Sunday, May 07, 2006

கொத்ஸு பரோட்டா

என்னடா இவன் இப்படி ஒரு பதிவு போடறானேன்னு பார்க்காதீங்க. இதுக்கு பின்னாடி இருக்கற காரணங்களை முதல்ல சொல்லறேன். ஆபிஸில் ரொம்ப வேலை, எழுதறத விடுங்க தமிழ்மணம் பக்கம் வந்து படிக்கக்கூட முடியலை. அதனால பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்ம ரசிகர்கள் எல்லாம் வேற என்ன ஆச்சு, என்ன ஆச்சுன்னு மெயிலும் போனுமா ஒரே அன்புத் தொல்லை. அது மட்டுமில்லாம இந்த தேர்தல் ஜுரத்தில் வேற எந்த பதிவு போட்டாலும் எடுபட மாட்டேங்குது. இதெல்லாம் விட்டா வீட்டுல வேற ஒரு வேலையும் பண்ணறது இல்லைன்னு கம்பிளெய்ண்ட். பதிவு எழுதறதா அல்லது வீட்டு வேலை பாக்கறதா? நீங்களே சொல்லுங்க.

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.

ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்.

278 comments:

said...

சமையல் குறிப்பும் போட்டாச்சு. :)

said...

முட்டையில்லமா கொத்து (கொத்ஸு)பரோட்டாவா?

said...

வாங்க வேக(வெ.க.)நாதரே. முட்டைதான் இருக்கே. அதில்லாம எப்படி?

ஒரு வேளை மார்க்குதான் முட்டையா?

said...

ஆமா சரியா கவனிக்கல்லை, மார்க்கு எப்படி முட்டையாகும்!

said...

இப்பத்தான் ஃப்ரீஸரைக் குடைஞ்சதுலே கிடைச்ச சமீபத்துலே ஆறுமாசத்துக்கு முந்தி( வார்த்தை உபயம் டோண்டு- நன்றி) வாங்குன
பரோட்டாவா இருந்தாலும் பரவாயில்லையா?

said...

இதெல்லாம் கூட இலவசமா கொத்திக் குடுப்பீங்களா?

உசுப்பேத்தி உசுபேத்தி நாவெல்லாம் ரணகளமா இருக்கு.

நாளைக்கு கொத்திரவேண்டியதுதான்

said...

இப்போ வெறும் வேக நாதர் இல்லை. விவேக நாதரும்தான். சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க.

said...

சின்ன(ப்)புள்ளை,

பெரிய ஆளா இருப்பீர் போல இருக்கே.

ஆமாம், உங்அ பேருல ப் வேணும்ன்னு நாரும் சொல்லலை?

said...

டீச்சர்,

ஆறு மாசமா? (டோண்டு சாரை 1950க்கு பின்னாடி இருக்கிறதுக்கெல்லாம் இழுக்காதீங்க.)

குளிருறைக்கப்பட்ட ( வார்த்தை உபயம் இ.கொ.- நன்றியெல்லாம் எதுக்கு) சமச்சாரம இருந்தா பரவாயில்லை. அப்படி இல்லைன்னா கோபால் சார் விடுங்க ஜூட்.

said...

//நாளைக்கு கொத்திரவேண்டியதுதான்//

நல்லா கொத்துங்க. அப்போத்தானே நான் அங்க வரும் போது எக்ஸ்பர்ட்டா இருப்பீங்க :)

said...

சால்னா இல்லைன்னா அது கொத்துபரோட்டாவே இல்லை! இல்லை!! இல்லை!!! சரிவிடுங்க கொத்ஸூ ன்னு சொல்லிட்டீங்க!

//தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்.//

ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்! :)

said...

//சால்னா இல்லைன்னா அது கொத்துபரோட்டாவே இல்லை!//

ஏம்ப்பா. உங்களுக்குப் பயந்துதானே இது கொத்துப் பரோட்டா இல்லைன்னு கற்பூரம் எல்லாம் அணைச்சு சத்தியம் பண்ணி இருக்கேன். அதுக்கப்புறமும் விடலைன்னா எப்படி...

//ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்! :)//

இப்போ இதுக்குத் தடாவா? பெண்களூரில் இருந்துகிட்டு கனா அது இதுன்னு பேசினா எப்படி?

ஸெயிண்ட் மார்க்ஸ் ரோடில் ஸ்காட்டிஷ் பப் இருக்கு பாருங்க. அங்கதான் ரொம்ப ஃபெரெஷா மீன்கொத்தி கிடைப்பார். ரொம்ப சீப்பும் கூட. அந்த இடம் மீன்கொத்தி தயாரிப்பாளர்களுக்கு சொந்தம் எனக் கேள்வி. போய் பாருங்க.

said...

நீங்கள் சொல்லியவாறே ஒன்று விடாமல் அனைத்தையும் தவறாமல் செய்தேன். ஆனால்....

//வாணலியில் எண்ணை விட்டுக்
காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்//

எண்ணெய் காயவும் இல்லை, கடுகு வெடிக்கவும் இல்லை.

//சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்//

சூடு ஆகவே இல்லையே கொத்ஸ்.
என்ன காரணம்?

said...

பத்த வெக்களியே பரட்ட....

சரியா சிபி....

:-))

கொத்ஸ், பதிவு பத்தி பண்ணவங்க-திண்ணவங்க கமெண்டுவாங்க:-))

said...

//சூடு ஆகவே இல்லையே கொத்ஸ்.
என்ன காரணம்?//

வீட்டுல எல்லாரையும் நாமக்கல்லுக்கு பேக் பண்ணிட்டு அன்னபூர்ணாவே கதின்னு கிடந்தா இப்படித்தான்.

போயி கிச்சன் எங்க இருக்குன்னு பாரும்.

said...

//பத்த வெக்களியே பரட்ட....//

கரெக்ட்தான் நன்மனம்!

//வீட்டுல எல்லாரையும் நாமக்கல்லுக்கு பேக் பண்ணிட்டு அன்னபூர்ணாவே கதின்னு கிடந்தா இப்படித்தான்.

போயி கிச்சன் எங்க இருக்குன்னு பாரும்.//

ஹலோ! எங்க வீட்டுல வெந்நீரெல்லாம் நான் நல்ல போடுவேனாக்கும். கிச்சன் எங்க இருக்குன்னு கேட்டுப்புட்டீரு!
:-)

உமக்கு அவல் உப்புமா செய்யத் தெரியுமா? நான் சொல்லித் தரவா?

said...

//எங்க வீட்டுல வெந்நீரெல்லாம் நான் நல்ல போடுவேனாக்கும். //

சுவிட்ச் போட்டா வெந்நீர் வரும் அதுக்கு கெய்சர் இருக்கு. ஆனா பட்டன தட்டினா தட்டுல இட்டிலி வர டெக்னிக் இன்னும் வரலையேப்பா. அதுவரை உன்னை மாதிரி ஆளுங்களுக்கு கஷ்டம்தான்.

said...

//கொத்ஸ், பதிவு பத்தி பண்ணவங்க-திண்ணவங்க கமெண்டுவாங்க:-))//

விஷயம் என்னன்னே தெரியாம பின்னூட்டம் போட்ட நன்மனத்தின் நன்மனத்தை நாம் பொராட்டுகிறோம். ச்சீ பாராட்டுகிறோம். ஹிஹி

said...

//விஷயம் என்னன்னே தெரியாம பின்னூட்டம் போட்ட நன்மனத்தின் நன்மனத்தை நாம் பொராட்டுகிறோம். ச்சீ பாராட்டுகிறோம். ஹிஹி
//

:-))))))

said...

கொத்ஸ், பதிவ படிக்காம பின்னூட்டத்த மட்டும் படிச்சுட்டு பதில் சொல்றவங்க மத்தியில, பதிவ படிச்சுட்டு பதிவுக்கு relevanta (இதுக்கு என்னப்பா தமிழ்ல?)

பதிவு பத்தி பண்ணவங்க-திண்ணவங்க கமெண்டுவாங்க:-))

அப்படினு smily (இதுக்கு என்னப்பா தழிழ்ல?) யோட போட்டா இப்படி தான் பொரட்டுவீங்களோ:-))

ஓ நீங்க இலவசக்கோனார் இல்லயா கொத்தனாரா... கோனார்னு நெனச்சு தமிழ்ல என்னப்பானு கேட்டேன்.

:-)) இது கொசுறு

said...

நன்மனத்தாரே,

கோவப்படாதீங்க. என்ன சொல்லி பாராட்டறதுன்னு தெரியலை.. அதான்.

சமைக்கப் போறது இல்லன்னு தெரிஞ்சும் இப்பதிவைப் படித்து பாராட்டிய நீவிர் வாழ்க. (இப்போ சரியா?)

Relevant - சம்பந்தப்பட்ட
Smiley - நகைப்பான் (சரியா இருக்கா?)

கோனாரா இருந்தா என்ன கொத்தனாரா இருந்தா என்ன. இதெல்லாம் முயற்சி செஞ்சு பார்த்திடணும்.

said...

யோவ் சிபி,

என்ன சிரிப்பு? பண்ணிப்பார்த்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்லும்.

said...

அப்பாவி அண்ணாசாமியின் கேள்வி : கிங்பிஷர் கிடைக்கவில்லை. என்ன செய்வது?!

said...

Relevant - தொடர்புடைய
Smiley - சிரிப்பி
Cryley - அழுகி

நல்ல மனசுடன் பின்னூட்டமிட்ட நன்மனத்தை கலாய்த்த(பொரட்டிய) கொத்தனாரை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். மன்னிக்க கண்டிக்கிறேன்.

said...

//அப்பாவி அண்ணாசாமியின் கேள்வி : கிங்பிஷர் கிடைக்கவில்லை. என்ன செய்வது?!//

அண்ணாசாமி, ஆனாலும் ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. மிடாஸ் என்ன பியர் பண்ணறாங்க. அது கிடைக்காமலா போகும்? :)

சும்மா சுண்டக்கஞ்சி அடிங்க.

said...

//அப்பாவி அண்ணாசாமியின் கேள்வி : கிங்பிஷர் கிடைக்கவில்லை. என்ன செய்வது?!//

கிங்பிஷர் இல்லாட்டா என்னங்க? குயீன்பிஷர்/ஜேக்பிஷர் ட்ரை பண்ணுங்க









அப்படின்னு கொத்ஸ் சொல்லிடப்போறாருன்னு பார்த்தேன். நல்லவேளை அப்படியேதும் சொல்லலை!

said...

//நன்மனத்தை கலாய்த்த(பொரட்டிய)//

நான் நன்மனத்தாரை கண்டித்தேனா? என்ன அநியாயம்? பாராட்ட வந்தேன். பொரோட்டா சம்பந்தப்பட்ட பதிவானதால் அது 'பொராட்டுகிறோம்' என வந்துவிட்டது.

