Wednesday, April 29, 2026

Last Man Standing!

 

The corral has been quieter than ever before over the last three days. From over one hundred and seventy runners, just two remain. Seventy-two laps are behind them. They had both finished the last lap almost side by side, with seconds to spare. The bell sounds a seventy-third time and they both step forward. 

There is no surge of speed. Just rhythm, fragile and hard-earned. The course, worn down by hundreds of runners, feels different now. The rain has played its part. It is softer in places and harder elsewhere. The runners settle into the loop.

After a while, the first runner appears on the final approach. There is no celebration, no exuberance. Just a runner focused on finishing what he started. He crosses the line, still within the hour. Minutes pass. The second runner does not appear. It is over. The bell does not need to ring again.

After more than three days and over three hundred miles, only one runner remains. He had stood at that same spot seventy-two times before. The difference this time is that he is alone. He is the last man standing.

That was how the ‘Last Man Standing’ ultra marathon race ended at Bare Ranch in Liberty Hill, just outside Austin, TX.

Nick Bare, founder of Bare Performance Nutrition, started hosting this race, known as ‘Go One More Ultra,’ after becoming interested in the backyard ultra marathon format. Though still relatively young, the race already attracts elite ultrarunners and a global audience that follows it through livestreams.

Backyard ultra marathons are simple in concept. The course is a 4.167-mile loop. A new lap begins every hour, on the hour. If you fail to start, you are eliminated. The race continues until only one runner remains. Unlike traditional marathons or ultramarathons, there is no fixed finish line and no predetermined distance. The race could last a day, two days, or, as seen this year, stretch into a fourth. It is not just a test of endurance, but also a psychological battle and a challenge of sleep deprivation.

Why that specific distance? Running 4.167 miles every hour adds up to one hundred miles in 24 hours. Most participants complete each loop in 45 to 50 minutes, leaving them with roughly ten minutes between laps. In that short window, they rest, hydrate, eat, tend to blisters, change gear, and sometimes grab a brief nap.

At the next hour, they must be back in the starting corral. Miss the start, and they are marked DNF (Did Not Finish). Fail to complete the loop within the hour, and they are out. This cycle repeats until only one runner is left, however long it takes.

In 2025, the final two were Kendall Picado Fallas of Costa Rica and Germany’s Kim Gottwald, who had each completed 56 laps. However, during their 57th lap, a severe thunderstorm with lightning forced organizers to stop the race, and both were declared joint winners. Naturally, there were high expectations that they would face off again this year.

Instead, it was Mark Dowdle from the United States who stood out, completing a staggering 73 laps, covering over 300 miles. Kendall finished with 72 laps, while Kim completed 58. In this format, it is worth noting that everyone except the winner is recorded as DNF, regardless of how far they go. The current world record in the backyard ultra format is held by Australian Phil Gore at 119 hours, over 495 miles, achieved at Dead Cow Gully, Australia in June 2025. 

An important part of this setup is the support crew. The size of the crew varies by race, and here a maximum of three members was allowed. In many ways, they function like a pit crew in an F1 race. They take over the moment the runner finishes a lap, handling food and fluids, managing gear, treating blisters, monitoring hydration, waking the runner from short naps, and offering emotional support. Their role is critical in helping the runner go back out each hour. However, all assistance is limited to the time between laps. Once a lap begins, no external aid is allowed. Runners may carry water, hydration gels, or small snacks, but unlike a marathon, there are no aid stations on the course.

In keeping with the spirit of the format, there is no prize money attached to the race. Runners compete for recognition and reputation rather than financial reward. For elite athletes, a strong performance can open doors to sponsorships, but that is secondary. At its core, the motivation is simple and deeply personal. The winner is not chasing a payout, but the knowledge that he was able to go one more lap than everyone else.

Elite athletes are invited by the organizers, while others register and are typically selected through a lottery. This year, there were close to one hundred and seventy runners on the roster. One such first-time participant was Nakul Rao, who completed an impressive nineteen hours, covering nearly eighty miles. While new to the backyard ultra format, Rao is no stranger to endurance events, having taken part in multiple marathons and Ironman races.

Rao offered an insider’s perspective. The question he is asked most often is why. His answer is simple: why not? He believes that pushing his body to its limits makes him stronger, not just physically but as a person. It prepares him to step up when needed in everyday life and helps him stay calm under pressure. For him, life is a collection of stories, and not all of them have to come from races like this. They could occur during training or during a casual lap. These are stories he loves to share. 

He entered the race with two goals: to complete one hundred miles and to see how far he could push himself. He came close to the first and was proud of how far he went on the second. When asked how he felt at the start versus the end, he described the beginning as a mix of emotions. There was excitement, stress, uncertainty, fear, and calm, all at once. By the end, however, his mind was completely blank. He had given everything in the final lap, and there was nothing left to process. Later, after IV fluids and some recovery, he felt a deep sense of pride in not giving up.

One striking aspect of the race, he said, was the lack of hostility among competitors. Every runner wanted the others to go one more lap. They leaned on each other for motivation. Sometimes it was a word of encouragement, sometimes a shared laugh, and sometimes just the steady rhythm of footsteps around them. Friendships were formed over those long hours, and he looks forward to carrying them forward.

Rao also spoke about the lessons he learned. With only an 8 to 10 week training block, he focused on building endurance and simulating race conditions, including running repeated loops and learning how to conserve energy. He has already lined up several races for later this year. The next major one he is excited about is the iconic Georgia Death Race, an approximately 74-mile trail race with over 16,000 feet of elevation gain.

His advice is straightforward. Do not get discouraged by what others say. Start somewhere. The effects of compounding apply not just to finances, but also to habits. Not everyone needs to run ultramarathons, but there is value in pushing yourself in whatever you choose to do.

Or, as an ethos of the Last Man Standing Ultramarathon format says, “Die on the course, not in the chair”!


All images courtesy of Nakul Rao
This is the English translation of my article about this race in Tamil written for Solvanam magazine


Wednesday, March 04, 2026

ஆய கலைகளும் அடியேனும்!


