Monday, August 07, 2006

யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு

நண்பர் லதா அவர்கள் தனி மடலில் அனுப்பியது. யோகன் பாரிஸ் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வந்துள்ள செய்தி. அவர் பார்த்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆகவே இந்தப் பதிவு. அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தயவு செய்து அவரிடம் இந்த சேதியை தெரிவிக்கவும்.

இனி செய்தி. இது 13 08 2006 தேதியிட்ட ஆனந்த விகடன் சுஜாதா கற்றதுப் பெற்றதும் பகுதியில் எழுதியது.

====
விகடன் 23.07.06 இதழ் க.பெ.பகுதியில் பத்மநாதனின் கவிதையில், 'கடகம்' என்ற சொல்லுக்குச் 'சும்மாடு' என்ற விளக்கம் தவறு என்று, யோகன் பாரிஸ் மின்னஞ்சல் செய்துள்ளார். ஈழத்தில் கடகம் என்று குறிப்பிடுவது , பொருள்களைச் சுமக்க பாவிக்கும், பனையோலையால் இழைத்து அதன் வெளிப்பகுதிக்குப் பனை நாரால் மேலிழைப்பு செய்து, வாய்ப்பக்க விளிம்பில் தடித்த நார் வைத்த பெட்டி. அது இன்றும் பாவனையில் உள்ளதாம். (பாவனை - பயன்பாடு)

====

வாழ்த்துக்கள் யோகன் பாரிஸ்.

65 comments:

said...

லதா, இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் இப்பொழுதுதான் உங்கள் மடல் பார்த்தேன். உடன் பார்க்காததற்கு மன்னிக்கவும்.

said...

பல பதிவுகளில் பின்னூட்டமிட்டு பல விசயங்களை தரும் யோகன்- பாரிசு அவர்களை பற்றி.... ஆனந்த விகடனில் வந்த செய்தி கண்டு பதிவு போட்டு தெரிவித்தமைக்கு சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்..

said...

வாழ்த்துக்கள் யோகன்

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கொத்துஸ்

said...

vaazhththukaL, yOgan.paris!
_____________________________-
sari! yO. paarisai vaazhththiyaagi vittadhu!

vazhakkam pOla aduththa 500kku payaNam seyya vENdiyadhuthaanE inimEl!

:))

[surathaavin kaalai paduththalaal aanglish post!]

said...

முதலில், இத் தகவலை இங்கே பகிர்ந்து கொண்ட இலவசக்கொத்தானாருக்கு நன்றிகள்.
இ.கொ, அவரின் மின்னஞ்சல் முகவரியோ, தொலைபேசி இலக்கமோ என்னிடம் இல்லை.

யோகன் அண்ணன் அவர்கள் பலரின் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன். ஈழத்தின் பல பகுதிகளிலும் அடிபட்ட ஒர் அனுபவசாலி. அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

said...

யோகன்- பாரிஸ்ஸுக்கு வாழ்த்துக்கள்..


அவரை பற்றிய ஆனந்த விகடனில் வந்த செய்தி கண்டு கொத்ஸ்க்கு தனிமடல் அனுப்பிய நண்பர்
லதாவிற்க்கும் வாழ்த்துக்கள்..

அதை பதிவு போட்டு அனைவருக்கும் தெரிவித்தமைக்கு கொத்ஸ்க்கும் வாழ்த்துக்கள்...

பனை நாரால் பின்னப்பட்ட பெரிய பெட்டியை "கடகப் பெட்டி" என்று கூறும் வழக்கம் இன்றும் எங்களின் கிராமத்தில்(இராமநாதபுரம் மாவட்டம்)உள்ளது.


அன்புடன்...
சரவணன்.

said...

//At 23 May, 2006 07:59, johan -paris said...
அன்பு ரவிக்கு!
நீங்கள், பார்த்த தேன்சிட்டு பற்றியது ,நானும் பார்த்தேன். இதில் முக்கியவிடயம்;அவர்களுக்கு;அப்பூவின் மகரந்தச் சேர்க்கை எவ்விதம் ;நடை பெறுகிறதென்பது;கட்டாயம் ஓர் பறவையோ,விலங்கோ எனும் சந்தேகத்தைத் தந்தது. பாதி விடை கிடைத்த நிலை.அன்று அது வெற்றிகரமாக விடை கிடைத்தது. நவீன தொழில் நுட்பவசதிகளடங்கிய படப்பிடிப்புக் கருவிகளாலும்; வெப்பநிலை மாற்றத்தை வைத்து;இயங்கும் கருவிகளாலும்;செய்மதி வசதிகளாலும். பல புதிர்களுக்கு விடை கிடைத்து விட்டன.இம்பாலா எனும் மான் வகைக் குட்டி பிறந்த 5 நிமிடத்தில் எழுந்தோடி,தாயுடனும்,அதன் கூட்டத்துடனும் ஒன்றாகச் செல்வதும்; ஆச்சரியமே. இயற்கை ஆச்சரியம் நிறைந்தது. ஆனாலும் பாம்புக்கு 100வயது;பறக்குமென்பது
சற்று; அதிகமாகப் படுகிறது.
உங்கள் நட்பை நான் விரும்புகிறேன். உங்கள் ஆர்வம் போற்றத் தக்கது.விரும்பின் என் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம். johan54@free.fr
யோகன் -பாரிஸ்//

எனது இச்சாதாரி பாம்பு என்ற பதிவில்... யோகன்-பாரிஸ் போட்ட பின்னூட்டம் மேலே உள்ளது... அதில் யோகன் -பாரிசின் e-mail முகவரி உள்ளது.

johan54@free.fr

said...