சரியா படிங்கப்பா.

said...

திரும்பவும் தொடங்கியாச்சா விளையாட்டை? ஆனால் விளையாடறவங்க தான் புது ஆளுங்க.... நடக்கட்டும் நடக்கட்டும்.

said...

:-)அப்படியே அந்த 'சால்னா' செய்யறது எப்படீன்னும் சொல்லிடலாமுல்ல!:-)

said...

//திரும்பவும் தொடங்கியாச்சா விளையாட்டை?//

தேர்தல் விளையாட்டுதான் முடிஞ்சாச்சே. இனிமே இந்த விளையாட்டுதானே.

//ஆனால் விளையாடறவங்க தான் புது ஆளுங்க..//
எல்லாம் நல்லா விளையாடறாங்களே, நம்ம கிரிக்கெட் டீம் இளைஞர்கள் மாதிரி.

//நடக்கட்டும் நடக்கட்டும்.//

நல்லா ஓடட்டும்ன்னு வாழ்த்துவீங்கன்னு பார்த்தா நடக்கட்டும்ன்னு சொல்லறீங்களே. :(

said...

எஸ்.கே.

தெரிஞ்சா சொல்லியிருப்போமில்ல. ;)

அதெல்லாம் சொன்னா அடுத்தமுறை வீட்டில அதையும் பண்ணச் சொல்லுவாங்க. வேலை ஜாஸ்திங்க.

said...

அப்பாவி அண்ணாசாமியின் நெக்ஸ்ட் கொஸ்டின் : பியர் எல்லாம் பழக்கம் இல்லை. பட்டை சாராயம் ஓ.கே.வா?

said...

யோவ் அண்ணாசாமி,

இப்படியெல்லாம் கேப்பீருன்னு தெரிஞ்சுதானே சுண்டக்கஞ்சிக்கே ஓ.கே. சொல்லியாச்சு.

டயம் வேஸ்ட் பண்ணாதேயும்.

said...

பட்டை சாராயம் வேணுங்கற ஆளு ஏன்யா மொதல்ல, கிங்ஃபிஷரைத் தேடி ஓடினாரு!?

said...

//பியர் எல்லாம் பழக்கம் இல்லை. பட்டை சாராயம் ஓ.கே.வா?//

பட்டை சாராயமெல்லாம் உடம்புக்கு கெடுதல். இப்பதான் பாக்கெட்லயே 1.50/2.00 ரூபாய்க்கு எல்லா கடையிலயும் கிடைக்குதே! அதை வாங்க அடிங்க அண்ணாசாமி!
போதை வற்றதே தெரியாது. எவ்ளோ வேணும்னாலும் அடிக்கலாம். கப்பும் அடிக்காது.

said...

யோவ் இதுக்கெல்லாம் அளவேயில்லியா?

ப்ரோஸன் பரோட்டா வாங்கி, அதுல நாலு வெங்காயம், தக்காளி சேத்துபோட்டு முட்டையும் கடசியில உடச்சு கொட்டி, உள்ளுக்கா ரெண்டு கிங்பிஷரையும் ஊத்திக்கோங்க மக்களேன்னு நாலு வரில எழுத வேண்டிய பதிவ முழ நீளத்துக்கு எழுதுனது பத்தாதுன்னு வரபோற ஆளுககிட்டயல்லாம் வம்பு பேசி பின்னூட்டம் வளர்க்கறீரா?

ஆனாலும் விவரமாத்தான் இருக்கீரு. தெளிவா யாராவது இந்த கருமத்த செஞ்சு தின்னுட்டா.. அப்புறம் நியுஜெர்சிக்கே டிக்கட் போட்டு வந்து உம்மள கொத்திட்டு போயிடுவாங்கன்னு உஷாரா கிங்பிஷரையும் ரெசிபில சேத்துட்டீரு! வாழ்க! :))

said...

//....திரும்பவும் தொடங்கியாச்சா விளையாட்டை? ஆனால் விளையாடறவங்க தான் புது ஆளுங்க.... நடக்கட்டும் நடக்கட்டும்//

குமரன்

விளையாட்டு, விளையாட்டா இருக்கற வரைக்கும் விளையாடலாம்னா விளையாட்டு பிள்ளையா இல்லாம வெவரமா கேட்டுபுட்டீங்களே:-))

விளையாட்டு எந்த திசைல போய்ட்டு இருக்குனு பாத்தீங்களா. இப்ப வெவரமா பதில் சொல்ல எவ்வளவு பேர் வருவாங்க பாருங்க.

சிபி,
//நல்ல மனசுடன் பின்னூட்டமிட்ட நன்மனத்தை கலாய்த்த(பொரட்டிய) கொத்தனாரை வன்மையாகக் கண்ணடிக்கிறேன். மன்னிக்க கண்டிக்கிறேன்.//

இப்படி சைடுல தாக்கறது நல்லால்ல:(

வளர்க... வளர்க.... (வேற எது, பின்னூட்டந்தேன்)

:-))

said...

//பட்டை சாராயம் வேணுங்கற ஆளு ஏன்யா மொதல்ல, கிங்ஃபிஷரைத் தேடி ஓடினாரு!?//

கொஞ்சம் ஸ்டைலா இருக்கலாம்ன்னு பார்த்தாரு. விட மாட்டேங்கறீங்களே.

said...

//இப்பதான் பாக்கெட்லயே 1.50/2.00 ரூபாய்க்கு எல்லா கடையிலயும் கிடைக்குதே!//

வீட்டுல ஆளுங்க இல்லன்னா இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுருமே. நல்லா இருங்க மக்கள்களா.

said...

//வரபோற ஆளுககிட்டயல்லாம் வம்பு பேசி பின்னூட்டம் வளர்க்கறீரா?//

அய்யா மருத்துவரே, இணையக்கோனார் என பெயர் பெற்ற நீரே இப்படி கேட்கலாமா? என்ன இருந்தாலும், என் குருவானவர். அதனால் ஒண்ணும் சொல்லாம விடறேன்.

//ஆனாலும் விவரமாத்தான் இருக்கீரு. தெளிவா யாராவது இந்த கருமத்த செஞ்சு தின்னுட்டா..//

நம்ம மக்களும் உஷாருதான். யாராவது ஒருத்தராவது பண்ணிப்பார்த்தேன் நல்லா இருக்குன்னு சொல்லறாங்களான்னு பாருங்க. அதெல்லாம் கரெக்ட்டா வேணும்கிற விஷயம் மட்டும் எடுத்துக்கிறாங்க பாருங்க.

ஆனாலும் கொஞ்சமா தீய்ஞ்ச வாசனை அடிக்குதோ?

said...

வீட்லே சால்னா செய்ய ட்ரைனிங் தா ஆத்தா என நைசாக் கேட்டு இன்னைக்கு சாயங்காலம் சால்னா சமையல் குறிப்பு தந்துடலாம்.

ஆமா, அந்த மீன்கொத்தி கடையிலே கிடைக்க்குதா இல்லே இந்தியன் ரெஸ்டாரண்ட்லே கிடைக்குதா. இங்கே ரெஸ்டாரண்ட் காரன் ஏதோ கள்ள சாரயம் விக்கிற ரேஞ்சுக்கு பொட்லம் கட்டிக் கொடுத்தான் உங்க ஊரிலே எப்படி?

ஒரு சந்தேகம். குளிருறைக்கப் பட்ட பரோட்டாவை வெப்புரிக்கி(thaw) பிய்க்க வேண்டுமா அப்படியே பிய்க்கலாமா?
(டாக்டர் என்னால் முடிந்த அளவிற்கு இந்த பதிவை உயிருடன் வைக்க முயன்றுள்ளேன்)

said...

//விளையாட்டு, விளையாட்டா இருக்கற வரைக்கும் விளையாடலாம்னா விளையாட்டு பிள்ளையா இல்லாம வெவரமா கேட்டுபுட்டீங்களே:-))//

என்னைத்தான் விசுவிற்கு சொந்தமான்னு கேட்பாங்க. நமக்கும் ஒரு தொடர்பு இருக்கு போல...

//விளையாட்டு எந்த திசைல போய்ட்டு இருக்குனு பாத்தீங்களா. இப்ப வெவரமா பதில் சொல்ல எவ்வளவு பேர் வருவாங்க பாருங்க.//

யோவ், எந்த திசையிலயா போகுது? நாலு பேர் வந்து போற இடம். நாசம் பண்ணிடாதீங்கயா...

//இப்படி சைடுல தாக்கறது நல்லால்ல:(//

சேரும்போதே பார்த்து சேரணும். இப்போ குத்துதே, குடையுதேன்னு சொன்னா எப்படி. எங்க கட்சியில் இன்னும் இடமிருக்கு. :)

//வளர்க... வளர்க.... (வேற எது, பின்னூட்டந்தேன்)//

நீங்களெல்லாம் இருக்கும் போது என்ன கவலை. அதுபாட்டு வளரும்.

said...

//என்ன இருந்தாலும், என் குருவானவர். அதனால//

இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்ல. :))

இந்த மாதிரி பிட் போட்டு தான் வெண்பா வித்தகர துண்டபோட்டுகிட்டு ஓரமா ஒக்காரவச்சிட்டீரு. அப்படியே அதிர்ச்சியில சாய்ஞ்சவர ரொம்ப நாளா ஆளக் காணோம். அடுத்தது நானா?? :))

இந்த வெளாட்டுக்கு இப்போதைக்கு நான வரலேப்பு. நூறு பக்கம் வரும்போது வரேன். அதுவரைக்கும் நல்ல காசித்துண்டா வாங்க ஷாப்பிங் போறேன். :)


நன்மனம்,
சறுக்கீட்டீயேய்யா.. சறுக்கிட்டீயே! என்னத்த சொல்றது. நல்லாருந்தா சர்தான்.

said...

சால்னா குறிப்புதானே. குடுங்க குடுங்க. ஆனா உங்க பதிவை தங்கமணி கண்ணுல படாம பாத்துக்கணும்.

மீன்கொத்தி, தங்கக் கழுகு, 5000 எல்லாமே இங்க கடையில் கிடைக்கும். இதுக்கு மேல சொன்னா டாக்டர் டென்ஷனாயிடுவாரு. ஆனா நீங்க இங்க வரும்போது நல்ல ஏற்பாடு பண்ணிடுவோம்.

//குளிருறைக்கப் பட்ட பரோட்டாவை வெப்புரிக்கி(thaw) பிய்க்க வேண்டுமா அப்படியே பிய்க்கலாமா?//

அப்படியே பிய்பீங்களா? உம்ம கையில் கைப்பு மாட்டினாருன்னா என்ன ஆவறது.... யப்பா சாமி, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா.

