Thursday, October 09, 2025

ஞானப்பழத்தின் நிறம்!

 

ஞானப்பழத்தின் நிறம் என்னங்கிற கேள்விக்கு ரெண்டு விஷயம் தெரியணும். ஒண்ணு ஞானப்பழம் அப்படின்னா என்ன? ரெண்டாவது நிறம் என்றால் என்ன?


அண்ணனும் தம்பியும் அடிச்சுக்கிட்டு, தம்பி ஆண்டியாப் போனதுக்குக் காரணமான பழம்தான் ஞானப்பழம்ன்னு நமக்கெல்லாம் தெரியும். அதுக்குப் பின்னாடி வருவோம். 


முதலில் நிறம்ன்னா என்ன? வானவில்லுக்கு ஏழு வண்ணம்ன்னு சொல்லறோம். சூரிய வெளிச்சம் கொஞ்சம் மஞ்சளா இருக்கும் ஆனா அதைப் பொதுவா வெள்ளைன்னு சொல்லிடுவோம். அதே சூரிய வெளிச்சம் மழை பெஞ்ச பின்னாடி காத்துல இருக்கிற நீர்த்துளிகள்ல பட்டு பல நிறங்களாத் தெரியறதுதானே வானவில். அதே மாதிரிதான் பிரமிட் மாதிரி கண்ணாடி வடிவம் ஒண்ணுல ஒளிக்கதிரைப் பாய்ச்சினோமானாலும் ஆகும். ஒரே ஒளிக்கதிரா இருக்கும் பொழுது ஒரே வேகத்தில் செல்லும் ஆனா அதை கண்ணாடி அல்லது நீர்துளிகள் வழியா செலுத்தும் போது ஒவ்வொரு நிறத்துக்கான ஒளிக்கதிரும் வேற வேற வேகத்தில் செல்வது தெரியும். அதனாலதான் அப்படி நிறங்கள் பிரிந்து தெரிகின்றன. ஆக ஒளி என்பது இந்த நிறங்களின் கூட்டுதான். மத்த எல்லா வண்ணங்களும் இந்த ஏழு நிறங்களோட கலவைதான். 


ஆசை மட்டுமல்ல, ஒளி செல்வதும் அலை போலத்தான்!

இப்படி நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு நிறத்துக்கும் உண்டான ஒளிக்கதிரும் வேற வேற அளவு கொண்ட அலைகள் மாதிரி போகும். அதைத்தான் அலைவெளின்னு (Wavelength) சொல்லறோம். ஒளி இந்த அலைவெளியில் போனா இந்த நிறம், அந்த அலைவெளியில் போனா வேற நிறம். அவ்வளவுதான் கணக்கு. இந்த கண்ணாடி ப்ரிசம் இல்லாம வேற ஒரு பொருள் மேல இந்த வெளிச்சம் பட்டா, அது சில அலைவெளிகளை தனக்குள்ள எடுத்துக்கும் மத்த அலைவெளிகளைப் பிரதிபலிச்சுடும். எந்த அலைவெளிகளைப் பிரதிபலிக்குதோ அந்தப் பொருளுக்கு அந்த அலைவெளிக்கான நிறம்தான்னு சொல்லிடலாம். உதாரணத்துக்கு ஆப்பிளை எடுத்துக்கிட்டா சிவப்பைத் தவிர மத்த எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கும். அதனால ஆப்பிள் நமக்குச் சிவப்பா தெரியுது. இலைகள் எல்லாம் இதே மாதிரி மத்த எல்லா அலைவெளிகளையும் உள்ள இழுத்துக்கிட்டுப் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலிக்குது. அதனால அதெல்லாம் நமக்குப் பச்சையாத் தெரியுது. எல்லா நிறங்களையும் பிரதிபலிச்சுட்டா அது வெள்ளை. எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டா அது கருப்பு. சரியா?


இப்போ ஆப்பிள் சிவப்பு நிறத்துக்கான அலைவெளிகளை மட்டும்தான் பிரதிபலிக்குதுன்னு நமக்கு எப்படித் தெரியுது? அதுக்கான நுட்பம் நம்ம கண்ணுக்குள்ள இருக்கு. நம்ம கண்ணுக்குள்ள குச்சி வடிவத்திலேயும், கூம்பு வடிவத்திலேயுமான வடிவமைப்புகள் (Rods and Cones) இருக்கு. குச்சி வகை இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டும். நிறத்தைப் பத்திப் பேசும் போது அது வேண்டாம். இந்த கூம்பு வடிவத்தில் இருக்கிறதுல மூணு வகை இருக்கு. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களைத் தெரிஞ்சுக்க இந்தக் கூம்புகள் பயன்படுது. இந்த மூணில் எந்த வகை, எவ்வளவு அழுத்தமா பயன்படுதோ அதை வெச்சு எல்லா நிறங்களையும் நம்மால பாக்க முடியுது. இதில் பிரச்சினை இருந்தாத்தான் நிறக்குறைபாடு (Color Blindness) வருது. 


நமக்கு மூணு வகைக் கூம்புன்னா, ஆடு மாடுகளுக்கு ரெண்டு வகைதான். இவங்களுக்குச் சிவப்பு நிறம் தெரியாது. அதனால மாட்டுக்கு சிவப்பு நிறத் துணி பிடிக்காதுன்னு சொல்லறது எல்லாம் கட்டுக்கதைதான். அதே மாதிரி நம்மளுக்கு ஆரஞ்சு நிறத்தில் தெரியும் புலி, மான் கண்ணுல பச்சையாகத் தெரியும், அதனால மானோட பார்வையில புலி காட்டுல இருக்கிற மரம் செடி கொடியோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிடுது. தண்ணீரில் இருக்கும் உயிரினங்கள் சிலதுக்கு ஒரு வகை கூம்புதான். அதுவும் கூட இல்லாத வௌவால் மாதியான உயிரினங்களும் உண்டு. இதுக்கு நேரெதிரா பறவைகளுக்கு நம்மை விட ஒரு வகை அதிகம் - நாலு வகைக் கூம்புகள் உண்டு. வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஆறு வகை. ஆனா இந்த விஷயத்தில் அடிச்சுக்கவே முடியாதது மேண்டிஸ் இறால் (Mantis Shrimp) என்ற இறால் வகைதான். இதுக்குப் பதினாறு வகைக் கூம்புகளாம். இவங்க பார்க்கிற உலகமே ரொம்ப வித்தியாசமா இருக்கும். 



