Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Sunday, January 13, 2008

படப் பெட்டியில் பல சரக்கு

மாசம் ஒரு முறை பதிவு போட நல்ல வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர். என்னமோ ரெண்டு படம் எடுத்தோமா பதிவைப் போட்டோமான்னு அப்படின்னு ஒரே ஜாலியா இருக்குங்க. ஆனாப் பாருங்க, இந்த முறை அவங்க குடுத்து இருக்கும் தலைப்பு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம்தான். எடுத்ததில் தேறிய இந்த ஐந்து படங்களைப் போட்டு இருக்கிறேன். முதலிரண்டு படங்களை போட்டிக்கு அனுப்ப உத்தேசம். (பிற்சேர்க்கை : முதல் படம் தலைப்பிற்கேற்றதா என்ற குழப்பம் இருப்பதால் இரண்டாவது மற்றும் நான்காவது படங்களைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.)

இது வந்து அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் சேர்த்தியான்னு தெரியலை. ஆனா அன்றாடம் பயன் படுத்தும் இடங்களில் ஒன்று. வாயில் கதவைத் திறந்து வீட்டினுள் வரும் வழி. இதைப் பயன்படுத்தாம இருக்க முடியுமா? இதை சேர்த்துக்கலாமுன்னா இதுதாங்க நம்ம சாய்ஸ்!



இப்பருவத்தில் பொதுவாக அரிதான சூரிய வெளிச்சம் இந்த முறை சக்கை போடு போடுகிறது. அது ஜன்னல் வழியே வரும் காட்சியை படம் பிடிச்சது. கொஞ்சம் வடக்கே போனாக்கூட பனி கொட்டுது. ஆனா எங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லை! :-(



என்னங்க தொழில் அப்படின்னு கேட்டா விற்பனை துறை அப்படின்னு சொல்லாம கையில் பை, கழுத்தில் டை, வாயில் பொய் அப்படின்னு சொல்லுவாங்க. இங்க நம்ம டை கழுத்தில் இல்லாம கீழ கிடக்கு. இந்த டைகள் எல்லாம் இப்படி சுத்தி வெச்சது நம்ம ஜூனியர்.



உலகத்தில் எல்லா அசைவிலும் இசை இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த சிடி அசைந்தால் இசை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நான் அசைந்தால் இசையும் அகிலமெல்லாமே!



போன் கண்டார் போனே கண்டார்...



அடுத்த மாசமாவது இம்புட்டு யோசிக்காம படம் எடுக்கற மாதிரி தலைப்பு குடுங்கப்பா. அப்புறம் எல்லாருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துகள்! உலகில் இன்று முக்கியமான தேவை அமைதிதான். அதனால இந்த அமைதி நாயகன் படத்தையும் போடறேன். நீங்களும் வேண்டிக்குங்க.



பி.கு. - இது போன வருடம் பொங்கலுக்குப் போட்ட பதிவு!

Sunday, December 09, 2007

பூ பூக்கும் மாசம் தை மாசம் - ஆனா எங்க ஊரில் இல்லை!

நான் பாட்டு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை உசுப்பி விட்டு புகைப்படப் போட்டியில் கலந்துக்க வைச்சாரு நம்ம வெண்பா வாத்தி. அப்புறம் பாருங்க. நம்ம பதிவை கணக்கில் கூட எடுத்துக்கலை. சரி போகட்டும். ஆனா அந்த முறை எடுத்த படத்தை அப்படியே போட்டுட்டேன். ஆனா எடுத்த படத்தை கொஞ்சம் மேம்'படுத்தி'ப் போடணும் அதுக்காக பிக்காஸா, ஜிம்ப் என என்னென்னமோ சொல்லிக்குடுக்கப் பார்த்தாரு. ஆனா நம்ம மண்டையில்ல ஏறும் மேட்டர்தானே ஏறும். சரி போகட்டும்.

இந்த மாதம் தலைப்பு என்னடான்னா மலர்களாம். அங்க நான் சொன்னேன் - "புதுசா படமெடுக்கப் போகலாமுன்னு பார்த்தா மரத்துல இலை கூட இல்லை!! நல்லா தலைப்பு குடுத்தீங்க போங்க!!" நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைன்னா இந்த படத்தைப் பாருங்க.