என் பெற்றோர் கர்நாடக இசைப்பிரியர்கள். என் அம்மாவிற்கு தன் பெற்றோர் தனக்கும் இசை பயிற்றுவிக்கவில்லை என்பதைக் குறையாகச் சொல்வார். அதிலும் அவர் அக்கா வீணை வாசிக்கக் கற்றிருந்தார் என்பதால் இது பெருங்குறையானது. அப்படி இருந்தும் நான் இசை பயில அவர் ஏன் வழி செய்யவில்லை என்பது கொஞ்சம் புதிர்தான். எதோ இரண்டு நாள் யாரோ பக்கத்து வீட்டு மாமா மிருதங்கம் கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று சொல்ல எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார் என்பதைப் போல நானும் போய் வந்தேன் என்ற ஞாபகம் ஆனால் தொடர்ந்து போகவில்லை. 


கர்நாடக சங்கீதத்துடனே வளர்ந்தாலும் பின்னர் பல வகை இசை வடிவங்களைக் கேட்டு வளர்ந்தேன். திரை இசை, ஆங்கிலப் பாடல்கள், மேற்கத்திய செவ்வியல் இசை, ஜாஸ் என்று பல்வேறு இசை வடிவங்களை வளரும் பொழுது வேறு வேறு நேரங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் கர்நாடக இசையை விரும்பிக் கேட்கத் தொடங்கினேன். ஒரு ரசிகனாகக் கேட்டேனே தவிர அப்பொழுதும் கற்றுக் கொள்ளத் தோன்றவில்லை. 


வாழ்க்கை எங்கெங்கோ அலைக்கழித்தாலும் கர்நாடக இசை ரசிகனாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். என் பையனுக்குப் பத்து வயது ஆகும் சமயத்தில் அவனை பாட்டு வகுப்பில் சேர்த்தோம். அப்பொழுது நாமும் கற்றுக் கொண்டால் என்ன என்று உந்தப்பட்டு நானும் அந்த ஆசிரியரிடமே சேர்ந்தேன். கொஞ்ச காலம் வகுப்புகளுக்குச் சென்றாலும் அப்பொழுது இருந்த பணி நிர்பந்தங்களினால் தொடர்ந்து போக முடியாமல் போனது. அது மட்டுமில்லாமல் நல்ல பாடகர்கள் பாடிக் கேட்ட பாடல்களை நான் கொலை செய்வதை என்னாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சுபயோக சுபதினத்தில் பாட்டு வகுப்புக்கு முழுக்குப் போட்டாகிவிட்டது. 



ஆனாலும் வீட்டில் எப்பொழுதாவது ரெண்டு வரி பாட நினைத்தால் என் மகள் வந்து உடனே வாயைப் பொத்தி விடுவாள். அவள் பாடகி என்பதால் என் அபஸ்வரம் பாவம் அவளுக்குத் தாங்காது. ஆக நமக்குப் பாட வராது, வேறெந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாது என்பது தெளிவானதும் வேறு ஒரு முடிவு எடுத்தேன். நமக்குப் பாட வராவிட்டால் என்ன, பாடத் தெரிந்தவர்கள் பாட  நாம் பாடல்களைப் புனையலாமே என்பதுதான் அந்த முடிவு. 


அப்படி சிலப் பாடல்களை எழுதி இருக்கிறேன். முதலில் விளையாட்டாக எழுதிய பாடல்கள் சிலவற்றை என் நண்பரின் மகள் பாடி இருக்கிறார். அதன் பின் எழுதியவற்றை மிருதங்க வித்வான் நண்பர் ஈரோடு நாகராஜன் மெட்டமைத்துப் பாடிக் காட்டி இருக்கிறார். இப்படி கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருந்த பொழுது பாடகர் விக்னேஷ் ஈஷ்வர் புறம்போக்கு என்பதைப் பற்றி ஒரு பாடலை எழுதித் தர வேண்டும் எனக் கேட்டார். நான் எழுதித் தந்ததை கர்நாடக இசையில் விருத்தம் என்ற முறையில் பாடி அதன் பின் பாரதியார் பாடல் ஒன்றையும் பாடினார். மேடையேறிய என் முதல் பாடல் இதுதான். அவர் முதலில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலைப் பாடினார். பின் ஒரு சமயம் டாலஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் எனக்காக மீண்டும் இப்பாடலைப் பாடினார் - https://youtu.be/6vbiBPLvZAI?si=FrPtuJ5bLtkECBd2 


அதே போல வித்வான் அருண்பிரகாஷ் எதேனும் மெட்டமைத்து அனுப்பினால் அதற்கு பாடல் புனைந்து அனுப்புவேன். நான் எழுதும் பாடல்களுக்கு அவர் மெட்டமைத்துத் தருவதும் நடக்கும். சமீபத்தில் என் மகளுக்குச் சொன்ன அறிவுரையை ஒரு பாடலாக எழுதி, அவருக்கு அனுப்பினேன். அதை அடாணா ராகத்தில் மெட்டமைக்க வேண்டும். அது கட்டளைத் தொனி இல்லாமல் அன்பாகப் பேசுவது போல அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவர் அதை அழகாக மெட்டமைத்துப் பாடி இருக்கிறார் - https://youtu.be/ubSIH5vh_qk?si=LA5Hil-pJ9MvhMXP


நாம் எழுதியது மெட்டமைத்துப் பாடலாகப் பாடப்படுவதைக் கேட்கும் பொழுது பெரும் மகிழ்ச்சி உண்டாவது வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்ச்சிதான். பாடல் புனைவது ஆயக்கலைகளில் ஒன்றா என்பது தெரியவில்லை. இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இல்லை என்றாலும் இருப்பதாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்! 


பிகு: ஆய கலைகளில் அரைகுறையாகத் தெரிந்த கலை பற்றி எழுதவும் என்ற குறிப்புக்கு எழுதியது.


Wednesday, February 25, 2026

மெழுகுவத்தி


ஊரில் நான் வளர்ந்த காலத்தில் மின்சாரம் எப்பொழுதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. திட்டமிட்ட லோட் ஷெட்டிங், திட்டமிடாமல் நடக்கும் மின்சார வெட்டு என்று எப்பொழுதும் மின்சாரம் இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. காற்று அடித்தால் கரெண்ட் போய் விடும். மழை பெய்தால் மின்சாரம் இருக்காது. அது என்னவோ என்றைக்குப் புழுக்கமாக இருக்குமோ அன்றைக்குப் பார்த்து ப்யூஸ் பிடுங்கி விடுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் ஒரு மின்சாரக் கம்பம் நிற்கும். அதிலிருந்து யார் வீட்டுக்கு எந்த வயர் போகிறது என்று தெரியாத மாதிரி சிக்கலாக வயர்கள் தொங்கும். காக்கி உடை போட்ட மின்சாரத்துறை பணியாளர்கள் அதில் ஏறி எதையோ கழட்டி மாட்டுவது அடிக்கடி நடக்கும். எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போக எனக்கு அந்த மின்சாரக் கம்பம்தான் குறுக்கு வழி. 


