ஒரு பத்து பதினைந்து நாட்களாய் ரொம்ப வேலை. அதில் இரண்டு நாட்களுக்கு மினியாப்போலிஸும் மூன்று நாட்களுக்கு லண்டன் பயணமும் வேறு அடுத்தடுத்து. பயணக் கட்டுரைன்னு நம்ம ரசிகர்கள் எல்லாம் ஒரேடியா தொல்லை. (எழுதிட கிழிதிடப் போற என்று அன்பான வேண்டுகோள் வைத்தவர்கள்தான் அதிகம். ஹிஹி.) ஆனா வெறும் வேலை சம்பந்தப்பட்ட விஜயமாகிப் போனதுனால சுவாரசியமா ஒண்ணும் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் எழுதலாமேன்னுதான் இந்தப் பதிவு.
முதலில் உள்நாட்டு விசிட். மினியாப்போலிஸில் இரு நாட்களுக்கு வேலை என முடிவானதும் நம்ம குமரனைக் கூப்பிட்டு 'உங்க ஊர் பக்கம் வரேன்யா. நாம சந்திக்கலாம்' அப்படின்னு சொன்னேன். அவரும் பெருசா 'வாங்க வாங்க எப்ப வரீங்க?'ன்னு கேட்டாரு. ஆளு யாஹூ சாட் பண்ணும்போதே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆயிடுவாரே, அவருக்கு முன்னமே விஷயத்தை சொல்லிட்டா பார்ட்டி 'ஐயாம் தி எஸ்கேப்'ன்னு காணாம போயிடுவாரேன்னு யோசிக்காம நானும் வந்து போகிற தேதியை சொல்லிட்டேன். குமரனும் கரெக்ட்டா நான் குடும்பத்தோட லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ், லாஸ்(ட்டா) டிஸ்னிலேண்ட் என ஒரு டூர் போறேனே அப்படின்னு சொல்லிட்டாரு. சொன்னா மாதிரி காணாமலும் போயிட்டாரு. குமரன், சும்மா டமாஸுக்கு. நீங்க வேற கோச்சுக்காதீங்க. ஸ்மைலி எல்லாம் போட்டுடறேன். :) :) :)
ஆக மொத்தம் விசேஷமாய் அந்த ஊரில் ஒண்ணும் பண்ணலை. நம்ம சிவ புராணம் சிவாவுக்கு மட்டும் போன் பண்ணி பேசினேன். அவர் பேசி கேட்கும்போதே 'அமெரிக்க கண்டமிது ஆனாலுமே, நெல்லைத் தமிழ் வந்து பாயுமே காதினிலே'ன்னு மனசுக்குள்ள ஒரு கும்மாளம், கொண்டாட்டம். எங்கேயோ ஒரு இடத்தில வந்து நம்ம ஊரு பாஷையை கேட்கறதுன்னா சும்மாவா? என்ன மக்கா, நாம சரியாத்தானே சொல்லுதோம். அவரைப் பார்க்கத்தான் முடியாம போயிருச்சு. இவ்வளவுக்கும் அவர் ஆபீஸ் பக்கம் இருக்கற ஒரு பில்டிங்கில்தான் இருந்திருக்கிறேன். அடுத்த முறை கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.
இந்த ஜீவா வெண்பா வடிக்கலாம் வான்னு கூப்பிட்டாலும் கூப்பிட்டார். இப்போ கிட்டத்தட்ட ஒரு பயித்தியம் பிடிக்கற லெவலுக்கு அடிக்ட்டாயாச்சு. இந்த பதிவையே வெண்பாவா எழுதலாமான்னு யோசிக்கற நிலமைக்கு கொண்டு போய் விட்டுட்டாரு. இப்படி ஆரம்பிச்சு விட்டுட்டு அவர் மட்டும் ஹாயா லீவு போட்டுட்டு போயிட்டார். ஈற்றடி இல்லாம இப்போ நமக்குத்தான் நமநமன்னு இருக்கு. நம்மளை மாதிரி ஒரு நாலு பேராவது இருக்க மாட்டாங்களா? அவங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டுமேன்னு ஜீவா வர வரைக்கும் நம்ம இந்த வெண்பா வடிக்கலாம் வா விளையாட்டை இங்க வச்சுக்கலாம். ஜீவா, உங்க பதிவை ஹைஜாக் பண்ணறேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க வந்த உடனே ஹேண்டோவர் பண்ணிடறேன்.
