Saturday, December 07, 2019

ராமன் அப்துல்லா

“யுவரானர், இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று தன் வாதத்தைத் தொடங்கினார் பரசுராமன். தமிழகத்தின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞர். வாதாட வந்தால் மணி நேரத்திற்குப் பல லட்சங்கள் வாங்கும் அளவு புகழ் பெற்றவர். வலதுசாரி கட்சி ஒன்றின் வெளிப்படை ஆதரவாளர் என்றாலும் தேவை என வந்துவிட்டால் இவரை அனைத்துக் கட்சியினரும் நாடுவது இவரின் திறமைக்குச் சான்று. பரசுராமன் ஆரம்பித்த விதத்தை ரசித்துக்கொண்டு குற்றவாளிக் கூண்டில் நின்றான் ரமேஷ்.

ரமேஷ் பிரபல தொழிலதிபர். ரமேஷ் பில்டர்ஸ் என்றால் எல்லாருக்கும் தெரியும். அதற்கு புற்றீசல் போல் எல்லா இடங்களிலும் இவர்கள் பெயர் தாங்கி வரும் கட்டடங்கள் மட்டும் காரணமில்லை. பிரபல எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவரின் பினாமி ரமேஷ் என்றும் அந்த அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி தனக்கு தேவையான நிலங்களை அபகரித்தும் மிரட்டி வாங்கியும்தான் தன் கட்டுமான சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறான் என்பதும் பரவலான பேச்சு. இன்று நடக்கும் வழக்கும் அது போலத்தான்.

இணைந்த கரங்கள் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் அப்துல்லா. தன் இடமொன்றில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த இடத்தைக் காலி செய்யும்படி மிரட்டியதாகவும் அந்த வாக்குவாதம் வலுத்து ரமேஷ் கத்தியால் அப்துல்லாவைக் குத்தி இப்பொழுது அப்துல்லா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது இந்த வழக்கு. உண்மையும் அதுதான். பரசுராமனைப் பிடித்தால் எளிதில் வெளி வந்து விடலாம் என்று செலவுக்குக் கவலைப்படாமல் அவரை நாடினான் ரமேஷ்.

“இதுதானே நீங்கள் குத்தியதாகச் சொல்லப்படும் கத்தி?” என ரமேஷைக் கேட்டார் பரசுராமன்.

“ஆமாம்.”

“யுவரானர், அப்துல்லாவின் கழுத்தில் இருந்து வயிற்றின் இடப்பகுதி வரை குத்திக் கிழித்து இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்கிறது. இந்தக் கத்தி, கூர்க்கா இனத்தவரால் பயன்படுத்தப்படும் கூக்ரி என்ற கத்தி. இதன் வெட்டும் பகுதி வளைந்திருப்பதால் இதனைக் கொண்டு குத்தினால் வெட்டு ஆழமாக விழும். இந்தக் கத்தியைக் கொண்டு அறிக்கையில் சொல்லப்படும் படி குத்தினால் கழுத்தில் இருக்கும் ரத்த நாளங்கள் வெட்டுப் பட்டு ஆள் பிழைக்க வழியே இல்லை. நீங்களே பாருங்கள்” எனப் பேசிக் கொண்டே பரசுராமன் தன் கையில் இருந்த கத்தியால் ரமேஷின் கழுத்தைக் கிழித்தார். அங்கேயே துடித்து விழுந்தான் ரமேஷ். 




அவனுக்கு மட்டும் கேட்குமாறு பரசுராமன் சொன்னார்..

"ஏண்டா காசு இருந்தா எந்த வக்கீலும் வாலாட்டுவான்னு நினைச்சியா? அப்துல்லா என் பையனுக்கு காட்பாதர் - அதைக்கூடவா விசாரிக்க மாட்டே?"

ஐம்பதாண்டு கால உயிர்நண்பர் அப்துல்லா உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற பிரார்தனையோடு கண்கள் கலங்கியபடி விலங்குக்குக் கை நீட்டினார் பரசுராமன்.

Friday, October 25, 2019

நல்லாப் படம் எடுத்த நாகஸ்வரம்!

