செய்தி 1
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொன்னதை ரொம்பவே அக்கறையா எடுத்துக்கிட்டாங்க பிரிட்டனில் எஸ்ஸெக்ஸ் என்ற ஊரில் வாழும் காரியா தம்பதியினர். இவங்க இந்தியாவில் இருந்து இந்த ஊருக்கு வந்த பொழுது அருகில் கோவில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அதனால தன் வீட்டில் இருக்கும் அறை ஒன்றையே கோவிலா மாத்திட்டாங்களாம். மாத்தினது மட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு யாரு வேணா இந்தக் கோயிலுக்கு வரலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம். இது வரை அப்படி வந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு பேர் தெரியுமா? அதிகமில்லை 50,000 பேர்தானாம்!! இதில் வந்தவங்களுக்கு இவங்க குடிக்க தேநீர் போட்டுக் குடுக்கறாங்களாம். இவங்க உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போகும் வரை வந்தவங்களுக்கு சாப்பாடே உண்டாம். பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோவிலுக்கு வயசு 29 வருடங்கள்! மேலதிக தகவல்கள் இங்கே!
29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே! இந்தக்கோயிலுக்கு வந்தவங்க, ஏறினவங்க, வழிபட்டவங்க மார்க்கெட்டிங் சரியாகப் பண்ணல போல!
செய்தி 2
இந்தச் செய்தி டோக்கியோ நகரத்தில் இருந்து. இங்கு வசிக்கும் ஒருவர் தன் வீட்டில் உணவுப் பொருட்கள் காணாமல் போவது குறித்துக் கவலை கொண்டாராம். அதற்காக ஒரு புகைப்படக் கருவி ஒன்றினை அமைத்து அதன் படங்கள் தனது செல்பேசியில் வருமாறு அமைத்தாராம். அதில் எதோ நடமாட்டம் தெரியவே காவலர்களைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்திருக்கிறார். எல்லாக் கதவுகளும் மூடப் பட்டிருந்த வீட்டில் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. கடைசியாக சாமான்கள் வைக்கும் அறையில் (எங்கள் ஊரில் குச்சில், பாவுள் என இரண்டு அறைகள் உண்டு!) ஒரு மேல்தட்டில் மூதாட்டி ஒருவர் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனராம். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் வீட்டைப் பூட்டாமல் சென்ற பொழுது உள்ளே நுழைந்தவர் அங்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்து, குளித்து, வசித்து வந்திருக்கிறார். இப்படி அவர் அங்கு இருந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவாம். மேலதிகத் தகவல்கள் இங்கே!
இப்படிதான் ஒரு கதை சொல்லுவாங்க, டெல்லி சவுத் ப்ளாக்குல ஒரு புலி உள்ளே நுழைஞ்சு பல வருஷமா குமாஸ்தாங்களை அடிச்சு சாப்பிட்டுக் கிட்டிருந்ததாம், யாரும் கண்டே பிடிக்கலையாம்.. ஒரு நாள் டீ கொடுக்கற ஆளை அடிச்சு சாப்பிட்டுச்சாம், உடனே மாட்டிக்கிச்சாம்!
செய்தி 3
நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம். இது உண்மையில் சாத்தியம் என்றால் எனக்குக் கீழ்பாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்புவதில் முனைப்பாக இருப்பீர்கள். ஆனால் இது இன்று சாத்தியமாகிவிட்டது என்பதுதான் உண்மை. புதரகத்தில் (வேற எங்க!) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஒன்றில் குரங்குகளின் மூளையில் ஒரு கருவியைப் பொருத்தி அவை தமது சிந்தனையின் மூலமாக ஒரு செயற்கைக் கையை நகரச் செய்து உணவினைப் பெற்றுக் கொள்கின்றனவாம். உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு தமது எண்ணங்களின் மூலமாக தமக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வதற்கு இது முதல் படியாம். இந்தச் செய்தியைப் படியுங்கள் அங்கு இருக்கும் நகர்படத்தைக் கட்டாயம் பாருங்கள்.