இந்த பதிவுல குமரனை பார்க்க முடியாததை குறிக்கும் படியாக 'குன்றில் குமரனைக் காண்' என்ற ஈற்றடி கொண்டு விளையாடலாம். ஜிரா, குன்று குமரன்னு எல்லாம் எழுதியிருக்கேன், மரியாதையா வந்துருங்க. ஆமா. முதல்ல நம்ம போணி.
மலையில்லா மாநகர்மி னீயாப்போ லீஸில்
அலைந்தேன் குமரனைத் தேடி - வலைப்பதிவீர்!
சொன்னார்கள் காலத்தே சான்றோர் சரியாக
குன்றில் குமரனைக் காண்.
Monday, April 03, 2006
Thursday, March 30, 2006
Voipstunt - வெறும் ஸ்டண்ட்?
Voipstunt . இப்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சேவை இது. கணினியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் உள்ள தொலைபேசிகளை இலவசமாக அழைக்க முடியும் என்பதுதான் இந்த சேவை. இந்த நாடுகளில் இந்தியர்கள் அனேகம் பேர் வசிக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் அடக்கமென்பதால் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தளமாய் விளங்கி வருகிறது. நமது தமிழ் மணத்தில் கூட ஒரு நண்பர் இதைப் பற்றி எழுதியிருந்தார்.
உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.
'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'
அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.
இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.
மொத்த ஆளுமை விலை
முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.
மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.
இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)
எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.
ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)
இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.
"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"
புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.
உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.
'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'
அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.
இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.
மொத்த ஆளுமை விலை
முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.
மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.
இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)
எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.
ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)
இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.
"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"
புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.
Monday, March 13, 2006
கணக்கொன்று போட்டேன்
அலுவலகத்தில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாகப் பெரிய பதிவொன்றும் போட முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் வருகை இருப்பதை StatCounter மூலம் பார்க்கிறேன். அவர்கள் ஆவலுக்காக ஒரு சிறிய புதிர்.
பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.
நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.
நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.
அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ
இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.
எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.
பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.
நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.
நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.
அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ
இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.
எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.
Sunday, March 05, 2006
ஒரு வாரமாய் பௌர்ணமி
இப்படித்தான் சொல்லத் தோணுது. பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.
படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.
போட்டிக்கு முன்னால்
நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.
அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.
கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.
போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.
சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.
சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.
சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.
சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.
சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.
சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.
அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.
வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.
போட்டிக்கு பின்
இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.
முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)
நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.
நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.
நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?
வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)
நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)
நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.
இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?
படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.
போட்டிக்கு முன்னால்
நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.
அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.
கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.
போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.
சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.
சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.
சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.
சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.
சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.
சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.
அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.
வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.
போட்டிக்கு பின்
இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.
முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)
நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.
நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.
நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?
வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)
நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)
நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.
இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?
Tuesday, February 28, 2006
உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்
உடன்பிறப்பே,
கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.
வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html என்ற தளத்திற்கு சென்று பின்னூட்டமிடு்.
இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு
கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.
கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.
வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com
இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு
கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.
Monday, February 27, 2006
பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2
இதுதான் எங்கள் விளம்பரம் - பாண்டி நாட்டு தங்கம்ஸ்.
விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.
தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)
வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)
எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )
நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)
பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு
நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)
தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா
ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)
டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க
இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)
இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?
விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.
தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)
வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)
எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )
நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)
பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு
நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)
தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா
ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)
டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க
இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)
இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?