மனிதன் பார்வையும் மான் பார்வையும்!



மயில் போல ஷ்ரிம்பு ஒண்ணு!


முதலில் சொன்ன மாதிரி நாம பார்க்கக் கூடிய நிறங்களின் அலைவெளி ஒரு குறிப்பிட்ட அளவுதான். இதைப் பார்க்கக்கூடிய அலைவிரியம்ன்னு (Visible Spectrum) சொல்லறாங்க. இதையும் தாண்டி புற ஊதா (Ultra Violet), அகச்சிவப்பு (Infra Red), மைக்ரோவேவ் (Microwave), காமா கதிர்கள் (Gamma Rays), ரேடியோ கதிர்கள் (Radio Waves), எக்ஸ்ரே (X-ray) கதிர்கள்ன்னு எவ்வளவோ இருக்கு. நம்மை விட அதிகக் கூம்புகள் கண்ணில் இருக்கும் உயிரினங்கள் சிலதால இந்த புற ஊதா, அகச்சிவப்புக் கதிர்களை எல்லாம் கூடப் பார்க்க முடியும். 


மின் காந்த நிறமாலையும் நாம் பார்க்கக்கூடிய அலைவிரியமும்


இதெல்லாம் போதாதுன்னு நம்ம மூளை வேற நடுவில் கோடிட்ட பகுதிகளை நிரப்பப் பார்க்கும். உதாரணத்துக்கு நாம ஒரு காட்சியைப் பார்த்தோமானால் அது நம்ம விழித்திரையில் விழுந்து அங்க இருந்து மூளைக்குப் போய், மூளை இதுதான் நாம பார்க்கறோமான்னு புரிஞ்சுக்கும். ஆனா விழித்திரையில பார்வை நரம்பு இருக்கிற இடம் இருட்டுச் சந்து. இந்த இடத்தில் ஒண்ணும் தெரியாது. நம்ம மூளை என்ன பண்ணும்ன்னா அதைச் சுத்தி இருக்கிற தகவல்களை வெச்சு இங்க என்ன இருக்குன்னு ஒரு முடிவு பண்ணி நாம பார்க்கிற காட்சியை முழுசா ஆக்கிடும். 


அப்படித்தான் வண்ணங்களிலும் விளையாடும். நாம பார்க்கக்கூடிய வண்ணங்களில் ஒரு எல்லையில் இருக்கும் ஊதாவும் மறு பக்கத்தில் இருக்கும் சிவப்பும் சேர்ந்து வந்தா, சம்பந்தமே இல்லாதா அலைவெளிகளா இருக்கேன்னு நினைச்சு எதோ கணக்குப் போட்டு ஒரு புதிய நிறத்தையே உண்டு பண்ணிடும். அதுதான் மஜந்தா. தமிழில் செந்நீலம்ன்னு சொல்லறாங்க. உண்மையில் இந்த நிறமே கிடையாது, இதை சாத்தியமில்லா (Impossible) நிறம் அப்படின்னு சொல்லறாங்க. 



செந்நீலம் என்னும் மாயை!

இவ்வளவு பார்த்தாச்சு. இப்போ சொல்லுங்க. நிறம்ன்னா என்ன? ஆப்பிள் என்ன நிறம்? நாம சிவப்புன்னு சொல்லுவோம். ஆனா ஆடு மாடுக்கு அது சிவப்பா தெரியுமா? வௌவாலுக்கு ஆப்பிள் என்ன சிவப்பாவா தெரியப்போவுது? இல்லை நிறக்குறைபாடு இருக்கிறவர் ஒருத்தர் பார்த்தாருன்னா அவருக்குச் சிவப்பா தெரியுமா? வாழ்க்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பார்த்தே இருக்காதவர் கிட்டப் போய் சிவப்பு நிறத்தை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? ஆக நிறம் என்பதே நாம பார்க்கும் பார்வையில்தானே இருக்கு, இல்லையா? 


சரி, ஞானத்துக்கு வரலாம். ஞானம்ன்னா என்ன? உண்மையை உணர்ந்துக்கிறதுதான் ஞானம். அவ்வளவுதானே. ஆனா எது உண்மை? ஆப்பிள் சிவப்பு என்பது உண்மைதான். ஆனா அது மேலோட்டமான உண்மை. அதையே ஆப்பிளுக்கான நிறம் அதைப் பார்ப்பவரைப் பொறுத்ததுன்னு சொல்லிட்டோம்ன்னா அது ஞானம். அந்த ஞானம் சிலருக்கு வாழைப்பழம் மாதிரி எளிதா உரிக்கும்படியாக் கிடைக்குது. சிலருக்கு பலாப்பழம் மாதிரி கொஞ்சம் பழம் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. அதனாலதான் அதை ஞானப்பழம்ன்னு சொல்லறோம். அப்படி நம்ம மனசுக்குள்ள இருக்கும் பார்க்கச் சாத்தியமில்லாத ஞானப்பழத்துக்கு சாத்தியமில்லாத நிறம்தானே பொருத்தம்? 


எனவே ஞானப்பழத்தின் நிறம் செந்நீலம்தான். 



பிகு: பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் எடுக்கப்பட்டவை.


Tuesday, October 07, 2025

உடைத்துப் பார்!