அதாவது, டெல்லியில இருக்கற செயற்கைக் கைய வச்சு சென்னைலே இருக்கற ஆளைக் கண்ட்ரோல் பண்ணி கர்நாடகா எலெக்சன்லே ஜெயிக்க முயற்சிக்கறது போல! அது சரி குரங்குக்காவது இது வொர்க் அவுட் ஆகுதே!
செய்தி 4
நம்ம பசங்க நிறையா பேரு கண்ணுல தண்ணி வர வைக்கப் போகும் செய்தி இது. எகிப்து நாட்டில் கெய்ரோ நகரின் மிகப் பிரபலமான விடுதி கிராண்ட் ஹையாட் என அழைக்கப்படும் இவ்விடுதி. இவ்விடுதியின் சொந்தக்காரரான அப்துல் அசீஸ் அல் ப்ராஹீம் என்பவர் மது அருந்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் இனி இவ்விடுதியில் மது பரிமாறப்படமாட்டாது என உத்தரவு போட்டு உள்ளார். அது மட்டுமில்லாது அங்கு இருந்து அனைத்து மதுபுட்டிகளையும் கழிவறையில் கொட்டச் சொல்லி விட்டார். அதனைச் செய்து முடிக்க ஒரு நாளுக்கும் மேல் ஆனதாம்!
எகிப்து இஸ்லாமிய நாடு என்பதால் இது சரி என்று ஒரு சாரரும் சர்வதேச விடுதிகள் நடத்தும் பொழுது அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பது தவறு, ஒரு விமானத்தில் செல்லும் பொழுது எப்படி ஒரு இஸ்லாமியருக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறதோ அது போல் மேலை நாட்டவருக்கு அவருக்குத் தேவையானதைத் தருவது தவறில்லையே என மற்றொரு சாரரும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவை எடுத்தவர் சௌதி மன்னரின் உறவினர் என்பதால் சௌதி அரசு எப்படி அவர்களது முடிவுகளை எகிப்து நாட்டில் திணிக்கப் பார்க்கின்றனர் என்று வேறு ஒரு கோணம். எது எப்படி இருந்தாலும் கீழே கொட்டாமல் நம்ம பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இது பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு இது.
இந்தத் தண்ணியால அங்க பிரச்சனை, அந்தத் தண்ணியால இங்க பிரச்சனை. அரசியலில் இதெல்லாம் தண்ணி பட்ட பாடுப்பா!
செய்தி 5
இரவின் மௌனத்தைக் கலைக்கும் துப்பாக்கிகளின் சத்தங்கள், அதனைத் தொடரும் அபாய சங்கின் ஒலி, இவைகளினூடே பெருத்த மூச்சுடன் ஓடும் மனிதர்களின் காலடி ஓசை. அந்த அமாவாசை இருளை அடித்து விரட்டி வி்டும்படியான தேடொளி. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்கிறது புதரக எல்லை ரோந்துப் படை. ஆனால் இது நடக்கும் இடத்தில் இருந்து புதரக எல்லை 400 மைல்கள் தொலைவு!
ஆம். வேலை வாய்ப்பும் நல்ல வாழ்க்கையையும் தேடி புதரகத்தினுள் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறி நுழைபவர்களில் மெக்ஸிகோ நாட்டினர்தான் அதிகம். அப்படி செய்வதற்கு முடியாதவர்கள் அதனை அனுபவிக்கவென்றே ஒரு பொழுதுபோக்குப் பூங்காவினைக் கட்டியுள்ளனராம். அங்கு நடக்கும் கூத்துதான் இது. மேலும் படிக்க இதோ சுட்டி.
இதெல்லாம் பூங்காவுல நடக்குற விளையாட்டா? இங்க எல்லாம் பூங்கா நடத்துறதையே விளையாட்டாச் செய்யறாங்க. பாவம் பிபி ஸ்ரீநிவாஸ்.
செய்தி 6
சுவிஸ் கைக்கடிகாரத் தயாரிப்பாளர்களான ரோமெய்ன் ஜெரோம் என்ற நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் கைக்கடிகாரத்தின் பெயர் "Day & Night". மூன்று லட்சம் டாலர்கள் ($300,000) விலை பெறும் இந்த கடிகாரத்தின் சுவாரசியமே இதில் நேரம் பார்க்க முடியாது என்பதுதான்! பூமியின் புவியீர்ப்பினைக் கொண்டு பகலா இரவா என்று மட்டுமே தெரிவிக்குமாம். இந்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு, மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட எஃகில் செய்யப்பட்ட கடிகாரங்கள். நல்லா ஊரை ஏமாத்தறாங்கப்பா. எதுக்கும் இதை ஒரு முறை படிச்சுக்குங்க.
ஆமாமாம், நம்ம ஊர்லே கூட ஒரு சோப்பு வித்தாங்க, சுத்தமான கங்கை நீர்லே தயாரிக்கப்பட்டதுன்னு.. மார்க்கெட்டிங் உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!
டிஸ்கி 1: புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல். அதான் அங்க இங்க தேடிப் பிடிச்ச சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக் கிட்டேன்.
புதசெவி - புதரகம் தயவு செய்து விலகவும் னு கம்யூனிஸ்டுகளும் போட்டுக்கொள்ளலாம், புண்ணாக்கு, தயவு செய்து விட்டுறுன்னு கொத்தனாரை நிறுத்தச் சொல்லலாம் - இதெல்லாம் விட்டுட்டு இந்த அவியலுக்குப் போயி டிஸ்கி!
டிஸ்கி 2: நம்ம பெனாத்தலாரின் பூர்வீக கிராமம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வெழுதி (அதாங்க தமிழ்ல சிவில் சர்வீஸ் எக்ஸாம் என்று நாம் சொல்வது) அதன் தரவரிசையில் 156ஆக வந்து சாதனை படைத்துள்ளார். பல முறை தோல்வியுற்றாலும் விடா முயற்சியால் இந்த வெற்றியை பெற்ற அவருக்கு நம் வாழ்த்துகள். பொறியியல் படித்து பல வேலைகள் செய்துள்ள இவர் ஒரு சமயத்தில் ஒரு திரையரங்கின் கணினித் துறையில் வேலை செய்யும் பொழுது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவும் பரிமாறியுள்ளாராம். ஆனால் இவரைப் பற்றிய செய்திக்குறிப்பிற்கு ரீடிப் தளம் தந்துள்ள தலைப்பு - " The waiter who will be an IAS officer". எதற்காக இப்படி ஒரு பரபரப்புத் தலைப்பு? புதசெவி.
பரபரப்புத் தலைப்பு வைப்பது என்ன தமிழ் வலைப்பூக்களின் தனி உரிமையா? எல்லாம் ஹிட் ரேட் ஏத்தத்தாம்பா -the Engineer who made an IAS Officer னு போட்டிருந்தா கொத்தனாராச்சும் போயி பாத்திருப்பாரா? வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா.
Saturday, May 31, 2008
Monday, May 12, 2008
அமீரக இந்தியர்கள், உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சோயா எண்ணை மற்றும் ரப்பர்!!
போன பதிவைப் படிச்சுட்டு, மொக்கை போடறதே வழக்கமா வெச்சு இருக்கியே என்னிக்காவது கொஞ்சம் உருப்படியா எதாவது எழுதக் கூடாதான்னு நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு. இவரை சந்தோஷப்படுத்தற மாதிரி பதிவு போட முடியுமான்னு பார்க்கத்தான் இந்தப் பதிவு.
எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.
ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.
அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.
பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.
இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?
இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.
செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.
எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.
ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.
அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.
பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.
இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?
இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.
செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.
Wednesday, May 07, 2008
மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)
பெனாத்தலாருக்கு இலவசம் எழுதும் கடிதம். எல்லாரும் சாமிக்கு கடிதம் எழுதும் போது நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஒரு ஆசாமிக்காவது கடிதம் எழுத வேண்டாமான்னுதான் இந்தக் கடிதமே.
உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.
முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!
************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.
//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //
****************************
இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?