Friday, February 24, 2006
புதிரா? புனிதமா? - விடைகள்
புதிரா? புனிதமா? - இதை பட்டிமன்ற தலைப்பா வெச்சிருந்தா சாலமன் பாப்பய்யா (ஓ! இப்போ இவரை பத்தி பேசக்கூடாதோ) கூட தேவையே இல்லாம புதிரே அப்படின்னு ஏகோபித்த முடிவா இருந்திருக்கும். இப்படி அமோக வரவேற்பைக் கொடுத்த மக்களுக்கு நம் நன்றி. சும்மா 200 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய நண்பர்களுக்கு நன்றியோ நன்றி. இவ்வளவுக்கும் தொடர்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றதென்னவோ பத்து பேர்கள் கூட இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ, கோ.இராகவன், சதீஷ், மதுமிதா, பெனாத்தல் சுரேஷ், கௌசிகன், பாலராஜன்கீதா - அவ்வளவுதான். அடிக்கடி வரும் பெரியவர் ஹரிஹரன்ஸ், சின்னவன், கைப்புள்ள, தியாக், சீமாச்சு போன்றவர்களைக் காணவே காணோம். என்ன விஷயமோ தெரியவில்லை.
இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)
ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.
விடைகளைப் பார்ப்போமா
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்
அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு
ஆவோ - இந்திரா
சில கருத்துகள்
இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)
ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.
விடைகளைப் பார்ப்போமா
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்
அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு
ஆவோ - இந்திரா
சில கருத்துகள்
- முதல் குறிப்பிற்கு ஒரு வீடு இரு வாசல் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. கேட்ஸ் என்றால் வாசல்கள்தானேன்னு விளக்கம் வேற. ஆனா படம் பேரு ஒரு வீடு இரு வாசல்கள் இல்லையே. அதனால இந்த பதிலை ஒத்துக்கொள்ளவில்லை.
- திருட்டுப்பயலே ரிலீஸ் ஆகாததுனால ரொம்ப பேருக்கு தெரியலை. அந்த படம் ப்ரொடியூசர் நம்மளை தனியா கவனிக்கணும். கடைசியா பச்சோந்திதான் விடையை அவுட் பண்ணிட்டாரு.
- பாகபிரிவினை குறிப்புதான் பெஸ்ட் அப்படின்னு அதிகம் பேர் சொன்னாங்க.
- ஏழுமலை. இந்த குறிப்பை ஏழாவதாக வைத்ததும், உலகின் ஏழு உயரமான சிகரங்களை வரிசை படுத்தியதும் நான் செய்த சிறு நகாசு வேலைகள். உன்னிப்பாக இதையும் பார்த்து கண்டு பிடித்து விட்டார்கள் நம் மக்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
- அதே போல் எட்டாவது குறிப்பில் உள்ள மலர்கள் எல்லாமே வேறு திரைப்பட பெயர்கள். இதையும் கௌசிகன் கண்டுகொண்டார்.
- பத்தாவது குறிப்பில் ஒரு பெண் பெயரும், ஒரு ஆண் பெயரும் கலந்து, வருவதும் ஒரு ஆணின் பெயராக கொடுத்ததில் பலபேர் வழி தவறிவிட்டனர்.
Thursday, February 23, 2006
நான் பிடிச்ச நான்கு ஆட்கள்
ஏதோ ஓரமாய் இருந்த நம்மையும் இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டுடாரு நம்ம வைத்தியர் .
நம்மளும் சும்மா இல்லாம ''ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது) நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....சரி சரி போட்டுருவோம். :)" ன்னு பின்னூட்டம் போட்டாச்சு.
ஜாலியா எழுதலாம்ன்னு போய் இப்போ கொஞ்சம் சீரியஸாவே போன நம்ம லிஸ்ட்.
நானிருந்த நாலு ஊர்கள்
1. கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
சென்னையில் பிறந்தாலும் சில நாட்களிலே அழைத்து வரப்பட்டு வளர்ந்த இடம். அப்பளத்திற்கு பெயர் போன ஊர். இப்பொழுது சினிமா ஷூட்டிங் பிரதான தொழிலாய் தெரிகிறது. நம் கிராம அனுபவங்களின் நிலைகளன்.