//At 23 May, 2006 07:59, johan -paris said...
அன்பு ரவிக்கு!
நீங்கள், பார்த்த தேன்சிட்டு பற்றியது ,நானும் பார்த்தேன். இதில் முக்கியவிடயம்;அவர்களுக்கு;அப்பூவின் மகரந்தச் சேர்க்கை எவ்விதம் ;நடை பெறுகிறதென்பது;கட்டாயம் ஓர் பறவையோ,விலங்கோ எனும் சந்தேகத்தைத் தந்தது. பாதி விடை கிடைத்த நிலை.அன்று அது வெற்றிகரமாக விடை கிடைத்தது. நவீன தொழில் நுட்பவசதிகளடங்கிய படப்பிடிப்புக் கருவிகளாலும்; வெப்பநிலை மாற்றத்தை வைத்து;இயங்கும் கருவிகளாலும்;செய்மதி வசதிகளாலும். பல புதிர்களுக்கு விடை கிடைத்து விட்டன.இம்பாலா எனும் மான் வகைக் குட்டி பிறந்த 5 நிமிடத்தில் எழுந்தோடி,தாயுடனும்,அதன் கூட்டத்துடனும் ஒன்றாகச் செல்வதும்; ஆச்சரியமே. இயற்கை ஆச்சரியம் நிறைந்தது. ஆனாலும் பாம்புக்கு 100வயது;பறக்குமென்பது
சற்று; அதிகமாகப் படுகிறது.
உங்கள் நட்பை நான் விரும்புகிறேன். உங்கள் ஆர்வம் போற்றத் தக்கது.விரும்பின் என் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம். johan54@free.fr
யோகன் -பாரிஸ்//

எனது இச்சாதாரி பாம்பு என்ற பதிவில்... யோகன்-பாரிஸ் போட்ட பின்னூட்டம் மேலே உள்ளது... அதில் யோகன் -பாரிசின் e-mail முகவரி உள்ளது.

johan54@free.fr

said...

யோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இதை நமக்கு தெரிவித்த கொத்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

said...

வாழ்த்துகள் யோகன் சார். உங்கள் தமிழறிவு உங்களுக்குப் புகழைச் சேர்க்கிறது. இது தொடரட்டும்.

said...

அதுசரி,
சும்மாடு என்றால் என்ன?
சுளகு?

said...

congralation jhoan.and sinnakkudy
many time i Emailed him but hi did
not relyed. may be the Emai not in
corect.


RAVI
.........

said...

யோகன்!

வாழ்த்துக்கள்.

இ.கொத்தனார்! லதா!

அறியத்தந்தமைக்காக உங்களிருவருக்கும்நன்றிகள்.

யோகன் இது விடயத்தை முதலில் எனக்கும் கானா பிரபாவுக்கும் தனிமடலில் தெரியப்படுத்தி, அதை பதிவாக இடும்படி கேட்டிருந்தார். நீண்ட காலம் தமிழ்மணத்தில் பல்வேறு விடயங்களையும் பின்னூட்டங்கள் மூலம் கருத்துப்பரிமாறும் அவரை சுயமாக வலைப்பதிவு செய்யும்படி கேட்கும்போதெல்லாம் அதன் தொழில்நுட்பங்கள் தனக்குச் சரிவரச் செயற்படுத்த முடியவில்லை எனக்குறிப்பிட்டிருந்தமையால், அவருக்கான ஒரு வலைப்பூவினை நான் வடிவமைத்து, அதிலே முதலாவது பதிவாக அவர்குறிப்பிட்ட விடயங்களையும் சேர்த்திருக்கின்றேன். அவரிடமிருந்து மேலும் சில தரவுகள் தரவேண்டிக் காத்திருப்பதால் அவ்வலைப்பூ இன்னமும் தமிழ்மணத்தில் அரங்கேறவில்லை. இப்போ கிடைத்திருக்கும் அங்கீகாரம் அவரை இன்னும் உற்சாகப்படுத்தும் என நம்புகின்றேன். யோகன் இன்னமும் என்ன தாமதம் ? வாங்க!

said...

அனானி!

சும்மாடு என்பது, சுமை தலையை அழுத்தாமலிருப்பதற்காக தலைக்கும் கடகத்திற்குமிடையில் வைக்கப்படும் ஒரு பாதுகாப்பு வளையம்.

யோகனுடன் தொடர்புகொள்ள மற்றுமொரு மின் அஞ்சல் முகவரி

Nada.Johanadarajah@BAKERNET.com

said...

சின்னக்குட்டி, சிவா, எஸ்.கே., வெற்றி, சரவணன், வெ.ப., ஜிரா, அனானி, ரவி, மலைநாடான் - உங்கள் அனைவர் வருகைக்கும் நன்றி. வாழ்த்துக்கள் யோகனுக்குறியவையே.

விபரம் அனுப்பிய லதா அவர்களை வாழ்த்துங்கள். நான் அவர்கள் கொடுத்ததை பதிவாக மட்டும்தான் இட்டேன்.

மலைநாடன் பின்னூட்டம் மூலம் யோகனுக்கு இத்தகவல் தெரியும் என உறுதியாகிவிட்டது.

வாழ்த்துக்கள் யோகன்.

said...

//பனை நாரால் பின்னப்பட்ட பெரிய பெட்டியை "கடகப் பெட்டி" என்று கூறும் வழக்கம் இன்றும் எங்களின் கிராமத்தில்(இராமநாதபுரம் மாவட்டம்)உள்ளது.//

சரவணன், இது பற்றி நீங்களும் சுஜாதாவிற்கு தெரியப் படுத்தவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

said...

//சும்மாடு என்றால் என்ன?//

தலையில் ஒரு துணியை வட்டமாக சுற்றி வைத்துக் கொண்டு அதன் மேல் பாரத்தை வைத்துக் கொள்வார்கள் அல்லவா? அந்த சுற்றப்பட்ட துணியின் பெயர்தான் சும்மாடு.

said...

