Sunday, April 29, 2012

”ஈஸியா எழுதலாம் வெண்பா” - விமர்சனம்

தம்பி @mayilsk நம்ம வெண்பா புக்கு படிச்சுட்டு கடமை தவறாம எழுதி இருக்கும் விமர்சனப் பதிவு - http://www.twitlonger.com/show/h797a6

 

”ஈஸியா எழுதலாம் வெண்பா” - 

தமிழனுக்கே செருக்குடைய குறளைக் காலைதோறும் யாராவது சொல்லக்கேட்டு, நாமும் என்றாவது ஒரு குறளைக் கிறுக்கிடமாட்டோமான்னு ஏங்காவிட்டால் எங்கோ உதைக்கிறதென்று பொருள்.

எங்கள் மண்ணின்மைந்தர் டிராஜேந்தர் ஐயா குவா குவாவென்றுhttp://www.splicd.com/JGUC2vzeEIg/33/40 அழும்போது நமக்கும் அழுகைபீறிட்டு வந்தாலும், இவருக்குள்ளயும் இருந்திருக்குன்னு நாம் பார்க்கவேண்டியது குறள் விளக்கும் ஆர்வத்தைத்தான். இந்த மாதிரி எழுதணும்னு ஆசைமட்டுமிருந்தா என்ன செய்ய? பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்ததோடசரி. தன்னார்வத்தில் சிலர் தட்டித்தட்டிக் கத்துக்கலாம், பலருக்கு யாராவது சொல்லிக்கொடுத்தா நல்லது.

இதற்கு ”எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை”ன்னு தொடைதட்டி நாம பேச ஆரம்பிச்சோம்னா எதிரில் இருப்பவர் நம்மைத் தட்டிவிடவாய்ப்புண்டு. நமக்கு இருக்கிற பொறுமையில், என்னதான் ஆர்வமிருந்தாலும் வெண்பா கற்றலென்பது நம் பொறுமையைச் சோதிக்கக்கூடியதுதான்.

‘மருந்தைத் தேனில் கலந்துகொடு’ன்னு சொல்றது வழக்கம். ஆனால்  இப்போது பாவிக்கப்படுகிற ‘குவார்ட்டர் சொல்லுமச்சி’க்கு ஏற்றார்போல, குவார்ட்டரையும், சிலபல மச்சிகளையும் சேர்த்தே கொடுக்கிறார். ஒரே சேதியைக் குறைந்தது இரண்டுவகையிலாவது பேசுகிறார், இதன்மூலம் ஏதேனும் ஒன்றிலாவது நமக்கு நெருக்கமாவது உறுதிசெய்யப்படுகிறது.

வெண்பா எழுதும் ஆர்வமிருந்து அறிமுகம் சற்றுமில்லாதவருக்கும், இருந்தும் மறந்தவருக்கும் ஆர்வத்தை ஊட்டும் வகையிலும், சீரான பழக்கம் ஏற்படும் வகையிலும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. காட்டமான வாத்தியாக இருப்பதாலேயே ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் முதல்முறை அறிமுகப்படுத்தும் அதே பொறுமையுடன் நூல் முழுவதும் அறிமுகப்படுத்தி விளக்கவும் செய்கிறார்.

சரி, இவ்வளவு பேசி என்ன செய்ய, படித்ததற்கு ஒரு வெண்பாவைப் போட்டு முடிக்கிறேன்.

குறளை எழுதிடக் கொள்ளை மகிழ்ச்சி
குரலை உயர்த்திவா கூவ.

நூல்: https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html
ஆசிரியர்: 

 

கடைசியில நாள் மலர் காசு பிறப்புன்னு வரணும்ன்னு எழுதின பக்கத்தை மட்டும் தம்பி சாய்ஸில் விட்டுட்டாப்ல. இன்னும் ரெண்டு வெண்பா எழுதுன்னு இம்போசிஷன் குடுத்து இருக்கேன். 

மயிலு, நல்லபடியா எழுதினதுக்கு நன்றி மக்கா! :)

Posted via email from elavasam's posterous

0 comments: