

Wednesday, September 29, 2021

Elavasam's Third Law of Accounting!


"I don't understand accountancy. They say debit what comes in, credit what goes out. I wish they follow it when it comes to my bank account. But they credit my account when money comes into my account. There is no logic." That was my friend, reacting to a Facebook post. 
 
Is the bank really screwing up things by doing what it is doing? Is accounting that difficult to understand? Let us talk about it. And like Trevor Noah says, "We will tell you about basics of accountancy in another installment of - If you don't know, now you know' 
 
Newton's third law of motion says, 'Every action has an equal and opposite reaction'. The accounting equivalent would be that every debit has a corresponding credit. There are exceptions to this rule but for now, let us keep it simple. In addition to that there are three golden rules of accounting
 
  • Debit what comes in, Credit what goes out
  • Debit the receiver, Credit the giver
  • Debit all expenses and losses, Credit all incomes and gains
 
And I will add another one to make it easier for us to understand. 
  • All assets have debit balances, all liabilities have credit balances
 
The most important thing to understand is that these rules are to be applied from the point of view of the person who is doing the accounting. So, if I am buying a phone and paying cash for it, then phone comes in and cash goes out. So as per the first rule, I would debit the phone account and credit the cash account, because the phone is coming in and the cash is going out. But the seller, would record the transaction in reverse by debiting his cash account and crediting his phone account because from his point of view the cash is coming in and the phone is going out. This is a very important distinction. 
 
In the example above, I have used both the debit and credit from the first rule itself. But that need not be the case always. The debit can be from one rule and the credit can be from another rule. For example, if I am borrowing money from Suresh, at this point, Cash is coming in, but nothing is going out. But as per the second rule, I need to credit the giver. I will record this by debiting my cash account and crediting the account of Suresh. Similarly, if I pay rent in cash, to me rent is an expense and cash is going out. I will debit my rent expense account and I will credit my Cash account. 
 
But in real life, we don't maintain such detailed accounting records for our personal transactions. Especially when it comes to banking transactions, we rely on the accounts that are maintained by the bank and so we have gotten used to looking at the transactions from their point of view subconsciously. This is what causes the confusion that my friend had, and this makes people think that the rules of accounting do not have logic. We will try to understand this by using some examples again. 
 
Let us say Suresh deposits $100 cash in his bank account. How would the bank account for this? It has cash coming in and the cash is given by Suresh. Therefore, it would debit Cash account and it would credit Suresh's account. This is from the point of view of the bank. Just to explain this a bit more, when this transaction is done, assuming there is no other transaction that has happened, the cash account would have a debit balance of $100 and Suresh's account would have a credit balance of $100 in the bank's records. The physical cash is an asset to the bank and therefore, a debit balance in its cash account makes sense as per the fourth rule I mentioned. 

Similarly, the bank is liable to pay Suresh back, the $100 he deposited when he asks for it. So, there is a liability the bank has towards that. Suresh's account having a credit balance also matches the fourth rule that a liability would have a credit balance. 
 
Suppose Suresh is very organized and has an accounting system in his house, when he deposits the money in the bank, he would credit his cash account as the money is going out and debit his bank account as the bank is the receiver. His balance in the bank is an asset to him and therefore the bank account having a debit balance holds good in line with the fourth rule. 
 
When we ask a banker. 'Is my account credited?', we are actually asking him, 'Is my account credited, in your books?'. This is because we have been talking to the banker only from their point of view. And this is why, the confusion was created in Junior's mind at the start. He spoke the rule from his point of view but talked about his account from the banker's point of view. 
 
Junior @mahaan Dubukku woke the beast inside me, giving me the chance to write this and for what he gave, he gets 'credit'!

Friday, September 24, 2021

எடிட்டர் என்றோர் இனமுண்டு...

நான் பள்ளியில் படிக்கும் பொழுது என் கனவுவேலை நூலகராவதுதான். எந்நேரமும் புத்தகங்களோடு இருக்கலாம். எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் படிக்கலாம். இதைவிட சிறந்த வேலை என்ன இருக்க முடியும் என்று நினைத்த காலம் அது. இன்றும் நூலகங்களைக் கண்டால் பரவசம்தான். ஆனால் படிப்பது தாண்டி எழுதுவது, எழுதுவதை எப்படி மெருகேற்றுவது எனத் தேடல் விரிவடையும் பொழுது புத்தகங்கள் உருவாகும் செயல்முறையிலும் ஆர்வம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அதில் கவனத்தை இழுத்தது இந்த எடிட்டிங் டிப்பார்ட்மெண்ட்தான்.

எடிட்டர். இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியோ ஆசிரியர் என்ற சொல் கருதப்பட்டு இன்று இதழாசிரியர், பொறுப்பாசிரியர், தொகுப்பாசிரியர் என்று பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எதுவுமே எடிட்டர் என்ற பதம் அளிக்கும் முழுப்பொருளையும் தருவதில்லை. எடிட்டரை ஆசிரியர் என்றால் எடிட்டிங் என்பதை எப்படிச் சொல்ல? இதனால்தான் என்னவோ இன்று தமிழ் பதிப்புலகத்தில் எடிட்டிங் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. இன்று எடிட்டர் என்றால் எழுத்து / இலக்கணப் பிழைகளைத் திருத்துபவர் என்ற தவறான புரிதல்தான் இருக்கின்றது.