இப்படி மின்சாரம் இருந்தால் உண்டு என்று இருந்ததால் எல்லார் வீட்டிலும் ஹரிக்கேன் விளக்கு, சிம்னி விளக்கு, அகல் விளக்கு, டார்ச் லைட், மெழுகுவத்தி என்று இருக்கும். ஒவ்வொரு அறை மாடத்திலும் தீப்பெட்டியும் மெழுகுவத்தியும் கட்டாயம் இருக்கும். அதிக நேரம் எரிய வேண்டுமானால் ஹரிக்கேன் லைட்டைத்தான் ஏற்றுவார்கள். 


காற்றில் அணையாது, கைப்பிடி இருப்பதால் தூக்கிக் கொண்டு போவது எளிது என்று பல காரணங்களைச் சொல்லலாம். மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்பது முக்கியக் காரணம். ஆனால் ஆஸ்துமாத் தொல்லையில் அவஸ்தைப்பட்ட எனக்கு அந்த மண்ணெண்ணெய்ப் புகை ஆகாது. அதன் அருகே சிறிது நேரம் அமர்ந்தாலே மூச்சு முட்டத் தொடங்கிவிடும். அதே காரணத்தினால் சிம்னி விளக்கும் எனக்குச் சரி வராது. 


வெளியில் செல்லும் பொழுதோ வீட்டுக்குள் நடமாடும் பொழுதோ மட்டும்தான் டார்ச் லைட். பேட்டரிக் கட்டை விலை அதிகம் என்பதால் அதை அதிக நேரம் போட மாட்டார்கள். அதிலிருந்து வரும் வெளிச்சம் ஒரு இடத்தில் குவிந்திருக்கும் என்பதால் அறை முழுவதுமெல்லாம் வெளிச்சம் வராது. அகல் விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கும். அதனால் நான் படிக்க வெளிச்சம் வேண்டுமென்றால் மெழுகுவத்திதான். எங்கள் ஊரிலே மெழுகுவத்தி செய்யும் நிறுவனங்கள் சில இருந்ததால் உள்ளூர் தயாரிப்புகளின் விலை குறைவாகத்தான் இருக்கும். 


தரையில் வைத்தால் அதன் வெளிச்சம் ஒரு சிறிய வட்டத்தில்தான் இருக்கும் என்பதால் அதற்குக் கொஞ்சம் உயரம் வேண்டும். கண்ணாடியில் செய்யப்பட்ட மெழுகுவத்தி ஸ்டாண்டுகள் உண்டு. மெழுகுவத்தியில் அடியில் கொஞ்சம் சூட்டைக் காட்டி லேசாக இளகச் செய்து இந்த ஸ்டாண்டுகளி ஒட்டி வைத்தால் அவற்றில் நெட்டுக்குத்தாக மெழுகுவத்தி நிற்கும். எரியும் பொழுது வழியும் மெழுகு இந்த ஸ்டாண்டுகள் இருக்கும் குழியில் சேரும். அதை இளக்கி ஒரு திரியை சொருகி மீண்டும் பயன்படுத்துவது உண்டு. ஸ்டாண்ட் கிடைக்காத நேரத்தில் பழைய பாட்டி ஒன்றைக் கவிழ்த்து அதன் மேல் மெழுகுவத்தியை நிறுத்துவதும் உண்டு. 



மெழுகுவத்தியின் அருகே அமர்ந்து கொண்டு வீட்டுப்பாடம் செய்யும் பொழுதோ, பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிக்கும் பொழுதோ ஒன்றும் சொல்லாத அம்மா, கதைப்புத்தகங்கள் படித்தால் மட்டும் கண் கெட்டுப் போய்விடும் என்பார். அன்றைக்குக் கதைப்புத்தகங்கள்தான் அதிகம் படித்ததாலோ என்னவோ இன்றைக்குக் குறைவான பார்வையும் கண்ணாடியுமாக இருக்கிறேன். சமயத்தில் இந்த மெழுகுவத்தியைத் தூக்கிக்கொண்டு நடக்கும் பொழுது உருகிய மெழுகு நம் கைகளில் பட்டுவிடும். ஒரு நொடி சுட்டாலும் அதன் பின் அது நம் தோலில் ஒரு உறைந்து அதை உரித்து எடுப்பது விளையாட்டாகவே இருக்கும். அதற்காகவே மெழுகுவத்தியின் திரிக்கு அருகில் தொடுவதும் நடக்கும். 


மெழுகில் அதிகக் கலப்படம் கிடையாது என்பதால் மெழுகுவத்திப் புகை கருப்பாக வராது. லேசான நறுமணம் கூட இருக்கும். ஆனால் பின்னாட்களில் மெழுவத்திகளில் இருந்து கரும்புகை கிளம்புவதைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் கலந்திருக்கிறார்களோ என்று கவலையாகவே இருக்கும்.  ஆனால் ஒரு தாளை எடுத்து தீச்சுடரின் மேலே காட்டினால் லேசாக கரி படியும். அதன் பின் அதில் தீக்குச்சியை வைத்துப் படம் வரையலாம்.  


சென்னைக்கு வந்த பின் ஒரு நண்பனோடுதான் கிறுத்துமஸ் இரவுகள் கழியும். அப்பொழுது அவன் குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் பொழுது மெழுகுவத்தி கொண்டு சென்று அங்கே ஏற்றி வைப்போம். சர்ச் முழுவதும் மெழுகுவத்தி வாசனை பரவி இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த ஊர்களில் உள்ள சர்ச்சுகளிலும் இதே அனுபவம் கிடைத்திருக்கிறது. 