 

‘Butter Fingers’ என்ற ஆங்கிலப் பதத்திற்கு உருவம் கொடுத்தால் அது என்னைப் போலத்தான் இருக்கும். சாப்பிடும் பொழுதும் சரி, குடிக்கும் பொழுதும் சரி, சிந்தாமல் சிதறாமல் உண்ணவோ குடிக்கவோ தெரியாது. எல்லாச் சட்டைகளிலும் கறை இருக்கும். கறை நல்லது எனச் சலவைத் தூள் விளம்பரம் போல நானும் நகரப் பார்ப்பேன் ஆனால் குடும்பத்தார் விட மாட்டார்கள்.
சமைக்கும் பொழுது எதையாவது கொட்டிவிடுவேன், அம்மணி கண்ணில் படுவதற்கு முன் துடைக்கலாம் எனத் துடைத்து வைத்தாலும் அவர் பார்வையில் ஒன்று துடைக்காமல் விட்ட இடம் படும் அல்லது அந்த ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சுத்தமாக இருப்பதைப் பார்த்து, “இன்னிக்கு என்னத்த கொட்டின?” என்று ‘அன்பாக’ விசாரிப்பார்கள்.
இப்படி எல்லாவற்றையுமே கொட்டுவதையும் உடைப்பதையும் ஒரு கலைவடிவமாகச் செய்யும் என் கையில் இருக்கும் தொலைபேசி நிலையை நினைத்துப் பாருங்கள். போ(ன்)ன ஜென்மத்தில் ரொம்பவே பாவம் பண்ணிய தொலைபேசிகள்தான் என்னிடம் வரும் என்று நினைக்கிறேன். சட்டைப்பையில் வைத்தால் கீழே விழும், பேண்ட் பாக்கெட்டில் இருந்து கீழே விழும், பேசிக் கொண்டே இருக்கும் பொழுது கை நழுவிக் கீழே விழும். அவ்வளவு ஏன் மேஜையில் வைத்திருக்கும் பொழுது கூட என் பார்வை பட்டால் கீழே விழுந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
எனக்குச் சவால்விடும் வகையில் ஆப்பிள்காரனும் கொரில்லாக் கண்ணாடி, பீங்கான் கவசம் என விதவிதமான வலிமையும் பாதுகாப்பும் கொண்ட திரைகளைக் கொண்டு வந்தாலும், என் சக்திக்கு முன்னால் அவர்கள் முயற்சிகள் எல்லாம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும். என் தொலைபேசித் திரைகளைப் போலவே. அவர்களுக்குத் துணையாக ஆட்டர்பாக்ஸ், பெலிக்கன் என்றெல்லாம் பெயர்கொண்ட தொலைபேசி உறைகள் சந்தையில் வரத் தொடங்கின. முதலில் வாங்கிய உறைகள் எல்லாம் அவ்வளவு வலிமை இல்லாதவை. இரண்டு மூன்று முறை கீழே விழுந்தாலே விரிசல் விடத் தொடங்கிவிடும். அதன்பின் திரையில் சிலந்திவலை போல் அழகான வடிவங்கள் தோன்ற அதிக நாட்களாகாது.
அவர்களும் சளைக்காமல் இது குண்டு துளைக்காத பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டது, இது ராணுவத் தரத்திற்கு செய்யப்பட்டது, இது பத்தடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கூட தொலைபேசியைப் பாதுகாக்கும் என்றெல்லாம் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வந்தார்கள். நானும் சளைக்காமல் அவற்றை வாங்கி தொலைபேசிக்கு அணிவிப்பேன். புவியீர்ப்பும் சளைக்காமல் அதன் வேலையைச் செய்யும். புதுத் தொலைபேசி, புதிய உறை என்று காலச்சக்கரம் சளைக்காமல் சுழன்று கொண்டே இருக்கும்.
கடந்த முறை வாங்கிய உறை ரொம்பவே விசேஷமானது. தொலைபேசி விலையை நெருங்கும் அளவு விலை. இருபத்தி ஐந்து அடியில் இருந்து விழுந்தால் கூட உடையாது, இரும்பை விட உறுதியான ஆரமிட் இழைகளால் நெய்யப்பட்டது, இரண்டு படிம வடிவமைப்பு என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்ட உறை. ஆஹா, நம்முடைய நல்லூழ்தான் இப்படியோர் உறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என மகிழ்ந்து உறையை வாங்கி தொலைபேசிக்கு மாட்டியாகிவிட்டது.
அவர்கள் கூறியது எல்லாம் உண்மைதான் என்று நிரூபிக்கவும் தருணம் வாய்த்தது. வழக்கம் போல தொலைபேசியைக் கீழே போட்டேன். என்ன ஆச்சரியம், தொலைபேசித் திரை உடையவில்லை. அது மட்டுமில்லை, இந்த உறையில் ஒரு சிறிய சிராய்ப்பு கூட இல்லை. சபாஷ், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையத்தில் உண்டு என நிரூபித்து விட்டார்களடா என மனம் மகிழ்ந்தேன். கீழே விழுந்ததே என்று தொலைபேசியைத் துடைக்க உறையைக் கழட்டினேன். இந்தப் புதிய வகைத் தொலைபேசியில் முன்பக்கம் மட்டுமல்ல பின்பக்கமும் கண்ணாடியால் செய்யப்பட்டது. உறைக்கு ஒன்றுமாகவில்லை என்றாலும் உள்ளிருந்த தொலைபேசியின் பின்பக்கக் கண்ணாடி மட்டும் எப்படியோ உடைந்து சுக்குநூறாகி இருந்தது. எப்படித்தான் இப்படி உடைக்கிறாயோ என்று அம்மணியின் ஆசிர்வாதமும் கிடைத்தது.


தொலைபேசியும் உறையும் வாங்கியே சேமிக்கும் அனைத்தையும் செலவு செய்துவிடுவாய் என்று அவர் சொல்லும் பொழுதுதான் ஒரு முடிவு செய்தேன். என்னை மாதிரி எத்தனை பேர் உலகத்தில் இருப்பார்கள். அதனால் இனி தொலைபேசி வாங்குகிறோமோ இல்லையோ ஆப்பிள் கம்பெனி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதே அந்த முடிவு!
பிகு: நீங்கள் எதையாவது போட்டு உடைத்த அனுபவத்தை இங்கு போட்டு உடையுங்கள் என்ற தலைப்புக்காக எழுதியது.
பிபிகு: மீனாட்சி அம்மாளின் சமைத்துப் பார் என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்ததால், இந்தக் கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்பு.

Monday, October 06, 2025

Paperback Version!

 

There is something magical about holding a book in your hands. Running your fingers over the cover, flipping through the pages, pausing at a random line, even breathing in that new book smell— it never gets old. And when the book happens to be one that you have written, the feeling is on a whole different level.
My book on Peru, Perambulating in Peru, has lived as an ebook for more than a year now. For the longest time, I never thought of turning it into a paperback. But these past few weeks I found myself returning to it—polishing the text, working on a layout that would feel good in print, and even adding QR codes that connect to the online albums. And the images in those albums are in addition to the 100+ photos featured in the book itself.
KDP provided detailed specifications and was quite particular about formatting. The cover design took the most effort, and I owe a big thank you to my brother, Hariharan Sankaran, who patiently sent me draft after draft until I was happy and KDP gave its approval.





After a couple of proof rounds, the final version finally made it through. And today, I opened a box to see the first set of printed copies. It felt wonderful to hold them, to see the book come alive on paper.

Along the way, I have picked up so many lessons that are already helping me with the Spanish and Portuguese editions. What makes it even more special is that the Spanish version has been translated by someone from Lima, Peru, and the Portuguese edition is being edited there as well. Their kind feedback feels like a true validation of what I have written. I will share more as those versions get closer to release.
For now, I should mention that Amazon’s print-on-demand is not yet available in India, but the paperback can be ordered in the US, UK, and several other countries. For those who were waiting for it in print, I have added the link in the comments.
The ebook and audiobook formats are available in India and other countries.

Saturday, September 27, 2025

பண்ணேன் உனக்கான பூசை!

ஒரு மூதாட்டி கடவுளைத் தொழும் இந்தப் படத்தினை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.



இந்தப் படத்தைப் பார்த்த உடனே பாவெழுதத் தோன்றியது. எழுதினேன். 

வேதங்கள் போற்றிடும் வேள்வியின் நாயகியுன்
பாதங்கள் பற்றிடயிப் பாவிக்குப் பேறில்லை
நீயே கதியென நிற்கிறேன் கைதூக்கித்
தாயே அருளெனக்குத் தா!


இந்த வெண்பாவினைப் படித்த உறவினர் ஒருவர் ஏண்டா இப்படி எல்லாம் பாட்டு எழுதற ஆனா கோயிலுக்குப் போய் சாமி கும்பிட மட்டும் உனக்கு ஏன் வர மாட்டேங்குதுன்னு கேட்டுட்டார். 


இந்தக் கேள்விக்கு நான் யோசித்து எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? அதான் தாயுமானவர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டாரே. அந்தப் பாடலை எடுத்து பதம் பிரித்து அனுப்பினேன். 


பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே

பாவித்து இறைஞ்ச ஆங்கே 

பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி அப்

பனிமலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அலாமல் இருகைதான் குவிக்க எனின்

நாணும் என் உளம் நிற்றி நீ

நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால் 

நான் பூசை செய்யல் முறையோ? 

விண்ணே! விண் ஆதியாம் பூதமே! நாதமே! 

வேதமே! வேதாந்தமே! 

மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் 

வித்தே! அவ்வித்தின் முளையே! 

கண்ணே! கருத்தே! என் எண்ணே! எழுத்தே! 

கதிக்கான மோன வடிவே! 

கருதரிய சித் சபையில் ஆனந்த நர்த்தமிடும்

கருணாகரக் கடவுளே! 


எளிமையான பாடலாக இருந்தாலும் பாடலை அனுப்பினால் விளக்கமும் சொல்ல வேண்டுமல்லவா. 


தாயுமானவர் சொல்கிறார், “நான் ஒரு வடிவமாக உன்னைக் கொண்டு அந்த வடிவத்திற்குப் பூஜை செய்யலாம் என நினைத்து அதிகாலை வேளையிலே பனி சொட்டிக் கொண்டு இருக்கும் மலரைப் பறிக்கச் சென்றேன். அப்படி அழகாகப் பூத்திருக்கும் மலர்களைப் பார்க்கும் பொழுது அப்பூக்களிலும் நீதானே இருக்கிறாய் என நினைத்தேன். அப்படி நீ இருக்கும் பூக்களை எப்படிப் பறிக்க நினைத்தேன் என எண்ணி வெட்கப்பட்டேன். அந்த மலர்களைப் பறிக்காமலேயே வந்துவிட்டேன். மலர்கள் இல்லாமல் எப்படிப் பூஜை செய்ய? உனக்குப் பூஜையே பண்ண மாட்டேன். 


சரி, பூஜை செய்யவில்லை. குறைந்தபட்சம் என்னோட இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடலாம்ன்னு பார்த்தேன். அப்படிக் கும்பிடும் பொழுது நீயும் நானும் வேறு வேறு என்பதாகி, வெளியில் இருக்கும் உன்னை நான் கும்பிடுவது போல ஒரு தோற்றம் வருகிறதே. அப்படிச் செய்யும் பொழுது என்னுள் இருக்கும் உன்னை நான் கும்பிடவில்லையே. அப்படி என்றால் என்னுடைய கும்பிடுதல் பாதி ஆகி விடுகிறதோ? அரைக்கும்பிடுதான் போடுகிறேனோ என்ற கேள்வி வருகிறதே. இப்படி எல்லாம் பூஜை செய்வதுதான் சரியான வழியோ என்று குழம்பி நிற்கிறேன்”. 


ஒரு விதத்தில் பார்த்தால் உருவ வழிபாடு, அதன் பின் அருவ வழிபாடு என வழிபாட்டு நிலைகளைச் சொல்லும் விதமாகவே இப்பாடல் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்னும் மெய்ஞானத்தைத் தேடிச் சென்றால் நற்கதி கிட்டும் என்பதைத் தாயுமானவர் கடவுளை எப்படி எல்லாம், எங்கெல்லாம் பார்க்கிறேன் எனப் பட்டியல் இடுகிறார். 