ஆனால் என்னைக் கேட்டால் எடிட்டர் என்பவன் ஒரு மகா ரசிகன். ஒரு கதையையோ கட்டுரையையோ படித்துவிட்டு ஒரு ரசிகனாக தனக்கு எது உவப்பாக இருக்கிறதோ அதனை மேலும் மெருகேற்றி, தனக்கு உவப்பில்லாதவற்றை தவிர்த்து, ஓட்டம் சுணங்கும் இடங்களை நேராக்கி, ஏரணக் குறைபாடுகளை நீக்கி, அடுத்து படிக்க இருக்கும் வாசகனுக்குச் சீராக்கப்பட்டதை தருவதுதான் எடிட்டிங் என்பேன். எழுத்தாளர் தாய் போல. தான் எழுதியவற்றின் மேல் அதீத பாசம் கொள்ளுபவர். எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது என எண்ணக் கூடியவர். எடிட்டர் தந்தை போல. கனிவு காட்ட வேண்டிய இடத்தில் கனிவாக இருந்து, கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்பினைக் காட்டி அந்தப் படைப்பினை சரியாகச் செய்வது அவர் கடமை. அப்படி தவறுகளை நீக்குவது, பலவீனங்களை மறைப்பது, நல்ல இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என பல பரிமாணங்களைக் கொண்டது அவர் வேலை. தமிழில் நல்ல எடிட்டர்களுக்கு இன்று தட்டுப்பாடுதான்.

நல்ல எழுத்து படிப்பவனை தன்னுள் இழுத்துச் செல்ல வேண்டும். கதை நடக்கும் இடத்தில் படிப்பவன் ஒரு டைம் டிராவலர் போல் நின்று காட்சிகளைக் காண வேண்டும். முற்றிலும் தெரியாத கதைக்களனாக இருந்தால் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு எப்படி வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் தெரிந்த இடங்கள், தெரிந்த சம்பவங்கள் மாற்றமில்லாமல்தான் வரவேண்டும். அதற்கான வடிவம் என்னுள்ளே ஏற்கனவே இருக்கும் பொழுது வேறு ஒரு பிம்பத்தைக் காட்டினால் அது ஒட்டாமல் போய்விடும். அதுதான் பெனாத்தல் சுட்டிக் காட்டிய சம்பவம். ஹாக்வேர்ட்ஸ் என்பது கற்பனை, என் ஹாக்வேர்ட்ஸும் உங்கள் ஹாக்வேர்ட்ஸும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது ஆனால் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையம் நான் நிதமும் புழங்குமிடம், அதன் வர்ணனை சரியாக இல்லை என்றால் நெருடும். இதே போலத்தான் வரலாற்றுச் சம்பவங்கள், மற்ற எல்லா ஏரணங்களுமே.

ஒரு முறை ஆங்கில எடிட்டர் ஒருவரின் அனுபவம் பற்றிப் படித்தேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றினை அவர் எடிட் செய்யும் பொழுது முதல் உலகப் போர் நிகழ்வு ஒன்றினைப் பற்றிய குறிப்பு வந்ததாம். அதனை அப்போர் முடிந்த சமயம் அப்போரில் சண்டையிட்ட வீரர் ஒருவர் சொல்லும் குறிப்பாக அது இருந்ததாம். இவர் கேட்ட கேள்வி, 'இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த பின்னால்தானே அந்தப் போர் முதலாம் உலகப் போர் என அழைக்கப்பெற்றது. ஆனால் அந்த வீரர் சொல்லும் காலத்தில் அதனை க்ரேட் வார் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் அதனை எப்படி முதலாம் உலகப் போர் எனச் சொல்வதாக அமைக்கலாம்?' எனக் கேட்டாராம். இப்படி அல்லவா இருக்க வேண்டும் கவனம்!

அதே போல பாரா சொன்ன இறவான் புத்தகத்தில் ஒரு நிகழ்வு குறித்து வரும். கதை நிகழும் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் முன்பு நடந்தது என்ற ஒரு வரி இருக்கும். கதைக்கு துளியும் சம்பந்தமில்லாத நிகழ்வுதான். ஆனால் அது எப்பொழுது நிகழ்ந்தது எனப் பார்த்தேன், சரியாக கதை நடக்கும் ஆண்டிற்குப் பத்தாண்டுகள் முன்னால் நிகழ்ந்ததாக இருந்தது. அதனை எழுதும் பொழுது அவர் இது சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதனைச் சரிபார்த்து எழுதி இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எவ்வளவு கவனமெடுத்து எழுதி இருக்கார் என்று ஆச்சரியப்பட்டேன். படிக்கும் பொழுது எனக்கும் இது போன்ற கவனம் தேவை என்பதையும் உணர்ந்தேன்.

