Wednesday, February 22, 2012

சுகர் அதி’காரம்’!

நண்பர் @4sn அவர்களுக்கு நீரிழிவு நோய் என்று இன்று தெரியவந்தது. கல்யாணமே வேண்டாம் என்னும் கட்சியை சார்ந்தவர் என்பதால் 

 

பிகரை மணக்கப் பிடிக்காது என்பீர்

சுகருக்கும் அக்கதியோ சொல்

 

அப்படின்னு அவருக்கு ஒரு வெண்பா போட்டேன். ஆரம்பிச்சா ஒண்ணோட நிறுத்த முடியுமா? உபிச @penathal அவனோட கஷ்டத்தைச் சொல்ல, அவனைத் தடுத்தாட்கொண்டு நல்ல புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். விளைவு - இதோ எங்கள் சுகரதிகாரம். 

 

 

Suresh:

சுகருள்ளோன் கஷ்டங்கள் சொல்லில் அடங்கா

பகர்தல் முடியாத பாடு

 

Me:

வாழ்க்கையில் மாற்றமும் வந்துதான் ஆகணும்

கூழைக் குடித்தே தொடங்கு 

 

Suresh:

பாடாய் படுத்துமே பாழும்நோய் நீரிழிவு

ஓடாகத் தேயும் உடம்பு

 

Me:

இன்சுலின் என்றொரு இஞ்செக்‌ஷன் போடவே

பென்சில் இருக்குதே பார்

 

Suresh:

அரிசி இனிப்பு அனைத்தும் விலக்கி

எரியுதே எந்தன் வயிறு

 

Me:

நீரிழிவு வந்தால் நிறுத்திடல் வேண்டுமாம்

பீர்விட்டுப் பாலைக் குடி

 

Suresh:

எத்தைத்தான் தின்னாலும் ஏறும் சுகரளவு

வித்தை பலவிருந்தும் வீண்

 

Me:

உடலுக்கு வேலைதா ஊர்சுற்றி ஓடு

குடலுக்குக் கொஞ்சம்தா ஓய்வு.

 

Suresh:

ஆசை அறுத்து அடிவயிறு சத்தமிட

காசைக் கரியாக்கும் நோய்

 

Me:

வீசி எறிந்தால் வினையில்லை போகட்டும்

காசில்லை முக்கியம் காண்

 

Suresh:

ஏறலாம் என்றும் இறங்கலாம் என்றுமே

கூறுகெட்டு ஆடும் எடை.

 

Me:

நடையாய் நடந்து நிறைவாய் இருந்தால்

எடையைக் குறைத்தல் எளிது

Posted via email from elavasam's posterous

2 comments:

said...

:P:P:P:P

said...

என்னது இது? திருக்குறள்ள வள்ளுவர் விட்டுப்போன சுகரதிகாரத்தை இங்க எழுதி நிரப்புறீங்க :)