****************************
தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.
அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?
**************************
நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.
கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!
இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்
டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.
டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று
டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)
உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.
முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!
************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.
//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //
என்னதான் வேசம் கட்டினாலும் கமல் ஒரு(க்) கால் மறைத்த ஆச்சார்யங்கள் உள்ளே வைத்திருப்பவர் என்ற உண்மை தெரிந்ததால்தான் சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக - சிவாஜிக்கு செய்த ஃபிளாஷ் எனப் படிக்கவும்), போக்கிரிக்குச் செய்த விமர்சனம் போல இவருக்குப் போட மாட்டேன் என்ற நிலைப்பாடா என மற்றவர்கள் கேட்கும் முன் ஆச்சரியத்தைச் சரியா வெளிப்படுத்துங்க. அம்புட்டுதான்.
****************************
இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?
****************************
தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.
அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?
**************************
நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.
கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!
இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்
டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.
டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று
டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)
Wednesday, April 30, 2008
டேக் கேர் கோவி!!
என்னதான் எதிர் அணியில் இருந்தாலும் சக மனிதர் ஒருவருக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தா அது நமக்கு கஷ்டமாத்தானே இருக்கு. ரொம்ப சாதாரணமா இப்படி எல்லாம் ஆடினா இப்படித்தான் என்றோ எல்லாம் தலைவிதி என்றோ சொல்லிவிட்டுப் போக முடியும் என்றாலும் அதையும் மீறிய பரிதாபத்தினால் ஐயோ பாவம் எனச் சொல்லி அவருக்காக ஒரு நிமிடம் பிரார்த்திப்பதில்தானே நம் மனிதத்தன்மை இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை எனத் தெரிகிறது.
என்ன செய்ய. சில சமயங்களில் நாம செய்யும் வேலை நம்ம கட்டுப்பாட்டில் இல்லாம ஆயிடுது. இதனால நமக்கும் கஷ்டம் நம்ம சுத்தி இருக்கிறவங்களுக்கும் கஷ்டம். இது நாம பண்ணற தப்புனால இருக்கலாம் அல்லது நம்மளையும் மீறின சக்தியினாலும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்போ நடந்து போச்சு!! இது கோவியையும் மீறின ஒரு செயலாத்தான் இருக்கு. ஆனா பாவம் அதனால அவருக்கு எவ்வளவு வேதனை! எவ்வளவு சங்கடம்!!
டேக் கேர் கோவி!!
இன்னும் விஷயம் தெளிவாத் தெரியணுமுன்னா இதையும் பாருங்க.
டிஸ்கி 1 : ஃபெராரி அணியின் ரசிகனான எனக்கு மெக்லேரன் அணியின் கோவி என்ற கோவலைனன் எதிர் அணியில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து கொடுமையானது. கடவுளின் கிருபையால் அவருக்கு பெரிதாக அடிபடவில்லை. மீண்டும் அடுத்த போட்டியில் நல்ல படியாக கலந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.
டிஸ்கி 2: சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!
என்ன செய்ய. சில சமயங்களில் நாம செய்யும் வேலை நம்ம கட்டுப்பாட்டில் இல்லாம ஆயிடுது. இதனால நமக்கும் கஷ்டம் நம்ம சுத்தி இருக்கிறவங்களுக்கும் கஷ்டம். இது நாம பண்ணற தப்புனால இருக்கலாம் அல்லது நம்மளையும் மீறின சக்தியினாலும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்போ நடந்து போச்சு!! இது கோவியையும் மீறின ஒரு செயலாத்தான் இருக்கு. ஆனா பாவம் அதனால அவருக்கு எவ்வளவு வேதனை! எவ்வளவு சங்கடம்!!
டேக் கேர் கோவி!!
இன்னும் விஷயம் தெளிவாத் தெரியணுமுன்னா இதையும் பாருங்க.