பின்ன என்னங்க. இங்க எல்லாம் மரங்கள் இலை இல்லாம இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பைக் குடுத்தது பூமியில் வடப்பக்கம் வாழும் தமிழர்களுக்கு எதிரான சதிதான். இளவேனிற் காலம் ஆரம்பித்திருக்கும் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது. இதற்குத் துணை போன அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் கண்டனங்கள்.

சரி போகட்டும். பரணில் (அட அந்தப் பரண் இல்லைங்க, இது நம்ம பரண்) கிடந்த படங்களை கொஞ்சம் தூசி தட்டிப் போட்டு இருக்கேன். இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை எல்லாம் இது வரை செஞ்சதில்லை. இதான் முதல் முறை. நல்லா இருக்கான்னு சொல்லுங்க.



என்னடா இது சுவாரசியமா எதுவும் இல்லையே என்று ரென்சனாகும் நண்பர்களுக்காக இது. ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நண்பர்கள் சமீபத்தில் பதிவு போட்டு இருக்காங்க. ஒண்ணு நம்ம கால்கரி சிவா, ரெண்டாவது விட்டது சிகப்பு. ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்டைலில் எழுதி இருந்தாலும் சிவாண்ணா எழுதி இருக்கும் பின்குறிப்பு என்னமோ நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கு. நீங்களும் ரெண்டு பதிவையும் பாருங்க.

Friday, November 16, 2007

சா(ை)ல சிறந்தது!

என்னாத்த சொல்ல? இந்த மாசம் இந்த போட்டோ பதிவு குழுவினர் குடுத்து இருக்கும் தலைப்பு "சாலை". நிறையா பேர் ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஜோதியில் என்னையும் சேரச் சொல்லி நம்ம வெண்பா வாத்தி படுத்தி எடுக்கறாரு. நாமளும் படம் எடுக்கத் தெரியாத விஷயத்தை வெளிய சொல்ல வேண்டாமேன்னு ரொம்ப வேலை அது இதுன்னு பந்தா விட்டா, யோவ் ரோட்டைதானே போட்டோ எடுக்கணும் சும்மா வீட்டு வாசலில் போயி எடுத்து அனுப்புமய்யா அப்படின்னு அன்பா ஆணையிட்டுட்டாரு.

சரின்னு நானும் ஒரு நாள் காலையில் ஆபீஸ் போகும் முன் காமிராவை எடுத்துக்கிட்டு போய் நின்னா, பனி விழும் நகர்புறம், தெரியாதே எதிர்புறம் அப்படின்னு பாலுமகேந்திரா படம் மாதிரி ஒரே பனியா இருக்கு. சரின்னு ஒரு படம் எடுத்தாச்சு.


அப்புறம் அந்த இடத்தையே ரெண்டு நாள் கழிச்சு பளிச்சுன்னு வெயில் அடிக்கும் போது போய் எடுத்தேன். எடுத்துட்டு தங்கமணி கிட்ட காமிச்சா ரோட்டை படம் எடுக்கச் சொன்னா என்ன இது வீட்டைப் படம் எடுத்துட்டு வந்து நிக்கறீங்க? ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியுமான்னு வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
சரி அவங்க சொல்லிட்டாங்களேன்னு இந்தப் பக்கம் வந்து ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் படம் எடுத்துப் போட்டாச்சு. இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் எல்லாம் பச்சை யூனிபார்மை கழட்டிவிட்டு கலர் கலராய் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு அட்டகாசமாய் இருப்பதால் சாதாரண சாலைகளும் சும்மா சூப்பரா இருக்கு. கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருந்தால் நல்ல லொகேஷனாய் போய் படம் பிடித்திருக்கலாம். ஆனால் நம்ம சோம்பேறித்தனம்தான் ஊரறிஞ்சதாச்சே!!



நமக்கு இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் கட் பேஸ்ட் எல்லாம் தெரியாது. அதனால எடுத்த படத்தை அப்படியே போட்டுடறேன். நடுவர்களா, கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்கப்பா.