Sunday, September 08, 2013

நடபைரவியும் நட்டாற்று அனுபவமும்!

ஒரு சுற்றுலா செல்கிறோம். பெரும் நதி ஒன்று இருக்கிறது. அதில் பயணம் செய்து பொழுதைக் கழிப்பதாகத் திட்டம். எந்த மாதிரி எல்லாம் அந்த நதியில் செல்ல முடியும்? 

மலையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கி வரும் நதியில் ஹெல்மெட், லைப் ஜாக்கெட் சகிதம் ஒரு படகில் ஏறி Whitewater Rafting செய்யலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் பெரும் பாறைகள், மரங்கள் இவற்றினூடே ஓடும் தண்ணீரில் இருக்கும் சுழல்கள், சமயத்தில் எழும் பெரும் அலைகள் என்று பல கண்டங்கள் இருக்கும் நதியில் நம்மை அழைத்துக் கொண்டு போய் கரை சேர்ப்பார் படகோட்டி. சமயங்களில் நாம் நீரில் விழ வேண்டியது இருக்கும். நம் கையைப் பிடித்து தூக்கி படகில் மீண்டும் அமரச் செய்யும் வேலை வேறு உண்டு அவருக்கு. இது நாம் நீரில் செல்வதில் ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Thrill, Exhilaration, A rush of Adrenalin.

இல்லை, ஹொகேனகல்லில் இருப்பது போல பரிசலில் செல்லலாம். நிதானமாக ஓடுவதே தெரியாமல் ஓடும் அகண்ட நதி. அதில் பரிசலைச் செலுத்திக் கொண்டு நமக்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் காடு மலை அனைத்தையும் காட்டிக் கொண்டு செல்வார் படகோட்டி. நடுவே நமக்குக் கொஞ்சம் கலவரம் உண்டாகும் படி ஒரு சுழலில் சென்று கொஞ்சம் பரிசலில் சுற்றி விடுவார். கொஞ்சம் பயமாக இருக்கும். அங்கிருந்து மெல்ல ஓர் அருவியின் அருகே செலுத்தி அதிலிருந்து நீர்திவலைகள் நம் மீது பட்டு நாம் பரவசமடையும்படிச் செய்வார். பொதுவாகவே பெரும்பாலும் நிதானம் நடுநடுவே கொஞ்சம் வேகம் என இந்தப் பயணம் நடக்கும். இது வேறு ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Relaxation.

ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது எனச் சொல்ல முடியுமா? முதல் படகோட்டியின் திறன் இரண்டாவது படகோட்டியை விட மேல் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொன்றும் ஒரு வகை. அவரவருக்கான திறன் அவர்களிடம் உண்டு. ஆனால் பயணிகளான நாம் இளமையில் இருக்கும் துணிச்சல், ஒரு முறையேனும் செய்து பார்த்துவிட வேண்டும் வேண்டிய ஆவல் ஆகிய காரணங்களினால் Rafting சென்றாலும் பெரும்பாலும் இரண்டாம் வகையிலேயே செல்ல விரும்புவோம். வெகு சிலரே தொடர்ந்து Rafting செய்வதில் விருப்பம் கொண்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, அதற்குண்டான நுட்பங்கள், நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதில் நிபுணத்துவம் அடைய நினைப்பர். அவர்கள் தொடர்ந்து பல நதிகளில் Rafting செய்து கொண்டே இருப்பார்கள்.

இசையும் அப்படித்தான். அந்த நதியைப் போல, இசையிலும் பல வகைகளில் பயணம் செய்ய முடியும். இன்று நான் கேட்ட அபிஷேக் ரகுராமின் கச்சேரி முதல் வகை. ஆபோகி வர்ணமான எவ்வரி போதனவில் தொடங்கி எல்லா பாடல்களிலும் வேகம் வேகம் வேகம். கச்சேரியை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் இன்றைய கச்சேரியைக் கேட்ட பின்னால் இதைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் எழுதுகிறேன். 





இளம் வயதிலேயே மிகவும் புகழ் பெற்றவர் அபிஷேக். பாரம்பரிய சங்கீதக் குடும்பம், இயல்பான திறமை, அபாரமான ஞானம், சொன்னால் கேட்கும் குரல் என்று எல்லாம் பெற்று குறைவில்லாத சங்கீதம் தரும் ஆற்றல் கொண்டவர். இன்று பாடிய சங்கராபரணம் அதற்குச் சான்று. ராகம் பாடியாதாகட்டும், கல்பனாஸ்வரங்கள் ஆகட்டும், கீர்த்தனையைப் பாடிய அழகாகட்டும் மிகப் பிரமாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. ஸ்வரங்கள் பாடும் பொழுது ரிகபம என்ற ஸ்வரங்களை வைத்துக் கொண்டு இவர் பாடியது பட்டாசு. அடுத்த வந்த தோடி ஸ்வரஜதியும் மிக அபாரம். ஆஹிரி, சிந்துபைரவி எனத் தொடர்ந்த எல்லாப் பாடல்களுமே குறைவில்லாத சங்கீதம்தான். ஆனால் தண்ணீரில் விழுந்து மூழ்கிவிடுவோமோ, ஒழுங்காக கரை சேர்வோமோ என்று படகின் ஓரங்களைப் பிடித்துக் கொண்டே பயணம் செய்தது போலத்தான் இருந்தது இன்றைய அனுபவம். நன்றாகப் பொழுது போனாலும் இசையுடன் ஐக்கியமாகி நம்மை மறந்து நெகிழ்ந்து போகும் தருணங்கள் இல்லாமலே போனது கொஞ்சம் வருத்தம்தான்.

ஸ்ரீ வல்லி தேவசேனாபதே என நடபைரவியில் பாடும் பொழுது பாடகர் மயிலாக மாறி முருகனை தன்மேல் ஏற்றிக் கொண்டு ஆடாமல் அசங்காமல் அழகு கலையாமல் நம் முன் கொண்டு வர வேண்டாமோ? அப்படி ஒரு எதிர்பார்ப்பில் நாம் இருக்கும் பொழுது பார்முலா ஒன் ரேஸ் காரில் முருகனை அழைத்து வந்தால் மிரண்டு போய் விட மாட்டோமா? இன்று அப்படித்தான் முருகன் வந்தார். கச்சேரி முழுக்க இதே வேகம்தான். கச்சேரியில் பக்கவாத்தியமாக வயலின் பி யூ கணேஷ் பிரசாத், மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இருவரும் அத்தனை வேகத்திற்கும் ஈடுகட்டி அருமையாக உடன் வாசித்தார்கள். அவர்கள் துணையில்லாமல் கச்சேரி இப்படி சோபித்து இருக்காது. 




மீண்டும் சொல்கிறேன். குறை ஒன்றும் சொல்ல முடியாத இசை. மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் என்னைக் கட்டிப் போட்ட மாதிரி இருந்து கச்சேரியை ரசித்தேன். என்றோ ஒரு நாள் கேட்பதால், மேலேறிக் கீழிறங்கி, மூச்சுவாங்கி, Rafting சென்ற பரவசம் இன்றைக்கு இருந்தாலும் அடிக்கடி விரும்பிக் கேட்கவும், கேட்கும் பொழுது மனம் லேசாகி நாம் நெகிழ்ந்து போவதிற்குமான இசை இது அல்ல என்றே கச்சேரி முடிந்த பின் என் எண்ணமாக இருந்தது. இவ்வளவு திறமை இருக்கும் அபிஷேக்கால் எல்லாப் பாடல்களிலும் வேகம் காட்டாது கொஞ்சம் நிதானமான, சௌக்கியமான இசையை தர முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தர வேண்டும் என்பதே என் ஆசை.

Wednesday, August 28, 2013

கண்ணன் அவனின் கதை!

