Wednesday, September 29, 2021

Elavasam's Third Law of Accounting!


"I don't understand accountancy. They say debit what comes in, credit what goes out. I wish they follow it when it comes to my bank account. But they credit my account when money comes into my account. There is no logic." That was my friend, reacting to a Facebook post. 
 
Is the bank really screwing up things by doing what it is doing? Is accounting that difficult to understand? Let us talk about it. And like Trevor Noah says, "We will tell you about basics of accountancy in another installment of - If you don't know, now you know' 
 
Newton's third law of motion says, 'Every action has an equal and opposite reaction'. The accounting equivalent would be that every debit has a corresponding credit. There are exceptions to this rule but for now, let us keep it simple. In addition to that there are three golden rules of accounting
 
  • Debit what comes in, Credit what goes out
  • Debit the receiver, Credit the giver
  • Debit all expenses and losses, Credit all incomes and gains
 
And I will add another one to make it easier for us to understand. 
  • All assets have debit balances, all liabilities have credit balances
 
The most important thing to understand is that these rules are to be applied from the point of view of the person who is doing the accounting. So, if I am buying a phone and paying cash for it, then phone comes in and cash goes out. So as per the first rule, I would debit the phone account and credit the cash account, because the phone is coming in and the cash is going out. But the seller, would record the transaction in reverse by debiting his cash account and crediting his phone account because from his point of view the cash is coming in and the phone is going out. This is a very important distinction. 
 
In the example above, I have used both the debit and credit from the first rule itself. But that need not be the case always. The debit can be from one rule and the credit can be from another rule. For example, if I am borrowing money from Suresh, at this point, Cash is coming in, but nothing is going out. But as per the second rule, I need to credit the giver. I will record this by debiting my cash account and crediting the account of Suresh. Similarly, if I pay rent in cash, to me rent is an expense and cash is going out. I will debit my rent expense account and I will credit my Cash account. 
 
But in real life, we don't maintain such detailed accounting records for our personal transactions. Especially when it comes to banking transactions, we rely on the accounts that are maintained by the bank and so we have gotten used to looking at the transactions from their point of view subconsciously. This is what causes the confusion that my friend had, and this makes people think that the rules of accounting do not have logic. We will try to understand this by using some examples again. 
 
Let us say Suresh deposits $100 cash in his bank account. How would the bank account for this? It has cash coming in and the cash is given by Suresh. Therefore, it would debit Cash account and it would credit Suresh's account. This is from the point of view of the bank. Just to explain this a bit more, when this transaction is done, assuming there is no other transaction that has happened, the cash account would have a debit balance of $100 and Suresh's account would have a credit balance of $100 in the bank's records. The physical cash is an asset to the bank and therefore, a debit balance in its cash account makes sense as per the fourth rule I mentioned. 

Similarly, the bank is liable to pay Suresh back, the $100 he deposited when he asks for it. So, there is a liability the bank has towards that. Suresh's account having a credit balance also matches the fourth rule that a liability would have a credit balance. 
 
Suppose Suresh is very organized and has an accounting system in his house, when he deposits the money in the bank, he would credit his cash account as the money is going out and debit his bank account as the bank is the receiver. His balance in the bank is an asset to him and therefore the bank account having a debit balance holds good in line with the fourth rule. 
 
When we ask a banker. 'Is my account credited?', we are actually asking him, 'Is my account credited, in your books?'. This is because we have been talking to the banker only from their point of view. And this is why, the confusion was created in Junior's mind at the start. He spoke the rule from his point of view but talked about his account from the banker's point of view. 
 
Junior @mahaan Dubukku woke the beast inside me, giving me the chance to write this and for what he gave, he gets 'credit'!

Friday, September 24, 2021

எடிட்டர் என்றோர் இனமுண்டு...

நான் பள்ளியில் படிக்கும் பொழுது என் கனவுவேலை நூலகராவதுதான். எந்நேரமும் புத்தகங்களோடு இருக்கலாம். எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் படிக்கலாம். இதைவிட சிறந்த வேலை என்ன இருக்க முடியும் என்று நினைத்த காலம் அது. இன்றும் நூலகங்களைக் கண்டால் பரவசம்தான். ஆனால் படிப்பது தாண்டி எழுதுவது, எழுதுவதை எப்படி மெருகேற்றுவது எனத் தேடல் விரிவடையும் பொழுது புத்தகங்கள் உருவாகும் செயல்முறையிலும் ஆர்வம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அதில் கவனத்தை இழுத்தது இந்த எடிட்டிங் டிப்பார்ட்மெண்ட்தான்.