பாராவும் பெனாத்தலும் என்னை எடிட்டர் என்றே சொல்லிவிட்டார்கள். அதற்கான முறையான பயிற்சி இல்லை என்பதால் அதனை நான் ஏற்க முடியாது ஆனால் ரசிகனாக எனக்கு அவர்கள் படைப்புகள் மீதான கருத்துகளை நேர்மையாகச் சொல்லிவிடுவேன். அவை கேள்விகளாக வரலாம், புரியவில்லை தெளிவாகச் சொல்லவும் எனத் தீர்ப்பாக வரலாம், இழையறுப்புகளைக் கண்டு சொல்வதாக இருக்கலாம், ஏரணக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம், அல்லது #HackThoo என நேராக் குப்பைக்கும் கூட அனுப்பலாம். ஆனால் நேர்மையாகச் செய்ய வேண்டும், அது அவசியம்.

எனக்குமே இது இடைஞ்சல்தான். சரியாக எழுதப்படாதவற்றைப் படிக்க முடிவதில்லை, ஆரம்பித்து முடிக்காமல் விட்ட கட்டுரைகள் ஏராளம். படிக்கும் பொழுது மனம் தானாக எடிட் செய்யத் தொடங்கி விடுகிறது. உன் கண்ணிற்கு மட்டும் எப்படி இது தெரிகிறது என்கிறார்கள். நான் அதற்காக விசேடமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால் இப்படி கவனிப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. எழுதியதை வாய் விட்டுப் படித்தால் இது எளிதில் தெரியும். அதே போல படிக்கப் படிக்கத்தான் நம் மொழிவளம் கூடும். அதுவும் மிக அவசியமான ஒன்று.

முன்பெல்லாம் எல்லாரிடமும் என் கருத்துகளைச் சொல்பவனாகவே இருந்தேன். ஆனால் இப்படியான தயவுதாட்சணியமில்லாத எதிர்வினைகளை ஏற்றுக்கொள்வது மிகச் சிலரே. பல நட்புகளைக் கூட இழக்க வேண்டியதாயிற்று. எனவே இப்பொழுது எல்லாம் மிகத் தெரிந்த சிலரிடம் மட்டுமே அவர்கள் படைப்புகள் பற்றிய என் கருத்துகளைச் சொல்கிறேன். அதே போல என் எழுத்துகளை மேம்படுத்த வழியில்லாத இணையத்தளங்களில் எழுதுவதையும் குறைத்துக் கொண்டு வருகிறேன்.

பாரா நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பில் நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது எடிட்டிங் பற்றிய வகுப்புகளைத்தான். முறையாகக் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கும்தான்.

பாராவின் பதிவு - https://writeroom.bukpet.com/?p=1609
பெனாத்தலின் பதிவு - https://www.facebook.com/1122840143/posts/10225206135316784/?d=n

Friday, September 10, 2021

எளிமையாய் எழுதுவது எப்படி? - பாராவின் மாஸ்டர்கிளாஸ்!

'நோபல் பரிசு பெறும் நூல்களே ஒரு வருடத்தில் மறக்கப்படுகின்றன. இவ்வாறு குறுகிய நூல் ஆயுளுக்குக் காரணம், நவீன வாழ்க்கையில் உள்ள அவசரமும் அவலமும்தான்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இதை அவர் எழுதியது 25 வருடங்களுக்கு முன்னால். இன்று உலகம் இன்னும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் எழுதுவது சுவாரசியமாக, முதல் வரியில் இருந்து சுண்டி இழுக்கக் கூடிய மொழி கொண்டு இருந்தால்தான் படிப்பவர்கள் கவனத்தைப் பெற முடியும். 


ஒரு உதாரணத்திற்கு இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

சிவாஜி நல்லவர், வல்லவர். பாரா அவரது கதையை எழுத உள்ளார். 
சிவாஜி நல்லவர், வல்லவர். அவரது கதையை பாரா எழுத உள்ளார். 

முதலில் எழுதியதைப் படித்தால் சிவாஜி நல்லவராகவே இருக்கட்டும் ஆனால் பாரா தன் கதையை எழுதுவதற்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு என ஒரு குழப்பம் வருகிறது இல்லையா? ஆனால் இரண்டாவதாக எழுதி இருப்பதில் பாரா எழுத இருப்பது சிவாஜியின்  கதையை என்ற தெளிவு இருக்கிறது. இந்தத் தெளிவு இல்லை என்றால் 'போடா, என்னவோ எழுதறான் ஒரு மண்ணும் புரியலை' என்று படிப்பவர்கள் கடந்து செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம். சுவாரசியம் குறையாமல் எழுத மொழியின் சாத்தியங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், சொல்ல வருவதை சுருக்கமாகச் சொல்லத் தெரியாமல் வளவளவென்று எழுதுதல், வரிக்கு வரி தொடர்பில்லாமல் எழுதுதல், பொருத்தமாகப் பத்தி பிரித்த வடிவம் இல்லாமல் எழுதுதல், தகவற்பிழைகள் என்று சறுக்கக் கூடிய இடங்கள் ஏராளம். இலக்கியம் படைப்பவர்களும் தொழில் முறை எழுத்தாளர்களும் இந்தப் பிரச்னைகளோடு மாரடிக்கட்டும். நான் சும்மா இணையத்தில் எழுதப் போகிறேன் எப்படி எழுதினாலும் என்ன என்று இருக்க முடியாது. முதல் இரண்டு வரிகளில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் அவர்கள் தாண்டிச் செல்வது மட்டுமில்லாமல் எழுதத் தெரியாது என்ற முத்திரையையும் குத்தி இனி எழுதுவது எதையுமே படிக்க மாட்டார்கள். நான் எழுத வேண்டும், நான் எழுதுவதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் சரியாக எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

