சமீபத்தில் வித்யா எழுதியிருந்த இந்தப் பதிவைப் படித்ததால் என்னுள் எழுந்த சில கேள்விகள்.
1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா?
(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)
2) இத்தொடரைத் தயாரிக்கும் ராடான் நிறுவனத்தின் படைப்புக் குழுத் தலைவர் (கெட் என்றால் என்ன என்று புரிவதற்கே சற்று நேரமானது. ஹெட் என எழுதி இருந்தால் கொஞ்சம் எளிதாகப் புரிந்து இருக்கும்.) ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.
ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? இது வித்யா மட்டுமில்லை. நம்மிடையே பலர் செய்து வருவதுதான். ஒருவர் எதிர்கருத்து சொன்னால் நீர் மட்டும் ஒழுக்கமோ என்றுதானே பெரும்பாலும் பதில் வருகிறது. இது வலையுலகில் மட்டும் இல்லை, அரசியலாகட்டும், சாமானியர்கள் சிலரிடையே நடக்கக்கூடிய விவாதங்களில் ஆகட்டும், கருத்தை விடுத்து கருத்து சொல்பவர் மீது தாக்குதல்கள் நடத்துவது எந்த விதத்தில் சரி? எந்த விதத்தில் ஆரோக்கியமானது? நம்மிடையே ஏன் இது இவ்வளவு தூக்கலாக உள்ளது?
3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா?
(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)
2) இத்தொடரைத் தயாரிக்கும் ராடான் நிறுவனத்தின் படைப்புக் குழுத் தலைவர் (கெட் என்றால் என்ன என்று புரிவதற்கே சற்று நேரமானது. ஹெட் என எழுதி இருந்தால் கொஞ்சம் எளிதாகப் புரிந்து இருக்கும்.) ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.
ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? இது வித்யா மட்டுமில்லை. நம்மிடையே பலர் செய்து வருவதுதான். ஒருவர் எதிர்கருத்து சொன்னால் நீர் மட்டும் ஒழுக்கமோ என்றுதானே பெரும்பாலும் பதில் வருகிறது. இது வலையுலகில் மட்டும் இல்லை, அரசியலாகட்டும், சாமானியர்கள் சிலரிடையே நடக்கக்கூடிய விவாதங்களில் ஆகட்டும், கருத்தை விடுத்து கருத்து சொல்பவர் மீது தாக்குதல்கள் நடத்துவது எந்த விதத்தில் சரி? எந்த விதத்தில் ஆரோக்கியமானது? நம்மிடையே ஏன் இது இவ்வளவு தூக்கலாக உள்ளது?
3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
(எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?)
பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை.
டிஸ்கி 1: நான் குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பது இல்லை. அதனால் அதில் வரும் சம்பவங்கள் எனக்குத் தெரியாது. என் கேள்விகள் வித்யாவின் பதிவைப் படித்ததால் மட்டுமே.
டிஸ்கி 2: இதன் மூலம் திருநங்கைகளைத் தவறாகத்தான் காண்பிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஊனமுற்றவர்களை, சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களை, சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சார்ந்தவர்களை, இவர்கள் போன்றே திருநங்கையர்களையும் தனியாகக் கட்டம் கட்டி கேலி செய்யாதிருத்தல் நலம்.
டிஸ்கி 3: நான் என் கேள்விகளில் தவறாகவோ மனதைப் புண்படுத்துவது போலவோ எதுவும் சொல்லவில்லை என்றே நம்புகிறேன். அப்படியே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். அதே சமயம் இங்கு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே அனுமதிக்க இருக்கிறேன். என் அடிவருடித்தனத்தைப் பற்றியோ, என் வந்தேறித்தனத்தைப் பற்றியோ அல்லது என் குதம் விற்பனைக்கோ வாடகைக்கோ கிடைக்குமா என்பது போன்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. (கட்டாயம் இவைகள் வரும். வலையுலகில் நான் இருக்கும் சில காலத்தில் அறிந்து கொண்டது இது. காரணம் கேள்வி நம்பர் 2)
டிஸ்கி 4 : இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. அதைப் பார்த்துதானே வந்தீங்க. அதுக்காகத்தான். அர்த்தம் எனக்கும் தெரியாது.
டிஸ்கி 1: நான் குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பது இல்லை. அதனால் அதில் வரும் சம்பவங்கள் எனக்குத் தெரியாது. என் கேள்விகள் வித்யாவின் பதிவைப் படித்ததால் மட்டுமே.
டிஸ்கி 2: இதன் மூலம் திருநங்கைகளைத் தவறாகத்தான் காண்பிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஊனமுற்றவர்களை, சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களை, சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சார்ந்தவர்களை, இவர்கள் போன்றே திருநங்கையர்களையும் தனியாகக் கட்டம் கட்டி கேலி செய்யாதிருத்தல் நலம்.
டிஸ்கி 3: நான் என் கேள்விகளில் தவறாகவோ மனதைப் புண்படுத்துவது போலவோ எதுவும் சொல்லவில்லை என்றே நம்புகிறேன். அப்படியே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். அதே சமயம் இங்கு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே அனுமதிக்க இருக்கிறேன். என் அடிவருடித்தனத்தைப் பற்றியோ, என் வந்தேறித்தனத்தைப் பற்றியோ அல்லது என் குதம் விற்பனைக்கோ வாடகைக்கோ கிடைக்குமா என்பது போன்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. (கட்டாயம் இவைகள் வரும். வலையுலகில் நான் இருக்கும் சில காலத்தில் அறிந்து கொண்டது இது. காரணம் கேள்வி நம்பர் 2)
டிஸ்கி 4 : இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. அதைப் பார்த்துதானே வந்தீங்க. அதுக்காகத்தான். அர்த்தம் எனக்கும் தெரியாது.