முன்னாடி ஒரு நாள் சும்மா இருக்காம இராமாயணத்தை அறுசீர் விருத்தத்தில் எழுதறேன்னு ஒரு கிறுக்குத்தனம் பிடிச்சு எழுதினேன். கிரேசி மோகன் உட்பட பல பெரியவர்கள் அதைப் படிச்சு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் எதாவது எழுதவே பயமா இருக்கு.

இன்னிக்குக் கோகுலாஷ்டமி. என்னமோ தெரியலை கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு ஆரம்பிக்கும் இந்த எம்ஜியார் பாட்டு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.



அதுவும் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு சொன்ன உடனே இந்த கண்ணன் கதையை எழுதினா என்னான்னு தோணுச்சு. அதுக்காக கட்டுரை ஒண்ணு எழுதி அதை உடைத்துப்போட்டு ஓ மனிதா, ஆச்சரியக்குறின்னு எல்லாம் சேர்த்து புதுக்கவிதை என்ற பெயரில் தர முடியுமா? வெண்பாவா விருத்தமா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதத் தொடங்கிய பொழுது வந்தது கலிவெண்பா, அதுவும் இன்னிசைக் கலிவெண்பா என்ற இந்த பாவகை!

கண்ணனின் கதைன்னு ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அப்புறம் எழுத ஆரம்பிச்சது மகாபாரதம் ரேஞ்சுக்கு ஆயிடும். அதனால  முக்கிய நிகழ்வுகள்ன்னு நினைக்கிறது எல்லாம் மட்டும் சொல்லலாம்ன்னு நினைச்சேன். அப்படி எழுதின வெண்பாதான் இது.

அன்னை விடுத்தவன் ஆற்றினைத் தாண்டிபல
கன்றும் பசுக்களும் காட்டினில் மேய்த்துதான்
உண்ட முலையில் உயிரைப் பறித்துபின்
பெண்டிர் மனத்திலே பேருவகை தான்தந்து
பண்ணைக் குழலிலே பாங்காய் இசைத்தவன்
வெண்ணெய் திருடிபல வேடிக்கை தான்செய்து
மண்ணையே உண்டு மரங்கள் பெயர்த்தங்கு
விண்ணில் இருந்து விழுந்த மழைதடுத்து
கொன்றானே பாம்பினைக் கோகுலத்தில் தன்தாயின் 
அண்ணனாம் கம்சனை அவ்வுலகம் சேர்த்ததும்
கண்மணி ருக்மிணியைக் கல்யாணம் செய்ததொடு
எண்ணிக்கை இல்லாது ஏராள மாய்மணந்து
பெண்ணொருவள் மானம் பெருமையும் காத்துபஞ்ச
பாண்டவர் பக்கம் படைதனில் சேர்ந்ததும்
சின்னவன் பாலன் சிரம்நீக்கி ஆட்கொண்டு
சொன்னானே பார்த்தனது சோத்திரத்தில்* கீதையிது
மன்னவன் மாயன் மயக்கிடும் மாலனாம்
கண்ணன் அவனின் கதை!
* சோத்திரம் = காது 


படிச்சுட்டு உங்க கருத்தைச் சொன்னா சந்தோஷப்படுவேன். அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்! நன்றி!

இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் இரா முருகன் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெண்பாவை தங்களுக்கு அளிக்கிறேன். வாழ்த்துகள் இராமு அண்ணா!

Wednesday, August 14, 2013

Night at the Museum!

A newly recruited night security guard at the Museum of Natural History discovers that an ancient curse causes the animals and exhibits on display to come to life and wreak havoc. 

That is the one line story of the movie Night at the Museum released a few years ago. It involved spending the night in the American Museum of Natural History, lights out, dinosaurs, live animals, running around the museum in the night and it also had Ben Stiller. 

What would you do if you had a chance to spend a night at that very museum? We had it and we grabbed it. We have been members of the museum for some time but due to various reasons have never really had a chance to utilize the membership benefits. This time there was a mail announcing a members only sleepover night and I was piqued. 

The marketing information on the program had a list of interesting things to do - Guided tours of a couple of halls, exclusive access to the museum, Dinosaurs, Whales, live animal presentations, IMAX movies and importantly no Ben Stiller! 

We registered for the program and I will tell you it was an experience well worth the cost. The program started at 4:00 PM on a Saturday and lasted till the next afternoon. It could have lasted longer but for the fact the special parking discount was valid only till 1:00 PM after which we would have been required to pay a humongous parking fee. 

Coming back to the program itself, we were allowed in around 4 in the evening before the museum closed for the day. During the registration the kids got a souvenir backpack with some snacks, toys and a nice DVD on stars, produced by NASA. (The DVD has Hindi as one of the language options.) We were then let to roam around the museum till it closed. 

After the museum was closed we were taken to the Milstein Hall of Ocean Life where we were to sleep. Cots were already in place and we were to sleep under a 94 feet long blue whale. 




The roof of the hall was lit to make believe we were under water. The walls were studded with dioramas depicting various animals from the ocean kingdom. Our kids chose to lie down next to a pair of harbor seals. We dropped our sleeping bags and after a short orientation, we were ready for the activities. And there was no dearth of those. 



The evening was a blur of things to do and most of them happening in parallel. We were spoilt for choices. We decided to go first for an hands on class in Origami as my son is very interested in that. He chose to go with a very difficult crane and surprised the person teaching with his grasp of the technique. They even taught my younger one how to make a butterfly. 

We then attended a presentation of live nocturnal creatures, where an expert displayed and talked about boas, tree frogs, chincilla and porcupine . There were a couple of interesting events such as a meet a scientist, 3D Printing, African Writing, etc. that we had to miss as they were held in parallel. The food court remained open late for us to have dinner and there were some snacks provided later in the evening as well. 

We then moved on to the dinosaur hall. We were provided with a booklet of questions that we had to answer. The questions were about the exhibits in the hall. The twist was that the lights were all switched off and we had to explore the hall with flash lights. The kids had great fun in the darkness. The little one went off to attend a sing along session where they were taught some songs to sing. 

We then watched an interesting movie on penguins in the IMAX theater. I would rank the theater in Liberty Science Center to be much better than the one here. But the movie was very well received. It was almost 11PM by the time the movie got over. But we still had one more thing to do -  a bed time story! After some time to unwind, the lights were out by midnight with a promise that we would be woken up early in the morning. 

True to their word, we were all up and ready for breakfast by 7AM. After breakfast and the mandatory visit to the museum store, we had a guided tour on the life of Theodore Roosevelt, his contribution to conservation, and the dioramas on North American Mammals. Andrew, our guide, was funny and kept the kids  (and the adults) engaged. 

We had a very leisure walk through the other halls, including the Dinosaurs, African Mammals and Hall of Pacific People, where we had a head from Easter Island all for ourselves. In a museum that is normally very crowded, we could not have imagined such unhindered view otherwise. 




The museum then opened its doors for the public and we were allowed to continue for as long as we wished. We were also provided complimentary passes to two of the exhibitions which otherwise required additional tickets. The first one was one on whales with some very impressive exhibits of whale skeletons and art from whale bones. There were some very interactive exhibits on the life of whales and their current plight. A model of the heart of a whale was as big as a small car and my younger one was able to climb and slide to the arteries. 

The second was an exhibition called Global Kitchen that discussed food, change in food habits, change in the way we cultivate crops and generally the good and bad of what we consume. It had sample diets from various cultures, one of which was what Gandhi would have eaten. This exhibition also had a kitchen where a chef was cooking and we were able to sample what he made. Incidentally, that day was the last day for this exhibition and we were happy we had a chance to see it. 



There was a lot more to explore but by this time, it was midday and we had to leave due to some other commitments and to ensure we took the car out of the garage before the stipulated time. The kids made us promise that we would return to the museum soon before they agreed to leave.

Even though none of the exhibits came to life during the night and started to fight, we did have a fun evening and a great morning. My wife and I really had no idea what to expect and resigned ourselves for some dreary times inside the museum. But we had as much fun as the kids had and our only complaint was the lack of time to do all the activities that were on offer. 

