Tuesday, May 25, 2021

Another fork in the road....

I started my electric car journey nine years ago when I was chosen as one of the few who had the opportunity to lease an Active-e. We were the Electronauts. From then on, I fell in love with electric cars. 

The i3 came along and I was one of the earliest to get one on the east coast. I think it was early 2014. The owners choice program was a good idea as it gave us the tax rebates while ensuring that we could drop off the car at the end of four years. 

And I went again with the 2018 i3 and leased it this time. I did test drive a few other brands but I simply did not like the quality or performance after driving a BMW for six years. Thanks to COVID, I did not end up driving it as much as I would have liked or paid for. Today is the last day of the lease and I have returned the i3. 




I will miss the lightweight carbon fiber based, quirky design, the inquisitive questions people ask about the car, the surprisingly roomy interior. But I will not miss the lack of a fifth seat, the limited range and a rather unstable bluetooth. I am also a bit sad that BMW moved away from the i3 philosophy. That was a bummer from Bimmer.

I wanted to try out other brands and am planning to get a Model Y from Tesla. The range and the full self driving capabilities are the two things that attracted me. The next time around there are going to be a lot of options to choose from. May be BMW has a better model then. 

I want to thank my dear friends, Tom MoloughneyManny Antunes and Mary Demarest-Paraan for all the help over the years.

Sunday, May 16, 2021

மொழி குறித்து...

கடந்த சில தினங்களில் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய சிறுகதைகளைப் படித்தேன். இவற்றில் சில பரிசு பெற்ற கதைகளும் கூட. படித்த பின் மிஞ்சியது வருத்தமே.