//(டாக்டர் என்னால் முடிந்த அளவிற்கு இந்த பதிவை உயிருடன் வைக்க முயன்றுள்ளேன்)//

இப்போ நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு. மக்கள் டையர்ட் ஆகும்போது மீண்டும் வாங்க. ஓக்கேவா?

said...

//இந்த வெளாட்டுக்கு இப்போதைக்கு நான வரலேப்பு. நூறு பக்கம் வரும்போது வரேன்.//

ஏன் 50 கண்ணில் படலையா? சீக்கிரம் வாங்க.

வெண்பா வித்தகர் விரைவில் வருவார்.

said...

கொத்ஸ்,

முக்கியமான ingredient ஒண்ணு மிஸ்ஸிங்...


உப்பு போட வேண்டாமா ?

said...

தங்கத்தாரகையே,

சரியா பாருங்க.

//கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு//

போட வேண்டாம், தேர்தல் டயமாச்சே, இப்போ போயி மானம் ரோஷம் எல்லாம் வருமேன்னுதான் பாத்தேன். கடைசியா சேத்துட்டேன். :)

said...

//சேரும்போதே பார்த்து சேரணும். இப்போ குத்துதே, குடையுதேன்னு சொன்னா எப்படி. எங்க கட்சியில் இன்னும் இடமிருக்கு. :)//

கொத்ஸு... நான் எப்பயா கட்சில சேந்தேன்? சந்தடி சாக்குல உங்க கட்சில ஆளே இல்லேனு ஒத்துக்கிட்டீங்க போல இருக்கு:-))


//சறுக்கீட்டீயேய்யா.. சறுக்கிட்டீயே! என்னத்த சொல்றது. நல்லாருந்தா சர்தான்//

டாக்டரு, சறுக்கினாலும் ஜிகினாஸ்ரீ (ஜலஜாஸ்ரீயா? ஏதோ ஒரு ஸ்ரீ)மாதிரி மாட்ட மாட்டேன்ல

:-))

said...

//போட வேண்டாம், தேர்தல் டயமாச்சே, இப்போ போயி மானம் ரோஷம் எல்லாம் வருமேன்னுதான் பாத்தேன். கடைசியா சேத்துட்டேன். :)//


- )))))

said...

என் கிட்டயே போட்டு வாங்குறீரு?

உம்ம ஆசையக் கெடுப்பானேன்.

இது அம்பதா, அம்பத்தொண்ணா?

அம்பதா இல்ல, நடக்கறதே வேற. சொல்லிட்டேன்.

said...

ஒரு சின்ன சமையல் குறிப்பு

வெங்காயம் போட்டால் பெருங்காயம் போட அவசியமில்லை. ஒன்றின் flavour ஐ மற்றது அடித்து விடும்

50 அடிச்சாச்சு ...

said...

//கொத்ஸு... நான் எப்பயா கட்சில சேந்தேன்? சந்தடி சாக்குல உங்க கட்சில ஆளே இல்லேனு ஒத்துக்கிட்டீங்க போல இருக்கு:-)) //

நீங்கதான் அந்த வாலிப பசங்களோட சேர்ந்தீங்களே. அதைச் சொன்னேன். எங்க கட்சியில் எல்லாருக்கும் இடமுண்டு. சிலரின் இதயத்தைப் போல. :)

said...

ர.ம.தா,

சரியான நேரத்துக்கு வந்து 50 அடிச்ச தங்கமே. 100ஆவதுக்கும் நீங்கதான் வரணும். :)

said...

//இது அம்பதா, அம்பத்தொண்ணா?//

எவ்வளவோ முயற்சி செய்தும் 51-ஆப் போச்சே. சரி 100க்காவது சரியான டயத்துக்கு வாங்க.

said...

//வெங்காயம் போட்டால் பெருங்காயம் போட அவசியமில்லை. ஒன்றின் flavour ஐ மற்றது அடித்து விடும்//

அப்படியா? எனக்கு என்ன செஞ்சாலும் மஞ்சள் பொடியும், பெருங்காயமும் வேணும். இல்லைன்னா சமைக்கவே வராது. அதான் இப்படி.

//50 அடிச்சாச்சு ...//

மீண்டும் டாங்ஸ். மீண்டும் வாழ்த்துக்கள். மீண்டும் வந்து 100 அடிக்க வேண்டுகோள்.

said...

//போதை வற்றதே தெரியாது. எவ்ளோ வேணும்னாலும் அடிக்கலாம்//

அப்பாவி அண்ணாசாமியின் டவுட் : போதை வராதுன்னா அப்புறம் எதுக்கு அந்த கண்றாவியை காசு கொடுத்து வாங்கி அடிக்கோணும்?!

said...

அண்ணாசாமி,

போதை வரதே தெரியாதுன்னுதானே சொன்னாரு. வரதுன்னா சொன்னாரு. ஆனாலும் இப்படி அப்பாவியா இருக்கயேப்பா.

said...

அப்பாவி அண்ணாசாமியின் கடுப்பு : அட போங்கப்பா. இதுக்கு பேசாம கோலி சோடா வாங்கி அதிலே ஆஸ்ப்ரின் உடைச்சு போட்டு,கொஞ்சம் எம்பிளிச்சம் பழம் (அதாம்பா லெமன்) புழிஞ்சு ஊத்திக்கிட்டு போறேன்.

said...

என்னவோ பண்ணுங்க. பரோட்டாவை மரந்துடாதீங்க.

said...

புரோட்டாவா

அதெல்லாம் மேட்டுப்பாளயம் காரமடை ரோட்டில் டெலிபோன் எக்சேஞ்க்கு முன்னாடி இருந்த மணிஅண்ணன் மெஸ்ஸூல சாப்புட்டது.(1992ல்).அது எங்கப்பா கடைதாங்க, நானும் வேலை செஞ்சுருக்கேங்க
புரொட்டா மாஸ்டரா.


இப்போ அவசர கொத்து புரொட்டா வேணுமின்னா ,இங்கே இருக்கவே இருக்கு lasagña, precooked.
அதயே வெட்டி குத்தி போடறதுதான்.
கூடவே கொஞ்சம் திராச்சைரசம் உட்டுக்கறது.


நேரம் கிடைச்சா சிலோன், வீச்சு,முட்டை,கொத்து
எல்லாம் வீட்ல போடறதுதான்.

said...

//கொத்ஸு... நான் எப்பயா கட்சில சேந்தேன்? சந்தடி சாக்குல உங்க கட்சில ஆளே இல்லேனு ஒத்துக்கிட்டீங்க போல இருக்கு:-)) //

அப்படிப் போடுங்க நன்மனம்.

:-))))

எள்ளி நகையாடுதலைத் தவிர்க்க முடியவில்லை கொத்ஸ்!

போதாதாற்கு ஒரு மீன்கொத்தி வேற உள்ள போயிருக்கு!

said...

//போதை வரதே தெரியாதுன்னுதானே சொன்னாரு. வரதுன்னா சொன்னாரு. ஆனாலும் இப்படி அப்பாவியா இருக்கயேப்பா//

அண்ணாசாமி!
உங்களுக்கு பியரே பழக்கமில்லைன்னுதான் வெறும் வாட்டர் பாக்கெட் வாங்கி அடிக்கச் சொன்னேன்!

//இப்பதான் பாக்கெட்லயே 1.50/2.00 ரூபாய்க்கு எல்லா கடையிலயும் கிடைக்குதே!//

உமக்கு 1.50/2.00 ரூபாய்க்கு சாராயம் கிடைச்சதெல்லாம் எந்த காலத்துல?

said...

கொத்ஸ்,

பதிவு படிச்சேன் ! நல்ல செயல் முறை விளக்கம் ! .. சரி இத எதுக்குடா மெனக்கெட்டு வந்து ஒரு கமென்ட்டா சொல்லுறன்னு கேக்க கூடாது..

எதோ என்னால ஆன ஒரு கை 100 -க்கு

சிக்கிரம் சால்னா சம்மந்தமான பதிவை எதிர்பார்க்கிறேன் :-)

said...

//நானும் வேலை செஞ்சுருக்கேங்க
புரொட்டா மாஸ்டரா.//

பெருசு, அப்போ வீட்டில் கடையில் செய்வது போல் பரோட்டா செய்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்.

நான் சொன்னது சரியா இருக்கா? நீங்க வேற எதாவது வித்தியாசமாய் செய்வீங்களா?

said...

//எள்ளி நகையாடுதலைத் தவிர்க்க முடியவில்லை கொத்ஸ்! //

எள்ளி நகையாடுங்க. துள்ளி விளையாடுங்க. எல்லாம் 11ம் தேதி வரைக்கும் தானே....

said...

//அண்ணாசாமி!
உங்களுக்கு பியரே பழக்கமில்லைன்னுதான் வெறும் வாட்டர் பாக்கெட் வாங்கி அடிக்கச் சொன்னேன்! //

நீங்க குடிச்சா தலைவலி வர சமாச்சாரம் சொன்னீங்க. அவரு தலைவலி வந்தா குடிக்கிற சமாச்சாரத்தை பத்தி சொல்லறாரு. என்னவோ போங்க.

said...

//சரி இத எதுக்குடா மெனக்கெட்டு வந்து ஒரு கமென்ட்டா சொல்லுறன்னு கேக்க கூடாது..//

ஏம்பா, நம்மளைப் பத்தி தெரிஞ்சும் இப்படி கேட்கறியே. என்ன பின்னூட்டம் வந்தாலும் ஏன்னு கேள்வி கேட்காம அலவ் பண்ணறதுதானே நம்ம வழக்கம்.

//எதோ என்னால ஆன ஒரு கை 100 -க்கு//

ஒரு கைன்னு சொல்லிட்டு ஒண்ணே ஒண்ணு போட்டா எப்படி?

//சிக்கிரம் சால்னா சம்மந்தமான பதிவை எதிர்பார்க்கிறேன் :-)//

அதைத்தான் கால்கரி சிவாவிற்குப் பண்ணச் சொல்லி குடுத்தாச்சே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

said...

நல்லா இருங்க.

முட்டைய சாய்சில விட்டுடறேன், பரோட்டாவையும் விட்டுட்டு வெறும் வெங்காய வதக்கலை சாப்பிடட்டுமா?

said...

ரெண்டு மீன்கொத்தி உள்ள போச்சுனா. முட்டை இருந்தா என்ன, பரோட்டா இருந்தா என்ன. தெரியவா போகுது என்ற அருமையான தத்துவத்தை தந்த புரட்சிப் பெனாத்தலார் வாழ்க.

said...