The staff were very courteous and helpful. The minimum age was 6 and my daughter is five. I had written to them and they were prompt in responding and allowing my daughter to join. We saw kids much younger were allowed too when we went there. The maximum age is 12 and I am sure there can be exceptions there too. I was particularly impressed in the way the large group was handled without any trouble. 

Except when it is exclusive for members, sleepover programs are available for non members too. The website of the museum gives the particulars of the program including the calendar. I would recommend this for anyone with kids in that age group. Despite the relatively high cost, it is well worth it. Viewing the movie before going would make it more interesting!

Some more pictures can be viewed here

Thursday, August 08, 2013

படம் பிடித்துப் பாவெழுது!

வழக்கமாக பேஸ்புக்கில் உருப்படியா எதுவுமே வராது. எப்பொழுதாவது அத்தி பூத்த மாதிரி ஒரு நல்ல விஷயம் கண்ணில் படும். நேத்து அப்படி ஒரு படம் கண்ணில் பட்டது.  ரொம்பவே அருமையான படம். முதலில் பதிந்தவர் யாரோ அறியேன். ஆனால் பலராலும் பகிரப்பட்டு @jsrigovind மூலம் என் பார்வைக்கு வந்தது இந்தப் படம்.


அந்த சிறுவனின் முகத்தில் இருக்கும் உணர்ச்சியும் அச்சிலையின் அழகும் என்னை மிகவும் வசீகரித்துவிட்டன. பார்த்த உடனே வெண்பா எழுத வேண்டும் எனக் கை பரபரத்தது. ஒன்று எழுதினேன், இரண்டு எழுதினேன், படத்தின் அழகாலே என்னமோ வெண்பா வந்துக்கிட்டே இருந்தது.

பொதுவா ரெண்டு மூணு பேரு ஜமா சேர்ந்து மாறி மாறி போடும் பொழுதுதான் இப்படி தொடர்ந்து போடத் தோணும். ஆனா நேத்து திரும்பத் திரும்ப இந்தப் படத்தை பார்த்து பார்த்து நான் மட்டுமே எழுதிக்கிட்டு இருந்தேன். எழுதினதை இங்க போட்டு வைக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு.

அன்று மலையை அவனுமே தூக்கினான்
இன்று அதுபயன் ஈன்றதோ? - நன்றே
சிறுவனும் செய்ததைச் சிந்தனையில் வைப்போம்
கருமத்தின் பேறினையே காண்

சிலையிதுவே ஆனாலும் சின்னவன் கண்ணில்
அலைமகளின் அன்பனவன் தானோ - தலைமேலே
தண்ணீர் விழாது தடுத்திடவே நிற்கின்றான்
கண்ணன்மேல் காதலால் காண்

கல்தான் எனினும் கரைவாயோ என்றஞ்சி 
பொல்லா மழையுமே போகப் பிடித்தேனே
சல்லாத் துணிதனைச் சார்த்திய இக்குடையை
மல்லா மனதிலிதை வை!

இடுப்பிலே கைவைத்து இங்கிதமே யின்றி
கடுப்பினைக் காட்டாதே கண்ணா - தடுப்பேன்
தலைமேல் பொழிந்திடும் தாரையை உன்போல் 
மலைக்குக் குடையிங்கே மாற்று 

பூவாலே உன்னைத்தான் பூசையும் செய்திடுவார்
நாவாலே உன்னருளை நல்லபடிப் பாடிடுவார்
பாவாலே சொல்வேன் பரம்பொருளே நின்கருணை
காவாவா கண்ணா கனிந்து

தங்க நகையும் தரமாகச் செய்திட்டார்
அங்கத்தில் பட்டால் அலங்காரம் செய்திட்டார்
புங்கவனைப் பூவினால் பூசையும் செய்திட்டார்
தொங்கினைத் தந்தேன் தொழுது!

(புங்கவன் - கடவுள்
தொங்கு - வெண்கொற்றக்குடை)

மலைதூக்கி வந்தாய் மனைகாக்க உந்தன்
சிலைகாத்த சீரும் சிறப்பு!

உபிச பெனாத்தல் ஊரில் இல்லை, அதனால அவன் பங்கு வெண்பா வந்து சேரலை. இந்தப் பதிவைப் பார்த்தா போடாம இருக்க மாட்டான். காத்திருப்போம்.

காத்திருந்ததிற்குக் குறைவு இல்லை. எல்லாரும் ஆன்மிக வெண்பாவா எழுதினதுனால அண்ணன் நாத்திக வெண்பா எழுதினாராம்.

வண்ணக் குடையேந்தி வாமனனைக் காத்திடவே 
சின்னக் குழந்தையின் சிந்தனை - தன்னையே 
காக்காதான் என்னையா காப்பானென உள்ளமுணர 
டேக்காதான் கொடுப்பான் பார்

சொக்கன் அவர் பங்குக்குப் போட்டது

மழைவண்ணன் தன்னை மழைதாக்கக் கண்டு
அழையாமல் வந்த அழகே, பிழையில்லை
ஆஞ்சனேயன் தூக்கிவந்த அம்மலையை வாங்கிநீ
வாஞ்சைக் குடையாய் வழங்கு

வாத்தி ஜீவ்ஸ் எழுதினது

கத்தும் கடலோசை காதில்தான் கேட்குமோ?
சித்தம் சிலிர்த்திட ஸ்ரீதேவி -மொத்தமாய்
அள்ளி அணைத்திடுவாள் அம்மகவை அன்போடு
கள்ளம் மனதிலானைக் கண்டு

சொக்கன் பதிவில் இன்னும் சில நண்பர்கள் வெண்பா எழுதி இருந்தார்கள் அவை எல்லாவற்றையும் இங்கு பதிந்து வைத்துக் கொள்கிறேன்.

நிரஞ்சன் பாரதி

அஞ்சன வண்ணனுக் காங்கே குடையில்லை,
மஞ்சனம் செய்யும் மழையெலாம் - நெஞ்சில்
நினைத்தாலே வட்டமிடும் நேயோனைக் கையால்
நனையாமல் காத்தேனே நான்

கண்ணன் ராஜகோபாலன்

பழகக் குடைபிடித்துப் பக்குவமாய்க் கண்ணில்
அழகாகப் பேசும் அழகே – வழக்கமாய்
கண்ணன் தருவான் கலகலப்பாய் நூறாக
வண்ணமாய் வாழ்க்கை வரம்.

துடுக்குடன் நின்றாலும் தூறலதை நானும்
தடுப்பேனே கண்ணனுக்குத் தான்

கணைபோல்ப் பாய்ந்துதான் கண்ணனுடன் நின்றே
நனையாமல் காக்கும் நண்பனே நானும்
புருவம் விரித்ததைப் பகர்ந்திடுவாய் என்றே
உருகிக் குமுறும் குடை

ஹரன் பிரசன்னா

கற்சிலை என்றார் கருமேனி கைத்தொழும்
பொற்சிலை என்றார் புனல்நனையும் கண்ணன்
கலையென்று கண்டே குடையொடு வந்தான்
சிலையங்கே பெற்ற(து) உயிர்

முற்பகல் செய்யவே பிற்பகல் நேருமாம்
நற்புகழ் பெற்றவனே நீலமணி வண்ணனே
அன்றுநீ அந்நாளில் அம்மழை காத்ததுபோல்
இன்றுனைக் காக்க இவன்.

கண்ணனே கைவிடு கோபம் மழைவிட்டு
வெண்ணெய் அருந்தவீடு வா

பேஸ் புக்கில் இரா.முருகன் பக்கத்தில் இதைப் பகிர்ந்த பொழுது அவர் எழுதிய வெண்பா

அப்பின வர்ணம் அலேக்குன் நகைநட்டும்
தப்புமோ கிச்சாமி தண்ணியில் பப்பிஷேம்
ஒய்லாக நின்னாக்கப் போதுமா நைனா’தோ
நைலான் குடையிருக்கு வா

இவர் இந்தப் பதிவை க்ரேசி மோகன் கண்பார்வைக்கு அனுப்ப, அவரும் எதிர்பாராத விதமா ஒரு வெண்பாவை அனுப்பினார். ரொம்பவே சந்தோஷமா இருந்தது!

