டிஸ்கி: இது ஒரு சோதனைப் பதிவு. சொல்லப் போவது என் சோகக் கதையை. வேண்டாதவர்கள் சாய்ஸில் விட்டு விடுங்கள்.
சனிக்கிழமை வரை ஒழுங்காக தமிழ்மண முகப்பில் வந்து கொண்டிருந்த எனது பதிவுகள், திடீரென ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகளில் வரக் காணோம். இத்தனைக்கும் நான் வார்ப்புருவில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. என்ன செய்வது எனத் தெரியாது திணறி நின்ற பொழுது இந்தப் பதிவு கண்ணில் பட்டது.
தமிழ்மண நிர்வாகக் குழுவினர் இனி 30 பின்னூட்டங்களுக்கு மேல் போகும் பதிவுகளை திரட்ட போவதில்லை என்ற அவர்களது முடிவை வெளியிட்டு இருக்கும் பதிவு இது. இந்த அறிவிப்பு இவர்கள் இன்றுதான் வெளியிட்டு இருந்தாலும் ஒரு வேளை அதற்குரிய மென்பொருளை நேற்றே சோதனை செய்து இருப்பார்களோ, அதனால்தான் முப்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும் அந்தப் பதிவு தெரியாமல் போனதோ என சந்தேகம்.
இந்த பதிவும், இதில் வரும் மறுமொழிகளும் தமிழ்மணத்தில் சரிவரத் தெரிந்தால் வார்ப்புருவில் கை வைக்க வேண்டாம். அல்லது அதில் என்ன பிரச்சினை எனப் பார்க்க வேண்டும். அந்த சோதனைக்காகவே இந்தப் பதிவு. இவ்வளவு நேரம் பொறுமையாக எதேனும் இருக்கும் எனப் படித்து இருந்தீர்களானால் என்னை மன்னிக்கவும். இது உண்மையிலேயே ஒரு சோதனைப் பதிவு.
Showing posts with label Comment aggregation. Show all posts
Showing posts with label Comment aggregation. Show all posts
Monday, February 26, 2007
Subscribe to:
Posts (Atom)