ஆகாயம் முழுவது வியாபித்து இருப்பவனே, அந்த ஆகாயம் முதலான ஐம்பூதங்களாக இருப்பவனே, அந்த ஐம்பூதங்களோடு இருக்கும் ஒலியும்  ஒளியுமாக இருப்பவனே, வேதம் எனப்படும் உண்மையாக இருப்பவனே, அந்த வேதங்களின் சாரமாக இருப்பவனே, மேலானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய கேள்வியாக இருப்பவனே, அந்தக் கேள்விகளே நிலமாகி அந்நிலத்தில் விதைக்கப்படும் விதையாக இருப்பவனே, கேள்வி என்னும் விதை முளைத்து வரும் விடையாக இருப்பவனே, அந்த விடையாக வரும் எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பவனே, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என சொல்வதால் அந்த எண்ணும் எழுத்தும் தரும் கல்வியாக இருப்பவனே, அந்தக் கல்வி தரும் பொருளாக இருப்பவனே, அதை எல்லாம் தாண்டி நற்கதி வேண்டுமானால் சும்மா இருக்கச் சொல்லும் மோன வடிவாக இருப்பவனே, நினைப்பதற்கு அரிதாக இருக்கும் சித்சபையில் ஆனந்த நடனமாடும் கருணாகரக் கடவுளே என்று கடவுளை அடைய இருக்கும் பல நிலைகளையும் சொல்கிறார்.


அருணகிரி நாதரும் நாத பிந்து கலாதி நமோ நம என அண்டத்தின் ஒலியும் ஒளியுமாக முருகப் பெருமானைச் சொல்லியதையும் அவருக்கு சும்மா இரு சொல்லற என பேச்சினை விடுத்து மனத்தில் இருக்கும் மெய்ஞானத்தை உணரச் சொல்லும் அறிவுரை கிடைத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். 


நான் தாயுமானவர் சொல்லும் நிலைகளை அடைந்துவிட்டதால் கோயில் செல்வதில்லை எனச் சொல்ல வரவில்லை, அப்படிச் சென்று பூஜை செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது என்பதைத்தான் சொல்ல நினைத்தேன். மேலான பொருளை மட்டுமே சொல்லி இருக்கிறேன். இப்பாடலில் இருக்கும் படிமங்களை எனக்குத் தெரிந்த வரைச் சொல்லத் தொடங்கினால் பதிவு நீண்டுவிடும் என்பதால் நேரடியான பொருளோடு நிறுத்திக் கொள்கிறேன். 


இந்தப் பாட்டு, கருணாகரப் பதிகம் என்ற பத்து பாட்டுகள் கொண்ட தொகுப்பில் உள்ளது. எல்லா பாட்டுமே கருதரிய சித்சபையில் ஆனந்த நர்த்தமிடும் கருணாகரக் கடவுளே என முடியும் படி எழுதி இருக்கிறார் தாயுமானவர். இப்பதிகம் பாடப் பெற்றதே ஒரு சுவாரசியமான சம்பவம். தாயுமானவர் திருச்சியில் விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் பணிபுரிந்து வந்தார். அந்த அரசரின் மறைவுக்குப் பின் ஆட்சி அவரது துணைவி அரசமாதேவி மீனாட்சியின் கைகளுக்கு வந்தது. அவர் தாயுமானவரின் அழகில் மயங்கி அவரைத் தகாத உறவுக்கு அழைத்தார். அதனை மறுத்த தாயுமானவர் திருச்சியை விட்டு வெளியேறி தென் திசை சென்றார். நல்லூர் என்ற இடத்தை அடைந்த பொழுது இப்பதிகத்தைப் பாடினார். 


நேரடியாகப் பார்த்தால் சிவபெருமானைக் குறித்துப் பாடியதாகத் தோன்றினாலும், சிவனும் நீயே, விஷ்ணுவும் நீயே, பிரம்மனும் நீயே, தட்சிணாமூர்த்தியும் நீயே என்று எல்லாம் பாடும் பொழுது அவர் மோனநிலை அடைந்து பொதுவான கருணை மிகுந்த கடவுளைப் பற்றிப் பாடியதாகவே கொள்ளலாம். 


இப்பாடல் கர்நாடக இசையில் விருத்தம் என்ற பாணியில் கச்சேரிகளில் பலரும் பாடி வரும் ஒன்று. 


கானகலாதர  மதுரை மணி ஐயர் குரலில் இந்தப் பாடலைக் கேட்க - 

https://youtu.be/1idznq1ADxc?si=fZ1bDzYKwBbBVmDc 


இளம் பாடகர் நண்பர் பரத் சுந்தர் பாடியது - 

https://youtu.be/m054dq9gQoU?si=-L6EOivKBw8XLAoT&t=1114 


என் ஆதர்ச பாடகர் டிஎம் கிருஷ்ணா பாடியது - https://youtu.be/j6gRDrvZGWk?si=RjRPram1pRGS9LQw 


Friday, April 04, 2025

Beyond the Comfort Zone: Embracing Lifelong Learning

A casual conversation with my manager recently made me pause and reflect. I realized I hadn’t been investing in myself when it came to formal learning. Sure, I’d been picking up skills here and there as part of my regular work, but I hadn’t taken the time to truly dive into something new or structured. That realization hit me hard, and I knew I needed to change that.

I had two options: I could either deepen my knowledge in an area I was already familiar with or venture into something entirely new. The latter option seemed more appealing, as it offered the chance to discover new interests and expand my professional capabilities.

Over the course of my three-decade-long career in banking and banking technology, I have had the opportunity to work in many areas. However, I had the least exposure to Trade Finance. Rather than focusing on traditional Trade Finance, I decided to learn about Supply Chain Finance, as it is rapidly evolving and transforming how businesses manage cash flows and optimize supply chains.

To ease myself into this new learning journey, I first attempted a few shorter courses. I began with a course on the future of payment technology, which was relevant to my current work. Then, I ventured into unfamiliar territory by completing a couple of introductory courses on AI and Generative AI. Encouraged by these experiences, I enrolled in an in-depth course on Supply Chain Finance offered by the New York Institute of Finance.

I chose this course because it covered key topics such as the introduction to Supply Chain Finance, key success factors, the ecosystem, and the impact of blockchain technology on the industry. Each topic was divided into multiple modules, delivered through a combination of lecture videos, reading materials, assignments, and both graded and ungraded tests.

The course was originally designed for in-person training and wasn't fully optimized for remote learning. Additionally, it hadn't been updated since its first online version. However, since I was new to the topic, these constraints didn't deter me. The content kept me engaged throughout, and I found myself motivated to learn about Supply Chain Finance.