இன்றைக்கு நானிருக்கும் இடத்தில் மின்சரத் தடை மிக அரிது என்பதால் வீட்டில் மெழுகுவத்தியே கிடையாது. தீப்பெட்டியே கூட எங்கோ ஒன்று இருக்கும் வீட்டில் மெழுகுவத்திக்கு ஏது இடம்? குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வரும் பொழுது கேக்கின் மேல் வைக்கத்தான் மெழுகுவத்தி வாங்குவது. அதை ஏற்றி உடனே ஊதி அணைத்துவிட்டு எங்கேனும் வைத்துவிட்டால் அது இருக்கும் இடம் மறந்துவிடும். அடுத்த வருடம் மீண்டும் வாங்குவோம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டதால் இதற்கும் தேவை இல்லாது போய்விட்டது. 


மெழுகுவத்தியின் வாசம் மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது. 


Monday, February 23, 2026

அண்ணாச்சிக் கடை பார்சல்!

 

சில நாட்களுக்கு முன் நானும் மகளும் எங்கோ சென்றிருந்தோம். அவளுக்குக் கை நிறைய சாக்லேட்டுகள் கிடைத்தன. இரு கைகள் போதாமல் என்ன செய்ய என்று நின்றவளைப் பார்த்துச் சிரித்தேன். ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு கூம்பாகச் செய்து அதில் அந்தச் சாக்லேட்டுகளைப் போட்டு மடித்துத் தந்தேன். கண்கள் விரிய இது எப்படி உனக்குத் தோன்றியது என்றாள். என் சிறு வயதுப் புராணத்தை ஆரம்பித்தேன். 

ஊரில் எல்லாம் பலசரக்குக் கடைகள் என்றாலே அண்ணாச்சிக் கடைதான். எங்கள் தெரு முக்கில் ஒரு பலசரக்குக் கடை. அண்ணாச்சி பெயர் சண்முக நாடார். தெருவில் இருந்து கடை முகப்புக்கு நான்கு படிகள் ஏற வேண்டும். கருங்கற்களால் ஆன படிகள். ஏறிப் போனோமானால் ஒரு நீள மரப்பலகை நமக்கும் கடைக்கும் நடுவே போடப்பட்டு இருக்கும். இடப்புறத்தில் சுவரில் சாய்ந்த மாதிரி அண்ணாச்சி அமர்ந்திருப்பார்கள். ஒரு கண் கடைக்குள்ளேயும் மறு கண் கடைக்கு வெளியே நிற்கும் நம்மைப் பார்த்தும் இருக்கும்படி இருப்பார். “சார்வாளுக்கு ஒரு கிலோ புளி போடு”, “இந்தி டீச்சர் நிக்காங்க பாரு, என்ன வேணும்ன்னு கேளு”, “கோமு மாமி பையன் தேங்காய்ப் பத்தை கேக்கான் பாரு” என்று உத்தரவுகள் பறந்து கொண்டே இருக்கும். கடைக்குள்ளே வேலை பார்க்கும் அண்ணன்மார் அவர் சொல்வதைக் கேட்டு சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

அந்த மரப்பலகைக்கு மேலே இரண்டு மூன்று இடங்களில் பெரிதாக வட்ட வடிவில் சுற்றப்பட்ட சணல் கயிறுகள் தொங்கும். பலகைக்குக் கீழே பழைய செய்தித்தாள்கள் வைக்கப்பட்டு இருக்கும். பலகைக்கு வெளிப்புறம் நம்மிடையே வந்து என்ன வேண்டும் என்று ஓர் அண்ணன் கேட்பார். ஒரு கிலோ சீனி என்றோமானால், பலகைக்கு அடியில் இருந்து ஒரு தாளை உருவி லாகவமாக ஒரு சுழற்று சுழற்றினார்கள் என்றால் அது ஒரு கூம்பாக வடிவெடுக்கும். அதன் கீழ் முனையை மடித்துச் சொருகினார்கள் என்றால் சீனி, ரவை, மாவு போன்ற சன்னமான பொருட்கள் கூடச் சிந்தாமல் இருக்கும். 



நாம் கேட்கும் பொருளை அந்தக் கூம்பில் நிரப்பி அதைத் தராசில் வைத்து நிறுப்பார்கள். கையோடு ஒரு கைப்பிடி வைத்த குவளையில் அந்தப் பொருளைக் கூடுதலாகக் கொண்டு வருவார்கள். எடைக்கேற்ப கூம்பில் கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள் அல்லது கொஞ்சம் வெளியே எடுப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் முதலில் வைத்த அளவு நாம் கேட்ட எடைக்கு மிக நெருக்கமாகவே இருக்கும். சரியான எடை போட்ட பின் அந்தக் கூம்பினை எடுத்து மேல் பகுதியை மடித்து தொங்கிக் கொண்டு இருக்கும் சணல் கயிற்றைப் பிடித்து இழுத்து சர் சர்ரெனச் சுத்துவர். போதுமான அளவு சுற்றிய பின் அந்த கயிற்றை பலமாக இழுத்தால் அந்தக் கயிறு அறுந்துவிடும். கூம்பில் இருக்கும் கயிற்றின் இரு முனைகளையும் அழுத்தி நன்றாகச் சுற்றிவிட்டார்கள் என்றால் நாமாகப் பிரிக்கும் வரைப் பிரியாமல்  இருக்கும். எடை குறைவாக இருந்தால் ஒரு தாள். எடை அதிகமாக இருந்தால் இரண்டு தாள்கள் என்றெல்லாம் அவர்களுக்கு இயல்பாகவே தெரிந்துவிடும். 


வெல்லம் போன்று பொடியாக இல்லாமல் இருக்கும் பொருட்களுக்கு கூம்பு வடிவம் கிடையாது. அவற்றைத் தாளில் பொதிந்து அப்படியே கயிற்றைச் சுற்றிவிடுவார்கள். பல பொருட்களை வாங்கினோம் என்றால் வீட்டில் இருந்து கட்டைப்பை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் ஓர் அட்டைப்பெட்டியில் போட்டுத் தருவார்கள். எடை ரொம்பவே அதிகமாக இருந்தால் கடையில் நிற்கும் அண்ணன் ஒருவர் சைக்கிளில் எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தந்துவிடுவார். எண்ணெய் போன்ற திரவங்களுக்கு எல்லாம் தூக்குச்சட்டி எடுத்துப் போக வேண்டும். மூடி இருந்தால் தப்பித்தோம். இல்லை என்றால் சிந்தாமல் வீட்டுக் கொண்டு செல்லும் பொழுது நாரதர் கதைதான் ஞாபகத்திற்கு வரும். 