2. சென்னை மாநகரம்
பதின்ம வயதுகளில் மீண்டும் பிறந்த இடத்திற்கே வருகை. இதனால் நகர வாழ்க்கையின் சுவைகளையும் மிஸ் பண்ணவில்லை. நமக்கும் இங்கே ஒரு 50 லிஸ்ட் இருக்கே.
3. கோவை மாநகரம்
வேலை நிமித்தம். குடும்பத்துடன் இல்லாமல் எனது தனியான வாழ்க்கையை ஆரம்பித்த இடம். பின் திருமணமாகி தனியை விட்டுவிட்டு வாழ்க்கையை மட்டும் தொடர்ந்த ஊரும்கூட.
4. பெங்களூரு மாநகரம்
வங்கி வேலையை விட்டுவிட்டு மென்பொருளாளனாய் மாறிய இடம். என் மகன் பிறந்த இடம், எங்கள் அரண்மணை (சிறியதாகவே இருந்தாலும்) இருக்கும் இடம் என பல ஒட்டுதல்கள். இப்பொழுது அமெரிக்கவாசியாய் இருந்தாலும், சொல்வதற்கு விசேடமாய் எதுவுமில்லை.
செல்ல விரும்பும் நாலு இடங்கள்
1. பாரிஸ்
பல இடங்கள் போயிருந்தாலும், இதுவரை விமான நிலையம் வரைதான் இங்கு போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கும் ஓர் இடம்.
2. சிருங்கேரி, கர்நாடகா
மிக அமைதியான இடம். பல முறை சென்றிருக்கிறேன். ஆனாலும் சலிப்பைத் தராத இடம். சென்று வந்தவுடன் மனது லேசாகிவிடுவதென்னவோ நிஜம்.
3. ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து
ரொம்ப அல்பத்தனமான காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களிலும் கால் பதித்தாகிவிட்டது. அதனால் இங்கும் சென்றால் மக்கள் வாழும் அனைத்து கண்டங்களும் சென்றாகிவிட்டது என்ற ஒரு ஆசைக்காக.
4. ந்கோரோந்கோரோ தேசீயப் பூங்கா
ஒரு எரிமலையின் சிகரத்தில் அமைந்துள்ள இடம். வன விலங்குகளைக் காண இதைவிட சரியான இடம் இல்லை என்பது பொதுவான கருத்து. ஒரு முறையேனும் செல்ல வேண்டும்.
சென்று வியந்த நாலு இடங்கள்
1. ஐஸ்லாந்து
தீயும் பனியும் சேர்ந்திருக்கும் இடம். இயற்கை அழகை சொல்லி மாளாது. நடுங்கும் குளிரில் வென்னீர் ஊற்றுகளில் குளித்த அனுபவம் புதிது.
2. நயாகரா நீர்வீழ்ச்சி
அருகில் செல்ல செல்ல, நம்மை ஆவென்று பார்க்க வைக்கும் கம்பீரம். அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
3. கென்யா நாட்டின் சமவெளிக் காடுகள்
இயற்கையான சூழ்நிலையில் வனவிலங்குகளைக் காண முடிந்த அனுபவம். கைக்கெட்டும் தூரத்தில் சிங்கங்கள், காட்டானைகள், காண்டாமிருகங்கள் என மிரட்டிய அனுபவம்.
4. எகிப்திய பிரமிட்டுகள்
பண்டை காலத்தின் சுவடுகள். அதை பற்றிய கதையை சொல்லிய லேசர் ஷோ. மிகப்பெரிய நேஷனல் அருங்காட்சியகம். அதிலுள்ள பொருட்களை பார்த்தால், நமது பாரம்பரியத்துடனான தொடர்பு புரிகிறது. ஒரு வாரம் இருந்தும் கூட முழுதும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வந்த இடம்.
நமது நாட்டிலும் பல இடங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த இடங்களைப் பற்றி எழுதியது குறைவு என்பதால்தான் இப்படி. மற்றபடி, தாய் நாட்டின் பெருமை பற்றி அறியாதவன் என்றெல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள்.