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான கருவி இருப்பது போல் எழுத்துக்கான கருவி மொழி. ஆனால் மொழியை அறிந்து, அது கை கூடி, அதில் தேர்ச்சி பெற்று அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் ஆகிவிட்டது.
ஒருவர் விடாமல் அனைவரின் கதைகளிலும் அத்தனை எழுத்துப் பிழைகள். அத்தனை இலக்கணப் பிழைகள். அத்தனை தேவையற்ற ஆங்கிலக் கலப்பு. இங்கு சொல்லப் போகும் உதாரணங்கள் நான் பல முறை சொன்னவையே. மீண்டும் மீண்டும் அத்தனை பேரும் அவற்றை தொடர்ந்து எழுதுவதால் அவை சரிதான் என்றே நிறுவப்படுமோ எனக் கவலையாகத்தான் இருக்கிறது.
முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவை - முயற்சித்து, அருகாமை, எண்ணெய் ஆகிய சொற்கள். இந்தப் புதியவர்கள் மட்டுமல்லாமல் முன்னணி எழுத்தாளர்களும் இவற்றைக் கையாள்வதைப் பார்க்கிறோம்.
முயல் என்பதில் இருந்து வருபவை முயல்வது, முயல்வேன், முயல்கிறேன், முயன்றேன், முயற்சி என்பது போன்ற சொற்கள். இதிலிருந்து முயற்சியை எடுத்துக்கொண்டு முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன் என்று எழுதுவது அபத்தம். பயிற்சிக்கிறேன், தளர்சிக்கிறேன் என்று எழுதுவது தவறாகத்தானே படுகிறது. அது போலத்தானே முயற்சிக்கிறேன் என்பதும்.
அருகில் இருக்கிறேன் என்பதை அருகாமையில் இருக்கிறேன் என்று எழுதினால் இலக்கியத்தரம் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அருகாமை என்பது அருகிப் போகாதது என்ற பொருளைத் தருமே அன்றி அருகில் என்ற பொருளைத் தரவே தராது. அருகில், அண்மையில் என்று எழுதுவதே சரி.
நெய் என்பது வேர்ச்சொல். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய் எள்நெய். அது எண்ணெய் என்றானது. அது பொதுப்பெயராகவும் ஆனது. எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என வழங்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் இதை எண்ணை என்று எழுதுவது சரியா? எண்ணை எடு என்றால் ஒன்றை எடுக்கவா இரண்டை எடுக்கவா என எண்களில் ஒன்றை எடுக்கச் சொல்வது போல இருக்கிறது. எண்ணெய்யில் இருந்து எண்ணெய்யால் செய்து என எழுத வேண்டாமா? ஆசான் ஜெயமோகனும் கூட இன்று வரை எண்ணெய் என்பதை எண்ணை என்றுதான் எழுதுகிறார்.
தொடர்ந்து பார்க்கக்கூடிய மற்றொரு தவறு ஒருமை பன்மை குறித்தது. ஒருமையில் ஆரம்பிக்கும் வரி பன்மையில் முடிகிறது. பன்மையில் ஆரம்பித்தால் ஒருமையில் முடிகிறது. ஒவ்வொரு விரல்களிலும் என்று எழுதுகிறார்கள். படிக்கும் பொழுதே சரியாக இல்லையே என்று தோன்றாதா?
அது என்பது ஒருமை. இதன் பன்மை அவை. அது போல இது ஒருமை. இவை பன்மை. ஆனால் அவைகள் இவைகள் என எழுதுகிறார்கள். அவற்றை, இவற்றை எனச் சொல்ல வேண்டியவைகளை அவைகளை இவைகளை என்கிறார்கள்.
எழுத்துப்பிழைகள் என்று பார்க்கத் தொடங்கினால் ர / ற, ந / ன / ண, ல / ள / ழ இடையே உள்ள வேற்றுமைகளை உணர்ந்து கொள்வதே இல்லை. பட்டியலிடத் தொடங்கினால் முடிவே இல்லாது போகும். வலி மிகும் மிகா இடங்கள் பற்றிய நினைப்பே இல்லை. ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். ஞாபகம் என்பதை நியாபகம் என எழுத வேண்டாமே.
தேவையற்ற ஆங்கிலக் கலப்பு மற்றுமொரு குறை. ஆங்கிலச் சொல் ஒன்றை எழுதிப் பின் பண்ணு என்பது ஒரு வழக்காகவே ஆகிவிட்டது. வெயிட் பண்ணு, குக் பண்ணு, ரீச் பண்ணு, பே பண்ணு என்று ஒரு பண்ணு தமிழ் உருவாகி இருக்கிறது. எழுதிய பின் எங்கெல்லாம் பண்ணு என எழுதி இருக்கிறோம் எனப்பார்த்து அங்கெல்லாம் சரியான தமிழ்ச்சொல்லை எழுதுவது கடினமான வேலை இல்லை.
எழுதியதைப் படித்தால் பிழைகள் கண்ணில் படும். சரி செய்யலாம். ஆனால் எழுதி அதை பிரசுரிப்பதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இல்லை. நல்ல எழுத்தாளர்களைப் படித்தால் எழுத்து மேம்படும். எழுதுபவர்களில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது கேள்வியே.
புற்றீசலாய் வரும் இணையப் பத்திரிகைகளில் வருவதைப் போடலாம் என்று இருக்கிறார்களே தவிர படித்தேனும் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பிழைகளைக் களைந்து பிரசுரம் செய்யலாமே என்ற எண்ணமே இல்லை. இதனாலேயே இணையப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை என்று சொல்லிவிட்டே நிறுத்தி இருக்கிறேன். தரம் பற்றிய கவலை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அச்சு பத்திரிகைகளின் லட்சணத்தைச் சொல்லவே வேண்டாம்.
எழுத வருபவர்களுக்குச் சொல்ல ஆசைப்படுவது இதுதான். பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். எழுதியதைப் படித்துப் படித்து மேம்படுத்துங்கள். நல்ல எழுத்துகளைத் தேடிப்படியுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதனைக் கேட்டு மீண்டும் அவற்றையே செய்யாதிருக்கப் பாருங்கள். மொழி உங்களுக்கான கருவி. அதனைத் திறம்படக் கையாளப் பழகுங்கள்.
வாழ்த்துகள்! நன்றி.