வீட்டுக்குச் சென்ற பின் அந்தப் பொட்டலங்களைப் பிரிப்பதும் ஒரு கலை. கயிற்றை மெதுவாகப் பிரித்து சிடுக்காகாமல் எடுத்து வைக்க வேண்டும். கூம்பின் கீழே பிரித்தால் கொட்டிவிடும். மேலே இருக்கும் மடிப்பினைப் பிரித்து ஒரு ஓரத்தை அளவாக விழும் படி மடித்தால் சிந்தாமல் சிதறாமல் டப்பாக்களில் கொட்ட முடியும். கொட்டிவிட்டு தாளை நன்றாக விரித்து, அழுத்தித் தேய்த்து மடித்து வைக்க வேண்டும். சணலை ஏற்கனவே இருக்கும் பந்தில் சுற்றி வைக்க வேண்டும். இவை எல்லாம் மறுசுழற்சி முறையில் வீட்டில் பயன்படும் அல்லது பயன்படுத்துவோருக்குத் தரப்படும். 

சொல்லச் சொல்ல மகளுக்கு ஒரே ஆச்சரியம். நெகிழிப்பயன்பாடு இல்லாமல், மக்கிப் போகும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி இருக்கிறீர்களே, அதையும் எவ்வளவு முறை பயன்படுத்தமுடியுமோ அப்படிச் செய்திருக்கிறீர்களே. இன்றைக்கு இங்கு பேப்பர் பையில் தருவது புதிய வழக்கமாகி இருக்கிறது ஆனால் அவை எல்லாம் நீங்கள் செய்தவைதாம் போல என்று ஆச்சரியப்பட்டாள். 

கடைசியாக ஒரு கேள்வி கேட்டாள். என்னிடம் அதற்கு மட்டும் விடையில்லை. அவள் கேட்டது, “இப்படி மக்கும் பொருட்கள், மறுசுழற்சி என்று இருந்த நாட்டில் இப்பொழுது ஏன் எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது?” 


Thursday, February 19, 2026

பிள்ளையார் எழுத்து!

 

என் வீட்டில் பெற்றோரும் சரி அண்ணன்மாரும் சரி, எப்பொழுதுமே படிப்பதை உற்சாகப்படுத்துவார்கள். அந்தந்த வயதுக்கான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் எப்பொழுதுமே வீட்டில் இறைந்து கிடக்கும். அதையும் தாண்டி மற்றவற்றைப் பற்றிக் கேட்டாலும் அதெல்லாம் உனக்கெதற்கு என்று தட்டிக் கழிக்காமல் பதிலும் சொல்வார்கள். படித்ததெல்லாம் ஆங்கில வழிக் கல்விதான் என்றாலும் நான் ஆங்கிலத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டது, வீட்டில் ‘தி இந்து’ நாளிதழைப் பார்த்துதான். கையில் பேப்பரும் பக்கத்தில் அகராதியுமாகத்தான் பொழுதுகள் விடியும். இதெல்லாம் பின்னாட்களில்.
சிறு வயதில் நமக்குத் தெரிந்த எழுத்துகள் அந்த நாளிதழில் காணக்கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிதான் தொடர்ந்து நான் படிக்கக் காரணம் என்று மனமார நம்புகிறேன். ஆனந்த விகடனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதில் தென்படும் ஆ என்ற எழுத்து எனக்குத் தெரிந்த ஒன்று என்பதால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் காண்பிப்பேன். விகடன் தாத்தாவின் பொக்கை வாய்ச் சிரிப்பைப் போல என் முகத்திலும் சிரிப்பிருக்கும். அது போல இந்து பேப்பரில் தென்பட்ட ஆங்கில எழுத்துகளும், அவற்றைச் சேர்த்து சிறு சிறு சொற்களாகப் படிக்கும் பொழுதும் ஏற்பட்ட ஆச்சரியம் இன்னமும் என் நினைவில் தங்கி இருக்கிறது. இப்பொழுதும் எதேனும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது விளம்பரப் பதாகைகளில் இருக்கும் எழுத்துகளைப் புரிந்து கொண்டு படித்துப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.
அப்படி ஆங்கில எழுத்துகளைப் படிக்கும் பொழுது ஒரு சமயம் எதோ ஒரு வித்தியாசமான எழுத்து தென்பட அப்பாவிடம் போய், “பிள்ளையார் எழுத்தை என்ன சொல்ல வேண்டும்?” எனக் கேட்டேன்.
பிள்ளையார் எழுத்து என எதைச் சொல்கிறேன் என்றே அவருக்குப் புரியவில்லை. எதைச் சொல்கிறேன் என்று காட்டச் சொன்னார். நானும் நாளிதழை எடுத்துக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன். நான் சுட்டிக் காட்டிய எழுத்து - &. சின்னதாகத் தலையும், தொப்பையும், தும்பிக்கை போல வளைந்த பகுதியுமாய் இந்த எழுத்து எனக்குப் பிள்ளையாரை ஞாபகப்படுத்தியது ஆச்சரியமில்லை. அது எழுத்து இல்லை, அது and என்ற சொல்லுக்கான குறியீடு என்று அப்பா அன்றைக்குச் சொல்லித் தந்தார். அதன் பின் அவரோடு எங்கேனும் செல்லும் பொழுது கடைகளின் பதாகையில் ‘& சன்ஸ்’ என்றெல்லாம் பார்க்கும் பொழுது அவரிடம் பிள்ளையார் எழுத்து என்றே காண்பிப்பேன்.