சரவணன்,

//பனை நாரால் பின்னப்பட்ட பெரிய பெட்டியை "கடகப் பெட்டி" என்று கூறும் வழக்கம் இன்றும் எங்களின் கிராமத்தில்(இராமநாதபுரம் மாவட்டம்)உள்ளது. //

ஈழத்தில் கடகம், பெட்டி என்பன இரு வேறு சொற்கள். கடகம் என்பதற்கு இலவசக்கொத்தனார் கொடுத்த வரைவிலக்கணம் பொருந்தும். பெட்டி என்பதும் பனை ஓலையில் இருந்து செய்யப்படுவதுதான். ஆனால் கடகத்தை விடச் சிறியது. பெட்டியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக நீத்துப்பெட்டி என்பது. நீத்துப்பெட்டியும் பனை ஓலையில் இருந்து செய்வதுதான். ஆனால் இது புட்டு அவிக்கப் பயன்படுத்துவது. முக்கோண வடிவில் இருக்கும். விரைவில் படங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன்.

said...

Thalai koths

indha pathivukkum target unda.illai ithu kayamaiththam illaatha walla pathivaa?:))

said...

வெற்றி,

என்ன மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதே. (தப்பா நினைக்காதீர்கள்!)

இதுதான் யோகன் சொன்னது:

//'கடகம்' என்ற சொல்லுக்குச் 'சும்மாடு' என்ற விளக்கம் தவறு என்று, யோகன் பாரிஸ் மின்னஞ்சல் செய்துள்ளார். //

நான் அளித்த விளக்கமோ சும்மாடு என்பது.

நீங்கள் சொன்னது:

//கடகம் என்பதற்கு இலவசக்கொத்தனார் கொடுத்த வரைவிலக்கணம் பொருந்தும்.//

மீண்டும் கடகம் சும்மாடகி விட்டதே?

மேலும் யோகன் சொன்னது:

// ஈழத்தில் கடகம் என்று குறிப்பிடுவது , பொருள்களைச் சுமக்க பாவிக்கும், பனையோலையால் இழைத்து அதன் வெளிப்பகுதிக்குப் பனை நாரால் மேலிழைப்பு செய்து, வாய்ப்பக்க விளிம்பில் தடித்த நார் வைத்த பெட்டி. //

சரவணன் சொன்னது :

//பனை நாரால் பின்னப்பட்ட பெரிய பெட்டியை "கடகப் பெட்டி" என்று கூறும் வழக்கம் இன்றும் எங்களின் கிராமத்தில்(இராமநாதபுரம் மாவட்டம்)உள்ளது.//

நீங்கள் சொன்னது :

//ஈழத்தில் கடகம், பெட்டி என்பன இரு வேறு சொற்கள்.//

கடகம் பெட்டியா சும்மாடா? கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்.

said...

செல்வன்,

என்ன கேள்வி இது? 10 பேருக்கு ஒரே பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறேன். இன்னுமா இந்த பதிவில் கயமைத்தனம் பற்றிய சந்தேகம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

என்னங்க கொத்தனார்......விசு மாதிரி கதைக்கிறீங்க.... ஈழத்திலை பனை ஓலையால் செய்யப்பட்டு நார்மட்டையால் விளிம்பை இணைக்கப்பட்டதை கடகம் என்பார்கள்.

இராமாநபுரப் பகுதிகளில் கடகபெட்டி என்பார்களாம்

அதே பனை ஓலையால் செய்யப்பட்டு பனை ஓலை ஈக்கால் விளிம்பை இணைக்கப்பட்டதை குட்டான் என்பார்கள்(சிறிய பெட்டி)... இதை இராமநாதபுர பகுதிகளில் எப்படி சொல்வார்களென்று எனக்கு தெரியலை...
சும்மாடு என்பது தலையில் வைக்கும் சுமை தலையில் நேரடியாக தாக்காமால் வைக்கப்படும் பொருள்.....

said...

கயமைத்தனத்திலேயே கடைந்தெடுத்த கயமைத்தனம் இதுவன்றோ!!

அதென்ன பத்துப் பேருக்கான பதிலா?

பல நூறு பின்னூட்டங்களின் முன்னோடி அல்லவோ?!!

ஒரே பதிலில், யோகன் பாரிசில் தொடங்கி, வெற்றி வரை அனைவருக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டாகி விட்டது!

இனிமேல் அவரவர் உத்தி பிரிந்து விளையாட வேண்டியதுதானே மீதி!

எனக்குத் தெரியும் இப்படித்தான் இது போகும் என்று!

முதலிலேயே சொல்லி விட்டேனே!

ம்ம்ம்ம்ம். அப்புறம் என்னப்பா?
எல்லாரும் வாங்க!

ரெடி! ஜூட்!

வந்து அவங்கவங்க "தெறமையக்" காட்டுங்க!!

:)))

said...

யோகனுக்கு வாழ்த்து(க்)கள்.

இதை அவருக்குத் தெரிவிக்கலாமுன்னு அவரோட ப்ரொஃபைல் பார்த்து மயில்
ஐடி எடுக்கலாமுன்னா, அங்கே 'நாட் ஃபவுண்ட்' வந்துச்சு.

இப்ப நம்ம கொத்ஸ் பதிவே போட்டு ஜமாய்ச்சுட்டார். ச்சும்மா விகடனிலே வரலை.
யாரோட பகுதியிலே வந்தது பார்த்தீங்கல்லே!

said...

//என்ன கேள்வி இது? 10 பேருக்கு ஒரே பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறேன். இன்னுமா இந்த பதிவில் கயமைத்தனம் பற்றிய சந்தேகம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((///

நடிப்பு எல்லாம் பிரமாதமா இருக்கு.ஆனா கயமைத்தனம் இல்லைன்னா அதுக்குள் 24 பின்னூட்டம் வந்தது எப்படி?இதற்கு நேர்மையான பதில் தேவை.நாகை சிவா காலையில் பதிவு போட்டு மாலைக்குள் 95 பின்னூட்டம் வாங்குகிறார்.இது எப்படி நடந்தது?இதில் உங்கள் பங்கு என்ன?இதற்கும் உடனடி விளக்கம் தேவை

said...