கொத்தனாரே

வெங்காயம் வதங்கியதும் பிச்சு வெச்ச பரோட்டாவ போடறதுக்கு முன்னாடி தக்காளிய போட்டு பாருங்க.
தக்காளிய துண்டு துண்டா வெட்டி போடறதுக்கு பதிலா
கையிலெ புழிஞ்சு விடணும்.

//மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் -
ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி//
இதெல்லாம் போடறதுக்கு பதிலா , 1/2 ஸ்பூன் சக்தி மசாலா
இல்ல CBR கரம் மசாலா போட்டு பாருங்க.
சால்னா வுட்ட எபஃக்ட் கிடைக்கும்.
முட்டைய போடறத இருந்தா ,தக்காளிய முனனாடியே
போட்டு வதக்கிக்கோங்க, இல்லாட்டி தக்காளி தண்ணி உடும்.

said...

வீட்டு பரோட்டா

கூடிய விரைவில் படத்துடன் செயல் முறை விளக்கம்
அளிக்கப்படும்.
பதிவு தயாராகுதுங்கோ

said...

சால்னா பற்றிய சமையல் குறிப்பை என் வீட்டுகார அம்மாவிற்கு அவருடைய அலுவலகத்திற்கு போன் போட்டு கேட்டால் அவரும் கூலாக அந்த குளிருறைக்கும் பெட்டில் போன மாதம் செய்த்தது இருக்கும் நுண்ணலை அடுப்பில் 5 நிமிடம் வெப்புருக்கினால் போதும் என பதில் வந்தது. ஆமா ஆபிஸிலிருந்து என் வந்தீர்கள் என உபக் கேள்வி. நான் ஆபிஸில் தான் இருக்கிறேன். என் தமிழ்மண நண்பர்கள் பசியுடனும் கையில் மீன்கொத்தியுடனும் காத்திருக்கிறார்கள் என்றவுடன் எரிமலையாக வெடித்து யோவ் இன்னைக்கு சாயங்கலத்துக்குள் 30 லாப்டாப்களை ரெடிசெய்யுனும்னு இந்த சொட்டையன் டார்சர் பண்றான். நீ என்னடான்னா ஆபிஸில்ருந்து சமையல் குறிப்பா? சாயங்காலம் வீட்டுக்கு வா என போன் துண்டிக்கப் பட்டது.

சார், இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு போய் ஐஸ் வைத்து உங்களுக்கு சால்னா பண்ணிக் கொடுத்துறேன். அதுவரைக்கும் பொறுமை.

(ஏய் யாருப்பா அங்கே கால்கரிலே மல்லிகைப்பூ கிடச்சா 4 முழம் வாங்கியா அப்பதான் சால்னா கிடக்கும்)

said...

//தக்காளிய துண்டு துண்டா வெட்டி போடறதுக்கு பதிலா
கையிலெ புழிஞ்சு விடணும்.//

ஆஹா. இந்த மாதிரி டெக்னிக்தானே தெரியணும். இனிமே எல்லா சமையல் குறிப்பும் உங்க கிட்ட ஒருமுறை செக் பண்ணிகிட்டு அப்புறமா பதிவிடறேன்.

said...

//பதிவு தயாராகுதுங்கோ//

வெயிட்டிங். வெயிட்டிங்.

said...

//அவருடைய அலுவலகத்திற்கு போன் போட்டு கேட்டால் //

யோவ் சிவா, இதெல்லாமா ஆபிஸுக்கு போன் பண்ணிக் கேட்கறது. இப்போ உங்க வீட்டுக்கு வரதுக்கே பயமா இருக்கே.

//சாயங்காலம் வீட்டுக்கு வா என போன் துண்டிக்கப் பட்டது.//

தொடர்கதை மாதிரி ஒரு மர்மமா முடிச்சிருக்கீங்க. என்ன ஆச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க. ஆவலா இருக்கு.

//(ஏய் யாருப்பா அங்கே கால்கரிலே மல்லிகைப்பூ கிடச்சா 4 முழம் வாங்கியா அப்பதான் சால்னா கிடக்கும்)//

அல்வா எல்லாம் கிடைக்காதா? எங்க ஊரில் கிரண்ட் ஸ்வீட்ஸ் அல்வா மற்றும் திருநெல்வேலி அல்வா கிடைக்குமே....

said...

பெரு(சு)
அஹா தொழில் ரகசியம் !

ப்ரிட்ஜ்ல பழைய சிக்கன் குழம்பு இருந்தாலும் அத ஊத்தலாமா சால்னாவுக்கு சப்ஸ்டுட்டா ?

சிவா சார்,

ஆபிஸ்ல ஜிலேன்னு இருக்குறிங்கன்னு நல்லா தெரியுது !.. தமிழ் மண சாப்பாட்டு ரசிகர்களுக்குகாக இப்படியா ரிஸ்க் எடுக்குறது ?

கொத்ஸ்

நீங்க இருக்குற NJ ஒரு மினி இந்தியா ந்னு கேள்வி மெய்யாலுமா ? 100 பாத்து ஐலசா ! எதோ என்னால முடிச்சது ஐலசா!

சிட்டுவேசன் பாட்டு

மீன் கொத்தியே ! மீன் கொத்தியே !
என் மனதை கொத்திய மீன் கொத்தியே !
என்னிடம் மறுபடியும் வந்துவிடு !

said...

//ப்ரிட்ஜ்ல பழைய சிக்கன் குழம்பு இருந்தாலும் அத ஊத்தலாமா சால்னாவுக்கு சப்ஸ்டுட்டா ?//

நானே சொல்லறேன். ஊத்துங்க. ஊத்துங்க. :)

//தமிழ் மண சாப்பாட்டு ரசிகர்களுக்குகாக இப்படியா ரிஸ்க் எடுக்குறது ?//

ஆமாம். ஆமாம். நான் வந்துட்டுப் போன பின்னாடி இதெல்லாம் பண்ணுங்க சாமி.

///நீங்க இருக்குற NJ ஒரு மினி இந்தியா ந்னு கேள்வி மெய்யாலுமா? //

ஆமாம். உங்க டெவான் தெரு மாதிரிதான் ஊரே. எல்லாம் நம்ம மக்கள்தான். எங்க காலனி எல்லாம் நம்ம ஊரு மாதிரிதான் இருக்கும். நம்ம சாமான் எல்லாம் கிடைக்கும். ஒரு பதிவு போடறேன். :)

//சிட்டுவேசன் பாட்டு//

பாட்டெல்லாம் சரிதான். ஆனா வந்தாலும் தங்காதே. அதுனாலதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க - You dont buy beer, you only rent it!

//100 பாத்து ஐலசா ! எதோ என்னால முடிச்சது ஐலசா!//

என்னால முடிஞ்சதுன்னு நிறுத்தினா எப்படி? வாங்க வாங்க.

said...

22 வருஷ்மா அதே வேலையே செய்ஞ்சிகிட்டு இருந்தா ஆபிஸ் ஜிலேன்னுதான் இருக்கும். வீக என்ட்லே வீட்லே பெண்டு கழறும்.

போன் துண்டிக்கப் பட்டது பொறாமையில் தான். எங்கள் வீட்டில் அடிக்கடி கேட்கும் கமெண்ட் " இந்த மானேஜப் பசங்க எப்ப பார்த்தாலும் ஒரு ஸ்ப்ரட் சீட்டே பார்த்துகிட்டு, இல்லெ மீட்டிங் இல்லே கான்ப்ரன்ஸ் கால் சொல்லியே காலத்தே ஒட்ராங்க"

கொத்ஸ் அதெல்லாம் பயம் வேண்டாம் 17 வருட அனுபவம் . நீங்க வரதகுள்ளே எல்லாம் மற்ந்துடும்.

உசுப்பேத்துரதுக்கு ஒரு கணக்கு வழக்கே கிடையாதா?

கொத்ஸ்னு உசுப்பேத்தினங்க இப்ப கிரான்ட் ஸ்வீட்ஸ் அல்வாவா? வரும் போது ஒர் 1/4 கிலோ புடிச்சிக்கிட்டு வாங்க. அப்படியே முறுக்கு, தட்டை சீடை கிடைச்சாலும் ஒகே.

கனடா கஸ்டம்ஸ்லே இருக்கிற மோப்ப நாய்கள் கொஞ்சம் ஸ்மார்ட் கவனம்

said...

//உசுப்பேத்துரதுக்கு ஒரு கணக்கு வழக்கே கிடையாதா? //

உசுப்பேத்தலைன்னா எப்படி 100. அதனாலதான்.

//வரும் போது ஒர் 1/4 கிலோ புடிச்சிக்கிட்டு வாங்க. அப்படியே முறுக்கு, தட்டை சீடை கிடைச்சாலும் ஒகே.

கனடா கஸ்டம்ஸ்லே இருக்கிற மோப்ப நாய்கள் கொஞ்சம் ஸ்மார்ட் கவனம//

இப்போ என்ன சொல்லறீங்க. கொண்டு வரணமா? வேண்டாமா? கன்னாபின்னான்னு மாட்டி விடாதீங்க சாமி.

said...

சிவா

கால்காரியில் அல்வா கிடைக்காதா.
மல்லிப்பூ தேடும்போது அல்வாவும் சேத்துதான தேடணும்.

said...

As long as it is not a dairy product or fresh vegetables or meat it is ok to bring in.

Since you are coming form USA, the sniffers will not be there

சென்றமுறை இந்தியாவிலிருந்து 1/2 கிலோ பெரிய்ய்ய்ய்ய நெல்லிகாய்களை லாப்டாப் பையில் வைத்து கடத்திவிட்டேன்

said...

பெரு(சு), கால்கரி ஒரு வெள்ளைகார கிராமம். இதுப் பசுபையன்களின் (கௌபாய்ஸ்) பட்டணம். எங்கே போனாலும் மாட்டுக்கறி தான்.

பெருவிலே எப்படி?

said...

//மல்லிப்பூ தேடும்போது அல்வாவும் சேத்துதான தேடணும்.//

அதைத்தான் நானும் சொன்னேன். அவரு என்னை வாங்கிட்டு வான்னு சொல்லறாரு. அதுவும் சரி. அப்புறமா மோப்ப நாய் அது இதுன்னு பயமுறுத்தறாரு. என்னவோ போங்க.

said...

கார்த்தி

பழைய சிக்கன் குழம்பு இல்லாட்டி மட்டன் குழம்பு எது வேணுமுன்னாலும்
ஊத்துங்க.

ஆனா ''expiry date'' பாத்து செய்யுங்க.

ஆயிரம்தான் மாத்து ஐடியா குடுத்தாலுமே ,கல்லுலெ போட்டு டகடா,டகடா, டக் ன்னு
இசைத்தென்றல் தேவா ரேஞ்சுக்கு போட்டு குத்துனாதான் கொத்து பரோட்டா.