அப்பா இதை and என்ற சொல்லுக்கான குறியீடு என்றாலும் அதற்கென்று ஒரு பெயர் உண்டு என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். அப்பெயர் ஆம்பெர்சேண்ட் (Ampersand). அதற்கும் பின்னர் மொழிகளின் மீது காதல் வந்து அவற்றைப் பற்றி விரும்பிப் படிக்கத் தொடங்கிய பொழுது ஆம்பர்செண்ட் பற்றிய ஆர்வம் மீண்டும் தலை தூக்கியது. ஏன் இந்தப் பிள்ளையார் வடிவம் என்று படிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் ஆம்பெர்சேண்ட் வெறும் குறியீடாகத் தொடங்கவில்லை. அது ஆங்கில எழுத்துகளில் ஒன்றாகவே இருந்தது. ஏபிசிடி எனச் சொல்ல ஆரம்பித்து எக்ஸ் வொய் ஸீ (இஸெட்) என்று அப்பொழுது முடிப்பதில்லை. “X, Y, Z, and per se and.” என்று சொல்லுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. per se என்ற லத்தீன் பதத்திற்கு அதாகவே என்று பொருள். எக்ஸ் வொய் ஸீ இவற்றுடன் அதாகவே and என்ற பொருட்படும்படிதான் “and, by itself, and.” என்று சொல்லி இருக்கிறார்கள். இது நாளடைவில் ampersand என்று மருவி வழங்கப்படுகிறது.
அப்படியானால் இதற்கு & என்ற வடிவம் எப்படி வாய்த்தது? அதற்கும் லத்தீன் மொழிதான் காரணம். அம்மொழியில் ‘et’ என்பது and என்ற பொருளுக்கான பதம். பதப்படுத்தப்பட்ட தோலிலும் பாபிரஸ் காகிதங்களிலும் எழுதும் பொழுது இவ்விரு எழுத்துகளைச் சேர்த்து எழுதத் தொடங்கினர். அப்படிச் சேர்த்து எழுதப்பட்ட வடிவம் உருமாறி உருமாறி இன்றைக்கு & என்று வந்து நிற்கிறது.
இன்னுமொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இதே ‘et’ என்ற பதம்தான் நாம் மற்ற பிற என்பதைக் குறிக்க எழுதும் ‘etc.’ என்பதில் இருக்கும் ‘et’! ‘etc.’ என்பது ‘et cetera’ என்பதன் குறுக்கம். ‘cetera’ என்ற சொல்லுக்கு மற்றயவை என்று பொருள் கொள்ளலாம். ‘et cetera’ என்றால் இவற்றோடு மற்றயவையும் என்பது பொருளாகும். இப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் & என்ற குறியீட்டுக்கும் ‘etc.’ என்ற குறுக்கத்திற்கும் ஒரே வேர் என்பது தெரியாமலேயேதான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக முறை சார்ந்து எழுதும் பொழுது & என்ற குறியீட்டைப் பயன்படுத்துவது தவறு என்றே கருதப்படுகிறது. முறையாக எழுதும் தருணங்களில் இப்படிக் குறியீடுகளும் குறுக்கங்களும் பயன்படுத்து தவிர்க்க வேண்டிய ஒன்று என்றே விதிகள் சொல்கின்றன. ஆனால் மற்ற குறுக்கங்களும் குறியீடுகளும் தவிர்க்கப்பட்டாலும் & அதற்கான இடத்தைக் கொண்டே இருக்கிறது.
தமிழில் ஏதோவும் ஏதோவும் பின்னே ஞானும் என்பது போன்ற தலைப்புகள் பொதுவாக மனத்திற்குப் பிடித்தவை. அது போல நான் மிகவும் விரும்பிப் படித்த இலக்கண நூல் ஒன்றின் பெயர் - ‘Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation’. இப்படி இலக்கண நூலின் தலைப்பில் கூட தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ஆம்பர்சேண்ட்.
ஆனால் உலகமே இன்றைக்கு ஆம்பர்சேண்ட் என்றாலும் எனக்கு என்னவோ & என்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் முதலில் பிள்ளையார்தான் ஞாபகத்திற்கு வருகிறார்!
பிகு: கணினி விசைப்பலகையில் உள்ள ̀~!@#$%^&*()_-+=;:"'|\{[}]<,>.?/ ஆகிய சிறப்பெழுத்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய உங்கள் கருத்துகளை, நினைவுகளை எழுதுங்கள் என்ற குறிப்புக்காக எழுதியது.

Friday, January 30, 2026

Remembering Gandhi!

 
Gandhi was killed on January 30, 1948, barely months after India became independent, at a time when the country was still bleeding from a deeply painful and chaotic Partition. If there is a day to pause and think about him, his choices, and his sacrifice, it is today.

What troubles me deeply in recent years is the growing ease with which Gandhi is spoken about with disdain, even hatred, by friends and family I otherwise respect. The man once widely and instinctively called the Father of the Nation and Mahatma is now dismissed with startling confidence. The accusations are familiar. He was a British stooge. Nonviolence was weakness and armed struggle would have brought freedom faster. He appeased Muslims at the cost of Hindus. India was partitioned because he accepted British plans.

What disturbs me more than these claims is where they come from. Many of these ideas are absorbed unquestioningly from WhatsApp forwards and social media posts. They are repeated as settled facts, even when they are selective readings, gross distortions, or outright falsehoods. The habit of pausing to verify, to read deeply, to apply reason and historical context, seems to be vanishing. We judge past leaders without bothering to understand the constraints they worked under or the moral and political calculations they were forced to make.

I do not believe Gandhi was infallible. He was human. He made mistakes. There are decisions of his that I disagree with even today. But to reduce him to a villain, or worse, to erase his moral stature altogether, is intellectual laziness at best and wilful distortion at worst. India would simply not be what it is without leaders like him.

Over the last year or so, I have spent time reading Gandhi more seriously. In his own words. Through the eyes of those who worked closely with him. Through perspectives that emerge when reading about Gokhale, and even Tilak, who stood on a very different ideological ground. These readings do not demand agreement. They demand understanding. They show the impossible choices, the negotiations, and the compromises made in pursuit of a larger good. I may still disagree with certain decisions, but at least I understand why those decisions were taken.

From everything I have read, one thing is clear to me. Gandhi was deeply inspiring, morally demanding, and far better as a human being than most of us will ever manage to be. He does not deserve the casual contempt and venom that is increasingly directed at him. I am not asking anyone to change their opinion because I say so. I am only asking for honesty. Read authentic material. Read multiple perspectives. Think for yourself instead of outsourcing your judgment to forwarded messages and manufactured outrage.

Gandhi was a man of his times, with all the limitations that implies. But his evolution, from Gujarat to England, to South Africa, and back again, is one of the most remarkable journeys of self-transformation and moral courage we know. In three of my recent writing projects, Gandhi has played a central role. The reading and research that came with them have reshaped what Gandhi means to me. For that alone, I am grateful.

Today, more than ever, I feel it is worth saying this out loud.


Thursday, January 22, 2026

Happy Birthday TMK!

 

Dear Krishna, 

Happy 50th and welcome to the club. 

This feels like a good moment to pause and say thank you, both as a rasika writing about an artist and as a friend looking back with affection.