//என்னங்க கொத்தனார்......விசு மாதிரி கதைக்கிறீங்க.... ஈழத்திலை பனை ஓலையால் செய்யப்பட்டு நார்மட்டையால் விளிம்பை இணைக்கப்பட்டதை கடகம் என்பார்கள்.
//

சின்னக்குட்டி ஐயா,

நீங்கள் சொன்னதுதான் யோகனின் கருத்தைப் படித்தபின் என் புரிதலும். ஆனால் வெற்றி சொல்வது வேறு விதமாய் இருக்கிறதே.

அல்லது எனக்குத்தான் புரியவில்லையா?

said...

//ஒரே பதிலில், யோகன் பாரிசில் தொடங்கி, வெற்றி வரை அனைவருக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டாகி விட்டது!//

எஸ்.கே., இப்போ நீங்கதான் நாரதர் ஆகறீங்க. நான் சொன்னது பத்து பேருக்கு ஒரு பின்னூட்டத்தில் நன்றி சொன்னதைத்தான்.

இது விளையாட போட்ட பதிவு இல்லை. (அதுக்காக விளையாட வரவங்க ஆசையில் நான் மண்ணள்ளிப் போட மாட்டேன். ;))

said...

//இப்ப நம்ம கொத்ஸ் பதிவே போட்டு ஜமாய்ச்சுட்டார். ச்சும்மா விகடனிலே வரலை.
யாரோட பகுதியிலே வந்தது பார்த்தீங்கல்லே! //

டீச்சர், இந்த பதிவுக்குக் காரணம் நம்ம நண்பர் லதாதான். அவங்கதான் சொன்னாங்க. நான் பதிவு போட்டது யோகனுக்கு தெரிவிக்க வேறு வழி புலப்படாததனால்தான்.

இந்த மாதிரி செய்திகள்தானே நான் கற்றதும் பெற்றதும். :)

said...

(அதுக்காக விளையாட வரவங்க ஆசையில் நான் மண்ணள்ளிப் போட மாட்டேன். ;))

கயமைத்தனம் ஆரம்பமாகிவிட்டது என்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படுகிறது:)))))

said...

//அதுக்குள் 24 பின்னூட்டம் வந்தது எப்படி?இதற்கு நேர்மையான பதில் தேவை.///

இதற்கு நேர்மையான பதில் - நிறைய பேர் யோகனுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் தெரிவிக்க வழி தெரியாததால், நம் பதிவே அதற்கு வழியாயிற்று.


//நாகை சிவா காலையில் பதிவு போட்டு மாலைக்குள் 95 பின்னூட்டம் வாங்குகிறார்.இது எப்படி நடந்தது?இதில் உங்கள் பங்கு என்ன?//

என் பங்கு கிளாஸ் நடத்துனது. அவரு நல்லா கத்துக்கிட்டாரு. நீங்க உங்க பதிவு நம்பர் 133ல் காண்பித்த மாதிரி அவரு இந்த பதிவில் நிரூபிச்சுக் காட்டறாரு. கிளாசில் நல்லா படிக்கும் மாணவர்கள் அதிகமாயிட்டாங்க. அதனால கடும் போட்டி இருக்கும் பாருங்க.

said...

இந்த விளையாட்டுக்கு நான் வருகை தர இயலாது
என்பதை தெரிவித்துக்கொள்ளும் வேளையிலே
யார் யார் விளையாடுகிறார்கள் , யார் யார் சொல்லாடுகிறார்கள்
கயமைத்தனம் செய்பவர் யார் என்பதை தமிழ் கூறும் இந்நல்லுலகம்
கவனித்துக்கொண்டுதானிருக்குமென்பதையுமிங்கேமட்டுமில்லாமென்று
கூற கடமைப்பட்டிருக்கிறேனென்பதை ஆணித்தரமாக் கூறிக்கொண்டு
யோகனுக்கும் வாழ்த்து கூறி (பத்தி பிரித்து எழுதுய்யா என்று கூற
ஆட்டோ, மன்னிக்கவும் படகு வருமுன்)

ஐ ஆம் ஆப்பு தி எஸ்கேப்பு.

said...

விகடனில் விடயத்தைப் படித்து ;தமிழ்மணத்திலும் மணக்கவிட்ட இலவசக் கொத்தனார்;லதாவுக்கும் வாழ்த்திப் பின்னூட்டமிட்டு மகிழ்வித்த ;சின்னக்குட்டி;நாகை சிவா; எஸ் கே ஐயா;வெற்றி;சரவணன்;ரவி;வெட்டிப்பயல்;ராகவன்;மலை நாடர்;செல்வன்;துளசியக்கா! அனைவருக்கும் நன்றி!
வாசிக்கும் போது; தவறைக் கண்டால்;அது பற்றிச் சரியாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதித் தெரிவிக்கும் பழக்கம் உண்டு.அன்றைய தபாற் சேவையில் நமது கடிதம்;கிடைப்பதற்குள் மாதங்கள் பல உருண்டுவிடுவதனால்;அவை மறக்கப் பட்டுவிடும்.இன்றோ மின்னஞ்சல் சுடச் சுடப் படித்த சூட்டுடனே எழுத முடிகிறது.அன்று பல எழுதியும் எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.
கலைமகளுக்குக் கூட எழுதினேன். வெளியிடவுமில்லை; வெளி விடவுமில்லை.கி வா ஜ - மிகப் பெரிய இடம். (அவ் விடயம் ஒரு நாள் பகிர்வேன்)
ஆனால் எழுத்தாளர் சுஜாதா ;சிறியேனின் மடல் பார்த்து; ஏற்றுக் கொண்டு; பிரசுரத்திதற்கு நன்றி!
என்னைப் போல் கற்றுக் குட்டிகளுக்கு இவ் அங்கீகாரம் மிகமகிழ்வாக இருக்கிறது.
இவ்விடயத்தைப் படித்ததும்; மலை நாடர்; கானா பிரபா தெரிந்ததாலும்; ஈழத்தவர் என்பதாலும்; அவர்கள் மின்னஞ்சல் தெரிந்ததாலும் ஒரு பதிவாகப் போடும் படி கேட்டேன்; அத்துடன் தமிழ்மணத்தில் எழுதும்; எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களைத் தொகுத்த "தேசிகன்" அவர்களுக்கும் குறிப்பிட்டேன்.