ஆப்பிளா ஊட்டிக்கே! அல்வாவா நெல்லைக்கே!
தீர்ப்புக்கே தண்டனையா! தேவேந்த்ர -ராப்பகல் 
கொட்டலில் காத்தவன், கோவர்த் தனதாரி 
விட்டலுக்கே UMBRELLA வா!

படம் பிடித்துப் பகிர்ந்து கொண்ட அன்பருக்கு நன்றி.
படம் பிடித்துக் கவி எழுதிய நண்பர்களுக்கும் நன்றி.  

Sunday, July 28, 2013

நீ கேட்ட கேள்விக்கொரு நன்றி, நமைச் சேர்த்த குவிஸ்ஸுக்கொரு நன்றி!

இன்னிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் முடிவுக்கு வருது. மாஸ்டர் ரெக்ஸ் அருள் இசைத் துண்டுகளைக் கொடுத்து இளையராஜா பாடல்களைக் கண்டுபிடிக்கும் க்விஸ் நிகழ்ச்சி. இணையத்தில் இது பத்தித் தெரியாதவங்க கம்மிதான். பார்த்ததில்லைன்னா இங்க போய் பாருங்க - 365rajaquiz 

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை, விடாம தொடர்ந்து ஒரு வருஷமா நடத்திக்கிட்டு இருக்காரு. இந்த ஒரு வருஷத்துல நீ எத்தனை நாள் சரியான பதிலைச் சொல்லி இருக்கன்னு கேட்டா, சரி தப்பு விடுங்க, ஒரு நாள் கூட விடையைச் சொன்னது இல்லை. அப்புறம் என்ன டேஷுக்குடா பதிவுன்னு யாரும் கேட்டுடாதீங்க. நான் சொல்லப் போறது எல்லாம் நடத்திய ஆளைப் பத்திதானே தவிர அவர் தந்த பாட்டுகளைப் பத்தி இல்லை.


பல முறை இணையத்தில் க்விஸ் நிகழ்ச்சிகள் நடத்தியவன் என்ற முறையில் சொல்லறேன். இந்த மாதிரி க்விஸ் நடத்தறது சாதாரண விஷயம் இல்லை. பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதில் எந்தப் பகுதியை துணுக்காகத் தர வேண்டும் என முடிவு பண்ணி, அதைப் பதிவாப் போட்டு, அதுல ஒரு விமர்சனம் எழுதி, ஒரு க்ளூ குடுத்து, வர விடைகளைச் சரி தப்புன்னு சொல்லி, அதுல கேள்விகளுக்குப் பதில் சொல்லி..... இப்ப படிக்கும் போதே மூச்சு முட்டுதே இதை அவரு தொடர்ந்து ஒரு வருஷம் செஞ்சு இருக்காரு. இதுக்காக எவ்வளவு நேரம் செலவழியும். மத்த விஷயங்கள் எவ்வளவு இதுக்காக இழக்கணும் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். இதுக்கு ஒரு முதல் வணக்கம்.

என்னால முடியுது பண்ணறேன்னு போன பேராவில் எழுதின அத்தனையும் ஒருத்தர் செஞ்சுடலாம். ஆனா அதை நூத்துக்கணக்கான பேர் ரசிக்கும்படி செய்யறது சுலபமான விஷயமா என்ன? நானும் தமிழ்ப்பேப்பரில் இலக்கணத்தொடர் எழுதினேன். முதல் ரெண்டு மூணு வாரம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் ஆனா போகப் போக படிச்சுட்டுப் போற ஆள் எண்ணிக்கை ஓரளவு இருந்தாலும் அதைப் பத்தி அங்க பேசறவங்க எண்ணிக்கை குறைஞ்சுதான் போச்சு. இங்க பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 130,000 பார்வையிடல்கள், 15,000 பின்னூட்டங்கள். சாதாரண விஷயமாய்யா இது?

அது மட்டுமில்லை, இந்த க்விஸ் தங்களை எப்படி எல்லாம் பாதிச்சுது அப்படின்னு பலரும் எழுதினதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இதை எல்லாம் பார்க்கும் பொழுது நாம இதில் கலந்துக்காம விட்டது பெரிய தப்போன்னு தோணும். சரி, இந்தக் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்திடுவேன். இப்படித் தொடர்ந்து ஒரு கூட்டத்தையே தன் பின்னாடி வர வெச்ச திறமைக்கு என் இரண்டாவது வணக்கம்.

கேள்வியை நானே கேட்கிறேன், கேள்வி கேட்கறது ஈசி என்பது எல்லாம் நகைச்சுவை வசனங்களாக நல்லா இருந்தாலும் எந்த விஷயமாகட்டும் அதில் இவ்வளவு கேள்விகள் கேட்கணுமுன்னா அதுக்கு அவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கணும். திரையிசைப் பாடல்கள், அதிலும் ஒரே ஒரு இசையமைப்பாளரின் பாடல்களில் இந்த அளவு ஆராய்ச்சி செஞ்சு மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்க எவ்வளவு முனைப்பு இருந்திருக்கணும். அப்படி முனைவதற்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கணும். எந்த விஷயமானாலும் நுனிப்புல் மட்டுமே மேயும் என் போன்றவர்களுக்கு இந்த முனைப்பும் ஆர்வமும் கூட ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கும் என் வணக்கம்.

இது அத்தனையும் விடுங்க. நேர்ல ஒரு முறை இவரைச் சந்திச்சேன். நமக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியாது என்பது அவருக்கு முன்னமே தெரியுமோ என்னமோ சந்தித்த அந்த மாலை நேரம் முழுவதும் ராஜா இசை பற்றி ஒரு வார்த்தை கூட வரலை. இந்த நிகழ்ச்சியை நடத்தறது இந்த ஆள்தானான்னே எனக்குச் சந்தேகம் வரும் அளவு ஆயிருச்சு, அது நீங்கதானே நானே கேட்டு உறுதி படுத்திக்கிட்டேன். தான் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கும் போது அடுத்தவன் கிட்ட பெருமை அடிச்சுக்காம இருக்கும் அடக்கத்துக்கும் என் வணக்கம்.

அதுக்காக மனுசன் சும்மா இருந்தாருன்னா நினைக்கறீங்க? வாயை மூடலை!! அவருக்குத்தான் எவ்வளவு விஷயங்களில் ஆர்வம் இருக்குங்கறீங்க? தமிழக அரசியலாகட்டும், இந்த ஊரில் அவர் செய்யும் தன்னார்வ வேலைகள் ஆகட்டும். அந்த ஒரு மாலையில் மட்டும் நான் அவர் கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள் அநேகம். நாம எல்லாம் சும்மா நேரத்தை வீணடிக்கிறோமோ என நினைக்கும் அளவிற்கு வேலை செய்யறார். அத்தனை வேலைகளும் செய்து கொண்டு அதுக்கு நடுவே இதையும் முடிச்சதுக்கும் என் வணக்கங்கள்.

அத்தனை வணக்கங்களுக்கு அப்புறமா இந்த ப்ராஜெக்டை எடுத்து நடத்தி முடிச்சதுக்கு என் வாழ்த்துகள். கடைசியா ஒரு கோரிக்கை. இதோட நிறுத்திடாம, ஒரு இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த ப்ராஜெக்டோட களமிறங்கணும். இந்த முறையாவது நானும் கலந்துக்கிற மாதிரி ஒரு தலைப்பா இருக்கணும். செய்வீங்களா மாஸ்டர்?!

Tuesday, July 23, 2013

மெல்லத் தமிழினிச் சாகும்!?

தவறான மேற்கோள் என்பது, சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பிக்க நம் அரசியல்வாதிகள் சொல்லும் காரணம். உண்மையில் தவறான மேற்கோளுக்காகக் கோபம் கொள்ள வேண்டிய ஒருவர் நம் மகாகவி பாரதிதான்.  