You have shaped my musical life in ways I did not even realize while it was happening. As a listener, you taught me to slow down, to stop chasing fireworks, and to sit with music that breathes. Your relaxed approach to singing, your refusal to hurry a phrase, and your unwavering commitment to music and musicality, even while questioning form, content, and structure have completely changed how I listen. I may not agree with all your experiments and explorations but I am sure that is the only way to expand the horizon. Personally, I no longer listen for the so-called high points. I listen for honesty, intent, and the silence between notes. That shift is entirely your doing.

I have followed you across cities, seasons, and contexts with the kind of dedication that would worry any sensible person. While living in New Jersey, I traversed from Boston to Washington DC, moving from one concert to the next. In Texas, it has been Houston to Austin to Dallas. We had a fair bit of fun in New York city and in Austin. How can I forget the Karpooram Narumo you sang sitting in our driveway! 

The highlight of all my trips, of course, was December 2024, when you were awarded the Sangita Kalanidhi. I still remember arriving in Chennai after an absurdly long journey just to hear you at the Music Academy, sustained more by excitement than sleep. The hall overflowing, people listening from outside, the quiet intensity on stage, and you visibly moved by your own music at moments. Those images stay with me.

We have had our share of conversations, discussions, arguments, and disagreements, which is perhaps the most reliable indicator of a real friendship. I still remember the affection you have for my parents and especially for my mother. You gave a moving speech on her 80th birthday.  I am glad there were occasions when I could help you in small ways, and I cherish those experiences. I am especially proud that I have been able to translate the lyrics of many Tamil songs you sing into English. Somewhere along the way, that effort helped me discover myself as a translator, and I seem to be doing reasonably well on that front.

I make presentations for a living, but you remain one of the finest presenters I have listened to. You have a rare ability to speak about deeply technical ideas without making a lay listener feel excluded. You never talk down, never oversimplify, and yet make complex ideas feel approachable. Many times, I have walked into your lectures knowing I would not understand everything and have always walked out feeling richer, more curious, and eager to listen again. That is a gift.

What I admire most, though, is the human being behind the musician. Your openness to other musical forms, your genuine collaborations, and your insistence on bringing accompanists to the center of the stage rather than keeping them in the background have quietly expanded the moral universe of our concert spaces. Your work in recognizing instrument makers and other non performing artisans who remain the backbone of our musical ecosystem. Especially your writing on mridangam makers, your collaboration with the Jogappas, your work in Urur Olcott programs, and such, have helped many of us see music not merely as performance, but as shared labor, shared history, and shared dignity.

You have never separated music from life, and that, to me, is your greatest contribution. You have shown that tradition is not something to be preserved in a glass case, but something that stays alive only when it is questioned, stretched, and loved fiercely. 


I wish you many wonderful years ahead. May the coming decades bring you the same curiosity, courage, mischief, and depth that have defined your journey so far. And selfishly, I pray you continue to move, disturb, comfort, and enthrall listeners like me for many years to come.

With affection, admiration, and friendship.

Rajesh


Sunday, January 18, 2026

கல்வியா? செல்வமா? வீரமா?

நிதம் எழுதும் குழுமத்தில் சொக்கன் உங்கள் நண்பர், உறவினர் வட்டாரத்திலிருந்து கல்விக்கு ஒருவர், செல்வத்துக்கு ஒருவர், வீரத்துக்கு ஒருவர் என்று மூன்று பேரைப்பற்றிச் சுருக்கமாக எழுதுங்கள் என்றார். எனக்கு மூவர் தேவைப்படவில்லை.
என் அம்மா பெயர் கோமதி. அவர் பிறந்து வளர்ந்த சமுதாயம் இன்றைய சமுதாயத்தை விட மிகவும் மாறுபட்டது. பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துவிட வேண்டும் என்றிருந்த காலம். என் தாத்தா அந்தக் காலத்து மனிதர் என்பதால் என் அம்மாவுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் ஆகும் பொழுது அம்மாவுக்கு வயது பதினொன்று. கணவர், அவரின் சொந்த அத்தை மகன். இருவரும் கல்லிடைக்குறிச்சியில் ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள். அடுத்தடுத்த வீடுகள்தாம்.
அவரின் திருமண வாழ்வு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி அமைந்துவிடவில்லை. பதினைந்து வயது ஆகும் பொழுது முதல் குழந்தை. அந்த மகன் பிறந்த சில வருடங்களிலேயே எதோ நோய்வாய்பட்டு நாற்காலியோடு கட்டிப் போடப்பட்ட சோகம். அதற்குப் பின் இன்னும் இரண்டு மகன்கள். அவர்களுக்கும் ஏதேதோ உடல்நலக் குறைவுகள். சொந்தத்திலேயே திருமணம், அதுவும் சிறுவயதிலேயே என்பதால் இது போன்ற பிரச்னைகள் என்று இன்றைக்குத் தெரிகிறது ஆனால் அன்றைக்கு அவ்வளவு விழிப்புணர்வு யாருக்குமே இல்லை.
இது போதாதென்று அப்பாவிற்கு ஒரு விபத்தில் காலில் பிரச்னை ஏற்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது. அதனால் அவருக்கும் நிரந்தர வேலை ஒன்றும் இல்லாமல் ஆனது. ஏதோ சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இவை எல்லாம் நான் பிறக்கும் முன் நடந்தவை. நான் பிறந்த பொழுது அம்மாவுக்கு வயது முப்பத்து ஆறு, முதல் மகன் பிறந்து இருபத்தோரு வருடங்களுக்குப் பின்பு நான் பிறந்த பொழுது இரண்டாவது மகன் கல்லூரியிலும் மூன்றாவது மகன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
கல்வி: அம்மா தொடக்கப்பள்ளி முடித்து இடைநிலைப் பள்ளிக்குக் கூடச் செல்லாதவர். ஆனால் அவர் கற்பதைக் கடைசிக் காலம் வரை நிறுத்தவே இல்லை. செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள், நாவல்கள், ஸ்லோகப் புத்தகங்கள் என்று எதையேனும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு எத்தனையோ ஸ்லோகங்கள், பஜனைகள், பக்திப்பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கோயில் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவற்றைச் சொல்வார். மெதுவாக ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் கூடக் கற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம். பாட்டுகளைக் கேட்டுக் கேட்டு ராகங்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொண்டார். இசை நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் செல்வார். பெற்றோர்கள் தனக்கு முறையாகக் கர்நாடக இசையைக் கற்பிக்கவில்லை என்பது அவருக்குப் பெருங்குறை.