கடகம்=சும்மாடு அல்ல என்பதையே; நான் விளக்கினேன். வெற்றி குறிப்பிடுவது போல் இதைக் கடகப் பெட்டி என்றும் கூறுவர்.

மரத்தால் ;உலோகத்தால் ;ஓலையால்; நார்களால்;பிரம்பால்,காகிதத்தால்;கண்ணாடியால்; செயர்க்கை இழைகளால் செய்யப்படும் கொள்கலங்களைப் பெட்டி எனும் புழக்கம் உண்டு. அந்த வகையில் இதை கடகப்பெட்டி என்பர்.சாதாரண பனையோலைப் பெட்டிக்கும்; கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் ; கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து; வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண் ;கல் அள்ளுதல்.

சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி;சால்வை; முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது.இதை துணிவகையிலேயே செய்வர்.தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.பெண்கள் தண்ணீர்க் குடம் தலையில் சுமக்க உடன் தங்கள் முந்தானை நுனியைச் சுற்றிச் செய்வார்கள்.

நீத்துப் பெட்டியென்பது; பனை யோலையில் கூம்பு வடிவில் இழைக்கப் படும் ஒரு வகைக் கருவி; இதன் பயன்பாடு பிட்டவித்தல்;மா அவித்தல்; பால் வடித்தல்.

குட்டான் என்பது பனையோலையில் இழைக்கப்படும் ஒருவகைப் பொதியாக்கம்; இதன் பயன்பாடு பனங்கட்டியை(பனஞ்சர்க்கரை) பொதியாக்குவதே! இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ!)!இப்பொழுதும் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

என்னை ஓர் வலைப் பதிவைத் தொடங்கி தொல்லை கொடுக்கும்படி நண்பர் மலை நாடர் மிகுந்த ஊக்கம் தருகிறார்; உதவுகிறார்.
என் தொல்லை வந்தால் பொறுத்தருளவும்.
யோகன் பாரிஸ்

said...

இலவசக்கொத்தனார்,
குழப்பத்திற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நான் தெளிவாக எழுதாமையால் வந்த குழப்பமென நினைக்கிறேன்.
நான் சொல்ல வந்தது இதுதான்.

[1]கடகம் என்றால் யோகன் அண்ணர் சொன்ன வரைவிலக்கணம் சரியானது. யோகன் அண்ணரின் வரைவிலக்கணத்தை உங்களின் வரைவிலக்கணம் என தவறாகச் சொல்லிவிட்டேன்.

[2]நண்பர் சரவணன் இப்படிச் சொல்லியிருந்தார்.

//பனை நாரால் பின்னப்பட்ட பெரிய பெட்டியை "கடகப் பெட்டி" என்று கூறும் வழக்கம் இன்றும் எங்களின் கிராமத்தில்(இராமநாதபுரம் மாவட்டம்)உள்ளது //

நான் நண்பர் சரவணன் பின்னூட்டம் பற்றிச் சொல்லுகையில், "ஈழத்தில் கடகம், பெட்டி என்பன இரு வேறு சொற்கள்...பெட்டி என்பதும் பனை ஓலையில் இருந்து செய்யப்படுவதுதான். ஆனால் கடகத்தை விடச் சிறியது. பெட்டியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக நீத்துப்பெட்டி என்பது. நீத்துப்பெட்டியும் பனை ஓலையில் இருந்து செய்வதுதான். ஆனால் இது புட்டு அவிக்கப் பயன்படுத்துவது. முக்கோண வடிவில் இருக்கும். விரைவில் படங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன். "

அதாவது ஈழத்தில் கடகம் , பெட்டி என்பன இரு வேறு சொற்கள். நாம் ஈழத்தில் கடகப்பெட்டி என்று சொல்வதில்லை எனச் சொல்ல வந்தேன். இந்தக் கடகம் , பெட்டி , நீத்துப்பெட்டி போன்றவற்றின் படங்கள் கிடைத்தால் பதிவில் இணைக்கிறேன்.

[3]சும்மாடா என்ற சொல்லை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன். ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பகுதியில் இச் சொல் புழக்கத்தில் இருந்ததாக/இருப்பதாக நான் அறியவில்லை.

அதுசரி, இந்தக் கடகம் , பெட்டிகள் பற்றி இலக்கியங்கள், சங்ககாலப் பாடல்களில் இல்லையா?

said...

யோகன் அண்ணை,

//என்னை ஓர் வலைப் பதிவைத் தொடங்கி தொல்லை கொடுக்கும்படி நண்பர் மலை நாடர் மிகுந்த ஊக்கம் தருகிறார்; உதவுகிறார்.
என் தொல்லை வந்தால் பொறுத்தருளவும்//

நானும் மலைநாடான் அவர்களின் கோரிக்கையை வழிமொழிகிறேன். நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும். குறிப்பாக ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை பற்றி நீங்கள் எழுத வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

said...

கடகம் பற்றி தேடியதில் கிடைத்தவை!

யோகந்பாரிஸ் அவர்களே! உங்கள் வரவுக்கு முன் - வாழ்த்துகள்!

1 கடகம் 01 1. large tray made of palmyra-stems; 2. vessel with a kind of spout
2 கடகம் 02 1. bracelet, armlet; 2. a gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are joined together and the other three fingers are held upright; 3. circle, ring, wheel; 4. shield; 5. army; 6. fortified wall; 7. cuttack, the capital of Orissa; 8. mountain side, ridge of a hill; 9. a river
3 கடகம் 03 1. cancer, a sign of the zodiac; 2. the fourth Tamil month
4 கடகம் 04 1. troop of elephants; 2. a number
5 கடாகம் 1. sphere, globe; 2 brass boiler
6 கதகம் clearing-nut
7 காடகம் cloth
8 காதகம் 1. killing, taking away life; 2. harassing, torturing
9 கடகம் cantonment, military camp (TLS)

said...