எடிட்டர். இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியோ ஆசிரியர் என்ற சொல் கருதப்பட்டு இன்று இதழாசிரியர், பொறுப்பாசிரியர், தொகுப்பாசிரியர் என்று பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எதுவுமே எடிட்டர் என்ற பதம் அளிக்கும் முழுப்பொருளையும் தருவதில்லை. எடிட்டரை ஆசிரியர் என்றால் எடிட்டிங் என்பதை எப்படிச் சொல்ல? இதனால்தான் என்னவோ இன்று தமிழ் பதிப்புலகத்தில் எடிட்டிங் என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. இன்று எடிட்டர் என்றால் எழுத்து / இலக்கணப் பிழைகளைத் திருத்துபவர் என்ற தவறான புரிதல்தான் இருக்கின்றது.

ஆனால் என்னைக் கேட்டால் எடிட்டர் என்பவன் ஒரு மகா ரசிகன். ஒரு கதையையோ கட்டுரையையோ படித்துவிட்டு ஒரு ரசிகனாக தனக்கு எது உவப்பாக இருக்கிறதோ அதனை மேலும் மெருகேற்றி, தனக்கு உவப்பில்லாதவற்றை தவிர்த்து, ஓட்டம் சுணங்கும் இடங்களை நேராக்கி, ஏரணக் குறைபாடுகளை நீக்கி, அடுத்து படிக்க இருக்கும் வாசகனுக்குச் சீராக்கப்பட்டதை தருவதுதான் எடிட்டிங் என்பேன். எழுத்தாளர் தாய் போல. தான் எழுதியவற்றின் மேல் அதீத பாசம் கொள்ளுபவர். எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது என எண்ணக் கூடியவர். எடிட்டர் தந்தை போல. கனிவு காட்ட வேண்டிய இடத்தில் கனிவாக இருந்து, கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்பினைக் காட்டி அந்தப் படைப்பினை சரியாகச் செய்வது அவர் கடமை. அப்படி தவறுகளை நீக்குவது, பலவீனங்களை மறைப்பது, நல்ல இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என பல பரிமாணங்களைக் கொண்டது அவர் வேலை. தமிழில் நல்ல எடிட்டர்களுக்கு இன்று தட்டுப்பாடுதான்.

நல்ல எழுத்து படிப்பவனை தன்னுள் இழுத்துச் செல்ல வேண்டும். கதை நடக்கும் இடத்தில் படிப்பவன் ஒரு டைம் டிராவலர் போல் நின்று காட்சிகளைக் காண வேண்டும். முற்றிலும் தெரியாத கதைக்களனாக இருந்தால் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு எப்படி வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் தெரிந்த இடங்கள், தெரிந்த சம்பவங்கள் மாற்றமில்லாமல்தான் வரவேண்டும். அதற்கான வடிவம் என்னுள்ளே ஏற்கனவே இருக்கும் பொழுது வேறு ஒரு பிம்பத்தைக் காட்டினால் அது ஒட்டாமல் போய்விடும். அதுதான் பெனாத்தல் சுட்டிக் காட்டிய சம்பவம். ஹாக்வேர்ட்ஸ் என்பது கற்பனை, என் ஹாக்வேர்ட்ஸும் உங்கள் ஹாக்வேர்ட்ஸும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது ஆனால் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையம் நான் நிதமும் புழங்குமிடம், அதன் வர்ணனை சரியாக இல்லை என்றால் நெருடும். இதே போலத்தான் வரலாற்றுச் சம்பவங்கள், மற்ற எல்லா ஏரணங்களுமே.

ஒரு முறை ஆங்கில எடிட்டர் ஒருவரின் அனுபவம் பற்றிப் படித்தேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றினை அவர் எடிட் செய்யும் பொழுது முதல் உலகப் போர் நிகழ்வு ஒன்றினைப் பற்றிய குறிப்பு வந்ததாம். அதனை அப்போர் முடிந்த சமயம் அப்போரில் சண்டையிட்ட வீரர் ஒருவர் சொல்லும் குறிப்பாக அது இருந்ததாம். இவர் கேட்ட கேள்வி, 'இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த பின்னால்தானே அந்தப் போர் முதலாம் உலகப் போர் என அழைக்கப்பெற்றது. ஆனால் அந்த வீரர் சொல்லும் காலத்தில் அதனை க்ரேட் வார் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் அதனை எப்படி முதலாம் உலகப் போர் எனச் சொல்வதாக அமைக்கலாம்?' எனக் கேட்டாராம். இப்படி அல்லவா இருக்க வேண்டும் கவனம்!