இணையத்திலும் அச்சிலும் வெளியாகும் எழுத்துகளைத் தொடர்ந்து படிக்கிறேன். சொல்ல கருத்துகளிருந்தும் அவற்றைச் சரியாகச் சொல்லத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் எழுத்துகளைப் பண்படுத்த வேண்டிய எடிட்டர் என்பவர் இருப்பதே இல்லை. ஆகையால் எழுதுபவர்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்று சொல்ல ஆளில்லை. முட்டி மோதி சுயமாகக் கற்றுக்கொள்வது என்பது எல்லாருக்கும் கைவருவதில்லை. அதனால் ஒரு தேக்கம் ஏற்பட்டு விடுகிறது. 

எல்லாராலும் எழுத முடியுமா? அது ஒரு கலை அல்லவா? அதற்குக் கடவுளின் அருள் இருக்க வேண்டாமா? என்ற கேள்விகள் எழலாம். மொழி ஒரு கருவிதான். அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் பரிசு பெறும் எழுத்தாளராக இல்லை என்றாலும் படிக்கக் கூடிய எழுத்தாளர் ஆகி விடலாம் என்கிறார் எழுத்தாளர் பாரா. 

இவ்வளவு நேரம் நீங்கள் இந்தக் கட்டுரையை படித்தீர்கள் என்றால் அவர் சொல்வது உண்மைதான். அவரின் சில பாலபாடங்களைக் கற்றுக் கொண்டதினால் மட்டுமே என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இதைச் சொல்ல ஒரு சிறு கூட்டமே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் சிலருக்கு அவர் சொல்லித் தந்ததை முறையான எழுத்துப் பயிற்சி வகுப்புகளாக செய்யவிருக்கும் அறிவிப்பினை இன்று வெளியிட்டிருக்கிறார். 

இது வரை தமிழில் இப்படிக் கற்றுக் கொள்ள வழியே இல்லாமல் இருந்தது. இன்று பாராவின் முயற்சியால் சாத்தியமாகி இருக்கிறது. மிக அவசியமான இதனை முன்னெடுத்ததற்கு பாராவிற்கு என் நன்றி.எழுத ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்! 

https://writeroom.bukpet.com/ என்ற இணைய தளத்தில் இவ்வகுப்புகள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம். 

Tuesday, June 15, 2021

மூக்குப்பொடி மகாத்மியம்


பாரா மூக்குப்பொடி போடுபவர்கள் பற்றி எழுதப் போக, அது என்னையும் தும்ம வைத்துவிட்டது. பாராவின் பதிவு இங்கே.

மூக்குப்பொடி போடுபவர்களுக்கு ஒரு அனுபவம் என்றால் பொடி போடுபவர்களுக்கு வாங்கிக் கொண்டு வருவதும் ஒரு அனுபவம்தான். என் தாத்தாவிற்கு முதல் முறை மாரடைப்பு வரும் வரை மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சீட்டாடிக்கொண்டும் இருக்கும் பொழுது தாத்தாவிற்கு பொடி வேண்டும். அவர் பொடிக்காகவே சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். நான்தான் கடைக்குப் போய் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொண்டு வருவேன்.