மெல்லத் தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் - !
இந்த வசை எனக்கெய்திடலாமோ?” 

என்று சொன்னாலும் சொன்னான், பலரும் தமிழ் சாகும் என்று பாரதி சொன்னதாக ஒரு மேடை விடாமல் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய ஊடகங்களில் தமிழ் படும் பாட்டைப் பார்த்தால் அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

பேசும் பொழுதும் சரி எழுதும் பொழுதும் சரி. தமிழ்க் கொலை என்பது எங்கும் வியாபித்து இருப்பதைத்தான் நாம் காண்கிறோம். காளான்கள் போல் முளைத்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்களிலும், பண்பலை வானொலி நிலையங்களிலும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள் பேசும் தமிழைக் கேட்டால், நம் கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம். வேறு சில மொழிகளில் இருந்தாலும் கூட தமிழின் சிறப்பு என்று நாம் பெருமைப்படும் ழகரம் இவர்களிடம் படும் பாட்டைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர்தான் வரும்.

சமையல் குறித்த நிகழ்ச்சி ஒன்றை பிரபலத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்துக் கொண்டிருந்தேன். புதிய வகை தோசை செய்வதைப் பற்றி ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். ”இந்த தோசை ப்ரிபேர் பண்ணும் போது கொஞ்சம் கீ(ghee)அப்ளை பண்ணிட்டு வெஜிடெபிள்ஸ் ஸ்டப் பண்ணி போல்ட்(fold)பண்ணினா கஸ்டமர்ஸ் லைக் பண்ணுவாங்க!” என்று ஆங்கிலத்தில் கொஞ்சமே தமிழைத் தூவி பேசிக்கொண்டிருந்தார். இன்று பலரும் இப்படித்தான் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் இடையே வரும் திரைப்படப் பாடல்களும் இதே லட்சணம்தான். ‘கணவுகலில் மூல்கினேன்’ என்று பாடகர் ஒருவர் பாடுவதைக் கேட்ட பொழுது தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் தமிழ் படும் பாடு இதுதான். வானொலி, தொலைக்காட்சிகளில் உச்சரிப்புப்பிழைகள் என்றால் இங்கு எழுத்துப்பிழைகள். ஆனால் அவற்றைச் சரி செய்ய முயன்றால், அதைச் சரியான முறையில் எடுத்துக் கொள்பவர்கள் சிலரே. ‘இந்த அளவாவது தமிழில் பேசுகிறோமே எழுதுகிறோமே என்று சந்தோஷப்படுங்கள், எப்பொழுதும் தவறுகளைத் திருத்துவதையே வேலையாகக் கொண்டிருப்பதை விடுங்கள்’ என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் யாரேனும் தவறாகப் பேசும் பொழுது இவர்களே அவர்களைக் கேலி செய்வதுதான் முரண். ஆங்கிலத்தில் சரியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தமிழில் பேசும் பொழுது அது போல் தவறின்றிப் பேச வேண்டும் என ஏன் நினைப்பதில்லை என்பது எனக்குப் புரிவதே இல்லை.

இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்/அறிஞர்கள் பலரின் எழுத்துகளில் கூட ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் காண முடிகிறது. சில சமயங்களில் இவர்கள் எழுதும் வரிகளின் வடிவங்களும், சில வேற்று மொழி சொற்றொடர்களின் மொழிபெயர்ப்புகளையும் படித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டினால் ‘இதனைச் சொல்ல நீ யார்?’ என்பதுதான் எதிர்வினையாகக் கிடைக்கிறது. பிழையாக எழுதுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வோரும் உண்டு.

“ஏற்கனவே ‘நல்லதோர் வீணை செய்தே’ என்றுதானே பாரதி எழுதி இருக்கின்றான். இதையே பாமரரான நாம் ‘ஓர் கனவு’ என்று எழுதக் கூடாதா?” என்ற கேள்வி எழுகிறது. கத்தியைத் தொடாதே என்று குழந்தைகளிடத்தில்தான் சொல்வோம், கத்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்த மருத்துவருக்குச் சொல்வோமா? இலக்கணம் அறிந்து சந்தம், தளை காரணமாக கவிதையில் அதனை மீறுவதும், அது பற்றி ஒன்றும் அறியாமல் தவறாக எழுதுவதும் ஒன்றே அன்று. இலக்கணத்தை அறிவதை, தமிழார்வலர்கள் தம் கடமையாகவே நினைக்க வேண்டும்..

இன்றைக்குச் சிலர், தமிழில் புதிய இலக்கணம் எழுதப்பட வேண்டும். இப்பொழுது உள்ள இலக்கணம் கவிதை வடிவில் எழுதுவதற்காகச் செய்யப்பட்டது. உரைநடைக்கென இலக்கணம் வேண்டும். பல துறைகளில் உள்ள தமிழ்நடைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனச் சொல்லத் தொடங்கி உள்ளனர். இதற்கும் தேவையே இல்லை. புதிய இலக்கணம் ஒன்றும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லைநம் இலக்கணம் பரந்துபட்ட ஒன்றுதான். இன்றைய தேவைகளில் பெரும்பான்மையானவற்றை இருக்கும் இலக்கணம் கொண்டே சீர் செய்ய முடியும்.

ஆனால் முடிவதில்லையே, பிரச்சினை எங்கிருக்கிறது என்று பார்த்தோமானால் இலக்கணத்தை, மொழியைக் கொண்டு சேர்ப்பதில்தான்! பள்ளிகளில் கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மொழிகளுக்குத் தரப்படுவதில்லை. அதனால் இப்பாடங்களை ஏதோ கடமையே என்றுதான் மாணவர்கள் படிக்கின்றார்கள். அதிலும் தமிழைப் பாடமாக எடுத்தால் மதிப்பெண்கள் குறைந்துவிடுகிறது என்று , சமஸ்கிருதம், ஹிந்தி, ப்ரெஞ்ச் என்று வேறு மொழிப்பக்கம் செல்வதும் அதிகமாகிவிட்டது.

இப்படி இருக்கும் பொழுது இந்தப்பாடங்களை சுவையாகத் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால் அப்படிச் செய்பவர்கள் வெகுசிலரே. அவர்களை மட்டுமே காரணமாகச் சொல்வதும் தவறு. இன்று இருக்கும் பாடத்திட்டங்களும் சரி, பாடப்புத்தகங்களும் சரி, மொழியை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் செய்யப்பட்டவைகளாகவே இருக்கின்றன. இணையத்தில் நம் பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு நாள் தமிழ்ப்பாடப்புத்தகம் ஒன்றை புரட்டிப் பார்த்தேன்.

வெண்பா இலக்கணம் பற்றிய பாடம். அதில் நேரிசை வெண்பா என்பதற்கான விளக்கம் எப்படி இருக்கின்றது தெரியுமா?

நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.” 

இதுதான் விளக்கம். இதற்கு உதாரணமாக நன்னெறியில் இருந்து ஒரு பாடல். அதற்கு உரையும் கிடையாது. நட்பு பற்றிய அருமையான பாடல் இது. ஆனால் வெண்பா பற்றி ஒன்றும் தெரியாத ஒரு மாணவனிடம் இதுதான் வெண்பா அதற்கு இதுதான் உதாரணம் என்றால் பின்னங்கால் பிடரியில் படும்படி ஓடத்தானே செய்வான்.

இங்குதானே சீர்த்திருத்தம் வேண்டும். இந்த இலக்கணத்தை எளிமையாக அந்த மாணவர்கள் மனத்தில் இருத்த முடியாதா? எளிமையான உதாரணங்களில் தொடங்கிப் படிப்படியாக சொல்லிக் கொடுக்க முடியாதா? அப்படிச் செய்தால் பள்ளி தவிர்த்த இடங்களிலும் தானாக இலக்கண சுத்தமான மொழியில் எழுதவும் பேசவும் செய்வார்கள்?