முன்னர் எனக்கு நாகஸ்வரத்தைக் கேட்கவே பிடிக்காது. கல்யாண மண்டபங்கள் போன்ற இடங்களில் மற்ற சத்தங்களோடு கலந்து கேட்பதினால் அதன் அழகு தெரியாமலேயே இருந்தது. கர்நாடக சங்கீதத்தை கேட்க தொடர்ந்து முயற்சி செய்யும் பொழுது என்னை இழுத்துக் கொண்டது இந்தக் கருவி. இன்றைக்கு நாகஸ்வரம் சத்தம் கேட்டாலே நின்று கேட்டுவிட்டுப் போகும் அளவுக்கு மாறிவிட்டேன். 

ஆனால், இந்த இசைதான் பிடித்திழுத்ததே தவிர நாதஸ்வரமா நாகஸ்வரமா என்று பெயர்குழப்பத்தில் தொடங்கி இது பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்த எனக்கு மயிலை கார்த்திகேயன் அவர்களின் செயல்விளக்க விரிவுரை ஒன்றின் காணொலி இன்று கிடைத்தது. கார்த்திகேயன் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ஓர் இளம் நாகஸ்வர வித்வான். மிக மிக உயரத்தை அடையக் கூடிய திறமை கொண்டவர். இவர் வாசிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக வாசிப்பார். இவரின் இந்த விரிவுரை பற்றிச் சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்வது கர்நாடக இசை பற்றி ஆர்வம் கொண்டவர்கள் தவறவிடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய விரிவுரை இது. பாருங்கள். 

நாதஸ்வரமா நாகஸ்வரமா என்று பெயரில் தொடங்கி (நாகஸ்வரம்தான்), நாகஸ்வரத்தின் வகைகள், அக்கருவியோடு தொடர்புடைய புராணக் கதைகள், அக்கருவியின் பாகங்கள், அதன் பெயர்கள், எப்படி வாசிக்க வேண்டும், எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும், இக்கருவியை கோயிலில் வாசிக்க வேண்டிய முறைகள், நாகஸ்வரத்திற்கேயான இசை வகைகளான அலாரிப்பு, மல்லாரி போன்றவை பற்றி என்று படிப்படியாக விளக்கி நமக்குப் புரியச் செய்கிறார் கார்த்திகேயன். 

செயல்விளக்க விரிவுரை என்பதால் பேசுவதோடு நிற்காமல் எங்கெல்லாம் வாசித்துக் காண்பிக்க முடியுமோ, அங்கெல்லாம் வாசித்துக் காண்பித்து நமக்குப் புரியச் செய்கிறார். சும்மாவே இவர் வாசிப்பு கேட்கச் சுகம்தான். இப்படி விளக்கத்துடன் கேட்கும் பொழுது இன்னமும் ரசிக்க முடிகிறது. சஹானாவில் ஆரம்பித்து சங்கராபரணம், ஷண்முகப்ரியா, நாட்டைக் குறிஞ்சி, ஹிந்தோளம், மல்லாரி வகைகள் என வாசித்தது அனைத்தும் அருமை. அது போக சமயத்தில் பாடியும் காட்டுகிறார். இவர் வாய்ப்பாட்டுக் கச்சேரியே செய்துவிடலாம்! வாசித்துக் காண்பிக்கும் பொழுதும் தான் செய்திருக்கும் சில உத்திகளைப் பற்றிப் பேசும் பொழுது அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும் மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன. 

இவருடன் இணைந்து தவில் வாசிக்கும் ஜி.சிலம்பரசன் இடையிடையே தவில் வாசிப்பவரின் பார்வையில் இருந்து சொன்ன கருத்துகளும் அருமையாக இருந்தன. முன்பு நாகஸ்வர வித்வானும் தவில் வித்வானும் ஒரு அணியாகவே இருப்பார்கள், கிட்டத்தட்ட கணவன் மனைவி போன்ற ஜோடி அவர்கள் அதனால் குறிப்பறிந்து வாசிப்பது எளிதாக இருக்க முடிந்தது, தவிலில் உருட்டுச் சொல் என்ற வாசிப்பு முறை இன்று மறைந்து வருவது பற்றி எல்லாம் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது. இன்று முன்னணி பாடகர்கள் தங்களுக்கு இசைவாக இருக்கும் பக்கவாத்திய வித்வான்களோடு கச்சேரி செய்யும் பொழுது அந்தக் கச்சேரி ஒரு கூடுதல் ஈர்ப்போடு இருப்பதை நாம் காண்கிறோம். அவர்களும் முடிந்த வரை இந்த பக்கவாத்திய வித்வான்களோடு கச்சேரி செய்ய விரும்பவதும் இயல்பாக நடப்பதே. 