விஜய் படத்துல கொத்து பரொட்டா பாட்டு கேட்ட ஞாபகம்.

said...

கொதஸ்,
பணி நிமித்தமாக இன்னும் இரு வாரங்களில் நியூயோர்க் நகரம் வரவேண்டி உள்ளது. அப்படியே ஒருக்கால் நியூஜேர்சிக்கு வந்து உங்கள் கையாலேயே சுடச்சுட கொத்ஸ் பரோட்டா சாப்பிட்டா போச்சு.

said...

கொத்ஸ்,

// ஊத்துங்க. ஊத்துங்க. :)

ஊத்தட்டுமா ! ஊத்தட்டுமா ! பெரிய்வங்க நீங்களே சொல்லிட்டிங்க ! ஊத்திகிறேன்.. நான் சால்னாவ சொன்னேன் சாமி :-)

//நம்ம சாமான் எல்லாம் கிடைக்கும். ஒரு பதிவு போடறேன். :)

எதிர் பார்க்கிறேன் . இதுக்காக எங்க கிராமத்து பஸ்ஸ்டான்ட்லயும் (airport) & கிழ் நகரத்துலயும் (downtown) 2 கட் அவுட் வச்சிடுவோம் :-)

சாப்பாட்ட பத்தி பதிவு போட்டால 100 வர்றதுக்கு இந்த அன்பு தம்பியின் ஐலசா இருக்கு :-)

//மோப்ப நாய் அது இதுன்னு பயமுறுத்தறாரு.

எப்படியோ ஊசி ரெடியா வாங்கிவைக்க சொல்லிடுறோம்.. (10 இல்ல 100 தொப்புள சுத்தி) சும்மா டமாசு :-)

said...

//Since you are coming form USA, the sniffers will not be there//

சரி. சொல்லிட்டீங்கண்ணா. முடிஞ்சத கடத்திக்கிட்டு வரேன். :)

said...

//கால்கரி ஒரு வெள்ளைகார கிராமம். //

நான் எதுக்கு கால்கரி போகப்போறேன்னு நிறையா பேரு கேட்கறாங்க. உங்களைப் பத்தி சொன்னா அங்க என்ன பண்ணறீங்கன்னு அடுத்த கேள்வி. நான் என்னங்க சொல்லணும்? நீங்களும் பசுப்பையன்தானா?

said...

//பழைய சிக்கன் குழம்பு இல்லாட்டி மட்டன் குழம்பு எது வேணுமுன்னாலும்
ஊத்துங்க.//

வாரக்கடைசியில் மதியம் நல்ல ஹோட்டல் சாப்பாடு அடிச்சுட்டு நைட் லைட்டா சாப்பாடு போதும்ன்னு ஒரு சூப்பு ஒண்ணு பண்ணிச் சாப்பிடுவோம். அதில் அந்த வாரத்து மிச்சங்கள் எல்லாம் சமர்ப்பணம் ஆகும். அதுதான் ஞாபகம் வருது.

//ஆயிரம்தான் மாத்து ஐடியா குடுத்தாலுமே ,கல்லுலெ போட்டு டகடா,டகடா, டக் ன்னு
இசைத்தென்றல் தேவா ரேஞ்சுக்கு போட்டு குத்துனாதான் கொத்து பரோட்டா.//

ஒத்துக்கறேன். அதான் இது கொத்து பரோட்டா இல்லன்னு சொல்லியாச்சே.

said...

வாங்க வெற்றி.

உங்க பிளான் என்ன? உங்க மெயில் ஐ.டி. அனுப்புங்க. வெளியிட மாட்டேன். நான் ஒரு நாலு நாள் கால்கரி போயி சிவாவைப் பார்க்கப் போறேன். அந்த சமயத்தைத் தவிர மத்த நாளில் சந்திக்க முயலலாம்.

said...

//. நான் சால்னாவ சொன்னேன் சாமி :-)//

நான் ரெண்டுவாட்டி ஊத்திக்கச் சொன்னேன். ஒரு வாட்டி சால்னா. அடுத்தது....

//எதிர் பார்க்கிறேன் .//

போடறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

//சாப்பாட்ட பத்தி பதிவு போட்டால 100 வர்றதுக்கு இந்த அன்பு தம்பியின் ஐலசா இருக்கு :-)//

என்ன இது? சாப்பாடு பதிவுக்கு மட்டும்தான் கியாரண்டியா? என்ன பதிவு போட்டாலும் வரணும். ஓக்கே?

//எப்படியோ ஊசி ரெடியா வாங்கிவைக்க சொல்லிடுறோம்.. //

யோவ். ஒண்ணும் ஆகலைன்னாக்கூட வாங்கி வெச்சதுக்காக் போட்டுக்குங்கன்னு படுத்தாதீங்கய்யா. ப்ளீஸ். எனக்கு ஊசின்ன பயம்.

said...

சால்னா சாப்பிட இங்கே வாங்க
http://sivacalgary.blogspot.com/

said...

சால்னா சாப்பிட இங்கே வாங்க
http://sivacalgary.blogspot.com/

said...

// சால்னா சாப்பிட இங்கே வாங்க
http://sivacalgary.blogspot.com/ //

சால்னா சமையல் குறிப்புக்கு இங்க வாங்க - http://sivacalgary.blogspot.com

சால்னா சாப்பிட இங்க வாங்க - சிவா, கால்கரி, கானடா. :)

said...

நீங்க இங்க வந்து ரெண்டு வாட்டி சுட்டி குட்டுத்தீங்களா? நானும் வந்து ரெண்டு பின்னூட்டம் போட்டாச்சு. ஓக்கேவா?

said...

என்ன கொத்ஸ்,
ஒரு நாள் கணினி பக்கம் வரலை.. அதுக்குள்ள இப்படி கலக்கிட்டீங்க!! உங்க ஊருக்கு நான் வர்றேன்னு சொன்னதும், நீங்க அப்படியே கால்காரிக்கு எஸ்கேப்பா?!!! (ஐயோ, வெற்றி வேற இருக்காரா?!!) மன்னிக்கவும், தப்பிக்கறீங்களா?!!

பரோட்டா செய்முறை சூப்பர்... இப்போத் தான் அடை சாப்பிட்டுட்டு வந்தேன்.. அதுக்குள்ள திருப்பிப் பசிக்குதே..

இந்த செய்முறையை செஞ்சி பாக்கற மாதிரி இப்போதைக்கு ப்ளான் இல்லை.. அப்படியே புக் மார்க் போட்டு வச்சிக்கிறேன்.. எனக்கும் ஒரு 'ரங்கமணி' (அதாங்க உங்க தங்கமணிக்கு ஆண்பால்), கெடைக்காமலா போய்டுவாங்க... அப்போ பிரின்ட் பண்ணி செஞ்சி தரச் சொல்லுவோம்... :)

said...

ஆகா....கொத்சு பரோட்டா நல்லாத்தான் இருக்கு. ஆனா மைதாமாவுச் சமாச்சாரமெல்லாம் காலெரி ரொம்ப இருக்குன்னு சொல்றாங்களே...அத நெனச்சாதான் பக்குன்னு இருக்கு.

said...

// சென்றமுறை இந்தியாவிலிருந்து 1/2 கிலோ பெரிய்ய்ய்ய்ய நெல்லிகாய்களை லாப்டாப் பையில் வைத்து கடத்திவிட்டேன் //
எதெல்லாம் கடத்த வேண்டியதா இருக்கு.. :)

said...

வேற வழியில்லை. கடத்திதான் ஆகணும்.

நாம பாண்டிச்சேரில இருந்து கடத்துரதில்லையா(!?)

அது சரி யாராவது இதுவரை செஞ்சி பார்த்ததா சொன்னாங்களா?

said...

அட.. தாமதமா வந்தாலும், தெறமையா வந்துட்டோம்ல.. (அதாங்க, லேட்டா வந்தாலும்.. பழமொழியோட தமிழ் :) )

கொத்ஸ், நூறாவது பரோட்டாவுக்கு வாழ்த்துக்கள் :)

said...

//ஒரு நாள் கணினி பக்கம் வரலை.. அதுக்குள்ள இப்படி கலக்கிட்டீங்க!!//

ஹிஹி. எல்லாம் உங்க சப்போர்ட்தான்.

//உங்க ஊருக்கு நான் வர்றேன்னு சொன்னதும், நீங்க அப்படியே கால்காரிக்கு எஸ்கேப்பா?!!!//

ஒரு 3-4 நாள் போறேன். இதெல்லாம் ஒரு எஸ்கேப்பா?

//எனக்கும் ஒரு 'ரங்கமணி' (அதாங்க உங்க தங்கமணிக்கு ஆண்பால்), கெடைக்காமலா போய்டுவாங்க...//

அடப்பாவிங்களா? நாடு முன்னேற தொலைநோக்குத் திட்டம் இல்லை. இதுக்கெல்லாம் மட்டும் இப்படி திட்டம் தீட்டறீங்களே. பாவம் அந்த ரங்கமணி.

said...

//ஆனா மைதாமாவுச் சமாச்சாரமெல்லாம் காலெரி ரொம்ப இருக்குன்னு சொல்றாங்களே.//

இங்க எல்லா பாக்கெட்டுலையும் இந்த் காலெரி கணக்குப் போட்டு சந்தோஷமா சாப்பிட விடாம பண்ணறாங்க. அதுக்காக நம்ப பாரம்பரிய உணவுமுறைகளை (அப்படி போடு) கை விட்டுட முடியுமா?

ஹிஹி.

said...

என்னோடது நூறாவது இல்லையா.. ப்ச்..

அது சரி..

இந்த மீன்கொத்திப் பதிவுல பாண்டிச்சேரி பற்றி எழுதி நூறாவது பின்னூட்டம் கொடுத்த எங்கள் தளபதி சிபி...

வாழ்க வாழ்க..

said...

//எதெல்லாம் கடத்த வேண்டியதா இருக்கு..//

இங்க வறீங்க இல்ல. நம்ம ஆளுங்க என்ன எல்லாம் கொண்டு வருவாங்க தெரியுமா?

இப்போதான் ஒரு மாமி அவங்க பொண்ணுக்கு பத்து முழம் மல்லிகைப்பூ கொண்டு வந்து வாசத்திலேயே மாட்டிக்கிட்டாங்க. :)

said...

//இப்போதான் ஒரு மாமி அவங்க பொண்ணுக்கு பத்து முழம் மல்லிகைப்பூ கொண்டு வந்து வாசத்திலேயே மாட்டிக்கிட்டாங்க. :)
//

மல்லிப்பூ கூட கிடைக்காதா? அடப் பாவமே.. அதான் அல்வா வாங்கறோம்னு சிவா கிட்ட சீன் காட்டினீங்களா??

said...

//நாம பாண்டிச்சேரில இருந்து கடத்துரதில்லையா(!?)//

இது இன்னுமா நடக்குது?


//அது சரி யாராவது இதுவரை செஞ்சி பார்த்ததா சொன்னாங்களா?//

நக்கலா? நான் பதிவு போடறது எல்லாம் யாராவது படிக்கறாங்களா? வந்து பின்னூட்டம் போடறதோட சரின்னு நினைக்கிறேன்.

பண்ணறேன்னு சொன்ன ஆளு நீங்கதான். பண்ணிப் பார்த்தீங்களா? அதையும் கொஞ்சம் சொல்லுங்க சாமீ.

said...

நாமக்கல் சிபி வாழ்க.

இந்தப் பதிவின் ஆட்ட நாயகன் சிபி வாழ்க.

பின்ன என்ன. எனக்கு அடுத்த படியா அதிக அளவில் பின்னூட்டமிட்டு ஆட்ட நாயகன் விருதை பெறும் சிபி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

said...

//அட.. தாமதமா வந்தாலும், தெறமையா வந்துட்டோம்ல.. (அதாங்க, லேட்டா வந்தாலும்.. பழமொழியோட தமிழ் :) )//

ஆமாங்கக்கோவ். நீங்க வந்த நேரம்தான் பதிவு 100 பின்னூட்டங்களை தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு.

(மனசாட்சி: ஆமாம் கரெக்ட்டா 98 இருக்கும்போது வந்தா 100 வராமலேயா போயிடும்.)

//கொத்ஸ், நூறாவது பரோட்டாவுக்கு வாழ்த்துக்கள் :)//

நன்றி. நன்றி. எப்பவுமே இப்படி சொன்னா, உடனே 150 வர காத்திருக்கிறோம் அப்படி இப்படின்னு அடுத்த டார்கெட் ரெடி பண்ண வேண்டாமா? :)

said...

//நக்கலா? நான் பதிவு போடறது எல்லாம் யாராவது படிக்கறாங்களா? வந்து பின்னூட்டம் போடறதோட சரின்னு நினைக்கிறேன்.
//

இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.. படிக்காமயாய்யா உங்க பதிவுல பழைய பின்னூட்டத்துல இருக்கிறதெல்லாத்துக்கும் பதில் சொல்லிகிட்டு இருக்கோம்? படிக்காமயா எங்க தளபதி இத்தனை தீவிரமா, கோ ஆத்தர் மாதிரி எல்லா பின்னூட்டத்துக்கும் உங்களுக்கு முன்னாடி பதில் சொல்லிகிட்டு இருக்காரு? :)

said...

//என்னோடது நூறாவது இல்லையா.. ப்ச்.. //

வருத்தம் வேண்டாம். போன பின்னூட்டம் பார்க்கவும். அடுத்த இலக்கிற்கு தயாராகவும்.

//இந்த மீன்கொத்திப் பதிவுல பாண்டிச்சேரி பற்றி எழுதி நூறாவது பின்னூட்டம் கொடுத்த எங்கள் தளபதி சிபி...வாழ்க வாழ்க..//

பரோட்டா பதிவுன்னு நினைச்சேன். மீன்கொத்தி பதிவா மாறிப் போச்சா. என்ன இருந்தா என்ன.

சிபி வாழ்க. நானும் சொல்லியாச்சு.

said...

//மல்லிப்பூ கூட கிடைக்காதா? அடப் பாவமே.. அதான் அல்வா வாங்கறோம்னு சிவா கிட்ட சீன் காட்டினீங்களா??//

நான் மல்லிகைப்பூ கிடைக்கும்ன்னு சொன்னேனா? அது கூட எப்பமாவது கிடைக்குதே.

இவ்விடம் சுவையான அல்வா கிடைக்கும். (அட, நான் எங்க ஊரில சொன்னேங்க. நீங்க வேற)

said...

//பரோட்டா பதிவுன்னு நினைச்சேன். மீன்கொத்தி பதிவா மாறிப் போச்சா. என்ன இருந்தா என்ன. //
கொத்ஸ், பின்னூட்டங்கள் முழுக்க படிச்சு பாருங்க.. மின் கொத்தி பத்தி பேசினவங்க தான் அதிகமா இருக்காங்க :) மொதல்ல பார்த்தப்போ, இதுக்கு ஏன் கொத்ஸ் 'பரோட்டா'ன்னு பேரு வச்சீங்கன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

said...

ஹலோ பொன்ஸ்,

நிதானம். இதுக்குத்தான் ஒரு பழ மொழி சொல்லி இருக்காங்க. அதைச் சொன்னா எல்லாருமா சேர்ந்து உதைப்பீங்க.

நான் என்ன சொன்னேன். பதிவைத்தான் படிக்க மாட்டாங்க. இவன் என்ன எழுதினாலும் சரி. அது நல்லாவா இருக்கப் போகுது. சீக்கிரம் பின்னூட்ட விளையாட்டுக்குப் போகலாமுன்னுதானே வராங்க.

பின்னூட்டமெல்லாம் படிப்பாங்க. எல்லாரும் கலந்துகட்டி பதில் போடுவாங்க. இதுதான் நான் சொன்னது. வேணும்ன்னா கௌசிகனைக் கேட்டுப் பாருங்க.

பாருங்க. என்ன எழுதினேன்னு சரியா படிக்காம சண்டைக்கு வறீங்களே. இதைத்தான் சொன்னேன். புரியுதா?

said...

//கொத்ஸ், பின்னூட்டங்கள் முழுக்க படிச்சு பாருங்க.. மின் கொத்தி பத்தி பேசினவங்க தான் அதிகமா இருக்காங்க :) மொதல்ல பார்த்தப்போ, இதுக்கு ஏன் கொத்ஸ் 'பரோட்டா'ன்னு பேரு வச்சீங்கன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.//

பதிவு பரோட்டாவைப் பத்தி. கடைசி வரியில் ஒரு மென்ஷன் - மீன்கொத்தி பத்தி.

இப்போ நீங்க வந்து ஏன் பரோட்டான்னு பதிவு பேர்ன்னு யோசிக்கற அளவுக்கு மீன்கொத்தி பத்தி பேச்சு.

பொன்ஸ், I rest my case.

said...

I rest my case. -
அப்டின்னா? ரெஸ்ட் எடுத்துட்டு வந்து எழுதறென்னு சொல்றீங்களா? :) ;)

said...

இல்லை. தூக்கிட்டு இருக்கற பெட்டியை கொஞ்சம் கீழ வைக்கறேன்னு சொல்லறேன். வந்துட்டாங்க. :D

said...

//இவன் என்ன எழுதினாலும் சரி. அது நல்லாவா இருக்கப் போகுது. சீக்கிரம் பின்னூட்ட விளையாட்டுக்குப் போகலாமுன்னுதானே வராங்க. //

:-)


//ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ். //

"பின்ன! பின்னூட்டமெல்லாம் பரோட்டாவுக்கு வருதுன்னு நெனச்சீங்களா?

ஐயோ! ஐயோ! உங்களைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு" ன்னு கொத்ஸ் சொல்வாருன்னு பார்த்தேன்.

said...

//இந்தப் பதிவின் ஆட்ட நாயகன் சிபி வாழ்க.

பின்ன என்ன. எனக்கு அடுத்த படியா அதிக அளவில் பின்னூட்டமிட்டு ஆட்ட நாயகன் விருதை பெறும் சிபி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
//

நன்றி.நன்றி.நன்றி.

100வது வேற யாரவது போட்டுடப் போறாங்கன்னு கேப் பார்த்து போட்டேன். கரெக்டா பூடுச்சுப்பா! டேங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்.

said...

சிபி,

அதேதான். ஆனாலும் பப்ளிக்கா சொல்ல முடியுமா?

அதுனாலதான்.

said...

நீரே 150, 200 எல்லாம் போடணும்னு வாழ்த்துக்கள் சிபி.

கேப் வர வரைக்கும் வெயிட் பண்ணாம, நீங்களே கேப்பை உருவாக்குங்கள். இதுதான் அட்வைஸ் அய்யாசாமி சொன்னது.

said...

//பதிவு பரோட்டாவைப் பத்தி. கடைசி வரியில் ஒரு மென்ஷன் - மீன்கொத்தி பத்தி.//

கொத்ஸு, பதிவு போட்டதே இந்த ஒரு வரிக்கு தான்னு பப்ளிக்கா சொல்ல முடியாது தான் ஒத்துக்கறேன்.:-))

said...

நன்மனத்தாரே. அதே அதே.

said...

//நீரே 150, 200 எல்லாம் போடணும்னு வாழ்த்துக்கள் சிபி//

எதையும் நாம முடிவு பண்ணக்கூடாது கொத்ஸ். நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும்.

said...

சிபி,
இங்க (அதாவது நம்ம தமிழ்மணத்தில்) வந்து இப்படி விதி பத்தி எல்லாம் பேசக்கூடாது. அப்புறம் உங்களுக்கு பகுத்தறிவு இல்லை. அதனால நீங்க உண்மையான தமிழன் இல்லை என்றெல்லாம் கருத்துகள் வரலாம்.

ஒரு friendly advise. ;)

said...

//அப்புறம் உங்களுக்கு பகுத்தறிவு இல்லை. அதனால நீங்க உண்மையான தமிழன் இல்லை என்றெல்லாம் கருத்துகள் வரலாம்.//

இதற்கெல்லாம் யாராவது வந்து கருத்து சொல்லணுமா என்ன? என்னைக் கேட்டால் நானே சொல்லிவிட்டு போகிறேன்.

பகுத்தறிவு எனக்கு இல்லைதான்.
(பகுத்தறிவு - உளறல் என்று கால்கரி சிவா சொல்லியிருக்கிறார்)

பார்க்க

தாய்மொழியின் அடிப்படையில் நான் தமிழனும் அல்ல.

said...

கடந்த இரண்டு பின்னூட்டங்களில் ஸ்மைலி (அதாவது சிரிப்பி) போட மறந்து விட்டேன். :-)

said...

//கடந்த இரண்டு பின்னூட்டங்களில் ஸ்மைலி (அதாவது சிரிப்பி) போட மறந்து விட்டேன். :-)//

யப்பா, இதைக் கரெக்டா போடப்பா. இல்லைன்னா கைப்பு லெவலுக்கு கொண்டு போயிடுவாங்க. பாருங்க. பேச்சு, மூச்சில்லாம இருக்காரு.

said...

//பேச்சு, மூச்சில்லாம இருக்காரு//

அட! மீன்கொத்தி ஓவரா இறங்கியிருக்கும். ஃபிளாட் ஆயிருப்பாரு!

(ஆமா! யாரு பேச்சு மூச்சில்லாம இருக்குறது?)

said...

//நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும். //

கொத்ஸ், நீங்க் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க.. எங்க தளபதி, அடிப்படையில் ஒரு ரஜினி ரசிகர்.. அதான் மேட்டர் :)

said...

//ஃபிளாட் ஆயிருப்பாரு! //

வாசனைப் பாத்தா ஃபிளாட் ஆவாரு சரி. அது பத்தி படிச்சாலுமா? பின்ன இந்தப் பக்கமே காணுமே....

said...

அட போங்க பொன்ஸ்,

அது இன்னும் விசேஷம். சரி வேணாம். இன்னிக்கு அடி வாங்க முடியாது.

said...

பொன்ஸ்,
சில விஷயங்களை பட்டுன்னு வெளியில போட்டு உடைக்கக் கூடாது.
:(

said...

அதைத்தான் நானும் சொன்னேன் சிபி அண்ட் பொன்ஸ்.

said...

//வாசனைப் பாத்தா ஃபிளாட் ஆவாரு சரி. அது பத்தி படிச்சாலுமா? பின்ன இந்தப் பக்கமே காணுமே....
//

ஓ எங்க தலை கைப்புவைப் பத்தி சொல்றீங்களா?

அவருதான் யூ.எஸ்.ஐ போய் ரொம்ப நாள் ஆகுதே!

said...

என்னங்க தளபதி, இப்படி சிரிப்பி அழுவாச்சியாய்டுச்சு..

எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதி தானே.. என்ன, கொஞ்சம் செய்திகளுக்குத் தொடர்புள்ள நாள்ல நினைவுப் படுத்திட்டேன். அவ்வளவு தானே :) ;)

said...

//ஓ எங்க தலை கைப்புவைப் பத்தி சொல்றீங்களா?

அவருதான் யூ.எஸ்.ஐ போய் ரொம்ப நாள் ஆகுதே!//

சபாஷ். அவரை மறந்தும் போயாச்சா? அதென்ன யூ.எஸ்.ஐ?

said...

கொத்ஸ், தலைவர் ரொம்ப பிஸி.. கொஞ்ச நாள் கழிச்சு, அவரும் உங்களை மாதிரி "கைப்பு இட்லி"ன்னு பதிவு போடுவாரு :)..

என்ன, அவரு இன்னும் உங்களை மாதிரி பேச்சிலர் ஆகலை (நன்றி: தமிழ்மணம்.. எங்க படிச்சேன்னு நினைவு வரலை), அதுனால அவரே சுதந்திரமா வாங்கி சாப்பிட்ட இட்லி பத்தி எழுதுவாரு ;) :)

said...

//என்னங்க தளபதி, இப்படி சிரிப்பி அழுவாச்சியாய்டுச்சு..

எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதி தானே.. என்ன, கொஞ்சம் செய்திகளுக்குத் தொடர்புள்ள நாள்ல நினைவுப் படுத்திட்டேன். அவ்வளவு தானே :) ;)//

கண்டதையும் ஞாபகப்'படுத்தறீங்க', அவங்க சிரிப்பி அழாம என்ன செய்யும்...

said...

நீங்களும் விடாம சொல்லறீங்க. பார்ப்போம் அவரு எப்போ வராரு, என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.

எனக்கு என்னமோ சந்தேகமாகவே இருக்கு.

said...

//அவரு எப்போ வராரு, என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம். //

அவரு எப்ப வருவாரு, எப்படி வருவாருன்னு யாருக்கும் தெரியாது!
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவாரு!

:)

said...

//கண்டதையும் ஞாபகப்'படுத்தறீங்க', அவங்க சிரிப்பி அழாம என்ன செய்யும்...
//


//'படுத்தறீங்க'//


:))

said...

தலைவர், தொண்டர் எல்லாரும் இதையே சொல்லுங்க. அட போங்கப்பா.

said...

பொன்ஸ்,

பண்ணறதையும் பண்ணிட்டு சிரிப்பு வேறையா? நல்லா இருக்கு உங்க விளையாட்டு.

said...

நாம போய் ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள செஞ்சுரி அடிச்சு 150க்கு போயிட்டிங்களேப்பு.

இதுக்குத்தான் night watchman ஆ களம் எறங்கோணும்

said...

போதுமப்பா பரோட்டாக்கு கொஞ்சம் சால்னாவிற்கும் கொத்துங்க

said...

//நாம போய் ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள செஞ்சுரி அடிச்சு 150க்கு போயிட்டிங்களேப்பு.

இதுக்குத்தான் night watchman ஆ களம் எறங்கோணும்//

பெருசு, ஆனா பாருங்க இன்னிக்கு பூர ஆபீஸில் வேலை ஜாஸ்தி. வரவே முடியலை. நாளைக்கும் இப்படிதான். அதான் காலையில் ஒரு அவசர ஆட்டம் ஆடினேன்.

said...

//போதுமப்பா பரோட்டாக்கு கொஞ்சம் சால்னாவிற்கும் கொத்துங்க//

அண்ணா, இது என்ன நியாயம்? உங்களுக்கும் கொத்த சொல்லுங்க. ஆனா இங்க போதும்ன்னு சொல்லலாமா?

said...

கொ.ப.செ என்றால் கொத்ஸ் பரோட்டா செய்பவரா கொத்ஸ்?

said...

கொ.ப.செ என்றால் கொத்ஸ் பரோட்டா செய்பவரா கொத்ஸ்?

said...

////போதுமப்பா பரோட்டாக்கு கொஞ்சம் சால்னாவிற்கும் கொத்துங்க//


தோ! வந்துகிட்டே இருக்கோம்ல!

said...

//கொ.ப.செ என்றால் கொத்ஸ் பரோட்டா செய்பவரா கொத்ஸ்?//

சிபி,

நல்ல சமையல் குறிப்பு ஒண்ணு போடுங்க. உங்களையும் கொ.ப.செ ஆக்கலாம். அதாங்க கொத்தனாருக்கு பசிவர செய்பவர்.

said...

//தோ! வந்துகிட்டே இருக்கோம்ல!/

100 போட்ட நீங்களே 150க்கும் கரெக்டா வந்துட்டீங்களே. வெரிகுட். இந்த மாதிரி நாலு இடத்துக்குப் போய் களப்பணி செய்யுங்க. வேணாம்ன்னு சொல்லலை. ஆனா இங்க வராம இருக்காதீங்க.

said...

சரி இவ்வளவு தாமதமா நான் வரலாமா? 200க்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்.
ஆமா கொஞ்சம் வயசாயிடுச்சுன்னா இதெல்லாம் பார்த்து சாப்பிட வேண்டியிருக்கே!
கொழுப்புச் சத்து எவ்வளவுன்னு பரேட்டா பாக்கெட் பின்னாடி போட்டிருக்கு. 38 சதவீதமா!
சாம்

said...

சாம்,

எப்போ வேணாலும் வரலாம். வெறும் வாழ்த்து சொன்னா போதுமா, 200 வர வரைக்கும் கூட இருந்து உதவி பண்ணுங்க.

எப்பவோ ஒரு நாள்தானே சாப்பிடறோம், கணக்குப் பார்க்காம சாப்பிடுங்க. சொல்லிட்டீங்கல்ல இனிமே அடிக்கடி சாப்பிட முடியாது. :(

said...

காலரிக் கணக்குப் பார்க்கலாமா? பரோட்டா + 3 முட்டை.
பரோட்டா பாக்கெட்டுக்கு பின்னாடி என்ன எழுதியிருக்கு.
சத்துணவு ( nutrition) தெரிஞ்சவங்க கொஞ்சம் உதவிக்கு வாங்க!
இந்த ஊரில வெஜிடேரியனா இருந்தும் மாட்டிக்குவோம் போல இருக்கே!
சாம்

said...

சா(ம்)மி,

விடுங்கய்யா. ரொம்ப கணக்குப் பார்த்தாலும் கஷ்டம். அன்னிக்கு ஒரு நாள் அல்வா சாப்பிடாம இருப்போம். ரொம்ப பயமுறுத்தறீங்களே.

said...

அட இதெல்லாம் பின்னூட்ட கணக்குக்குத்தான்! :-))))

said...

//அட இதெல்லாம் பின்னூட்ட கணக்குக்குத்தான//

அதெல்லாம் சரிதான் ஆனா ரொம்ப பயமுறுத்தறீரே. வேற எதாவது பேசலாம்.

said...

இ.கொ...

நீவிர் உண்மையிலேயே very funny guy...the kingfisher உண்மையிலேயெ அசத்தல் காம்போ கண்டிப்பா...இருங்க இந்த try பண்ணிட்டு வந்து சொல்றேன்.

காட்டான் (தெகா)

said...

ஆஹா, அங்க வந்து ஆளைக்காணுமேன்னு கம்பிளெய்ண்ட் குடுத்துட்டு இங்க வந்தா உங்க வருகை. அசத்தல் டைமிங் சாமி.

ஆமா //the kingfisher உண்மையிலேயெ அசத்தல் காம்போ// மீன்கொத்தியும் நானுமா அல்லது பரோட்டாவுமா?

said...

இ.கொ,

இது எப்படி இருக்குகுகுகுகுகூகூ...லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவான் இந்த காட்டான்... ;-))

said...

//இ.கொ,

இது எப்படி இருக்குகுகுகுகுகூகூ...லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவான் இந்த காட்டான்... ;-))//

எல்லாரும் இப்படி பஞ்ச் டயலாக் விடறீங்களே. நானும் ஒண்ணு பாத்து வச்சுக்கணும்.

நான் என்ன சொல்லப் போறேன். வாங்க,வாங்க. அவ்வளவுதான்.

said...

//இந்த try பண்ணிட்டு வந்து சொல்றேன்//

காட்டான்,

நீங்க டிரை பண்ணப் போறது பரோட்டாவா அல்லது மீன்கொத்தியே!

மீன் கொத்தியே... மீன் கொத்தியே......

said...

ஒருத்தரை நல்ல இருக்க விடாதீங்க.அவருதான் காம்போன்னு சொல்லி இருக்காரே.

said...

//நான் என்ன சொல்லப் போறேன். வாங்க,வாங்க. அவ்வளவுதான்//

"அப்புறம் மறக்காம களப்பணி ஆற்றுங்க!"

இதை விட்டுட்டீங்களே கொத்ஸ்!

:-)

said...

சிபி,
அதெல்லாம் விட்டுருவோமா? அவர் பதிவிற்கே போயி சொல்லிட்டு வந்துட்டோமில்ல. அங்கன போயி பாருங்க.

said...

ஒரு வெண்பா எழுதுங்களேன் கொத்து பரோட்டாவைப் பற்றி.
உங்க வெண்பா தொடரை மிஸ் பண்ணிவிட்டேன்

said...