எனவே புதிய இலக்கணம் வேண்டாம், ஆனால் இலக்கணத்தைப் பயிற்றுவிக்க சரியான ஒரு திட்டம் அவசியம். இது மேலோட்டமாக சில மாற்றங்களைச் செய்யாமல் நன்றாகத் திட்டமிட்ட புதிய புத்தகங்கள், புதிய எளிய, படிப்பதை மகிழ்வான நிகழ்வாக்கும் பயிற்றுவிக்கும் முறைகள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி என்று ஒரு மாற்றம் வர வேண்டும்.

ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். சில இடங்களில் பல வருடங்கள் இருந்ததால் அங்குள்ள மொழியைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர். பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு சுவையான கேள்வியை எழுப்பினார். நான் எங்கு சென்றாலும், அங்கு என்னைப் போன்றவர்கள் அங்குள்ள மொழியைப் படிக்க, பள்ளியல்லாத ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அது போன்று ஏன் தமிழுக்கு இல்லை? உதாரணமாக ப்ரெஞ்ச் படிக்க Alliance Française போலத் தமிழ் படிக்க ஏன் ஒரு கட்டமைப்பு இல்லை என்று வினவினார். ஏன் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் கூட ஹிந்தி பிரச்சார் சபா இருக்கிறதே, பள்ளிசாராக் கட்டமைப்புதானே அதுவும்?

யோசித்துப் பார்க்கும் பொழுது நம் நாட்டில் பிற மொழிகளைப் படிக்க இவ்வளவு வசதி இருக்கும் பொழுது, நம் மொழியை மற்றவர்கள் படிக்க வசதி இல்லை என்பதும் அது குறித்து நாம் யாரும் கொஞ்சமும் கவலை கொள்ளவும் இல்லை என்பதும் உரைத்தது. இலவசங்களை அள்ளித் தெளிக்கும் அரசாங்கங்கள் அவற்றினை விடுத்து இது போன்ற பயனுள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் நம் மொழியின் முன்னேற்றத்திற்கு முக்கியம்.

அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்க்காமல் மற்றவர்களும் தம் பங்கைச் செய்ய வேண்டும். எழுதும் திறன் கொண்டவர்கள் தமிழை எளிதாகக் கற்க வகை செய்யும் புத்தகங்களை எழுத வேண்டும். இணையத்தில் விக்கிபீடியா போன்ற தளங்களில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு தமிழ் இலக்கணத்திற்கான உள்ளடகத்தை அதிகரிக்க வேண்டும்.

இன்னும் ஒரு கவலையும் கூட எனக்கு உண்டு. தமிழில் படிப்பது என்பது அறவே ஒழிந்துவிட்ட ஒன்றாகிவிட்டதுஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்கள், அதனை விட்டால் போன தலைமுறை கல்கியின் நாவல்களையும் இந்தத் தலைமுறை சுஜாதாவின் எழுத்துகளையும் படிப்பதோடு நின்றுபோய்விட்டது. வரும் தலைமுறைகள் தமிழில் படிப்பதாகவே தெரியவில்லை. அதற்கான வழிகளும் இல்லைபாடப்புத்தகம் தவிர்த்து பூந்தளிர், அம்புலிமாமா எனத் தொடங்கி தமிழில் படிப்பதற்கு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இன்று? நான் பார்க்கும் குழந்தைகள் யாருமே, இன்று வருகின்ற சிறுவர் இதழ்கள் எதையும் படிப்பது இல்லை.

நம் இலக்கியங்கள் எல்லாத் தமிழ்க் குழந்தைகளையும் சேர, அவற்றின் எளிமையான வடிவங்களை புத்தகங்களாகக் கொண்டு வர வேண்டும். படப்புத்தகங்களாக வந்தாலும் கூட நல்லதுதான்இதைச் செய்யாத வரை அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்ப்பது என்பது நடக்காத காரியம்.

எழுத்துக்கு இப்படி என்றால் பேச்சுத்தமிழுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழில் பேச வேண்டும். இன்று நம்மால் கலப்பின்றி தமிழில் பேச முடிகிறதா? எத்தனை பேரால் ‘பண்ணு தமிழ்’ பேசப்படுகிறது? ‘ஓப்பன் பண்ணு, கால் பண்ணு, நாளைக்கு மீட் பண்ணுவோமா? தியேட்டர் வாசலில் பார்க் பண்ணுவோமா?’ என்று எல்லாவற்றையும் பண்ணத்தானே செய்கிறோம். அதை விடுத்து ‘திற, கூப்பிடு, சந்திப்போமா? நிறுத்துவோமா’ என்று பேசுவது கடினமான ஒன்றா என்ன? பண் என்றால் பாடல். ஆனா இந்த ‘பண்ணு தமிழ்’ ஒரு படுத்தல். அதனை விட்டொழிப்போம்.

இது கட்டாயம் மாற வேண்டும். குழந்தைகள் தமிழில் படிக்காத வரை அவர்களுக்கு நம் மொழியோடு ஒரு அன்னியோனியம் வரப்போவது இல்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் படிக்கும் மாணவர்ளைக் கேளுங்கள் - தமிழ் மொழியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் கற்கும் உள்ளூர் மொழியோடு தமிழ், தமிழ் இலக்கணம் கற்பதால் மொழியியல் மொழி வரலாறு மட்டும் கற்பதில்லை! அமெரிக்கா / கனடாவில் நடக்கும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இலக்கணத்தோடு தம் மொழிப் பழமை குறித்த பெருமையும் அல்லவா கற்கிறார்கள்?

தமிழ் பேசப்படும் நிலங்களில் எல்லாம் - தமிழ்நாடு முதல் ஜப்பான் வரை, ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா, கனடா வரை எல்லாரும் விரும்பி, பெருமையோடு தமிழும் இலக்கணமும் கற்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன் தொல்காப்பியர் எழுதிய இலக்கண நூல் இன்றும் தமிழ் இலக்கணத்துக்கு அடிப்படையாய் இருப்பதைப் பற்றி நாம் எல்லாரும் பெருமை கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்ய காலம் கடந்து போய் விடவில்லை. தமிழார்வலர்கள், தங்கள் முயற்சியாலும், அரசாங்கத்துடன் இணைந்தும் தமிழைக் காத்திட, அடுத்தத் தலைமுறைக்கு சேர்த்திடச் சரியான திட்டங்களைத் தொடங்கினால், இந்த சீரழிவை நம்மால் நிறுத்த முடியும். இதற்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும். கொடுப்போம்.


FeTNA அமைப்பினரால் இவ்வருடம் ஜூலை 5 முதல் 7 வரை டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட தமிழ் விழா நிகழ்ச்சியில் வெளியிடப்படவிருக்கும் ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை. விழா மலரை இங்கு காணலாம் - http://issuu.com/fetna2013/docs/fetna_2013_malar_web

Tuesday, June 25, 2013

Beyond The Summit - Book Review

When was the last time you had read one of those inspirational self help books end to end? I remember reading Richard Bach's Jonathan Livingston Seagull and imagined myself doing things which were not the prescribed standards and reaching for greater heights and glory. And I think I was in eighth grade when I read that book and remember reading it a few times then.

Since then, I have started on many such books but never had completed one. Most of these books just preach. Be good, be true, be honest, be this, be that and are pretentious at best. If I need that kind of preaching, I have a book which is much older and goes 'Thou shalt not steal', 'Thou shalt not murder'and so on. Or they try to take a bunch of random events and try to interpret them for you. There is no way you can have a one-size-fits-all interpretation and it is precisely there these books fail. I have never been able to relate to what the author says as the events described do not appeal to me nor can I make the techniques suggested work in my case.  Rarely are such books inspiring. I have never gone back to read Jonathan Livingston Seagull ever again, as I did not want the magic it created then to evaporate now.