கர்நாடக இசையில் குழூஉக்குறிகள் அதிகம். மற்றவர்கள் ஒன்று இக்குறிகளை அதிகம் பயன்படுத்தி நம்மை அந்நியப்படுத்தி உரையைப் புரிந்து கொள்ள முடியாமல் செய்துவிடுவார்கள் அல்லது மொத்தமாக தவிர்த்து உரையை நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள். ஆனால் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி, அதற்கு அழகாக விளக்கமும் தந்து நல்லபடி புரியச் செய்கிறார் கார்த்திகேயன். முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளாத என் போன்றவர்கள் சார்பாக இதற்கு ஒரு தனி நன்றி. 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கவனம் சிதறாமல் பார்க்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் கார்த்திகேயனின் தயாரிப்பு. பேச வேண்டியது பற்றி குறிப்புகள் இல்லாமல், ஒரு ஒழுங்கு இல்லாமல் தோன்றுவதைப் பேசுவோர் உண்டு. அல்லது பேச வேண்டிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்போரும் உண்டு. இவ்விரண்டு வகை விரிவுரைகளுமே நமக்கு ஒட்டாமல் போய்விடும். ஆனால் என்ன பேச வேண்டும் என்பதைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு அவற்றை விரித்துப் பேசிய விதம் மிகவும் பாங்காக இருந்தது. அவரின் இம்முயற்சிக்கு என் நன்றி. 

காணொலியின் ஒலித்தரம் அவ்வளவு சரியாக இல்லாதது ஒரு சிறிய குறைதான். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்த முறை இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். நிகழ்வின் காணொலியைப் பகிர்ந்து கொண்ட பாடகர் ரித்விக் ராஜாவுக்கு நன்றி. 

When I started listening to Carnatic music, I could not stand the sound of Nagaswaram. I think the loud music, along with other noises in a closed environment such as a marriage hall, kind of put me off. However as I listened to Carnatic music more and more, I was able to appreciate the beauty of this instrument and the nuances that are unique to this instrument. Today, I cannot but stop and listen to a song well played on a Nagaswaram wherever I listen to it. 

Though I enjoy it much, I do not have any knowledge about this instrument at all. In fact the confusion starts even with its name - is it Nadhaswaram or Nagaswaram?! Today, I got an opportunity to listen to a lecdem by Mylai Karthikeyan that gave me a very good understanding of this instrument. And if I have to say one line about this lecdem, I would say if you are interested in Carnatic music, you should listen to this lecdem. Karthikeyan is an young and upcoming Nagswaram player who is destined for great glory. Music runs in his blood and you can see that in his infectious enthusiasm. 

He starts from the name of the instrument (it is Nagaswaram) and goes on to explain how this instrument evolved, the mythological stories associated with this instrument, its parts, how does it work, what are the conventions that are followed when it is played in temples, the special musical pieces that are played on this instrument such as Alarippu, Mallari etc. He does all this in easy steps so that we do not get lost in the volume of information he is trying to impart. 

Wherever possible, he also plays the concept that he is talking about so that we are able to appreciate the concept better. If not for anything else just to listen to his Sahana, Shankarabharanam, Shanmukhapriya, Nattai Kurunji, the various types of Mallari, etc. this lecdem is a must listen. At times, he also sings and he does that so beautifully that if he takes up vocal music, he would give the current crop of vocalists a run for their money.  I simply loved to see how happy he was when he played on the instrument and the enthusiasm that he shows when he talks about some nuances he has made is adorable. 