I also challenged myself to complete the course in a third of the recommended time, despite some long days at work. This required discipline and time management, but it was rewarding to see my progress. Today, I am proud to say that I have successfully completed all four topics, and Coursera has certified that I have attained an intermediate level of proficiency in Supply Chain Finance.

Looking forward, I am excited to apply my newly acquired skills in real-world scenarios. I believe that understanding Supply Chain Finance will not only enhance my professional capabilities but also allow me to contribute more effectively to my organization.

If there’s one thing this journey has taught me, it’s that stepping out of your comfort zone can lead to incredible growth—professionally and personally.

 







 

Wednesday, March 12, 2025

The Blood Worm Moon: A Celestial Spectacle!

As I look up at the night sky, I often find myself in awe of the celestial events that remind us of the vastness and beauty of our universe. Tomorrow night, we have the chance to witness something truly special: the Blood Worm Moon. 

I still remember learning about lunar eclipses in middle school science class. It’s amazing how simple yet fascinating the process is. During a lunar eclipse, the Earth, Sun, and Moon align in a straight line, with our planet positioned between the Sun and the Moon. This alignment blocks the Sun’s light from reaching the Moon, casting it in shadow. 

Lunar Eclipse 

But what makes a lunar eclipse truly breathtaking is the Earth’s atmosphere. As sunlight passes through it, shorter wavelengths of light scatter, while longer wavelengths—like red—make it through, giving the Moon its characteristic reddish hue. This is why we often refer to it as a “Blood Moon.” 

Blood Moon

The term “Worm Moon” comes from the Farmers’ Almanac, which has been around since 1818. It marks the time when earthworms start to emerge from the ground as spring begins. Some Native American cultures also associate this moon with the emergence of beetle larvae from tree bark. The combination of these names creates the intriguing “Blood Worm Moon.” 

NASA's image below shows the regions where the eclipse will be visible.

Map of where the lunar eclipse is visible

For those of us in Austin, Texas, we’re lucky to have clear skies and mild temperatures, making it perfect for viewing this incredible event. The total eclipse will begin at 1:26 AM on March 14th and end at 2:31 AM. If you’re an early riser or just willing to stay up late, this is definitely worth it. 


Timeanddate.com - Check for your local times

www.cleardarksky.com - Check how your night sky is going to be

This event isn’t just about science; it’s also a celebration of nature’s rhythms and the changing seasons. As we watch the Blood Worm Moon, we’re reminded of the beauty and wonder that surrounds us. Whether you’re an astronomy enthusiast or just someone who appreciates the night sky, don’t miss this special moment! And even better, unlike a solar eclipse, a lunar eclipse is safe to watch with your naked eyes and does not need any special equipment. 

Happy viewing! 

PS: All images except those specifically mentioned are courtesy of NASA. 

Monday, February 03, 2025

கிருஷ்ணாவும் காலச்சுவடும் பின்னே ஞானும்!

நண்பர் டி.எம்,கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி பட்டம் அளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தது எனக்குப் பெருமகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்நிகழ்வுக்குச் சில நாட்கள் முன்பு அவர் சென்னை மியூசிக் அகாடமியில் செய்த கச்சேரி பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  (பதிவின் சுட்டிhttps://elavasam.blogspot.com/2024/12/freedom-to-sing-about-everything.html) 

காலச்சுவடு பதிப்பகம், அவர்களின் பிப்ரவரி 2025 இதழின் தலையங்கமாக இந்தக் கச்சேரி பற்றி எழுதி இருக்கின்றார்கள். அந்தத் தலையங்கத்தில் எனது பதிவையும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆங்கிலத்தில் நான் எழுதியிருந்த பதிவில் இருந்து சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்து அவர்களின் தலையங்கத்தில் சேர்த்து கொண்டது என் உணர்வுகளுக்கு அங்கீகாரம் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். 

 

தமிழ் எழுத்துலகில் பொதுவாக எங்கிருந்து தகவல்களோ அல்லது கருத்துகளோ எடுத்துக் கொள்ளப்பட்டது என்று பட்டியலிடப்படுவது அரிதே. அந்தப் பொதுவழக்கில் இருந்து மாறாக என் பதிவுக்குச் சுட்டி தந்திருக்கும் கால்சுவடு இதழுக்கு என் நன்றி. 

 

தகவலைச் சொல்லி படங்களை அனுப்பிய நண்பர் சரவணன் அவர்களுக்கும் என் நன்றி. 






Wednesday, January 08, 2025

காருகுறிச்சியைத் தேடி

நண்பன் லலிதாராம் எழுதிய ‘காருகுறிச்சியைத் தேடி' என்ற புத்தகத்தைப் படித்தேன். நடந்துகொண்டிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியான புத்தகம் இது, ஏற்கனவே இது குறித்தப் பதிவொன்றினையும், சிறுகதைகள் இரண்டினையும் படித்திருந்ததால் இந்தப் புத்தகத்தைப் படிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். அதிலும் எங்கள் திருநெல்வேலிச் சீமையில் நடந்த கதை என்பதாலும், குறிப்பாக என் ஊரான கல்லிடைக்குறிச்சிக்கும் இந்தப் புத்தகத்தில் ஓர் இடம் இருப்பதாலும் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈர்ப்பும் இருந்தது.

இது காருகுறிச்சி அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாறா? சுவையான சில சம்பவங்களின் கோப்பா? புனைவா? இந்தக் கேள்விகளுக்கு விடை இல்லை. இப்படித்தான் என ஒரு வகைக்குள் அடைக்க முடியாத ஒரு புத்தகம் இது. வாழ்க்கைக் குறிப்புகளும் உண்டு, அனுபவப் பகிரல்களும் உண்டு, புனைவுக் கதைகளும் உண்டு, இசை நுட்பங்கள் குறித்த ஆழ்ந்த விளக்கங்களும் உண்டு.  இவ்வளவு ஏன் ராம் கவிதை கூட எழுதி இருக்கிறான்! (ஒருமையில் எழுதுவதற்கு மன்னிக்க. மரியாதை கொடுத்து எழுதினால் எனக்கே செயற்கையாகப் படுகிறது.)