பிடித்த நான்கு உணவு வகைகள்
1. தென்னிந்திய உணவு
2. மெக்ஸிகன் உணவு
3. தாய்லாந்து உணவு
4. இந்தோ சைனீஸ் உணவு
பின்ன என்னங்க. நம்மளைப்போய் நாலே நாலு உணவு வகைகளை சொல்லச் சொன்னா எப்படி. எதைப் போட்டாலும் சாப்பிடும் நமக்கு அதெல்லாம் சரி வராது. என்ன, முன்பெல்லாம் அசைவது, அசையாதது என்று எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது (கொன்றிருந்தது) போய் இப்பொழுது மரக்கறியாளனாய் மாறி விட்டேன்.
நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்
1. கமலஹாசன்
சமீபத்தில் இவரைப் பற்றி எல்லாருமே ரொம்ப பேசியாச்சு. தேவர்மகன், குணா, மை.ம.கா.ராஜன், சதி லீலாவதி. ரஜினியையும் பிடிக்கும்.
2. டி.எம்.கிருஷ்ணா
சமீப காலமாய் கேட்க ஆரம்பித்திருக்கும் கர்நாடக சங்கீதத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர். சஞ்சயையும் பிடிக்கும்.
3. இளையராஜா
நம்ம மொட்டை. இதுக்கு மேல என்ன சொல்ல. அவ்வளவுதான். இசை மட்டுமல்ல. அவர் குரலுக்கும்.
4. ஜெப்ரி ஆர்ச்சர்
அருமையாய் கதை எழுதுவார். படிக்கப் பிடிக்கும். தமிழில் சாண்டில்யன்.
சொல்லாத நான்கு
1. பார்த்த வேலைகள்
இன்னும் நாலு ஆகலையே. ஆனா பார்த்ததை வேற இடத்தில் சொல்லியாச்சு.
2. பிடித்த படங்கள்
இதையும் சைடிலேயே சொல்லியாச்சு
3. பிடித்த டீவீ நிகழ்ச்சிகள்
ரொம்ப டீவீ பார்ப்பதில்லை
4. அட போதுமப்பா
அழைக்க விரும்பும் நால்வர்
1. ஹரிஹரன்ஸ்
நம்ம பெரியவர். எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி. இப்போ பதிவு வேற போட ஆரம்பிச்சுட்டார்.
2. கௌசிகன்
இவர் அதிகம் எழுதாதது எனக்கு ரொம்ப வருத்தம்.
3. சின்னவன்
இவர் குசும்பு நமக்கு பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளாய் ஆளைக்காணும்.
4. நிலா
நிறைய நல்லா பண்ணறாங்க. இப்போ போட்டி எல்லாம் வேறே போட்டிருக்காங்க. அதான். ஹிஹி.
நம்மளும் சும்மா இல்லாம ''ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது) நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....சரி சரி போட்டுருவோம். :)" ன்னு பின்னூட்டம் போட்டாச்சு.
ஜாலியா எழுதலாம்ன்னு போய் இப்போ கொஞ்சம் சீரியஸாவே போன நம்ம லிஸ்ட்.
நானிருந்த நாலு ஊர்கள்
1. கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
சென்னையில் பிறந்தாலும் சில நாட்களிலே அழைத்து வரப்பட்டு வளர்ந்த இடம். அப்பளத்திற்கு பெயர் போன ஊர். இப்பொழுது சினிமா ஷூட்டிங் பிரதான தொழிலாய் தெரிகிறது. நம் கிராம அனுபவங்களின் நிலைகளன்.
2. சென்னை மாநகரம்
பதின்ம வயதுகளில் மீண்டும் பிறந்த இடத்திற்கே வருகை. இதனால் நகர வாழ்க்கையின் சுவைகளையும் மிஸ் பண்ணவில்லை. நமக்கும் இங்கே ஒரு 50 லிஸ்ட் இருக்கே.