G. Silambarasan, the Thavil player accompanying Karthikeyan, interjected at times and provided his point of view. He explained how the Nagaswaram and Thavil players were always an inseparable team in yesteryears and how it helped the musicians anticipate each other. Today we see this relationship among the leading vocalists and their preferred accompanists. The standard of the concert goes up a notch when the preferred team played together and naturally the vocalists prefer to be partnered with their favorites too. Another important point that Silambarasan talked about was the vanishing type of Thavil playing called ‘Uruttu Chol’ that is played after a ragam is played by the Nagaswaram artist. He played a sample of that as well to demonstrate it. 

Carnatic music is full of jargons. So in a typical lecdem, either there is an abundance of it and a common listener feels excluded or the lecture is devoid of them and becomes too diluted. But here Karthikeyan does not shy away from jargons but explains them and often demonstrates what he is talking about so that the listener understands. This helped me for sure as I have not learnt Carnatic music. A special thanks to him for that. 

The main reason to have us captivated for more than two hours is his preparation. Often we see a speaker comes to the stage without any preparation and rambles what comes to his mind then, often either about himself or how a legendary musician appreciated the talent of the speaker or comes with the entire speech written and read from it. Both these, lose the interest of the audience very quickly. Karthikeyan had clear notes on what he needed to speak on and referred to them during his speech. But the delivery itself was extempore and so was very natural. Another special thanks here for eschewing the disclaimers made with fake humility that are omnipresent in such lecdems. 

As improvements, the audio quality of the recording could have been better. And when he shows some parts of the instrument, close ups of those parts would have helped. May be this could have been a simple powerpoint running behind him on a screen. The organizers can see how best to improve the user experience in future lecdems. 

Thanks to Vidwan Rithvik Raja for sharing this video recording. 