இந்த வகைமைப்படுத்துதல் பற்றிய பிரச்னை எனக்கு மட்டுமில்லை. ராமிற்கும் கூட இருந்திருக்கிறது. “ஒரு கலைஞன் பிறந்து வளர்ந்தது; மிகவும் சிரமப்பட்டு குருமுகமாக கலையில் தேர்ச்சி பெற்றது; கலையை அரங்கேற்ற மேடைகள் தேடிப் போராடியது; கிடைத்த மேடைகளில் நன்றாக வாசித்துத் துறையில் முன்னேறியது; தொடர்ந்து பல ஆண்டுகள் வாசித்துப் பல அங்கீகாரங்களைப் பெற்றது; என்ற சித்திரத்தை அனேகமாக எல்லாக் கலைஞருக்கும் பொருத்த முடியும்.” என்று எழுதிய ராம், இந்த மாகலைஞனை பற்றிய சித்திரத்தை நமக்குத் தர இந்த வாடிக்கையான வடிவத்தை விடுத்து ஒரு வித்தியாசமான கோணத்தில் தந்திருக்கும் புத்தகம்தான் ‘காருகுறிச்சியைத் தேடி’.

எடுத்துக் கொண்ட சவாலை முழுமையாக முடிந்ததா என்ற கேள்விக்கு ஒவ்வொருவரின் பதிலும் அவரவரின் அனுபவத்தின் வெளிப்படுத்துதலாகவே இருக்கும். எனக்குப் பிடித்தது. ஒரு நெடும்பயணத்தில் ஒரே முச்சில் படித்து முடித்தேன். முடித்த பின்பு எனக்கு உண்டான உணர்ச்சிகளைப் பதிவு செய்ய, அப்பயணத்திலேயே இந்தப் பதிவையும் எழுதுகிறேன்.

எனக்குப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியவை, எனக்குப் பிடித்தவை பற்றிதான் இந்தப் பதிவு இருக்கும். விமர்சனங்களே இல்லையா என்றால் உண்டு. ஆனால் அவை என் புரிதல்கள் மூலம் எழுந்தவை என்பதால் அதை தனியாக ராமிடம் சொல்வதே சரி என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு திருநெல்வேலி ஆளுமையைப் பற்றி எழுதும் புத்தகத்திலேயே “திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் ஊர்ப் பெருமைகளைச் சொல்லும்போது கேசரியில ஒரு பிடி ரவைக்கு ஒரு படி சக்கரை” என்று கிண்டலடித்திருப்பதை மட்டும் வன்முறையாகக் கண்டிக்க வேண்டியது திருநெல்வேலிக்காரனான என் கடமை!

சில நூறு வருட வரலாறே இருக்கும் நாடுகள் கூட அவ்வரலாற்றை முறையாகப் பராமரித்து, அவர்களின் அருங்காட்சிச்சாலைகளில் ஒழுங்குபடுத்தி, அது குறித்து ஆய்வுகள், விளக்கங்கள், காட்சிப்படங்கள் என்றெல்லாம் பிரமாதப்படுத்தும் பொழுது பல ஆயிர வருட வரலாற்றுச் சான்றுகள் நம்மிடையே இருப்பதாலோ என்னவோ வரலாற்றைப் பேணுவது என்பது நமக்குக் கைவராத ஒன்றாகவே இருக்கிறது. ஒன்று, எந்த விதமான தகவல்களுமின்றி ஒரு ஆளுமையை முழுவதாகத் தொலைத்துவிடுவோம். அல்லது அவர் பற்றிய  மிகைக்கதைகளைப் புகுத்தி அவரைத் தெய்வப்பிறவியாக மாற்றிவிடுவோம். ஒருவரின் உண்மையான தோற்றத்தைக் கொண்டு வருவது என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது.

ஹரிகேசநல்லூரில் முத்தைய்யா பாகவதரின் பஜனை மடத்தின் நிலை பற்றியும், காருகுறிச்சியார் கட்டிய ராஜரத்ன விலாஸ் என்ற வீட்டின் பெயர் தாங்கிய வளைவின் நிலை பற்றியும் ராம் எழுதும் பொழுது மனது வலிக்கத்தான் செய்கிறது. அவ்வளவு ஏன், நம் நாடு சுதந்திரம் பெற்ற அன்று அவர் வாசித்த கச்சேரி குறித்து கூட முறையான தகவல்கள் இல்லை. அதனால்தான் என்னவோ வாழ்க்கை வரலாறு என்ற வடிவத்தை விட்டு புனைக்கதைகளாக சில சம்பவங்களைச் சொல்ல வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டுவிட்டான்.

காருகுறிச்சியார் குறித்து எழுதும் பொழுது ராம் தொடர்ந்து சந்திக்கும் சவால் இதுதான். அவருடன் இணைந்து பயணித்தவர்கள் குறித்த விபரங்களே இல்லாமல் இருப்பது அல்லது இது உண்மையில் நிகழ்ந்த சம்பவமா அல்லது இட்டுக்கட்டப்பட்ட கதையா என இனம்காண முடியாத தவிப்பு என்பது தொடர்ந்து அவன் சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது. இத்தனைக்கும் காருகுறிச்சியாரின் காலம் ஒன்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஒன்றில்லை. இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் வாழ்ந்த ஒருவருக்கே இதுதான் நிலை என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்தான்.

கிடைக்கும் தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி, அவற்றை எளிதாகப் படிக்கக்கூடிய விதத்தில் பகிர்ந்து இருக்கும் ராமின் பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

“கையிலேயே இருக்கும் விஷயமென்றாலும் நம் கண்ணுக்குப் புலப்படுவதற்கென்று ஒரு தருணம் விடிந்தால்தான் உண்டு” என்று ராம் எழுதிருப்பதையும் தாண்டி சமயங்களில் அதைக் காட்ட நல்ல வழிகாட்டி அமைவது என்பதும் அவசியம். இந்தப் புத்தகத்திலேயே வித்வான் டி.ஆர்.எஸ் அவர்கள் வழிகாட்டியதைப் பற்றி ராம் எழுதி இருப்பது இதற்குச் சான்று.