அந்த பொடிக் கடை உண்மையிலேயே ஒரு பொடிக்கடைதான். கடைக்காரர் ஒருவர் மட்டும் உள்ளே இருக்கலாம். வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சீவல், பன்னீர்ப்புகையிலை, சுருட்டு என புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் அவரைச் சுற்றி இருந்தாலும் மூக்குப்பொடிதான் பிரதானம். மற்ற இடங்களில் பரவலாகக் கிடைப்பதால் அந்தக் கடையில் ஏனோ பீடி சிகரெட் பார்த்த ஞாபகமில்லை. பெரிய கண்ணாடி குடுவைகளும் பீங்கான் குடுவைகளும் இருக்கும். பல தரங்களில் பல விலைகளில் பொடி விற்பனைக்கு இருக்கும். டி ஏ எஸ் ரத்தினம் பொடி ரொம்ப பிரபலமானது. பட்டணம் பொடி என்று ஒன்றும் உண்டு. நயம் நெய்ப்பொடி என்ற பலகை ஒன்று கடைக்குள் ஆடிக்கொண்டு இருக்கும் என ஞாபகம்.
வாங்க வரும் நாம் கடைக்கு உள்ளே எல்லாம் செல்ல முடியாது. வெளியில் இருந்து அப்படியே வாங்கிக்கொண்டு வர வேண்டியதுதான். ஆனால் எப்பொழுதும் கடை வாசலில் பொடியை வாங்கி அங்கேயே மூக்கில் ஏற்றிக் கொண்டும் தும்மிக்கொண்டும் நாலு பேர் எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அங்கு நின்றாலே நாசியில் இந்தப் பொடியும் தும்மலும், ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொள்ளும் கைக்குட்டைகளும் வேட்டி நுனிகளும் எல்லாம் கலந்து ஒரு வாசனை நாசியில் ஏறும். வாங்கும் நமக்கு அதுவே ஒரு கிறுகிறுப்பைத் தரும். இந்தக் கைக்குட்டைகளையும் வேட்டிகளையும் பார்த்தாலே தாய்மார்களுக்குக் கோவம் வரும்.
கடைக்குப் போய் வெறுமெனப் பொடி வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. யாருக்குப் பொடி எனச் சொல்ல வேண்டும். கடைக்காரர்களுக்கும் பொடி போடுபவர்களுக்கும் ஒரு அந்நியோன்யமான உறவு உண்டு. போடுபவர்களுக்கு எந்த விதமான பொடி வேண்டும் என்பது கடைக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்றபடி எந்தப் பொடியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொடிகளையோ கலந்து தருவார்கள். அதனால் பொடி போடுபவர்கள் மற்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு எளிதாக போய் வாங்கிவிட மாட்டார்கள். வெளியூர் செல்ல வேண்டுமானால் கூட வேண்டும் அளவு வாங்கிச் செல்வோரும் உண்டு.
பொடியை வாங்குவதற்குப் பிரத்யேகமான முறை ஒன்று உண்டு. சிறுவன் ஒருவன் வந்து இன்னாருக்குப் பொடி வேண்டும் எனச் சொன்ன உடன் கடைக்காரர் ஒரு பாக்கு மட்டையை எடுத்து அதை நீவி நேராக்கிக் கொள்வார். பிறகு வெகு நீளமான ஒரு உலோகக் கரண்டியை எடுத்துக் கொள்வார். கரண்டி என்ற உடன் தடவைக்கு ஐம்பது கிராம் எடுத்துப் போடக்கூடிய கரண்டு என எண்ணக்கூடாது. மிகவும் மெலிதான நீளமான கரண்டி அது. முனையில் சின்னதாக ஒரு டீஸ்பூன் போல சின்னதாக இருக்கும். அதை அந்தக் கண்ணாடி ஜாரினுள் விட்டு லேசாகக் கலக்கி தேவையான அளவு வரும் வரை அந்த கரண்டியினால் பலமுறை எடுத்து அந்த மட்டையில் போடுவார். அது ஒரு நடனத்தின் நெளிவுடன், ஒரு யோகியின் சிதறா கவனத்துடன் வெகு லாகவமாகச் செய்யக்கூடிய வேலையாகத் தெரியும். தேவை என்றால் பொடிகளை பல கண்ணாடிக் குடுவைகளில் இருந்து எடுத்து ஒரு சின்ன உரல் போன்ற ஒன்றில் கலக்கி அதன்பின் அதை பாக்கு மட்டையில் நிரப்புவதும் உண்டு. அந்த மட்டையின் ஒரு முனை மற்றொரு முனைக்குள் நுழைந்து பொடி சிந்தாமல் அழகான ஒரு செல்ப் சீலிங் மெக்கானிஸம் கொண்டதாக இருக்கும்.
இப்படி பொடியை வாங்கிக் கொண்டு வந்து தாத்தா கையில் தந்த உடன் அதை அவர் அந்த மட்டையை லேசாக உள்ளங்கையில் தட்டிக்கொண்டு, மெதுவாகப் பிரித்து ஒரு சிட்டிகை பொடியை விரல் நுனிகளில் எடுத்துக் கொண்டு, அந்த மட்டையை மீண்டும் கவனமாக மூடிவிட்டு, மூக்கின் ஒரு துவாரத்தில் கொஞ்சம் மறுதுவாரத்தில் மீதி என உறிஞ்சிக்கொண்ட சமயத்திற்கும் அதையடுத்துத் தும்மல் வரும் சமயத்திற்கும் இடையே ஆன கணப்பொழுதில் அவர் கண்டுகொள்ளும் சொர்க்கம், வாங்கி வரும் பொழுது கிடைக்கும் ஐந்து பைசா பத்து பைசா சில்லறையில் வாங்கிக் கொள்ளும் ஆரஞ்சு மிட்டாயை என் வாயில் போட்டுக் கொள்ளும் கணத்தில் எனக்கும் சித்தியாகும்.

பிகு: என்னைப் போலவே பாராவின் பதிவு லலிதாராமையும் தும்ம வைத்துவிட்டது. அவரின் பதிவு இதோ.

Friday, June 11, 2021

அமுதே தமிழே அழகிய மொழியே..

பொதுவா பெனாத்தல் ஒரு போஸ்ட் எழுதினா நான் அதைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா இந்த தடவை தொடர்புடைய ஆனால் தனித்தனியாகப் பேச வேண்டிய மூணு விஷயங்களைச் சேர்த்து எழுதி கொஞ்சம் குழப்பிட்டான்னு தோணுது. அதனால என் கருத்துதகளை கொஞ்சம் விரிவாகவே எழுதிடறேன்.