Friday, September 13, 2019

பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்

எனக்கு ஒரு மேலாளர் இருந்தார். தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை எனக்குச் சொல்லித் தந்தவர். அதோடு கூடவே விதிகளை நமக்கேற்ற மாதிரி எப்படி வளைத்துக் கொள்வது என்பதையும் சொல்லித் தருவார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இப்படிச் செய்கிறாரே என நாம் யோசிக்கும் அளவு இது போல விதிகளை வளைப்பதில் வல்லவர்.
அலுவல் காரணமாக மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஏற்படும் செலவினை சமாளிக்கப் பயணப்படி தருவது வழக்கம். பொதுவாக ஒரு நாளைக்கு இவ்வளவு என்பதுதான் கணக்கு. அந்தத் தொகையை விட அதிகமாகச் செலவழித்தோமானால் அதை நம் கையிலிருந்து தர வேண்டும். அதை விடக் குறைவாகச் செலவு செய்தால் மீதி இருப்பது நமக்கு. இதுதான் கணக்கு. நம்ம மேலாளர், அவர் பெயரை ராஜன் என்று வைத்துக் கொள்வோமே, எப்படிக் குறைவாகச்  செலவு செய்வது என்பதை ஒரு கலையாக மாற்றி இருந்தார். டாலர், பௌண்ட் என்பதைப் போல தினப்படி என்பதை ஒரு நாணய முறையாக கொண்டிருப்பார். அந்த பெட்டி இவ்வளவு டாலர் விலை, அந்த சட்டை இவ்வளவு டாலர் என்பதைக் கூட மூன்று நாள் தினப்படி, நாலு நாள் தினப்படி என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத் தினப்படி மோகம்.
வெளியூர் செல்லும் பொழுது சாப்பாடிற்கு என்று ஒரு பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார். அதில் சிறிய குக்கர், பருப்பு, அரிசி, ரசப்பொடி என சமைக்கத் தேவையான அத்தனை உபகரணங்களும் இருக்கும். கூடவே மேகி நூடில்ஸ், உடனடி பொங்கல், உடனடி பிசிபேளாபாத் போன்ற ஆயத்த உணவுப் பொட்டலங்களையும் வைத்திருப்பார். நம்ம ஊர் உணவு உண்பதற்கான வழியும் ஆச்சு, கூடவே வெளியில் சென்று அதிக விலை கொடுத்து உண்ண வேண்டிய கட்டாயத்தையும் தடுத்தாற்போல் ஆச்சு. நம்மையும் சாப்பாட்டுக்கு அழைப்பார் ஆனால் வெறும் கையுடன் போய் விட முடியாது. நாம் கொண்டு வந்திருக்கும் ஆயத்த உணவு பொட்டலங்களைத் தந்துவிட வேண்டும். அத்தனை கறாராக இருப்பார்.
முதன் முறை அவருடன் வெளிநாடு செல்ல நேர்ந்த பொழுது விமானம் புறப்பட வேண்டிய நேரம் காலை மூன்று மணி. ஆனால் முந்திய இரவு பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வரச்சொல்லி விட்டார். சீக்கிரம் குடிவரவுச் (Immigration) சோதனைகளை முடிக்க வேண்டும் கிளம்பு கிளம்பு என்று அவசரப்படுத்தினார். ஏன் என்று தெரியாவிட்டாலும்  மேலாளர் சொல்கிறார் என்று சீக்கிரமே அத்தனை சோதனைகளையும் செய்து உள்ளே சென்று விமானம் ஏறும் நேரம் வரை தேவுடு காத்தோம். ஆனால் திரும்ப வரும் பொழுது மெதுவாகப் போகலாம் என்ன அவசரம் என்று ரொம்பவும் நிதானமாக இருந்தார். எங்கள் விமானத்தில் இருந்தவர்களிலேயே நாங்கள்தான் கடைசியாக குடிவரவு சோதனைகளை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம்.
என்னால் சும்மா இருக்க முடியாமல், “ஏன் போகும் போது அவ்வளவு அவசரப்படுத்தினீர்கள் ஆனால் இறங்கிய பின் இத்தனை நிதானம்? எனக்கேட்டேன். ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம்  கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார்!” 
இதற்காகவே அதிக செலவுகள் ஏற்படும் ஐரோப்பியப் பயணங்களைத் தவிர்த்து ஆப்பிரிக்கா ஆசிய பயணங்களைத் தேர்ந்தெடுப்பார். எந்த நேரமும் பயணம் செய்யத் தயாராக இருப்பார்.  இப்படிச் சேர்த்த பணத்தை வைத்தே மூன்று நான்கு வீடுகளை வாங்கிய சமர்த்தர் ராஜன். இவர் அளவு இல்லை என்றாலும் தானே சமைத்துச் சாப்பிட்டு அதிகம் செலவு செய்யாமல் தினப்படியை சேர்த்து முதலீடு செய்தவர்கள் இந்தத் தொழிலில் அநேகர் உண்டு. இவர்கள் செய்யாத செலவுக்கு ரசீது தருவது, அல்லது முன்பதிவு செய்த ரசீதை வைத்துக் கொண்டு பயணப்படி வாங்கி விட்டு பயணம் செய்யாமல் முன்பதிவை ரத்து செய்வது போன்ற தகிடுதத்தங்கள் செய்யமாட்டார்கள். விதிகளை மீறாமல் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
ஆனால் எத்தனுக்கும் எத்தன் இவ்வுலகில் உண்டு என்பதற்கு உதாரணமாக கணக்குவழக்குப் பிரிவில் குமார் என்று ஒருவர் இருந்தார். எவ்வளவு கவனமாக கணக்கு வழக்குகளை எழுதித் தந்தாலும் அதில் எதாவது குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பதில் சமர்த்தர். இந்த ஹோட்டலில் காலையுணவு தருவார்களே, அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் அனைவருக்கும் மதிய உணவு உண்டே அப்பொழுது நாம் ஏன் முழு தினப்படி தரவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்பார். ராஜனின் திட்டத்தை முறியடிக்க இவர் குடிவரவு முத்திரையில் தேதியை மட்டும் பார்க்காமல் நேரத்தையும் பார்த்து கேள்வி கேட்பார். வெளியூர் செல்லவே ஆளைத் தேடும் நிலைமையில் இருக்கும் மேலாளர்கள் இவரைக் கட்டுப்படுத்தி வைப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.
இந்த பயணப்படி கதைகள் இன்று நினைவுக்கு வரக் காரணம் மற்றுமொரு பயணப்படி கதையை படித்ததினால்தான். மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது. நிலவில் இருந்து திரும்பிய பின்னர், ஹவாய் தீவுகளில் கரையேறிய விண்வெளி வீரர்கள் அங்கு சுங்கப் படிவத்தை நிரப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே அமெரிக்காவில் நுழைய முடிந்தது. ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கென்னடியில் இருந்து கிளம்பி நிலவின் வழியாக ஹானலூலூ வந்தடைந்ததாகவும் தங்களுடன் நிலவில் இருந்து கொண்டு வந்திருக்கும் கற்களும் துகள்களும் இருப்பதாக படிவத்தில் எழுதி விண்வெளிக்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்டிராங், பஸ் ஆல்டரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் கையொப்பமிட்ட சுங்கப் படிவம் இவர்கள் நிலவில் இறங்கியதன் 40ஆவது வருடக்கொண்டாட்டங்களின் பொழுது வெளியிடப்பட்டது. 