அம்மாவுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். என் பாட்டி இளவயதிலேயே இறந்துவிட்டதால் அம்மா சமைக்கக் கற்றுக் கொண்டதெல்லாம் அவரின் முயற்சியால்தான். புதிது புதிதாக என்னவெல்லாமோ முயன்று பார்ப்பாள். அப்பளம், வடாம், ஊறுகாய் என்று எதையேனும் செய்துகொண்டே இருப்பார். அம்மா செய்து என்றோ ஒரு நாள் உண்ட பதார்த்தத்தைப் பற்றி இன்று வரை பேசுபவர்கள் உண்டு. கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஆர்வம் அதிகம். பிளாஸ்டிக் வயர்கள் கொண்டு கூடைகள் புனைவார். தைப்பது, எம்பிராய்டரி என்று பலதும் அவருக்குக் கைவந்த கலைகள். தோட்டத்தில் இருந்து பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுக்கத் தெரியும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் வீடுகளிலும் சரி, எந்த நிகழ்ச்சியானாலும் அம்மாவுக்கு கோலம் போடும் பொறுப்பு வந்து சேர்ந்து விடும். பெரிது பெரிதாக, விதவிதமாக பொடிக் கோலம், மாக்கோலம் என்று அசத்துவார்.
இதெல்லாம் போதாது என்று காலம் மாற மாற மின்னணுப் பொருட்களைக் கையாள்வதிலும் தேர்ந்தார். போன், டேப்லட் எல்லாம் பயன்படுத்தக் கற்றுக் கொண்டார். வாட்ஸாப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டார். இறுதிக் காலம் வரை அவர் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனே இருந்தார். அவரின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கும் இறுதி வரை குறையாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா.

செல்வம்: செல்வம் பணத்தைச் சார்ந்தது அல்ல, மனத்தைச் சார்ந்தது என்பது அவர் சொல்லித் தந்த பாடம். அதை வெறும் வார்த்தைகளாகச் சொன்னதில்லை. செயலில்தான் காட்டினார். மிகக் குறைந்த வருவாய் இருந்தாலும் எதற்குமே குறையில்லாத மாதிரி ஒரு தோற்றத்தை அம்மா உருவாக்கி வைத்திருந்தார். விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். யாருக்கும் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வார். தனக்குக் கிடைத்தவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வாங்கிய பாலில் தயிர் செய்து, அதன் ஆடையை எடுத்து வெண்ணெய் கடைந்து, அதை உருக்கி நெய்யாக்கிக் கொண்டு வீட்டில் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்று குறைவில்லாமல் பார்த்துக் கொள்வார்.
சமயத்தில் பல வியாபாரங்களைச் செய்ததுண்டு. வீட்டில் இருந்து கொண்டே புடைவை வாங்கி விற்கும் வேலையை செய்தார். அப்பளம், ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்த காலமும் உண்டு. தான் செய்த பிளாஸ்டிக் கூடைகளையும் மற்ற கலைப்பொருட்களையும் விற்பனை செய்திருக்கிறார். தோட்டத்தில் இருக்கும் முருங்கை மரங்களில் இருந்து காயைப் பறித்து விற்பனை செய்ய என்னைத் தூண்டியது அவர்தான்.
தனக்கென்று வீடில்லை என்பது அவருக்குப் பெரிய குறை. பின்னாட்களில் மகன்கள் மூவர் சொந்த வீடு வாங்கிய பின்புதான் அந்தக் குறை அவருக்கு ஓரளவு தீர்ந்தது. அதுபோல நாங்கள் சொந்தமாக கார் வாங்கி அவரைக் கூட்டிச் சென்ற பொழுதும் பெரிதும் உவந்தார்.
நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை விட, நம்மைக் காட்டிலும் வறியவர்களுக்கு எப்படி உதவலாம் என்று நினைக்க அவர் சொல்லித் தந்ததை விட சிறந்த செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.
வீரம்: “வீரம்னா என்னான்னு தெரியுமா.. பயமில்லாத மாதிரி நடிக்கிறது..” என்பது குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் வரும் பிரபல வசனம். ஆனால் வீரம் என்பது வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதும்தான். அந்த விதத்தில் அம்மா பெரிய வீராங்கனைதான்.
சிறுவயதிலேயே திருமணம். பதினைந்து வயதில் பிறந்த முதல் மகன் தனக்கென்று ஒன்றும் செய்து கொள்ள முடியாமல் இருந்த அவலம். அவனையும் முப்பத்து ஏழு வருடங்கள் பார்த்துக் கொண்ட பின் அவன் இறந்து போன சோகத்தை எதிர்கொண்ட விதம். கணவருக்கு கால் முடங்கிப் போய் அவரும் வீட்டோடு இருக்க, கிடைத்த வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்ட விதம். மற்ற குழந்தைகளுக்கும் இருதய அறுவைச்சிகிச்சை, வாகன விபத்து என்று உடல்நலக் குறைகள் வந்த பொழுதும் அவற்றைக் கண்டு கலங்காமல் சமாளித்த விதம். மீண்டும் மீண்டும் சென்னை, கோவை, பெங்களூர், மும்பை என்று வேர் விட்டு எழும் பொழுதெல்லாம் ஏதோ காரணத்தால் இடம் மாறி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேர்ந்தாலும் கவலைப்படாமல் தழைத்தெழுந்த விதம். கணவரைப் பறி கொடுத்த நேரத்தில் உடைந்துவிடாமல் மீண்டு எழுந்த விதம். தனக்கே புற்றுநோய் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்த விதம். எழுபது வயதான பின் மொழியும் தெரியாமல், யார் துணையும் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சென்ற விதம்.
இப்படி வாழ்க்கையில் பிரச்னை வரும் பொழுதெல்லாம் அவர் காண்பித்த தைரியம் எனக்கெல்லாம் பாடம்தான். இவரையும் விட நான் அறிந்த வீரர் என்று யாரைச் சொல்ல?



இன்றைக்கு அவர் இருந்திருந்தால் தொண்ணூறு வயதானதைக் கொண்டாடி இருக்கலாம்.