கலைச்சொற்கள்: எல்லா மொழிகளிலும் கலைச்சொற்கள் உண்டாக வேண்டியது அவசியம்தான். இன்றைக்கு பேருந்து, கணினி என்பது பேச்சுத் தமிழில் இல்லை என்றாலும் பேசினால் என்ன என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லாது இருக்கிறது. எழுதும் பொழுது கண்டிப்பாக இத்தகைய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதுவது அவசியம். ஆனால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கலைச்சொற்களை உண்டாக்கலாம் என்பது போலில்லாமல் அரசின் தமிழ்மொழி வளர்ச்சிக்கான துறை மூலமாகவே இச்சொற்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இச்சொற்களை ஆர்வலர்கள் பரிந்துரைக்க வேண்டுமானால் ஒரு வழி ஏற்படுத்தித்தரலாம். இத்தகைய கலைச்சொற்கள் எளிமையாக இருக்க வேண்டியது அவசியம். கொட்டை வடி நீர் போன்ற அபத்தங்களைக் காலம் பார்த்துக் கொள்ளும். அந்த விதத்தில் பெனாத்தலின் முதல் வரியில் அபார்ட்மெண்ட் என்பதை அடுக்ககம் எனச் சொன்னால் எளிமையாக, புரியும்படியாக இருந்திருக்கும். அதைச் செய்ய வேண்டும்தான். கலைச் சொற்களை முன்னெடுத்தல் அவசியமே.
வர்த்தகப் பெயர்கள்: இவற்றை மொழிபெயர்த்தல் தேவையற்ற வேலை. ஆப்பிள் என்ற பழத்தை என்பதை அரத்திப்பழம் (?) என்று சொல்வது வேறு ஆனால் ஆப்பிள் நிறுவனத்தை அரத்திப்பழம் எனச் சொல்வது வேறு. இரண்டாவது தேவையே இல்லாதது. சீனாக்காரன் செய்கிறான் என்பதால் நாமும் செய்ய வேண்டும் என்ற அபத்த வாதத்தை ஒதுக்கி விடுவோம். அவன் இவ்வளவு நாள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்றும்தான் சொன்னான். அதைக் கேட்போமா? கூகிள் எந்த மொழியிலும் இல்லாத புதிதாகச் செய்யப்பட்ட சொல். அதை என்னவென்று மொழிபெயர்க்க முடியும்?
தமிழ் கற்பித்தல்: பெனாத்தலின் பதிவில் மிகவும் முக்கியமான கருத்து இதுதான். ஆனால் இது பேசப்படாமல் போய்விடும் என்பதே உண்மை. இன்று தமிழ் தமிழ் எனப் பேசும் எத்தனை பேருக்குத் தமிழில் தவறின்றி எழுத வருகிறது? அல்லது தவறில்லாமல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது? திருத்தம் சொன்னால் கூட நீ யார் சொல்ல என்றுதானே கேட்கத் தோன்றுகிறதே தவிர தவறுதான் திருத்திக் கொள்வோம் என்ற எண்ணம்தான் இருக்கிறதா?
தமிழைக் கற்றுத் தருவதில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? இன்னமும் புரியாத வகையில் இலக்கணமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியததாகவும்தானே பாடங்கள் இருக்கின்றன? மற்ற மொழிகளைப் பள்ளிசாரா முறைகளில் கற்றுக்கொள்ள இருக்கும் வசதிதான் தமிழுக்கு இருக்கிறதா? கற்பிக்கும் முறையை சீரமைப்பது பற்றி பரவலாகப் பேச வேண்டும் ஆனால் வெட்டிச் சண்டைகளில் மண்டையை உடைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் இதில் இருப்பதில்லையே.
தமிழ் ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள் பலரின் உச்சரிப்பைக் கேட்கக் கவலையாகத்தான் இருக்கிறது. தமிழ் உச்சரிப்பு சார்ந்த மொழி. அதைக் கோட்டை விட்டால் எழுதும் பொழுது தவறுகள் வருவது தவிர்க்க முடியாமல் ஆகும். இதைக் குறித்து யாரேனும் பேசுகிறோமா?
ஊடகங்கள் மூலமாகவே நல்லதும் கெட்டதும் பரவும். இன்று தமிழ் ஊடகங்களின் மொழியறிவு அவ்வளவு மோசமாக இருக்கிறது. இதை முதலில் சரி செய்ய வழி அமைத்தால் தேவலாம்.
தமிழ்நாடு அரசுக்குத்தான் இந்தப் பொறுப்பு இருக்கிறது திரைப்படப் பெயர்கள் தமிழில் இருந்தால் வரிவிலக்கு போன்ற அபத்தங்களை விடுத்து அரசு தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். தமிழ் வாழ்க என்று விளக்குகள் அமைப்பது மட்டும் போதாது. பள்ளிகளிலும் ஊடகங்களிலும் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சிகள் தேவை. நடக்குமென நம்புவோம்.