மேலும் தேடும் பொழுது, விண்வெளிக்கு சென்று வந்த பின் பஸ் ஆல்டரின் பயணப்படி கேட்டு எழுதிய படிவமும் கிடைத்தது.  
20 நாள் பயணமாக ஹ்யூஸ்டனில் இருந்து கிளம்பி கேப் கென்னடி வழியாக நிலவுக்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் வந்து விழுந்து ஹவாய் வழியாகத் திரும்ப ஹ்யூஸ்டன் வந்ததற்கு வெறும் 33 டாலர்தான் பயணப்படியா என்று நினைத்தேன். பயணம் செய்ய ராக்கெட், தங்கிட விண்கலம், உண்ண உணவு எல்லாம் அரசு தரும் பொழுது என்ன செலவாகிவிடும், எதற்குப் பயணப்படி என்று கேட்கும் நாஸாவின் குமார் சார் குரல் மனத்தினுள் அசரீரியாய் ஒலித்தது. கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு கட்டுரையை எழுதிவிட்டேன். 
  1. Buzz Aldrin’s Travel Voucher Courtesy – https://www.quora.com/How-much-was-Neil-Armstrong-paid-to-land-on-the-moon/answer/Andy-Burns-22?ch=99&share=c89b3a53&srid=RcoL
  2. Apollo 11 Customs Form Courtesy – https://www.thevintagenews.com/2019/03/25/apollo-11-customs/ 
சொல்வனம் மின்னிதழுக்காக எழுதியது - https://solvanam.com/2019/08/28/பயணப்படியும்-பரலோகப்-பயண/


Monday, September 02, 2019

சுந்தர காண்டத்து சூட்சுமம் தெரியுமா?

வழக்கம் போல் ட்விட்டரில் வளர்த்த வம்புதான். 

அன்பர் @mosqueraider இன்று எதற்காகவோ நட்புக்காக என்ற திரைப்படத்தில் வரும் சின்னச் சின்ன முந்திரியா என்ற பாடலை கேட்டாராம். ரொம்பவே உன்னித்து கேட்டார் போல. அதனால் பாடல் வரிகளில் அவருக்கு ஒரு சந்தேகம். பாடலில் சுத்துது சுத்துது செவ்வரி வண்டு, சுந்தர காண்டத்துச் சூட்சுமம் கண்டு என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன பொருள் என அவர் ட்விட்டரில் கேட்க, அதை சில பலர் நண்பர் @ragavanG அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டனர்.  ஜிரா இது மெட்டுக்கு உட்கார வைக்கப்பட்ட சொற்களாகத்தான் தெரிகின்றன என்றார். 

நம்ம கை சும்மா இருக்காமல் நான் வேணா இதற்கு விளக்கம் சொல்லட்டுமா என்று கேட்கப் போக, விளைவு இந்தப் பதிவு.