சாம்,

இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டுட்டீங்களே. நான் ரொம்ப வெண்பாவா யோசிச்சு பைத்தியம் பிடிச்சு அலையறேன் அப்படின்னு நண்பர்கள் எல்லாம் திட்டினதுனாலதான் இப்படி ஒரு பதிவு போட்டேன்.

இப்போ நீங்க மீண்டும் முருங்கை மரம் ஏற வச்சுட்டீங்களே. சரி இதுதான் சாக்குன்னு ஒண்ணு முயற்சி பண்ணறேன்.

said...

சுமாராய் ஒரு முயற்சி. பொன்ஸக்காவை கூட்டியாந்து சரி செய்யச் சொல்லலாம்.

சட்டென வெங்காயம் தக்காளி தானரிந்து
முட்டையும் ரொட்டியும் மொத்தமாய் வெட்டியே
சால்னாவும் சேர்த்து சமைத்தாலே கொத்துபார்
நாள்தோரும் நீயிதை நாடு!

said...

தெரிஞ்சவங்க பெரியவங்க பார்த்து தீர்ப்பு சொல்லணும். எனக்கு வெண்பா ஞானம் போறாது.
ஆனா புரோட்டாக்காக வெண்பா எழுதின முதல் புலவர் என்கிற பெருமை உங்களைச் சேரும்.
வாழ்த்துக்கள்!!!

said...

சாம்,

ரொம்ப நன்னிங்க. இனிமே நம்ம பதிவு எல்லாத்துக்கும் (வெண்பா பதிவுகளையும் சேர்த்து) வந்து ஆதரவு குடுங்க.

said...

கொத்ஸ், வெண்பாவும் நல்லா இருக்கு.. பரொட்டா மாதிரியே.. இன்னிக்கு என்னால இவ்வளவு தான் முடிஞ்சது.. மாலை - இரவுக்குள் வேற வெண்பா கொண்டு வர முயற்சிக்கிறேன் ;)

said...

//கொத்ஸ், வெண்பாவும் நல்லா இருக்கு.//

உங்களை வெண்பா எழுதச் சொன்னா நான் எழுதினது நல்லா இருக்குன்னு சொல்லறீங்க. அப்புறம் உங்க பதிவுல போயி வெண்பா எழுதாம கை பரபரங்குது. வாய் நமநமங்குதுன்னு சொல்லறீங்க. நான் என்னதான் செய்யறது? ஓண்ணுமே புரியலையே.

said...

அய்யா இங்க என்ன தான் நடக்குது...பத்து ரூபா கொத்து இப்படி எல்லாராலயும் கொத்தப்படுதே...

அதுவும் சூடு ஆறின பொறவு...???

said...

வாங்க ரவி,

இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. ஹோட்டல் மாதிரி அடுத்த தடவை சமைக்கற வரை பழசையே அப்பப்போ சூடு பண்ணித்தருவோம்.

நம்ம பழைய பதிவெல்லாம் பாருங்க. இதெல்லாம் பத்தி நிறையா எழுதி இருக்கோமே.

said...

//ஆனா புரோட்டாக்காக வெண்பா எழுதின முதல் புலவர் என்கிற பெருமை உங்களைச் சேரும்.//

பொற்கிழிக்காய் வடித்தாரே சான்றோர் இன்று
பரோட்டாவிற்கு படிக்கும் வெண்பா!

said...

கொத்து பரோட்டா!! Superங்க!!

said...

பதிவை சொல்லறீங்களா? பண்ணிப் பார்த்து சொல்லறீங்களா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சிவபாலன்.

said...

பதிவை படித்தவுடன் கல்லூரி நாட்கள் நியாபகம் வந்திடிச்சிங்க!

பதிவு Superங்க!!

செய்து பார்கவேண்டும்!!

நன்றி!!

said...

//பதிவை படித்தவுடன் கல்லூரி நாட்கள் நியாபகம் வந்திடிச்சிங்க!//

அண்ணா,
சமையல் குறிப்பு படிச்ச உடனே கல்லூரி ஞாபகம் வந்திடிச்சா? எந்த கேட்டரிங் காலேஜ் அண்ணா நீங்க? :)

said...

//பொற்கிழிக்காய் வடித்தாரே சான்றோர் இன்று
பரோட்டாவிற்கு படிக்கும் வெண்பா!//

பார்த்திபரே,
குமரன் இச்சபையில் விதித்திருக்கும் வழிமுறை உமக்குத் தெரியாதா? இதைப்போன்ற பாக்கள் பதிவிலிட்டால் விளக்கமும் தரவேண்டுமென்ற விதிமுறையைத்தான் மறந்துவிட்டீரா?

said...

கல்லூரி பக்கத்தில் இருந்த hotelசாப்பிட்டது நியாபகம் வந்திடிச்சிங்க!!

said...

நான்: அப்பா! இப்படி விளக்கமா சொல்லியிருக்கலாமில்ல.

மனசாட்சி: முதலிலேயே அவரு சொல்லியிருந்தா ஒரு பின்னூட்டத்தோட போயிருக்கும். இப்போ 6 பின்னூட்டம் கிடைச்சுதில்ல.

நான்: ஹிஹி

said...

பார்த்தி,
உன் நிலமை இப்படி ஆய்டுச்சேய்யா.. சிபி வார்த்தைக்கு நீ விளக்கம் சொல்வது போய், உன் வெண்பாவே புரியலைன்னு சொல்லிட்டாரே கொத்ஸ்?!!!

said...

நன்றி !!

said...

பொன்ஸ்,

நான் அவர் எழுதினது புரியலைன்னு சொன்னேனா? சபை விதிமுறைகளை ஞாபகப் படுத்தினேன். அவ்வளவுதான். அது மட்டுமில்லாது, நமக்குத் தோன்றும் கோணத்தை விட, அவ்வெண்பாவைப் படைத்த கவிஞனின் பார்வை வித்தியாசமாக இருக்கக்கூடும். நாம் அதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதானே என் ஆசை.

(பார்த்தி, உம்மை கவிஞன் ரேஞ்சுக்குக் கொண்டு போயாச்சு. நம்மளைக் கை விட்டுடாதேய்யா.)

said...

அய்யோ சிவபாலன் சார்,

நம்ம கோனார் நோட்ஸ் எல்லாம் படிக்கலையா? இப்படி ஒத்த வார்த்தையில் நன்றின்னு சொன்னா நான் எப்படி ஆட்டத்தை தொடர்ந்து நடத்தறது?

said...

டகட கடகல் சத்தம் கேட்டு
விகட கவியே னானும் கோட்டு
முழியே அடையா ளமுமாய் கொண்ட
சிபியே இந்தா கொப

நாளுமே கொத்தும் மீன்கொத் தியும்
தானுமே ஆனது தொப்பை.

said...

சார்,

எனக்கு உன்மையா விளையாட தெரியாது!! என்னை அணியில் சேர்த்தால் நட்டம் அணிக்குதான்!!

said...

how to type tamil using unix box ?

pinnittangeeppu..


paarthhathum vaangi parOttavai seythunam
paariyaalum koodi pagirnthu undaalO
paarnitham palvagai inbamum palanaay
paavaiyaalE kittum paar


rathnam

said...

சிவபாலன் சார்,

நாங்களெல்லாம் மட்டும் பிறக்கும்போதேவா பின்னூட்டம் போடுவது எப்படின்னு கத்துகிட்டு வந்தோம். எல்லாம் இங்க நாலு பேரைப் பார்த்து கத்துகிட்டதுதான்.

பாருங்க, நீங்களே விளையாடத் தெரியாதுன்னு மெதுவா 175லேர்ந்து 190 வரை கொண்டு போகலையா? அவ்வளவுதான் விளையாட்டு.

கவலையே படாதீங்க, இன்னும் கொஞ்சம் நாளில் டாக்டரேட் வாங்கற அளவுக்கு தேறிடுவீங்க பாருங்க.

said...

தேங் யூ சார்!!

( சார், இதை வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

said...

வாங்க பெரு(சு),

வாரயிறுதி இன்னைக்கு என்ன மெனு மீன்கொத்தியா? சும்மா பாட்டெல்லாம் தூள் பறக்குது?

//சிபியே இந்தா கொப//

இது மட்டும் என்ன? எதோ மிஸ் ஆனது மாதிரி ஒரு ஃபீலிங்?

said...

அந்த காலத்துல பொற்கிழிக்காக புலவர்கள் பாட்டு படிச்சாங்க! இப்ப என்னடான்னா பாவம் நிலைமை ரொம்ப மோசமாயி ஒரு பரோட்டாவுக்காக பாட்டு படிக்கிறான்.

அம்புட்டுதான்.
இதுக்கு மேல உள்குத்து/வெளிக்குத்து ச்சே! உள் கருத்து, வெளிக் கருத்து எல்லாம் கேக்கப் பிடாது!

said...

உண்மை தான் சிவபாலன்.. இந்த கொத்ஸ் கூடச் சேர்ந்தீங்கன்னா பின்னூட்ட விளையாட்டு சும்மா கைப்புள்ளையக் கலாசறது மாதிரி ரொம்ப சுலபமாய்டும்.. ஓ, நீங்க வ.வா.சவிலும் இல்லையா.. ஏன், அம்ரிதா வெட்கிரைண்டர்ல அரைக்கிற மாதிரி.. ஒகேவா கொத்ஸ்?

said...

//தேங் யூ சார்!!

( சார், இதை வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)//

சரியாப் போச்சா. இன்னும் ரெண்டு பதிவுதான். அப்புறம் பாருங்க, உங்க ரேஞ்சே வேற.

(இதை அவர் கூட இருந்து ஏத்திவிடும் நண்பர் ஸ்டைலில் படிக்கவும்.) :-D

said...

என்ன கொத்ஸ், எல்லாத்துக்கும் மீனிங்க் கேக்கறீங்க.. கோப்பைய, வெண்பா விதிகளின் படி கொப ஆக்கிட்டாரு.. மீன்கொத்தி வேற விளையாடுது ;)!!!

said...

ப.ம.க மற்றும் வ.வா.சங்கத்தினரின் கூட்டுச் சதி அம்பலம். கைப்புள்ளயின் கதி என்ன? திடுக்கிடும் தகவல்கள்.

said...

பொன்ஸ்,

வ.வா.ச அப்டின்னா என்னங்க?

அம்ரிதா வெட்கிரைண்டர்ல அரைக்கிற மாதிரி அப்டின்னா என்னங்க?

please சொல்லுங்க!!

said...

பார்த்தி, இங்கயும் வந்து விளம்பரமா?!! போதும்யா.. நிறுத்து எல்லாத்தையும்.. எங்க உன்னோட கட்டையா ஒருத்தன் இருப்பானே? அவனைக் காணோம்?!!!