Showing posts with label Debate. Show all posts
Showing posts with label Debate. Show all posts

Wednesday, March 21, 2007

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

சமீபத்தில் வித்யா எழுதியிருந்த இந்தப் பதிவைப் படித்ததால் என்னுள் எழுந்த சில கேள்விகள்.

1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா?

(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)

2) இத்தொடரைத் தயாரிக்கும் ராடான் நிறுவனத்தின் படைப்புக் குழுத் தலைவர் (கெட் என்றால் என்ன என்று புரிவதற்கே சற்று நேரமானது. ஹெட் என எழுதி இருந்தால் கொஞ்சம் எளிதாகப் புரிந்து இருக்கும்.) ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.

ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? இது வித்யா மட்டுமில்லை. நம்மிடையே பலர் செய்து வருவதுதான். ஒருவர் எதிர்கருத்து சொன்னால் நீர் மட்டும் ஒழுக்கமோ என்றுதானே பெரும்பாலும் பதில் வருகிறது. இது வலையுலகில் மட்டும் இல்லை, அரசியலாகட்டும், சாமானியர்கள் சிலரிடையே நடக்கக்கூடிய விவாதங்களில் ஆகட்டும், கருத்தை விடுத்து கருத்து சொல்பவர் மீது தாக்குதல்கள் நடத்துவது எந்த விதத்தில் சரி? எந்த விதத்தில் ஆரோக்கியமானது? நம்மிடையே ஏன் இது இவ்வளவு தூக்கலாக உள்ளது?

3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
(எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?)
பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை.

டிஸ்கி 1: நான் குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பது இல்லை. அதனால் அதில் வரும் சம்பவங்கள் எனக்குத் தெரியாது. என் கேள்விகள் வித்யாவின் பதிவைப் படித்ததால் மட்டுமே.

டிஸ்கி 2: இதன் மூலம் திருநங்கைகளைத் தவறாகத்தான் காண்பிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஊனமுற்றவர்களை, சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களை, சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சார்ந்தவர்களை, இவர்கள் போன்றே திருநங்கையர்களையும் தனியாகக் கட்டம் கட்டி கேலி செய்யாதிருத்தல் நலம்.

டிஸ்கி 3: நான் என் கேள்விகளில் தவறாகவோ மனதைப் புண்படுத்துவது போலவோ எதுவும் சொல்லவில்லை என்றே நம்புகிறேன். அப்படியே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். அதே சமயம் இங்கு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே அனுமதிக்க இருக்கிறேன். என் அடிவருடித்தனத்தைப் பற்றியோ, என் வந்தேறித்தனத்தைப் பற்றியோ அல்லது என் குதம் விற்பனைக்கோ வாடகைக்கோ கிடைக்குமா என்பது போன்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. (கட்டாயம் இவைகள் வரும். வலையுலகில் நான் இருக்கும் சில காலத்தில் அறிந்து கொண்டது இது. காரணம் கேள்வி நம்பர் 2)

டிஸ்கி 4 : இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. அதைப் பார்த்துதானே வந்தீங்க. அதுக்காகத்தான். அர்த்தம் எனக்கும் தெரியாது.

Thursday, March 08, 2007

துளசி டீச்சரும் உஷாக்கா பதிவும்!

நம்ம வெண்பா பதிவையும் சேர்த்து ஒரு 50 பதிவாவது வந்திருக்கும் நம்ம மகளிரை வாழ்த்தி. ஆனாலும் மகளிர் தினமானதுனால அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி ஆரம்பிக்கறதுதானே மரியாதை.

வாழ்த்துக்கள் உலகப் பெண்ணினமே!

