Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Saturday, June 07, 2008

மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!

நம்ம வெண்பா வாத்தி ஜீவா இருக்காரே. எதையாவது ஆரம்பிச்சு வைக்கிறதுல வல்லவருப்பா. வெண்பாப் பதிவு ஆரம்பிச்சாரு. அப்புறம் என்னமோ ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமானம் அப்படின்னு படம் பிடிக்கப் போயிட்டாரு. இப்போ அதையெல்லாம் தாண்டி கதை எழுதச் சொல்லி அழைப்பு விட்டு இருக்காரு.

"சிவாஜி வாயிலே ஜிலேபி" - இதுதாங்க தலைப்பு. இந்தத் தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு கதையைப் போட்டு இதே மாதிரி நீயும் எழுதுடா ராஜான்னு நம்மளைக் கூப்பிட்டு இருக்காரு. அவர் ஒரு மீள் பதிவு போட்டு அதே மாதிரி எழுதச் சொன்ன காரணத்தினாலும், ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒண்ணு போட்டு இருக்கும் காரணத்தினாலும், இப்போ இருக்கும் ஆணி புடுங்கல்ஸில் இதுதான் முடியும் என்ற காரணத்தினாலும் நானும் ஒரு மீள்பதிவு செஞ்சுக்கறேன்.

நிறையா படங்கள் இருக்கும் பதிவானதுனால அதை எல்லாம் எடுத்து இங்க போடுவதுக்குப் பதிலா அந்தப் பதிவின் சுட்டியைத் தரேன். சங்கடப்படாமல் ஒரு சொடுக்கு சொடுக்கி அங்க போய் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுங்கப்பா.



இன்னிக்கு நம்ம வலையுலகில் பேசப்படும் ஒரு விஷயம் டிப்ஸ் (இதுக்குத் தமிழில் என்ன?) டிப்ஸ் தருவது தப்புன்னு ஒரு பக்கமும் குடுக்காமல் போனால்தான் தப்பு என்று பேசாமல் அப்போ அவனுக்குக் குடுத்தா சரியா என்று மறு பக்கமும் பேசப்படுவதை எல்லாரும் படித்து இருப்பீர்கள். டிப்ஸ் குடுக்க மாட்டேன் எனச் சொன்னால் முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மேலே சொன்ன பதிவோடு இதோ என் டிப்ஸ்!

என்ன இதுவும் மீள்பதிவுதான். நம்ம பாபா வந்து ஒரு சமயம் ஆறு வார்த்தைகளில் கதை எழுதுவது பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. அந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைப்பது பத்தி எல்லாம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி நான் எழுதியது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

கடைசியா இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களின் பாரம்பரியத்தின் படி நாமும் மூணு பேரைக் கூப்பிட்டு யான் பெற்ற இன்பம் பெறுவீரே நீர் மூவரும் அப்படின்னு சொல்லணுமாம். அந்த முறையில் நான் அழைக்கும் மூவர்
  1. பெனாத்தல் சுரேஷ் (எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்)
  2. சென்னைக் கச்சேரி தேவ் (செயல் படாத தலைவர் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிய ஒரு வாய்ப்பு)
  3. வல்லிம்மா (அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)

ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை என்று எதாவது எழுதித் தொலைத்து மேலும் மூவரையும் அழைத்து அவர்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 (இது போடாம எப்படி?): மேல சிவப்பில் இருக்கும் உவ்வேக்கிற்கு பொருள் தெரியாமல் நீங்களா எதாவது எடுபட்டவை, விடுபட்டவைன்னு எதையாவது எழுத ஆரம்பிக்காம என்கிட்ட கேளுங்க. விஷயம் என்னான்னு சொல்லறேன்.

டிஸ்கி 2: தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன். ஆனால் நட்பின் அடிப்படையில் அவருடைய சதி வேலைக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்தான் இந்தப் பதிவு. இதனால் வரும் எல்லா வினைகளும் அவருக்கே!

Sunday, June 24, 2007

சிவாஜி - (நம்) வாயிலே ஜிலேபி!!!

நானும் சிவாஜி பார்த்தாச்சு!!!


பி.கு. : பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னது - " எனக்கு விவேக் காமெடியை விட ரஜினி காமெடிதான் பிடிச்சு இருக்கு."

பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பி.பி.பி.கு: தலையெழுத்து. இதுக்கெல்லாம் 16 டாலர் குடுத்து பார்த்தது.

பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.

பி.பி.பி.பி.பி.கு: நடிக்க முயற்சிக்காத வரையில் பார்க்க ஷ்ரேயா நல்லா இருக்கு. நயன் ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டாங்க?



பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!



வர்ட்டா!!

Saturday, May 19, 2007

MXXIV - பெனாத்தலாரின் வா சிஜி கோட்

டிஸ்கி: இது ஒரு விளம்பரப் பதிவு. படிக்கப் பிடிக்காதவர்கள் இன்னும் சில நாட்களில் நேரடியாக பெனாத்தலார் பதிவுக்குப் போகலாம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்ற வள்ளுவர் வாக்கின் படி எண்ணும் எழுத்துமே ஒருவனின் இரு கண்களாக கருதப்படும் தமிழ் கூறும் நல்லுலகிலே இந்த எண்ணையும் எழுத்தையும் இணைத்து ஒரு புது வரலாறு படைக்க இருக்கிறார் நமது மின்னொளி மன்னன் பெனாத்தலார் அவர்கள். இது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் எண் 1024. அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த எண் சாதாரணமான எண் இல்லை. கணினித் துறையில் ஒரு முக்கியமான எண். 10 பைனரி ஸ்விட்சுகள் கொண்டு வைக்கக்கூடிய கணினி முகவரிகள் 1024. இதனால்தான் கணினியின் மெமரி 1024பைட் துண்டுகளால் அளக்கப்படுகிறது. பைனரியில் 1024 என்ற எண்ணை எழுத வேண்டுமானால் 10,00,00,00,000 என எழுத வேண்டும்.

இப்படிப் பட்ட 1024 என்ற எண்ணை வைத்து என்ன மாயம் செய்யப் போகிறார் நம் மின்னொளி மன்னன் எனப் பார்க்கலாமா. அதற்கு இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். அது வரை அவர் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டமாக போடுங்கள். சரியாக சொல்பவருக்கு ஒரு சர்'ப்ரைஸ்' இருக்கலாம்.

MXXIV - இது என்ன அப்படின்னு கேட்பவர்களுக்கு பதில் பின்னூட்டங்களில் வரும்.

அப்டேட் : பெனாத்தலாரின் 1024 பதிவு