வாழ்த்துக்கள் யோகன் அண்ணா
2 நாட்களாகக் கணினிப்பக்கவரமுடியவில்லை. வெற்றி சொன்னதை நான் வழி மொழிகின்றேன், உங்களின் நிரம்பிய அனுபவங்கள நமக்குத் தேவை.

said...

யோகன் ஐயா வலைப்பூ தொடங்கியிருக்கிறார் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய சேவை மிகவும் தேவை நமக்கு. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். அவர் எழுதி அச்சிடப்பட்டக் கட்டுரையை இந்தப் பதிவில் படிக்கலாம். அவருடைய புகைப்படமும் இந்தப் பதிவில் இருக்கிறது.

http://koodal1.blogspot.com/2006/03/156.html

said...

பனை மட்டையிலிருந்து வார்ந்து எடுக்கப் படுகின்ற நாரினால் இழைக்கப் பட்டு அதன் விளிம்பும் நாரினால் வரையப்பட்டது (பெலப்புக்கு) தான் கடகம்.

பனை ஓலையால் இழைக்கப்படுவது பெட்டியென்று வழங்கப்படும்.

ஈர்க்கினால் இழைக்கப்படுவது சுளகு

குறிக்க: கடகம் பனை ஓலையால் இழைக்கப் படுவதல்ல, மாறாக அது நாரினால் இழைக்கப்படுவது

said...

கொத்ஸ்!
நல்ல விஷயத்தை நாலு பேருக்கு தெரியப் படுத்தி இருக்கீங்க. உங்களுக்கும் நண்பர் யோகன் அவர்களுக்கும் பாராட்டுகள்.

said...

சின்னக்குட்டி said...

//அதே பனை ஓலையால் செய்யப்பட்டு பனை ஓலை ஈக்கால் விளிம்பை இணைக்கப்பட்டதை குட்டான் என்பார்கள்(சிறிய பெட்டி)... இதை இராமநாதபுர பகுதிகளில் எப்படி சொல்வார்களென்று எனக்கு தெரியலை//


இராமநாதபுரம் பகுதிகளிலும் அது குட்டான் தான்.
(பேச்சு வழக்கில் அது கொட்டான்),

//சும்மாடா என்ற சொல்லை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.//

எங்களின் பகுதிகளில் அது சும்மாடு(பேச்சு வழக்கில் சுருமாடு),

கொத்ஸ் அந்தா இந்தானு நீயும் ஒரு 35 பின்னூட்டத்த வச்சி ஒரு பெட்டி பின்னீட்ட ,

ஆமா... பின்னூட்டத்தை வச்சு பின்னுனா அது பெட்டியா? கடகமா..? இல்லை வெற பெயரா..?

(கொத்ஸு இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி,செல்வம் வர்ரதுக்குள்ள நான் எஸ்கேப்.)

அன்புடன்...
சரவணன்.

said...

யோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!.

said...

வாழ்த்துக்கள் யோகன்,
//என் தொல்லை வந்தால் பொறுத்தருளவும்.//
ஆஹா, தொல்லை என்ன, பதிவு தொடங்குங்க. படிக்க ஆவலா இருக்கோம்...
மலைநாடன் உடன் நானும் கூட உங்களைப் பதிவுகள் எழுதத் தொடங்கச் சொல்லிக் கோரிக்கை வைக்கிறேன்..

said...

என்ன யோகன் சார்..... எவ்வளவு சமாச்சரங்களை உங்களுக்குள்ளே வைத்திருக்கிறீங்கள்... அதுக்கெல்லாம் ஒரு பதிவு வேண்டாமா..... விரைவில் உங்கள் பதிவை காண ஆவலாய் உள்ளோம்...... எல்லா விசயங்களிலும் புகுந்து விளையாட கூடிய ஆள் ..... என உங்களுடைய பின்னூட்டங்களினூடாக அறிய கூடியதாயிருக்கிறது......... வந்து ஜமாயுங்க சார்.......

said...

நண்பர்களே!

நண்பர் யோகனின் வலைப்பூ, தற்போது தமிழ்மணத்தின் சேர்க்கை நிலவரம் பகுதியில், சேர்க்ககைக்காக காத்திருப்பிலுள்ளது.
அவரது வலைப்பூ விற்கான சுட்டி கீமழயுள்ளது. வாருங்கள் வாழத்தி வரவேற்போம்.
http://johan-paris.blogspot.com/

said...

நண்பர்களே!

நண்பர் யோகனின் வலைப்பூ தற்போது தமிழ்மணத்தின் சேர்க்கை நிலவரம் பகுதியில் சேர்க்கைக்காகக் காத்திருப்பிலுள்ளது. அவரது வலைப்பூவிற்கான சுட்டி கீழேயுள்ளது. வாருங்கள் யோகனை வாழ்த்தி வரவேற்போம்.

http://johan-paris.blogspot.com/

said...

வாழ்த்துக்கள் யோகன்

said...