3. கோவை மாநகரம்
வேலை நிமித்தம். குடும்பத்துடன் இல்லாமல் எனது தனியான வாழ்க்கையை ஆரம்பித்த இடம். பின் திருமணமாகி தனியை விட்டுவிட்டு வாழ்க்கையை மட்டும் தொடர்ந்த ஊரும்கூட.
4. பெங்களூரு மாநகரம்
வங்கி வேலையை விட்டுவிட்டு மென்பொருளாளனாய் மாறிய இடம். என் மகன் பிறந்த இடம், எங்கள் அரண்மணை (சிறியதாகவே இருந்தாலும்) இருக்கும் இடம் என பல ஒட்டுதல்கள். இப்பொழுது அமெரிக்கவாசியாய் இருந்தாலும், சொல்வதற்கு விசேடமாய் எதுவுமில்லை.
செல்ல விரும்பும் நாலு இடங்கள்
1. பாரிஸ்
பல இடங்கள் போயிருந்தாலும், இதுவரை விமான நிலையம் வரைதான் இங்கு போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கும் ஓர் இடம்.
2. சிருங்கேரி, கர்நாடகா
மிக அமைதியான இடம். பல முறை சென்றிருக்கிறேன். ஆனாலும் சலிப்பைத் தராத இடம். சென்று வந்தவுடன் மனது லேசாகிவிடுவதென்னவோ நிஜம்.
3. ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து
ரொம்ப அல்பத்தனமான காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களிலும் கால் பதித்தாகிவிட்டது. அதனால் இங்கும் சென்றால் மக்கள் வாழும் அனைத்து கண்டங்களும் சென்றாகிவிட்டது என்ற ஒரு ஆசைக்காக.
4. ந்கோரோந்கோரோ தேசீயப் பூங்கா
ஒரு எரிமலையின் சிகரத்தில் அமைந்துள்ள இடம். வன விலங்குகளைக் காண இதைவிட சரியான இடம் இல்லை என்பது பொதுவான கருத்து. ஒரு முறையேனும் செல்ல வேண்டும்.
சென்று வியந்த நாலு இடங்கள்
1. ஐஸ்லாந்து
தீயும் பனியும் சேர்ந்திருக்கும் இடம். இயற்கை அழகை சொல்லி மாளாது. நடுங்கும் குளிரில் வென்னீர் ஊற்றுகளில் குளித்த அனுபவம் புதிது.
2. நயாகரா நீர்வீழ்ச்சி
அருகில் செல்ல செல்ல, நம்மை ஆவென்று பார்க்க வைக்கும் கம்பீரம். அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
3. கென்யா நாட்டின் சமவெளிக் காடுகள்
இயற்கையான சூழ்நிலையில் வனவிலங்குகளைக் காண முடிந்த அனுபவம். கைக்கெட்டும் தூரத்தில் சிங்கங்கள், காட்டானைகள், காண்டாமிருகங்கள் என மிரட்டிய அனுபவம்.
4. எகிப்திய பிரமிட்டுகள்
பண்டை காலத்தின் சுவடுகள். அதை பற்றிய கதையை சொல்லிய லேசர் ஷோ. மிகப்பெரிய நேஷனல் அருங்காட்சியகம். அதிலுள்ள பொருட்களை பார்த்தால், நமது பாரம்பரியத்துடனான தொடர்பு புரிகிறது. ஒரு வாரம் இருந்தும் கூட முழுதும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வந்த இடம்.
நமது நாட்டிலும் பல இடங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த இடங்களைப் பற்றி எழுதியது குறைவு என்பதால்தான் இப்படி. மற்றபடி, தாய் நாட்டின் பெருமை பற்றி அறியாதவன் என்றெல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள்.
பிடித்த நான்கு உணவு வகைகள்
1. தென்னிந்திய உணவு
2. மெக்ஸிகன் உணவு
3. தாய்லாந்து உணவு
4. இந்தோ சைனீஸ் உணவு
பின்ன என்னங்க. நம்மளைப்போய் நாலே நாலு உணவு வகைகளை சொல்லச் சொன்னா எப்படி. எதைப் போட்டாலும் சாப்பிடும் நமக்கு அதெல்லாம் சரி வராது. என்ன, முன்பெல்லாம் அசைவது, அசையாதது என்று எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது (கொன்றிருந்தது) போய் இப்பொழுது மரக்கறியாளனாய் மாறி விட்டேன்.
நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்
1. கமலஹாசன்
சமீபத்தில் இவரைப் பற்றி எல்லாருமே ரொம்ப பேசியாச்சு. தேவர்மகன், குணா, மை.ம.கா.ராஜன், சதி லீலாவதி. ரஜினியையும் பிடிக்கும்.
2. டி.எம்.கிருஷ்ணா
சமீப காலமாய் கேட்க ஆரம்பித்திருக்கும் கர்நாடக சங்கீதத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர். சஞ்சயையும் பிடிக்கும்.
3. இளையராஜா
நம்ம மொட்டை. இதுக்கு மேல என்ன சொல்ல. அவ்வளவுதான். இசை மட்டுமல்ல. அவர் குரலுக்கும்.
4. ஜெப்ரி ஆர்ச்சர்
அருமையாய் கதை எழுதுவார். படிக்கப் பிடிக்கும். தமிழில் சாண்டில்யன்.
சொல்லாத நான்கு
1. பார்த்த வேலைகள்
இன்னும் நாலு ஆகலையே. ஆனா பார்த்ததை வேற இடத்தில் சொல்லியாச்சு.
2. பிடித்த படங்கள்
இதையும் சைடிலேயே சொல்லியாச்சு
3. பிடித்த டீவீ நிகழ்ச்சிகள்
ரொம்ப டீவீ பார்ப்பதில்லை
4. அட போதுமப்பா
அழைக்க விரும்பும் நால்வர்
1. ஹரிஹரன்ஸ்
நம்ம பெரியவர். எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி. இப்போ பதிவு வேற போட ஆரம்பிச்சுட்டார்.
2. கௌசிகன்
இவர் அதிகம் எழுதாதது எனக்கு ரொம்ப வருத்தம்.
3. சின்னவன்
இவர் குசும்பு நமக்கு பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளாய் ஆளைக்காணும்.
4. நிலா
நிறைய நல்லா பண்ணறாங்க. இப்போ போட்டி எல்லாம் வேறே போட்டிருக்காங்க. அதான். ஹிஹி.
Friday, February 17, 2006
புதிரா? புனிதமா?
ரீபஸ் போடவேண்டாம் வேறு எதாவது எழுதுவோம் என்று நினைத்து எழுத உட்கார்ந்தேன். எல்லோரும் பக்தி சம்பந்தப்பட்டு எதாவது எழுதுகிறார்களே, நாமும் அதைப்போல செய்தாலென்ன என்று ஒரு நினைப்பு. அதெல்லாம் நமக்கு வருமா? அல்லது நமக்கு தெரிந்த புதிரையே போட்டுவிடலாமா என்று ஒரு தயக்கம். அதுதான் புதிரா? புனிதமா?
கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.
//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.
முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)
இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.
ஆவோ
கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.
//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.
முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)
இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//
1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்
அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.
ஆவோ
Tuesday, February 14, 2006
ஏனிந்த சோதனை?
என்னடா இவன் வந்து பத்து பதிவு கூட போடலை அதுக்குள்ள ஒரு பதிவுக்கு 350+ பின்னூட்டம், இன்னுமொரு பதிவு 150+ பின்னூட்டம் வாங்கி ஓடுது. என்னடா இதுன்னு யார் யார் வயிறு எரிஞ்சாங்களோ தெரியல. அல்லது பிளாக்கரிலேயே இந்த அளவு பின்னூட்டம் வந்தது இல்லை. அதனால நம்ம பதிவு ஒரு Stress Testஆ போயி, அதுல பிளாக்கர் பெயில்லாச்சான்னு தெரியலை. :)
ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.
நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.
இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.
ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.
ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.
ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)
அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.
உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
அ பிராமி அந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்
ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.
நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.
இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.
ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.
ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.
ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)
அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.
உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
அ பிராமி அந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்
Subscribe to:
Comments (Atom)