சுந்தர காண்டத்தில் என்ன நடந்தது என்றால் உடனே ராமன் சொல்லி அனுமன் இலங்கைக்குச் சென்றான், சீதா தேவியைக் கண்டான், ராவணன் சபையில் வம்பிழுத்து வாலில் தீயை வைக்கும் படிச் செய்தான், இலங்கையை எரித்தான், மீண்டும் ராமனிடம் வந்து கண்டேன் சீதையை என்றான். இப்படிப் பாட்டுப் புத்தகத்தில் வரும் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லுவாங்க. அதிலும் இந்தக் கண்டேன் சீதையை என்பதை எல்லாரும் சொல்லிச் சொல்லி ஆயிரம் முறையாவது கேட்டு இருப்போம். கம்பன் கண்டேன் சீதையை என்று சொல்லவே இல்லை. 

அவன் சொன்னது

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

இந்தப் பாட்டைப் பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம். இங்க இருந்து இலங்கைக்குப் பறந்து போனேனா, போன வழியில் என்ன ஆச்சு தெரியுமான்னு வளவளன்னு கதை சொல்லலை. ராமனுக்கு கவலையா இருக்குமே அதனால விஷயத்தை எவ்வளவு எளிமையா, எவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியுமோ அப்படிச் சொல்லிடலாம்ன்னு மொதல் வார்த்தையா பார்த்துட்டேன்னு சொல்லறான். போன காரியம் முடிஞ்சுது. பார்த்துட்டேன், கற்புக்கே அணியாக இருக்கும் அன்னையை, அதுவும் என் இரு கண்களால் என்று ஆரம்பித்தானாம். சீதை என்று ஆரம்பித்தால் கூட அவளுக்கு என்ன ஆச்சோன்னு ராமன் மனசு சங்கடப்படுமே என்பதால் இப்படி ஒரு வரிசையில் சென்று வந்ததைச் சொல்கிறானாம். எப்படி எல்லாம் தோணுது பார்த்தீங்களா நம்ம கம்பனுக்கு. 

ஆனா இன்னிக்கு நமக்கு இந்தப் பாட்டு வேண்டாம். ரெண்டு பாட்டு பின்னாடி போகலாம். 

ராமனுக்குக் கவலை. சீதைக்கு என்ன ஆச்சோ, அவள் உயிரோடுதான் இருக்கிறாளோ? இல்லையோ என வருந்திக் கொண்டு இருக்கிறான். இலங்கையில் இருந்து திரும்பிய அனுமன் அங்கு வருகிறான். வந்த உடனே ஒரு வேலை செய்கிறான், அதைப் பார்த்து ராமனுக்குப் போன உயிர் திரும்ப வந்துவிட்டது. என்ன செஞ்சான்னா, எப்போதும் போல ராமனின் காலடியில் விழுந்து வணங்காமல், சீதை இருக்கும் தென்திசையை நோக்கி விழுந்து வணங்கினானாம். கம்பன் வார்த்தைகளில்

எய்தினன் அனுமனும். எய்தி, ஏந்தல் தன்
மொய்கழல் தொழுதிலன். முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வைகினன் 

அனுமன் திரும்பி வந்தான். வந்து, பெருமையில் சிறந்த ராமனின், வீரக்கழல்களை அணிந்த கால்களைத் தொழாமல், தாமரை மலரில் இருந்து அவதரித்த சீதை இருக்கும் இடத்தை நோக்கிய தலையும், தலை மேல் கூப்பிய கைகளை உடையவனுமாய் பூமியில் விழுந்து வணங்கினான். இதான் பொருள். இதைப் பார்த்த ராமன், அனுமன் வாயைத் திறக்கும் முன்பே சீதை நலமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தான். 

ஏந்தல் - உயர்ச்சி, முளரி - தாமரை, வையகம் தழீ - நிலத்தில் விழுந்து இப்படிச் சில சொற்களுக்கு மட்டும் பொருள் புரிந்தால் நேரடியாக கம்பன் எழுதினதையே வாசித்து விடலாம். கம்ப ராமாயணப் பாடல்கள் அவ்வளவு எளிது. 

இதில் மொய்கழல் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் தருவார்கள். ராமனின் கால்கள் பார்ப்பதற்குத் தாமரை மலர் போல் இருப்பதால் அவற்றை வண்டுகள் மொய்க்குமாம். அப்படி வண்டுகளால் மொய்க்கப்பட்ட திருவடிகள் என்றும் கொள்ளலாம் என்பார்கள். 