பெனாத்தலின் பதிவு - https://www.facebook.com/suresh.babu.94/posts/10224441618444340

"ஐயா வந்துட்டேனய்யா, உங்க வீடு எங்கே இருக்கு?"
"அங்கே ஒரு வீடு, ஓர் இல்லம், ஓர் அகம் ஆகியவை தெரிகின்றன அல்லவா?"
"வீடுன்னா ஓட்டுவீடு, இல்லம்னா வில்லா, அகம்னா அபார்ட்மெண்ட்தானே?, தெரியுதய்யா"
"அவற்றுள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மகளிர் அழகுச்சாதனக்கடை இருக்கும் பாருங்கள்"
"ப்யூட்டி பார்லரா, ஃபேன்ஸி மார்ட்டாய்யா? ரெண்டும் இருக்கு."
"முதலில் சொன்னது. அதற்கருகில் ஒரு கொட்டைவடிநீர்த் தினக்கடை இருக்கும்"
"காபி டேவா? சரி. பார்த்துட்டேன். "
"அங்கே ஒரு தானியங்கிமுச்சக்கரவண்டிக்கூடம் இருக்கிறதல்லவா?"
"ஆட்டோ ஸ்டாண்டா?"
"அங்கேயே நில்லுங்கள், புலனத்தில் இருப்பிடப்புள்ளிகளை அனுப்புகிறேன்"
"வாட்சப் லொகேஷனாய்யா? இதை முதல்லேயே செஞ்சிருக்கலாமில்ல.. இதுக்கு ஒரு முழு பத்தி, என்னை யோசிக்க வச்சி, குழப்பி.."
தமிழை வளர்ப்பது என்பது இருக்கும் வார்த்தைகளை ஒழுங்காகப் புழங்குவதில் ஆரம்பிப்போம். தமிழ் கடினமான மொழி, வாத்தியார்கள் கொடூரமானவர்கள் போன்ற கற்பிதங்களை அழிப்பதில் தொடங்குவோம்.
புதிது புதிதாக யாருக்கும் எளிதில் புரிந்துவிடாத வார்த்தைகளை உருவாக்குவது அவ்வளவு கடினமில்லை, அந்த வார்த்தைகள் தமிழ்ப்பக்கம் இருந்து சிலரை "அது ஒண்ணும் அவ்ளோ ஈஸி இல்லைடா.."என்று துரத்துவதைத்தான் சாதிக்கும்.

Tuesday, May 25, 2021

Another fork in the road....

I started my electric car journey nine years ago when I was chosen as one of the few who had the opportunity to lease an Active-e. We were the Electronauts. From then on, I fell in love with electric cars. 

The i3 came along and I was one of the earliest to get one on the east coast. I think it was early 2014. The owners choice program was a good idea as it gave us the tax rebates while ensuring that we could drop off the car at the end of four years. 

And I went again with the 2018 i3 and leased it this time. I did test drive a few other brands but I simply did not like the quality or performance after driving a BMW for six years. Thanks to COVID, I did not end up driving it as much as I would have liked or paid for. Today is the last day of the lease and I have returned the i3. 




I will miss the lightweight carbon fiber based, quirky design, the inquisitive questions people ask about the car, the surprisingly roomy interior. But I will not miss the lack of a fifth seat, the limited range and a rather unstable bluetooth. I am also a bit sad that BMW moved away from the i3 philosophy. That was a bummer from Bimmer.

I wanted to try out other brands and am planning to get a Model Y from Tesla. The range and the full self driving capabilities are the two things that attracted me. The next time around there are going to be a lot of options to choose from. May be BMW has a better model then. 

I want to thank my dear friends, Tom MoloughneyManny Antunes and Mary Demarest-Paraan for all the help over the years.

Sunday, May 16, 2021

மொழி குறித்து...

கடந்த சில தினங்களில் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய சிறுகதைகளைப் படித்தேன். இவற்றில் சில பரிசு பெற்ற கதைகளும் கூட. படித்த பின் மிஞ்சியது வருத்தமே.