I recently attended an internal meeting of our company where the leaders of my team walked us through what their goals where and how we fit in the larger scheme of things. In the welcome kit was a book - Beyond The Summit by Todd Skinner. And the blurb on the cover was a kitschy 'Setting and Surpassing Extraordinary Business Goals'. It happened so that the leader of our team is a hiking / backpacking aficionado and was impressed by the words of this author, a world class mountain climber. This resulted in the theme of the meeting being about surpassing summits and this book finding its way into the welcome kit.



How can a guy like me, with barely any physical activity in my lifestyle, relate to a book on climbing mountains? Never to pass on an opportunity to read I started, albeit with much trepidation. But I was pleasantly surprised. The book is about one particular climb of the author - The conquest of a vertical wall of a mountain called the Trango Tower in the Himalayas.

In typical movie style, the book begins when the team is almost near the summit but facing so much trouble that they may not make it to the top. Todd Skinner, then takes a pause and rewinds to talk about his early experiences in climbing mountains, a few lessons that he learnt along the way before he started off on this journey of his to be on top of Trango Tower.

The story, and that is what it is a story with no preaching in between, begins with describing the need for climbing the tower, a need for reaching out to a greater goal than what has been accomplished by him so far. He goes on to talk about his preparations, the strategies he adopted at various times, the hardships he faced, how he was driven to almost giving it up and ultimately how he triumphs in his quest. Along the way, he summarizes his actions into a pile of about forty points which serve as places where you pause and ponder about what he is doing and why.

Simple statements such as "The specter of the mountain might loom larger than the mountain itself" or "If you are not afraid, you have chosen too easy a mountain" or "Don't ask if reaching the summit is possible; ask if it is impossible" or "If you can take one step, you can take one more" take a profound meaning when read in context with what Todd was experiencing at that time. Some of these relate very well to some stuff I am doing and so I could appreciate very well from a personal point of view.

 The best part about the book is that Todd does not interpret his actions to your situation or any business situation at all. He just lays down his set of variables and what he interpreted them as to make his plans. This gives you the room to think of the current mountain you are climbing and what you are facing in that climb. The mountain differs for each reader or at different times even for the same reader. It just sets  you off to think what would Todd do in such a situation and what would I have to do. This is what I found as the best part of the book.

The book is about mountain climbing. Of course, there is terminology I don't understand. I did not know that climbing involved setting up bases and climbing DOWN to them every day. I do not understand what belaying means. I do not understand the concept of dividing a climb into pitches or what the difference is between a pitch with a value of 5.12 and another with 5.13. But I can understand pitch means a subdivision and that a 5.13 pitch is harder than a 5.12. These special terms do not affect the flow of the story. You can still go along Todd in his quest to reach the summit. And it is a good read.

This book is not going to make me take up mountain climbing or even make me believe that I am going to surpass every mountain that I will face in my life. It gives me a good set of things that we need to consider while planning for anything and how to fine tune the plans as and when things change. At work, it does gives me the confidence that I can tell this team "This is my Trango Tower" and be understood. That is a good start.

Title of the Book   : Beyond the Summit
Author                  : Todd Skinner
Published by         : Portfolio, A Penguin Group Company
ISBN                   : 1-59184-004-X

Sunday, June 16, 2013

மீண்டு மீண்டும் வா!

அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது.

முதலில் வெண்பாமைப் பார்த்துவிடலாம். 

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப

படித்த உடன் அப்படியே மலைத்து நின்றுவிட்டேன். எவ்வளவு ஆழமான கருத்தை எத்துணை எளிமையாகச் சொல்லி இருக்கிறார். யார் வேண்டுமானாலும் ஒரு முறை படித்த உடனே நினைவில் வைத்துக் கொள்ளும்படியான அமைப்பு. 

ஆனால் இதனுள் புதைந்து இருக்கும் சிறப்பான கருத்தினைப் பார்க்கலாம். 

திரும்பத் திரும்ப - தன்னை விட்டு விலகிச் செல்லும் உயிர்களைக் கூட ஆசையோடு அரவணைத்து அவருக்கு மோட்சம் தருவது இறைவன் குணம். இந்து மதமாகட்டும், கிறுத்துவமாகட்டும், இஸ்லாமாகட்டும் இது குறித்த கதைகள் ஏராளம் உண்டு. இப்படி மந்தையில் இருந்து விலகிய ஆடுகள் மீண்டும் இறைவனைச் சேர என்பதையே திரும்பத் திரும்ப எனச் சொல்லி வெண்பாமைத் தொடங்குகிறார் அண்ணன். 

திரும்பத் திரும்ப - அப்படி மந்தையை விட்டு விலகிய ஆடானது சட்டென மனம் மாறி உடனே திரும்பிவிடுமா? அது நடக்கக்கூடிய விஷயமா என்று பார்த்தோமானால் இல்லை. எதோ ஒரு பொறியில் திரும்ப வேண்டும் எனத் தோன்றினாலும் அதனை புறக்கணித்துத் தன் வழியே செல்லவே துணியும். ஆனால் அந்தப் பொறி தோன்றியதில் இருந்து தான் செய்வது தவறோ என எண்ணி தன் செயல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றும்.அப்படி நினைக்கும் பொழுதிலெல்லாம் தன் வழியில் இருந்து விலகி மீண்டும் இறைவனை நோக்கிச் செல்லத் தொடங்குவதை வர்ணிக்கவே அண்ணன் திரும்ப திரும்ப என்று அந்த மெதுவான திருப்பத்தினைக் குறிக்கிறார். 

திரும்பத் திரும்ப திரும்ப 

இரண்டாம் அடியில் மிக அழகாக ஒரு திருப்பத்தினைத் தருகிறார். திருவின் கணவனாகிய திருமால் நம் மனத்தினுள் ரொம்பி இருக்க வேண்டுமானால் முதலடியில் சொன்னது போல் நம் வழியில் இருந்து திரும்ப வேண்டும் என்கிறார். 

மேற்கூறியவாறு திரும்ப, திரும்பதி ரொம்ப என்பதையே இரண்டாம் அடியாக திரும்பத் திரும்ப திரும்ப என்று எழுதி இருக்கிறார். மற்ற இடங்களில் திரும்பத் திரும்ப என வலி மிகுந்து எழுதியவர் கடைசி இரண்டு சொற்களை எழுதும் பொழுது வலி மிகாமல் எழுதியது அது திரும்பதி ரொம்ப என்று பிரிக்கப்பட வேண்டும் என்பதாலே. வெண்பாமின் ஓசை நயம் கருதி ரொம்ப என்பது ரும்ப என்று வருவது தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு வகைப் போலியே. 

அதே போல, நாள் மலர் காசு பிறப்பு என்ற அடிப்படையில் திரும்பு என்று முடிக்க வேண்டியது வெண்பாம் இலக்கணம் என்றாலும் இது திரும்புதல் பற்றிய வெண்பாம் என்பதால் அவ்விலக்கணத்தை மீறி திரும்ப என்றே முடித்திருப்பது அண்ணனின் அத்துமீறிய இலக்கிய வளத்தினையே பறை சாற்றுகிறது. 

சமகாலத்தில், இறைவனின் கைத்தலத்தில் ஐக்கியமாகிவிட்டாயா என்பதை ஜனரஞ்சகமாகச் சொன்ன “கையப் புடிச்சு இழுத்தியா? என்ன கையப் புடிச்சு இழுத்தியா?” என்ற திரை இலக்கியத்திலேயும் “திரும்பத் திரும்பப் பேசறே நீ” என்று இந்த வெண்பாம் எடுத்தாளப்பட்டிருப்பது எதேச்சையான நிகழ்வல்ல.



இந்த அருமையான வெண்பாம் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை. 

வெண்பாம்: 
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப

(https://twitter.com/mayavarathaan/status/346132235679834112)

கொத்தனார் உரை: 
தன் வழி விட்டு மீண்டும் இறைவனிடம் திரும்ப வேண்டி மனத்தினை மெதுவாக திருப்பி நல்வழியே திரும்பினால் திருவின்பதியான திருமால் நம் மனத்தினுள் நிறைந்திருப்பார்.