அதே போல பாரா சொன்ன இறவான் புத்தகத்தில் ஒரு நிகழ்வு குறித்து வரும். கதை நிகழும் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் முன்பு நடந்தது என்ற ஒரு வரி இருக்கும். கதைக்கு துளியும் சம்பந்தமில்லாத நிகழ்வுதான். ஆனால் அது எப்பொழுது நிகழ்ந்தது எனப் பார்த்தேன், சரியாக கதை நடக்கும் ஆண்டிற்குப் பத்தாண்டுகள் முன்னால் நிகழ்ந்ததாக இருந்தது. அதனை எழுதும் பொழுது அவர் இது சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதனைச் சரிபார்த்து எழுதி இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எவ்வளவு கவனமெடுத்து எழுதி இருக்கார் என்று ஆச்சரியப்பட்டேன். படிக்கும் பொழுது எனக்கும் இது போன்ற கவனம் தேவை என்பதையும் உணர்ந்தேன்.

பாராவும் பெனாத்தலும் என்னை எடிட்டர் என்றே சொல்லிவிட்டார்கள். அதற்கான முறையான பயிற்சி இல்லை என்பதால் அதனை நான் ஏற்க முடியாது ஆனால் ரசிகனாக எனக்கு அவர்கள் படைப்புகள் மீதான கருத்துகளை நேர்மையாகச் சொல்லிவிடுவேன். அவை கேள்விகளாக வரலாம், புரியவில்லை தெளிவாகச் சொல்லவும் எனத் தீர்ப்பாக வரலாம், இழையறுப்புகளைக் கண்டு சொல்வதாக இருக்கலாம், ஏரணக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம், அல்லது #HackThoo என நேராக் குப்பைக்கும் கூட அனுப்பலாம். ஆனால் நேர்மையாகச் செய்ய வேண்டும், அது அவசியம்.

எனக்குமே இது இடைஞ்சல்தான். சரியாக எழுதப்படாதவற்றைப் படிக்க முடிவதில்லை, ஆரம்பித்து முடிக்காமல் விட்ட கட்டுரைகள் ஏராளம். படிக்கும் பொழுது மனம் தானாக எடிட் செய்யத் தொடங்கி விடுகிறது. உன் கண்ணிற்கு மட்டும் எப்படி இது தெரிகிறது என்கிறார்கள். நான் அதற்காக விசேடமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்ப்பதில்லை. ஆனால் இப்படி கவனிப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. எழுதியதை வாய் விட்டுப் படித்தால் இது எளிதில் தெரியும். அதே போல படிக்கப் படிக்கத்தான் நம் மொழிவளம் கூடும். அதுவும் மிக அவசியமான ஒன்று.

முன்பெல்லாம் எல்லாரிடமும் என் கருத்துகளைச் சொல்பவனாகவே இருந்தேன். ஆனால் இப்படியான தயவுதாட்சணியமில்லாத எதிர்வினைகளை ஏற்றுக்கொள்வது மிகச் சிலரே. பல நட்புகளைக் கூட இழக்க வேண்டியதாயிற்று. எனவே இப்பொழுது எல்லாம் மிகத் தெரிந்த சிலரிடம் மட்டுமே அவர்கள் படைப்புகள் பற்றிய என் கருத்துகளைச் சொல்கிறேன். அதே போல என் எழுத்துகளை மேம்படுத்த வழியில்லாத இணையத்தளங்களில் எழுதுவதையும் குறைத்துக் கொண்டு வருகிறேன்.

பாரா நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பில் நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது எடிட்டிங் பற்றிய வகுப்புகளைத்தான். முறையாகக் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கும்தான்.

பாராவின் பதிவு - https://writeroom.bukpet.com/?p=1609
பெனாத்தலின் பதிவு - https://www.facebook.com/1122840143/posts/10225206135316784/?d=n

Friday, September 10, 2021

எளிமையாய் எழுதுவது எப்படி? - பாராவின் மாஸ்டர்கிளாஸ்!

'நோபல் பரிசு பெறும் நூல்களே ஒரு வருடத்தில் மறக்கப்படுகின்றன. இவ்வாறு குறுகிய நூல் ஆயுளுக்குக் காரணம், நவீன வாழ்க்கையில் உள்ள அவசரமும் அவலமும்தான்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இதை அவர் எழுதியது 25 வருடங்களுக்கு முன்னால். இன்று உலகம் இன்னும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் எழுதுவது சுவாரசியமாக, முதல் வரியில் இருந்து சுண்டி இழுக்கக் கூடிய மொழி கொண்டு இருந்தால்தான் படிப்பவர்கள் கவனத்தைப் பெற முடியும். 


