Thursday, February 09, 2012

மடோனா அதிகாரம்!

சூப்பர் பௌல் இடைவேளையில் நடந்த இசை நிகழ்ச்சி பற்றி @penathal கூடப் பேசும் பொழுது மியா நடுவிரல் காண்பித்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு விசாரித்தார்.

சும்மா கேட்காமல் வெண்பாவாக எழுதிக் கேட்க, அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆளுக்கு ஐந்து வெண்பா எழுதினோம். இதில் விசேஷம் என்னவென்றால் பெனாத்தல் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்பதுதான்! 

எதையும் வெண்பாவில் எழுத முடியும் என எப்போதும் நான் சொல்வதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்!

மடோனா அதிகாரம்!

Suresh:

குரலால் வசீகரித்த கூட்டத்தைத் தான்தன்
விரலால் துரத்தியது ஏன்?

Me:

மேட்டரைச் சொல்லிட மீட்டரில் பாட்டில்லை
பீட்டராய் போட்டாளே பிட்டு

Suresh:

உடையும் அவிழ உணர்ச்சியும் பொங்கா
விடலைக்கு இம்முறை வீண்?

Me:

அம்மா வயசாச்சு ஆனாலும் அம்மிணி
கும்மாளம் பார்க்கக் குஷி

Suresh:

தடாகத்தில் நீந்திவரும் தத்தையோ வித்தையோ
மடோனா நடனத்தில் மான்

Me:

கால்மணி நேரம் கலக்கினாள் கூட்டத்தை
வேல்விழி தன்னை விரித்து

Suresh:

யூட்யூபில் பார்த்திட்டு உள்ளம் குளிர்ந்தேனே
வாட்டும் வனிதை அவள்

Me:

அழகி மடோனா அழைத்தாள் அன்பாய்
பழகியே பார்க்கலாம் வா

Suresh:

வரைகலையும் சேர்ந்து வனப்பைக் கூட்ட
நிறைவாய் இருந்த நிகழ்வு

Me:

புட்பாலும் பார்க்காது புல்லரித்துப் போனவர்கள்
குட்ஜாபிது என்றார் குளிர்ந்து

Posted via email from elavasam's posterous

1 comments:

said...

இந்த ரெண்டு பேரையும் என்ன செஞ்சா தகும்?