இப்போ நம்ம சொல்ல வந்த ஸ்பெஷல் மேட்டர். தமிழ் வலையுலகின் மூத்த பதிவாளர்களில் ஒருவரும், எங்கள் கிளாஸ் டீச்சரும், பின்னூட்ட நாயகியும், நம்ம விக்கி பசங்களில் ஒருவருமான துளசி டீச்சர் அவர்கள் இன்னைக்கு அவங்களோட 500ஆவது பதிவு போட்டு இருக்காங்க! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லைங்க. உண்மையிலேயே 500ஆவது பதிவு! அது மட்டுமில்லை இதுல அவங்க வலைப்பூவான துளசிதளம் இல்லாமல், விக்கியில் எழுதிய பிரியாணிப் பதிவு உட்பட மற்ற இடங்களில் எழுதிய பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் இந்த மாபெரும் சாதனையை அவங்க பதிவின் கடைசியில் ஒரே ஒரு வரியா போட்டு இருக்கும் தன்னடக்கத்தை என்னவென்று சொல்வது. ஒரு லெவலுக்கு மேல Numbers do not matter என்பது சரிதான் போல இருக்கிறது. வரலாறு, சமையற் குறிப்பு, கதைகள், மொக்கைப் பதிவு என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து, எந்த விதமான சண்டை சச்சரவிலும் பங்கு கொள்ளாமல் அனைவரும் தன் மீது பெரு மரியாதை கொள்ளுமாறு இருக்கும் துளசி டீச்சரை மனதார வாழ்த்துவோம். இதே போல் தொடர்ந்து எழுதி விரைவில் ஆயிரம் பதிவு தந்த அபூர்வ துளசி என்ற பட்டம் பெற எங்கள் வாழ்த்துக்கள் டீச்சர். படிக்கும் நீங்களும் பின்னூட்டத்தில் உங்க மரியாதையை செலுத்திடுங்க!

அடுத்தது நம்ம உஷாக்கா போட்ட பெண் பதிவர்கள் டாப் என்ற பதிவு! பெண் வலைப்பதிவர்கள் பத்தி உஷாக்கா எழுதின இந்த பதிவில் கொஞ்சம் ஓவராகவே அவங்க நல்லவங்க அப்படின்னு எழுதி இருந்தாங்க. அதிலிருந்து

கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.
அதை நம்ம பாணியில் நான் கொஞ்சம் கலாய்க்கப் போயி அந்த சமயத்தில் நம்ம இட்லிவடையார் போட்டு இருக்கும் எந்த பெண் பதிவர் டாப் என்ற பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் பத்தி இப்படிப் பேசப் போக

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உஷாக்கா, நீங்க இந்த ஒற்றுமை பத்தி எல்லாம் எழுதினதுனால உங்க கிட்ட கேட்கறேன். நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. நமக்கு பிடிச்ச 5 பேரை சொல்லச் சொன்னா எதுக்குங்க இவ்வளவு எதிர்ப்பு? கொஞ்சம் விளக்குங்களேன்.
நம்ம பிரேமலதாக்கா கன்னாப்பின்னான்னு டென்ஷனாகிட்டாங்க. அவங்க நம்ம கருத்துக்களை ஆணாத்திக்க கருத்துகள் என்ற ரீதியில் சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாயாட, கூட நம்ம தம்பி நாகை சிவா வந்து அவர் பங்குக்கு பிட்டைப் போட விவாதம் நல்லா களை கட்டுற நேரத்தில் உஷாக்கா தூங்கப் போயிட்டாங்க. போட்ட பின்னூட்டம் எல்லாம் தேங்கிப் போச்சு! அந்த பதிவில் 40 பின்னூட்டங்களுக்கு மேல போனதுனால இது ஒரு ஸ்பெஷல் விளம்பரம். எல்லாரும் இந்த ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துக்கிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்கள்ஸ்.

பரபரப்பான அந்த விவாதத்தில் இருந்து சில பகுதிகள்

இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
எல்லா சராசரி மனிதர்கள் கிட்ட இருக்கற குணங்கள் எதுவுமே பெண் பதிவர்கள் இடையே இல்லை அப்படின்னு உஷாக்கா சொன்னாங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் இடிச்சுது.

அதாவது போட்டி மனப்பான்மை ஆண்களுக்கே உரியதுன்னு சொல்ல வறீங்களா பிரேமலதாக்கா? நீங்களே இதை திரும்பி படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரல?

இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சிலசமயம் "நல்லா இருங்க"ன்னு மட்டும் வாழ்த்திட்டுப் போற psychology தெரிஞ்சிருக்கணும்.
நார்மலா இருக்குறவங்க எல்லாரும், ஆம்பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, சில நேரங்களில் சில இடங்களில், கும்மி, பாலிடிக்ஸ், வம்பு தும்பு எல்லாம் செய்யத்தான் செய்வாங்க. அதெல்லாம் இல்லை. அது ஆண்கள் மட்டுமே செய்வாங்க. பெண்கள் செய்ய மாட்டாங்கன்னு உஷாக்கா சொன்னதும், இப்போ நீங்க அதையே உங்க கன்க்ளூஷனா சொல்வதும்தான், முரணா இருக்கு. அதைச் சொல்ல வந்த எனக்கு நீங்க குடுத்த புத்திசாலி பட்டம் நல்லாவே இருக்கு.