ஒரு உதாரணத்திற்கு இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

சிவாஜி நல்லவர், வல்லவர். பாரா அவரது கதையை எழுத உள்ளார். 
சிவாஜி நல்லவர், வல்லவர். அவரது கதையை பாரா எழுத உள்ளார். 

முதலில் எழுதியதைப் படித்தால் சிவாஜி நல்லவராகவே இருக்கட்டும் ஆனால் பாரா தன் கதையை எழுதுவதற்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு என ஒரு குழப்பம் வருகிறது இல்லையா? ஆனால் இரண்டாவதாக எழுதி இருப்பதில் பாரா எழுத இருப்பது சிவாஜியின்  கதையை என்ற தெளிவு இருக்கிறது. இந்தத் தெளிவு இல்லை என்றால் 'போடா, என்னவோ எழுதறான் ஒரு மண்ணும் புரியலை' என்று படிப்பவர்கள் கடந்து செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம். சுவாரசியம் குறையாமல் எழுத மொழியின் சாத்தியங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், சொல்ல வருவதை சுருக்கமாகச் சொல்லத் தெரியாமல் வளவளவென்று எழுதுதல், வரிக்கு வரி தொடர்பில்லாமல் எழுதுதல், பொருத்தமாகப் பத்தி பிரித்த வடிவம் இல்லாமல் எழுதுதல், தகவற்பிழைகள் என்று சறுக்கக் கூடிய இடங்கள் ஏராளம். இலக்கியம் படைப்பவர்களும் தொழில் முறை எழுத்தாளர்களும் இந்தப் பிரச்னைகளோடு மாரடிக்கட்டும். நான் சும்மா இணையத்தில் எழுதப் போகிறேன் எப்படி எழுதினாலும் என்ன என்று இருக்க முடியாது. முதல் இரண்டு வரிகளில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் அவர்கள் தாண்டிச் செல்வது மட்டுமில்லாமல் எழுதத் தெரியாது என்ற முத்திரையையும் குத்தி இனி எழுதுவது எதையுமே படிக்க மாட்டார்கள். நான் எழுத வேண்டும், நான் எழுதுவதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் சரியாக எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

இணையத்திலும் அச்சிலும் வெளியாகும் எழுத்துகளைத் தொடர்ந்து படிக்கிறேன். சொல்ல கருத்துகளிருந்தும் அவற்றைச் சரியாகச் சொல்லத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் எழுத்துகளைப் பண்படுத்த வேண்டிய எடிட்டர் என்பவர் இருப்பதே இல்லை. ஆகையால் எழுதுபவர்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்று சொல்ல ஆளில்லை. முட்டி மோதி சுயமாகக் கற்றுக்கொள்வது என்பது எல்லாருக்கும் கைவருவதில்லை. அதனால் ஒரு தேக்கம் ஏற்பட்டு விடுகிறது. 

எல்லாராலும் எழுத முடியுமா? அது ஒரு கலை அல்லவா? அதற்குக் கடவுளின் அருள் இருக்க வேண்டாமா? என்ற கேள்விகள் எழலாம். மொழி ஒரு கருவிதான். அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் பரிசு பெறும் எழுத்தாளராக இல்லை என்றாலும் படிக்கக் கூடிய எழுத்தாளர் ஆகி விடலாம் என்கிறார் எழுத்தாளர் பாரா. 

இவ்வளவு நேரம் நீங்கள் இந்தக் கட்டுரையை படித்தீர்கள் என்றால் அவர் சொல்வது உண்மைதான். அவரின் சில பாலபாடங்களைக் கற்றுக் கொண்டதினால் மட்டுமே என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இதைச் சொல்ல ஒரு சிறு கூட்டமே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் சிலருக்கு அவர் சொல்லித் தந்ததை முறையான எழுத்துப் பயிற்சி வகுப்புகளாக செய்யவிருக்கும் அறிவிப்பினை இன்று வெளியிட்டிருக்கிறார். 

இது வரை தமிழில் இப்படிக் கற்றுக் கொள்ள வழியே இல்லாமல் இருந்தது. இன்று பாராவின் முயற்சியால் சாத்தியமாகி இருக்கிறது. மிக அவசியமான இதனை முன்னெடுத்ததற்கு பாராவிற்கு என் நன்றி.எழுத ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்! 

https://writeroom.bukpet.com/ என்ற இணைய தளத்தில் இவ்வகுப்புகள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம்.