தன் பலகால உழைப்பைச் சாறாகப் பிழிந்து தரும் வழிகாட்டி அமைந்துவிட்டால் கடினமானவற்றைக் கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மற்றொரு உதாரணமாக மதுரை மணி ஐயரின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பிக்க ராம் தொகுத்து அளித்து இருக்கும் அனுபவப் பகிர்வுக் காணொளிகளையும் சொல்ல முடியும். ஒரு சிறு குழைவை, ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் சங்கதியில் இருக்கும் நெளிவு சுளிவை, ஒரு சிறு மௌனத்தைக் கூட எப்படி ரசிக்கலாம் எனச் சொல்லித் தரும் பொழுது கேட்கும் நமக்கு அது பாடமாகத்தான் இருக்கிறது.

அப்படி காருகுறிச்சி அருணாச்சலம் பற்றிய தன் கடினமான உழைப்பின் மூலம் பெற்ற செய்திகளை, கதைகளை, தன் புரிதல்களை இந்தப் புத்தகத்தின் மூலம் ‘ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளற்பெரும்பசுக்கள்’ போல நமக்கு ராம் அளித்திருக்கிறான். நம்மால் முடிந்த அளவை எடுத்துக் கொள்வது நம் சாமர்த்தியம்.

Job well done, Ram! Keep going!


Friday, December 27, 2024

எதையும் பாட சுதந்திரம் வேண்டும் (Freedom to sing about everything)!

Fair warning: This is a fanboy post. Read at your own risk.

December 25, 2024, dawned as a truly special day. My favorite singer and dear friend, TM Krishna, was set to perform during the music season after a long hiatus. Not only was he performing at the Music Academy, but he was also doing so as the Sangita Kalanidhi designate. I couldn’t miss being part of such a momentous occasion, so I planned a trip to Chennai. It also gave me the chance to experience ‘The Season’ in Chennai after nearly two decades. However, due to various reasons, I could only reach Chennai early on Christmas morning after nearly thirty hours of travel. It was a rush from the airport to home for a quick shower, and then straight to the Academy for breakfast before the concert.

 

The scene at the Academy before the concert was proof that I wasn’t the only one who considered this a special event. People of all ages had been lining up for hours to secure their seats. Many artists from the current generation were also present, a testament to the respect TMK commands among his peers.

 

The large auditorium quickly filled to capacity, and extra chairs were brought in to accommodate as many people as possible. I was later told that a large crowd remained outside even after the doors had closed. The Academy had arranged for a live telecast of the concert outside the auditorium, and even that space quickly filled up, with people eventually being turned away. There was an unmistakable buzz of anticipation in the air.


 

When the curtain was raised, the audience gave the Sangita Kalanidhi designate a standing ovation. Over a hundred people, mostly young artists, were on stage, a testament to TMK’s widespread popularity among the younger generation. Krishna, clearly moved by the occasion and the overwhelming support, reflected on his first concert at the Music Academy in 1988, where he was accompanied by RK Shriramkumar and K Arun Prakash. They have accompanied him many times since and have been pillars of support.




In his signature style, Krishna began the concert with Mukhari, a ragam not often chosen for an opening. His twenty-minute rendition of Thyagaraja’s ‘Karu Baru’ set the tone for the morning. This was followed by a lively ‘Lavanya Rama’ in Poornashadjam. He then embarked on a sequence of ragams, concluding with Khamas. A slow, sensuous presentation of the Khamas javali ‘Janaro I Mohamu’ had the audience rapt. A brisk ‘Padavini Sadhbhaktiyu’ in Salagabhairavi served as an interlude before a gripping rendition of ‘Jambupathe’ in Yamuna Kalyani. The mood in the auditorium was deeply meditative by the end of that song. Krishna himself seemed to have been overcome with emotion many times during the concert that he paused, relished a phrase that was sung or was to be sung. 

 

Krishna then started with Thodi, only to switch to Kalyani, where he sang the Swati Thirunal Kriti, Pankaja Lochana. This was a clear tribute to his guru, Sri. Semmangudi Srinivasa Iyer, as he mentioned that ‘Avar’ (Semmangudi) had sung this very song at the Academy in 1988. TMK then presented a viruttam followed by a song penned by Perumal Murugan. The song’s lyrics, “Suthanthiram vendum ethaiyum pesa, ethaiyum ezhudha, ethiayum paada, ethaiyum padikka, ethaiyum ketka suthanthiram vendum” (There should be freedom to speak, write, sing, read, and hear anything), resonated deeply with the audience, who recognized its relevance to the circumstances TMK has faced.


 

The pensive mood of the morning continued with an emotional rendering of the Maanji song ‘Varugalamo’. A verse from Narayana Guru rhetorically questioned what God’s true form was amid the various forms worshipped by people. The final song of the concert was another fitting choice—Dhavo Vibho in Yamuna Kalyani, a piece often sung by M.S. Subbalakshmi. This too seemed to be a tacit mark of respect for a legend TMK holds in high regard.

 

R.K. Shriramkumar was brilliant in his violin accompaniment, following Krishna closely, taking charge when needed, and inspiring TMK, enhancing the concert in the way we have come to expect from him. Arun Prakash, who had earlier conducted a lecture demonstration on percussion as an accompaniment, demonstrated in this concert the principles he had explained. If his lecdem was a theory class, this was the practical application. His playing, especially on ‘Janaro, Jambupathe, and Varugalamo’, was exemplary. Guruprasad on the ghatam complemented Arun perfectly, and the two formed a brilliant percussion team, adding to the synergy on stage. The camaraderie between the artists was evident—they inspired each other and enjoyed each other’s mastery.

 

The standing ovation at the end of the concert lasted for several minutes, a clear sign of the audience’s deep appreciation. Outside the auditorium, the excitement continued, with fans giving TMK a hero’s welcome. Many tears were shed, underscoring the emotional rollercoaster his well-wishers have experienced with him.




 

Personally, the long journey home was more than worth it for those few hours of enchanting music. Though I am not a believer, I still pray that these artists are blessed with long, healthy lives so they can continue to create such magical music.

 

I now look forward to the Sadhas on January 1, 2025, when TMK will be officially anointed as Sangita Kalanidhi.