கடகம் என்பது நாரினால் இழைக்கப்படுவதல்லவா?
மேலே ஒருவர் சொல்லியது போல.
கடகங்கள் எப்போதும் ஒரேயளவாக இருக்கவேண்டும். கண்டபடி செய்யக்கூடாது. ஏனென்றால் கடகம் ஓர் அளவுகருவி.
மணல், ஊரி, சல்லிக்கல் என்பன கடகம் கொண்டு அளக்கப்படுகின்றன. எனவே செய்யப்படும் கடகங்கள் நியம அளவொன்றைக் கொண்டிருக்க வேண்டும்.
"மறந்துபோன கடகம் என்ற சொல்லை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி" என்று தங்கமணி முன்பொரு இடத்தில் சொல்லியிருந்த ஞாபகம் இருக்கிறது. எனவே இது தமிழகத்தார்க்கும் உரிய சொல்தான். பயன்பாடு அருகிக்கொண்டு வந்திருக்கலாம்.
சார்வில்(பனங்குருத்து) செய்யப்படும் பெட்டிகள் பலவிதம். எங்கள் ஊரில் காலையில் வீடுகளுக்குச் சென்று இடியப்பம், தோசை என்பன விற்கும் ஆச்சி விதம்விதமான பெட்டிகளில் அவற்றை விற்பனை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
வெத்திலை, சுருட்டு, புகையிலை சமாச்சாரங்களை வைத்துக்கொள்ள கைக்கடக்கமாக ஓலைப்பெட்டிகளை சிலர் வைத்திருப்பர்.

குட்டான் இழைப்பதும் பனங்கட்டி காய்ச்சுவதும் அருகி, அழிந்து வரும் கலையாக இனங்காணப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக கட்டுரையொன்றை தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் வெளியீடான 'ஆதாரம்' சஞ்சிகையிற் படித்தேன்.
பனம்பாய், நீத்துப்பெட்டி, பெட்டி, குட்டான் என்று நிறையப்பொருட்கள் வருங்காலத்தில் அருகிவிடக்கூடிய சாத்தியமுண்டு. இன்று குழற்புட்டு அவிக்க மூங்கிலுக்குப்பதில் அலுமினியக்குழல் வந்ததுபோல.

said...

யோகன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே தனிவலைப்பதிவு தொடங்கி
மேலும் பல தகவல்களை எங்களோடு
பகிர்ந்துகொள்ளவேண்டுகிறேன்.

பதிவிட்ட இலவசக்கொத்தனார்,தகவல் தெரிவித்திட்ட திரு.லதா இருவருக்கும்
என் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.

said...

வசந்தன்
இடியப்பம், அப்பம், தோசை வைப்பதற்கான பனங்குருத்தில் இழைக்கப் பட்ட பெட்டிகளை எமது பருத்தித்துறையில் மூடுபெட்டி, மூடல் என்று சொல்வார்கள். மூடுபெட்டிக்கு பெட்டியோடு சேர்த்து அளவான மூடியும் இழைக்கப் பட்டு மூடியிருக்கும். முந்தைய காலத்தில் சீதனப் பொருட்களில் வெங்கல, வெள்ளிப் பாத்திரங்களோடு இந்து மூடுபெட்டி செற்றும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

said...

ஆஹா. 50 பின்னுட்டத்தில் நான் போட்டது வெறும் 10தான். இப்போ எல்லாம் அந்த போலீஸ்காரைக் காணுமே.

said...

என்ன கொத்தனார் அவசரப்படுறீங்க. க்ளைமாக்சிலதானே பொலிஸ் வரணும்:))

said...

வாழ்த்துக்கள் யோகன் சார். செயதியை வலை உலகிற்கு அறிவித்த தலைவர் கொத்ஸ்க்கு நன்றி

said...

விகடனில் பாராட்டுப் பெற்ற யோகனுக்கு என் வாழ்த்துக்களும்.

பெட்டி பற்றிக் கதைக்கும் போது என் ஞாபக சக்தியைத் தீட்டிப் பார்த்ததில் வருவது.

நாரினால் இழைக்கப்படும்
பெரிய பெட்டி - கடகம்
சிறிய பெட்டி - கைப் பெட்டி அல்லது கற்பெட்டி.
கிணற்றிலிருந்து தண்ணி அள்ளப் பாவிப்பது - பட்டை - அருமையான கட்டமைப்புடன் இழைக்கப் படுவது.

கைப்பட்டை என்று இன்னொரு பொருளும் உண்டு, இது முழு ஓலையால் செய்வது. தண்ணியை எடுத்து மிளகாய்க் கன்றுகளுக்கு ஊற்றப் பாவிப்பது.

ஒன்றினுள் ஒன்று அடுக்கி வைக்கக் கூடையதாக இழைக்கும் பெட்டிகள் - அடுக்குப் பெட்டிகள் - மூடியும் இருக்கும்.

வெத்திலை பாக்கு, பணம் வைக்கும்
பெட்டி- கொட்டைப் பெட்டி.

ஓலையில் இழைக்கும் பாய் படுப்பதற்கு.
குழந்தைகளுக்குப் பாவிக்கும் பாய் - தடுக்கு.
பனாட்டுக் காயவைக்கும் பாய் - தடுக்கு ?


சும்மாடு என்ற சொல் எனக்கும் புதிதாக உள்ளது. இதே போல் இன்னொரு வளையம், பானைகளை நிலத்தில் உறுதியாக நிற்க வைக்கப் பாவிப்பது, என்ன பெயர் என்று மறந்து விட்டது. யாருக்காவ்து தெரியுமா? உறியின் அடிப் பாகமும் இதுவே.

said...

இலவசக் கொத்தனாரின் பின்னூட்டக் கயமை கொஞ்சமே செய்த பதிவு என்ற சிறப்பு பட்டம் இப் பதிவுக்கு மட்டும் தற்காலிகமாக வழங்கப் படுகிறது :)

இதுவும்தான் போலீசு

said...

/இதே போல் இன்னொரு வளையம், பானைகளை நிலத்தில் உறுதியாக நிற்க வைக்கப் பாவிப்பது, என்ன பெயர் என்று மறந்து விட்டது. யாருக்காவ்து தெரியுமா/

ஜெயபால்!

நீங்கள் குறிப்பிடும் வளையத்தினை திருகணி என அழைப்பார்கள்

said...

ஜெயபால்
நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது திருகணை யை என்று.

said...

சந்திரவதனா சொல்வது போல் திருகணை என்று தான் பேச்சு வழக்கில் சொல்லப்படுவதுண்டு

said...