இந்த வெண்பாம் குறித்து சில பிரபல இலக்கியவாதிகளின் கருத்துகள்

எழுத்தாளர் ஜெயமோகன் 

அன்பின் ஜெ

திரும்பத் திரும்ப என்றொரு வெண்பாமைப்பற்றி நிறையப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

அயன்புரம் சத்தியநாராயணன்.

சத்தி,

இலக்கியம் என்பதன் உள்ளார்ந்த எழுச்சி கொஞ்சமும் எந்தத் திருக்குறளிலுமே இருந்தது கிடையாது. அது போலவே இந்த வெண்பாமிலும் இல்லை.

இந்து ஞானமரபில் மறுபிறவி பற்றிய வாதப்பிரதிவாதங்கள் அனேகம். அவற்றின் உள்ளொளி தரிசனம் சற்றும் இன்றி இயற்றப்பட்டிருக்கிறது இந்தப்பா. திரும்பத் திரும்ப என்பதையே திரும்பத் திரும்பச் சொல்வது ஒரு நல்ல உத்தியே தவிர இலக்கியம் ஆகிவிடாது.

திரிச்சி திரிச்சி என்று மலையாள இலக்கியத்தில் பலகாலமாக உள்ள பாடலே இது. அது ஒரு புறவயமான அகவெழுச்சியை முன்னுக்குக் கொண்டு வருவதாக சுந்தர ராமசாமி சொன்னபோது எதிரில் ஒரு மொண்ணை தும்மல் போட்டார். அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் அவருடைய மொண்ணைத்தனத்துக்காக என் கோபத்தையெல்லாம் காட்டி அவரை கன்னியாகுமரி ஜில்லாவைவிட்டே நாடுகடத்தினேன். இதற்கும் எதிர்வினைகள் வரும். அவற்றை நீங்களும் சுட்டிக்காட்டுவீர்கள், நான் அவற்றையெல்லாம் படிக்காமலேயே வரிக்கு வரி எதிர்வினை எழுதுவேன்.

ஜெ.

கவிஞர் மனுஷ்யபுத்ரன்
இந்தப்பாடலைப்பற்றிய என் கருத்தை சாட்டில் வந்த பெண் ஒருத்தி கேட்டார். என் நேரம்.. படுக்கையறையில் யாரோ ஒழிந்திருக்கிறார்கள் என்று நான் எழுதியதையெல்லாம் பற்றிக் கேட்காமல் இதைக் கேட்கிறார்கள். கேட்டது வேறு யாராவதாக இருந்தால் கண்டுக்காமல் விட்டிருக்கலாம். என் எல்லா போஸ்டுக்கும் லைக் போடும் பெண்ணாகிவிட்டதால் சொன்னேன்: இன்று மாலை 5-6 பொந்தி டிவியில் இதுபற்றிக் கலந்துரையாடுகிறேன். இரவு 2 மணிக்கு ஒளிபரப்பாகும். பார்த்துக்கொள் என்று. 

எழுத்தாளர் சாரு 

திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்

தினமும் காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவேன். இன்று காலை அப்படி எழுந்துகொள்ளும்போதுதான் அவந்திகா “என்ன தினமும் 9 மணிக்குதானே எழுந்துக்குவே.. இன்னிக்கு ஏன் சீக்கிரமா?” என்றூ கேட்டாள். வீட்டில் காஃபிப்பொடி இல்லை. கடந்த 15 வருஷமாக நான் காஃபி குடிப்பதில்லை என்பதால் காஃபிப்பொடிக்காக கடைக்குச் சென்றேன். கடையில் ஒரு ஆள் பார்த்து “எப்படி இருக்கீங்க சார்?” என்றான். இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமா? ஃப்ரான்ஸில் பிறந்திருந்தால் எனக்கு நோபல் பரிசு நிச்சயம். ஒரு லத்தீன் அமெரிக்க டீக்கடைக்காரன் இப்படித்தான் போர்ஹேவைப்பார்த்துக் கேட்டிருப்பானா? எல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடு.

என்ன கேட்டீர்கள்? இந்தப்பாட்டைப்பற்றியா? நான் இதையெல்லாம் கேட்பதில்லை. இந்த யூடூப்பில் உள்ள பாட்டைக்கேளுங்கள். 4:14-4:28க்குள் நீங்கள் செத்துப்போவதற்கு நான் காரண்டி.

எழுத்தாளர் ஞாநி 

தலைநகரில் பெண்களின் பாதுகாப்பின்மை, அரசியல் கொலைகள், தூக்கில் தொங்குவதே விதி எனக் காத்திருக்கும் கைதிகள், தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை, அணு உலை என்ற பூதம் இப்படிப் பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் பொழுது இப்படி திரும்பத் திரும்ப இந்த திரும்பத் திரும்ப வெண்பாம் போன்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே சிலரால் எப்படி இயங்க முடிகிறது. 

இவ்வளவுக்கும் இதனை எழுதிய மாயவரத்தான் எனக்கு நன்கு அறிமுகமானவர்தான். என்னை விட இருபத்தியிரண்டு வயது இளையவர். அவர் பிரபல பத்திரிகையில் இளம் நிருபராக சேர்ந்த பொழுதே என்னைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். நானும் பல அறிவுரைகளைத் தந்திருக்கிறேன். அந்த அறிவுரைகளைத் தீட்டிய மரத்திலேயே கூர்பார்த்த வலியும் எனக்குப் பழக்கப்பட்டுப்போனதுதான். திண்ணைகளில் நடக்கும் அக்கப்போரில் நாங்கள் வேறு வேறு குரல்களில் பேசினாலும் அடிப்படையில் இருவரும் இலக்கியவாதிகள். தங்கள் கொள்கையில் தவறாது இருப்பவர்கள் எனவே அவர் எழுதியதைப் பற்றிப் பேச விமர்சிக்க எனக்குத்தான் அதிக உரிமை. ஆனால் அது பற்றிப் பேச வேண்டிய நேரம் இதுவல்ல. 

கட்டுரை.காம் ஆசிரியர் தேள் 

ஹி. ஹிஹிஹி..ஹிஹிஹிஹிஹி...

இலவசம் என்ற ஆசாமி திரும்பத் திரும்பக் கவிதைக்கு உரை எழுதி இருக்கிறார் என்று மாயவரத்தானின் உபிக்கள் கும்மாளமாகவும் குஜாலாகவும் இருக்கிறார்கள். இதுகுறித்து நம்முடைய நிருபர் படையை (கூகுள் சர்ச்தான்) அனுப்பி விசாரித்தோம்.

இலவசம் என்ற நபர் இதுவரை 234 விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். எல்லாமே இதுபோன்று யாருக்கும் புரியாத விமர்சனங்கள்தான். அவரைப்பற்றி பொதுவான பேச்சு என்னவென்றால் “எந்தக்குப்பையை அனுப்பினாலும் அதற்கு இவர் யாருக்கும் புரியாத விமர்சனம் ஒன்று எழுதிவிடுவார்: என்பதுதான்.

திரும்பத் திரும்ப பாடல் நல்ல பாடலாகவே இருக்கட்டும். ஆனால் இந்த உரையால் இந்தப்பாட்டுக்கு மரியாதை என்பது.. ஹி. ஹிஹிஹி..ஹிஹிஹிஹிஹி...

பிகு 1: நகர்படத்தில் குறிப்பிட்ட வசனம் பேசுபவர் மாயவரத்தான் இல்லை. காணப்படும் ஒற்றுமைகள் யதேச்சையான ஒன்றே!

பிகு 2: இலக்கியவாதிகளின் சிந்தனை ஓட்டம் பற்றி நன்கு அறிந்து, அவற்றினை எழுத்து வடிவத்தில் பெனாத்திய அண்ணன் @penathal அவர்களுக்கு கம்பெனியின் நன்றிகள்.