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான கருவி இருப்பது போல் எழுத்துக்கான கருவி மொழி. ஆனால் மொழியை அறிந்து, அது கை கூடி, அதில் தேர்ச்சி பெற்று அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் ஆகிவிட்டது.
ஒருவர் விடாமல் அனைவரின் கதைகளிலும் அத்தனை எழுத்துப் பிழைகள். அத்தனை இலக்கணப் பிழைகள். அத்தனை தேவையற்ற ஆங்கிலக் கலப்பு. இங்கு சொல்லப் போகும் உதாரணங்கள் நான் பல முறை சொன்னவையே. மீண்டும் மீண்டும் அத்தனை பேரும் அவற்றை தொடர்ந்து எழுதுவதால் அவை சரிதான் என்றே நிறுவப்படுமோ எனக் கவலையாகத்தான் இருக்கிறது.
முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவை - முயற்சித்து, அருகாமை, எண்ணெய் ஆகிய சொற்கள். இந்தப் புதியவர்கள் மட்டுமல்லாமல் முன்னணி எழுத்தாளர்களும் இவற்றைக் கையாள்வதைப் பார்க்கிறோம்.
முயல் என்பதில் இருந்து வருபவை முயல்வது, முயல்வேன், முயல்கிறேன், முயன்றேன், முயற்சி என்பது போன்ற சொற்கள். இதிலிருந்து முயற்சியை எடுத்துக்கொண்டு முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன் என்று எழுதுவது அபத்தம். பயிற்சிக்கிறேன், தளர்சிக்கிறேன் என்று எழுதுவது தவறாகத்தானே படுகிறது. அது போலத்தானே முயற்சிக்கிறேன் என்பதும்.
அருகில் இருக்கிறேன் என்பதை அருகாமையில் இருக்கிறேன் என்று எழுதினால் இலக்கியத்தரம் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அருகாமை என்பது அருகிப் போகாதது என்ற பொருளைத் தருமே அன்றி அருகில் என்ற பொருளைத் தரவே தராது. அருகில், அண்மையில் என்று எழுதுவதே சரி.
நெய் என்பது வேர்ச்சொல். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய் எள்நெய். அது எண்ணெய் என்றானது. அது பொதுப்பெயராகவும் ஆனது. எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என வழங்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் இதை எண்ணை என்று எழுதுவது சரியா? எண்ணை எடு என்றால் ஒன்றை எடுக்கவா இரண்டை எடுக்கவா என எண்களில் ஒன்றை எடுக்கச் சொல்வது போல இருக்கிறது. எண்ணெய்யில் இருந்து எண்ணெய்யால் செய்து என எழுத வேண்டாமா? ஆசான் ஜெயமோகனும் கூட இன்று வரை எண்ணெய் என்பதை எண்ணை என்றுதான் எழுதுகிறார்.
தொடர்ந்து பார்க்கக்கூடிய மற்றொரு தவறு ஒருமை பன்மை குறித்தது. ஒருமையில் ஆரம்பிக்கும் வரி பன்மையில் முடிகிறது. பன்மையில் ஆரம்பித்தால் ஒருமையில் முடிகிறது. ஒவ்வொரு விரல்களிலும் என்று எழுதுகிறார்கள். படிக்கும் பொழுதே சரியாக இல்லையே என்று தோன்றாதா?
அது என்பது ஒருமை. இதன் பன்மை அவை. அது போல இது ஒருமை. இவை பன்மை. ஆனால் அவைகள் இவைகள் என எழுதுகிறார்கள். அவற்றை, இவற்றை எனச் சொல்ல வேண்டியவைகளை அவைகளை இவைகளை என்கிறார்கள்.
எழுத்துப்பிழைகள் என்று பார்க்கத் தொடங்கினால் ர / ற, ந / ன / ண, ல / ள / ழ இடையே உள்ள வேற்றுமைகளை உணர்ந்து கொள்வதே இல்லை. பட்டியலிடத் தொடங்கினால் முடிவே இல்லாது போகும். வலி மிகும் மிகா இடங்கள் பற்றிய நினைப்பே இல்லை. ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். ஞாபகம் என்பதை நியாபகம் என எழுத வேண்டாமே.
தேவையற்ற ஆங்கிலக் கலப்பு மற்றுமொரு குறை. ஆங்கிலச் சொல் ஒன்றை எழுதிப் பின் பண்ணு என்பது ஒரு வழக்காகவே ஆகிவிட்டது. வெயிட் பண்ணு, குக் பண்ணு, ரீச் பண்ணு, பே பண்ணு என்று ஒரு பண்ணு தமிழ் உருவாகி இருக்கிறது. எழுதிய பின் எங்கெல்லாம் பண்ணு என எழுதி இருக்கிறோம் எனப்பார்த்து அங்கெல்லாம் சரியான தமிழ்ச்சொல்லை எழுதுவது கடினமான வேலை இல்லை.
எழுதியதைப் படித்தால் பிழைகள் கண்ணில் படும். சரி செய்யலாம். ஆனால் எழுதி அதை பிரசுரிப்பதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இல்லை. நல்ல எழுத்தாளர்களைப் படித்தால் எழுத்து மேம்படும். எழுதுபவர்களில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது கேள்வியே.
புற்றீசலாய் வரும் இணையப் பத்திரிகைகளில் வருவதைப் போடலாம் என்று இருக்கிறார்களே தவிர படித்தேனும் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பிழைகளைக் களைந்து பிரசுரம் செய்யலாமே என்ற எண்ணமே இல்லை. இதனாலேயே இணையப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை என்று சொல்லிவிட்டே நிறுத்தி இருக்கிறேன். தரம் பற்றிய கவலை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அச்சு பத்திரிகைகளின் லட்சணத்தைச் சொல்லவே வேண்டாம்.
எழுத வருபவர்களுக்குச் சொல்ல ஆசைப்படுவது இதுதான். பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். எழுதியதைப் படித்துப் படித்து மேம்படுத்துங்கள். நல்ல எழுத்துகளைத் தேடிப்படியுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதனைக் கேட்டு மீண்டும் அவற்றையே செய்யாதிருக்கப் பாருங்கள். மொழி உங்களுக்கான கருவி. அதனைத் திறம்படக் கையாளப் பழகுங்கள்.
வாழ்த்துகள்! நன்றி.