மலைநாடான்,

நீங்க சொல்றது 'பானைகளை உருண்டு சாயாமல் நிமிர்த்து வைக்கப் பயன்படுவது,
பிரிமணை.' சணல்கயிற்றால் வட்டமாக சுருள் சுருளாச் சுத்தி ஒரு ரிங் செய்திருப்பார்கள்.

இதை வைத்து ஒரு சம்பவம் எழுதிக்கொண்டிருக்கிறேன், எவ்ரிடே மனிதர்கள் பகுதிக்காக.
இப்போது இங்கெல்லாம் பயன்படுத்தும் உலோக ஸ்டேண்ட் கூட இந்தவேலைதான் செய்கிறது.

said...

கொத்தனாரே இதெல்லாம் ஒரு பொழப்பா உருப்படியா எதாவது பதிவு போடுறது வெட்டி கும்பலை சேத்துட்டு ஒரு பின்னூட்டத்திக்கு பத்தா பதில் போட்டு வெட்டி கதை பேசுறது.பொறாமைன்னு ஆரம்பிக்க வேணாம் இந்த மாதிரி பின்னூட்டம் வாங்கறதுக்கு சும்மா இருக்கலாம்

said...

விவாதங்களில் மிகவும் அழகாக தனது கருத்தை பதித்துச் செல்லும் யோகன் அவர்களை நானும் வாழ்த்துகிறேன்.

said...

கதிரோனுக்கு!
கடகம் - 100% பனை மட்டையில் வார்ந்தெடுக்கும் நாரில் இருந்து இழைக்கப்படுவதல்ல! ஆனால் இழைக்கக் கூடாதென்பதுமல்ல! சாதாரண விற்பனைக்குரிய கடகங்கள்;சுமார் 18 அங்குல வாய்விட்டம் ;9 அங்குல உயரம்; அடியின் அமைப்பு 4 மூலை வைத்த சதுரமாக இருக்கும். இதை நார்ச் சிக்கனம் கருதி முதல் சற்று முற்றிய (குருத்திலிருந்து 2ம்;3ம் சுற்றில் வரும் ஓலை)பனையோலையில் ஐதாக இழைத்து விட்டு.பின் வெளிப்பகுதிக்கு பனை நாரால் இழைக்கும் போது; பலம் பெறும்; இறுதியாக வாய்ப்பக்கத்திற்கு சுமார் 2 அங்குல அகலத்தில் சுற்றி சற்றுத் தடிப்பன வாராத நாரை வைத்து பனையீக்கினால் கட்டுவார்கள். 5 கடகங்கள் உள்ள ஒரு கட்டுக் கடகங்களை ஒரு சேர்வை கடகம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்வார்கள்; ஒரு வீடுகட்டுமான வேலைக்கு; 2 சேர்வை கடகம் வாங்குவோம்; குளத்துமண் தோட்டத்துக்கு ஏற்றும் போது சுமார் 20 கூலிகள் வேலை செய்யும் போது 4 சேர்வை தேவை.
அந்த நாட்களில் சாதாரணமாக ஒரு வீட்டில் குறைந்தது 3 கடகங்கள் பாவனையில் இருக்கும்! ஒரு பழங் கடகம் குப்பை கூளம் அள்ள; அடுத்தது சந்தைக்குக் கொண்டு செல்வது; 3 வது மிகப் பவுத்திரமானது. சாமியறையில் இருக்கும் சமய சம்பந்தமான காரியங்களுக்காக!கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் போது சாமான் காவவும்; பின் பொங்கலுடன் பானை சுமக்கவும்; இந்தப் புனித கடகம் பாவிக்கப்படும். ஆண்டுக்கு ஐந்தாறு தடவை சுவாமியறையை விட்டு வெளியே வரும். அப்பபோ பாவனைக்கு முதல் கழுவிக் காயவைக்கும் பழக்கமும் உண்டு. கட்டாயமும் கூட.
இப்படி ஈழத் தமிழரில் வாழ்வோடிணைந்த இந்தக் கடகம் ;இந்த நவீன யுகத்திலும் பாவனையில் உண்டு.
குறிப்பாக எங்கள் ஈழத்தில் எழுவைதீவுக் கடகங்கள் பிரசித்தம்! விற்பனைக்குச் சந்தையில் தேவையான அளவு அனுப்புவதிலும்; பலமானதாகச் செய்வதிலும் விண்ணர்கள். இப்போர்ச் சூழலிலும் இக் குடிசைக் கைத்தொழில் குற்றுயிராக வாழ்கிறது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தா இத்தொழில் நவீன மயத்தாலும் போராலும் அழிவது வேதனையே!
யோகன் பாரிஸ்

said...

// திருகணை //

ஆகா, நன்றி மக்களே. இப்பொழுது பயமாக இருக்கிறது, இன்னும் என்னென்ன சொற்களை மறந்து விட்டிருக்கிறேனோ தெரியவில்லை.

said...

துளசி அக்கா!
கழிவு பனையீற்க்கை ஒரு பிடியை வட்டமாகச் சுற்றி அதற்கு நன்கு முறுக்கிய நல்ல பனையீற்கால் சுற்றினால் உருவாகும் வளையம் பானைசட்டி உருளாமல் ஆடாமல் இருக்கப் பாவிப்பதை ;மலை நாடர் சொல்வது போல் ஈழத்தில் சில பகுதிகளில் திருகணி எனவே குறிப்பிடுவார்கள். தென்னந்தும்புக் கயிற்றால் செய்வதும் உண்டு. நீங்கள் குறிப்பிடுவதுபோல் சணலாலும் செய்யலாமென நினைக்கிறேன். கடைசிக்காலங்களில் தகரத்தில் கூட வந்தது.
யோகன் பாரிஸ்

said...

Innovative system in safe sex. [url=http://x-registar.ru]сдать кровь на сифилис[/url]

said...

[url=http://x-registar.ru]система знакомств[/url] System X-Registar ®- World Humanitarian Project , a collaboration of doctors and specialists in the field of IT. The aim of the project - prevention of STDs .