இதைத்தான் நம்ம பாடலாசிரியர் காளிதாசன் எடுத்துக்கிட்டாரோ என்னவோ. எப்படி ராமனின் பாதங்களை தாமரை என்று நினைத்து வண்டுகள் மொய்த்தனவோ அப்படி நம்ம திரைப்பட நாயகியைக் கண்டு அவள் அன்றலர்ந்த மலரோ என நினைத்து ஏமாந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்தனவாம் இந்தச் செவ்வரி வண்டுகள். சூட்சுமம் என்ற சொல்லுக்கு நுட்பம், திறமை என்ற பொருள் உண்டு. நம்ம வண்டுகளுக்கு இப்படி ஏமாந்து போய் மொய்க்கும் திறமை எங்க இருந்து வந்ததுன்னு யோசிக்காதீங்க. அவங்களுக்கு கம்பராமாயணத்தில் இப்படி ஏமாந்து மொய்த்த வண்டுகளிடமிருந்து இந்தத் திறன் வந்திருக்கின்றது என்கிறார் பாடலாசிரியர்! 

ஜிரா இப்படி எல்லாமா யோசிச்சுப் பாட்டு எழுதி இருப்பாருன்னு நினைக்கறீங்கன்னு கேட்டுட்டார். எனக்கும் அப்படி எல்லாம் இருந்திருக்காது என்றாலும் நாயகியை பூவாய் நினைத்து மொய்த்த வண்டு என்றதும், கூடவே சுந்தர காண்டம் என்றும் சொன்னதால் உடனடியாக நினைவுக்கு வந்தது மொய்கழல் தொழுதிலன் என்பதுதான். அவர் என்ன நினைச்சு எழுதினாரோ ஆனா அதனால  திரும்பவும் இந்த இரண்டு பாடல்களைப் படித்துப் பரவசம் அடைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அதுக்கு அவருக்கும், கேள்வி கேட்ட அன்பருக்கும், அதை நம்ம பார்வைக்குக் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றியும் சொல்லியே ஆகணும். 

எனக்கு அந்தப் பாட்டைப் பார்த்தே, கேட்டே ஆகணும் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களைக் காப்பாற்ற அந்த ராமனாலும் முடியாது - https://youtu.be/wXc1oZ3lziM

Thursday, April 11, 2019

'MrudangAunrAgam' - A Deeper Understanding of the Art of Mrudangam Accompaniment

I love listening to lecture demonstrations by the Carnatic musicians. As I have never learnt Carnatic music, a lot of what they say goes over my head. But the little I understand gives me a bit more to appreciate the music better. When some subtle nuances in a song are explained well, it improves my appreciation of the song the next time I listen to it. 
R.K. Shriramkumar’s lectures are my favorite because of his content and delivery. But when I listen to a lot of others, I feel frustrated because of various reasons. A general lack of preparation, not having a structure, having too much content that cannot be done justice in the given time, struggling to find the audio clips that they want to share, letting the audio clips run for much longer than needed, discussing with fellow presenters on stage as to what to sing, unnecessary personal anecdotes… the list is endless. A recent lecture by the renowned Mrudangam player Manoj Siva was a pleasant surprise. 
Manoj delivered a lecture titled 'MrudangAunrAgam' on ‘A Deeper Understanding of the Art of Mrudangam Accompaniment’. I was very impressed with the preparation that had gone in to this lecture. The right amount of content for a two hour lecture and he had even decided which line of a composition needs to be sung to highlight a particular point he was making. There were no struggles with the laptop in playing the clips and there was hardly any personal anecdote. The lecture is meant for listeners and he has managed to keep it at that level despite going through a variety of topics. He rightly concludes the best accompaniment is one that complements the singer and does not draw the focus on the accompaniment itself. 
Manoj, being the soft spoken man that he is, would have been helped with a wearable mic as at times I was not able to hear him as he moved around in the stage. And I would have also preferred an unedited version of the video, as the editing interrupts the flow. 
Manoj was helped by Ashwath NarayananShriramkumar Rk and BS Purushotham in this presentation. Thank you Manoj, for the lecture and for sharing it in public domain. Keep those lectures coming.