டிஸ்கி 1 : ஃபெராரி அணியின் ரசிகனான எனக்கு மெக்லேரன் அணியின் கோவி என்ற கோவலைனன் எதிர் அணியில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து கொடுமையானது. கடவுளின் கிருபையால் அவருக்கு பெரிதாக அடிபடவில்லை. மீண்டும் அடுத்த போட்டியில் நல்ல படியாக கலந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.
டிஸ்கி 2: சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!
Labels:
formula 1,
kovalnainen,
Kovi,
race,
கோவி,
பார்முலா 1
Monday, March 31, 2008
கொத்தனாரின் டைரிக் குறிப்பு!

சனிக்கிழமை, மார்ச் 29, 2008
இன்று மதியம் நம்ம ஆன்மீகச் செம்மல் கேஆர்எஸ் சொன்ன அவரைக்காய் பொரிச்ச கூட்டுதான் மெனு. நல்லாவே இருந்தது. முக்கியமா அவரு சொன்னா மாதிரி காயை வெட்டினது வித்தியாசமா இருந்தது.
நம்ம ஜூனியர் நேத்து ஒரு விஷயம் சொன்னாரு. நம்ம ரீச்சர் பதிவிலும் அதைப் பத்தி பின்னர் படிச்சேன். அதாவது நேத்து பூமிக்காக ஒரு மணி நேரம் அப்படின்னு பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. வீட்டில் பொதுவாக மெழுகுவர்த்தி எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக போய் சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தோம். சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். ரொம்ப சுவாரசியமா இருந்ததால ஒரு மணி நேரம் போனதே தெரியலை. இந்த ஒரு மணி நேரமும் குடும்பத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்ததே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. உலகத்தைக் காக்கறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இப்படிப் பேசவாவது மாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008
Horton hears a Who அப்படின்னு ஒரு திரைப்படம் போனோம். Dr.Seuss
என்பவர் குழந்தைகளுக்கான கதைகள் பலவற்றை எழுதி உள்ளார். எதுகை மோனையுடம் பாட்டுப் போல எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி. இவருடைய கதைதான் இந்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காட்டில் ஒரு யானை. அதன் பெயர் ஹார்டன். அந்த யானையின் அருகே பறந்து செல்லும் ஒரு தூசில் இருந்து அபயக் குரல் ஒன்று கேட்டதாக நினைத்து அத்தூசின் பின் சென்று உதவ நினைக்கிறது ஹார்டன். தூசில் இருந்து குரல் கேட்பதாவது எனச் சொல்லி யானைக்குப் பயித்தியக்கார பட்டம் கட்ட நினைக்கின்றன சில மிருகங்கள். தூசினுள் ஒரு உலகம், அதில் ஹூ என்ற ஒரு வித உயிரினம், அவர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு உண்டான சோதனை எனப் படம் விரிகிறது. ஹார்டனால் ஹூக்களுக்கு உதவி செய்ய முடிகிறதா, பயித்திக்காரப் பட்டம் கிடைத்ததா என்பதுதான் படம்.
"I meant what I said, and I said what I meant" என்று பஞ்ச் டயலாக் பேசும் யானை அழகு! என் பையன் மட்டுமின்றி நானும் எங்களுடன் வந்திருந்த தங்கமணியின் தாயாரும் கூட ரசித்துப் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்!
இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன். நன்றாக இருந்தது. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாகவே இருக்கிறது.
டிஸ்கி: என்னிடம் கேள்வி கேட்டுப் பதிவு போட்ட பொழுது ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதாக நண்பர் டிபிசிடி சொன்ன பொழுது மிக வருத்தமாய் இருந்தது. நான் இது வரை எழுதியது எதுவுமே கண்ணியம் குறைந்து இல்லை. என் நண்பர்கள் யாரும் அது போல செய்பவர்கள் இல்லை. இது வரை இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்ததும் இல்லை. அது பற்றிய விபரங்கள் (பெயர், ஐபி முகவரி போன்றவை) இருந்தால் அவைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது எனக்கு அவற்றைப் பின்னூட்டமாக தந்தால் நான் வெளியிடுகிறேன். இப்படி ஒரு டிஸ்கி போட வேண்டிய நிலையில் தமிழ்வலையுலகம் இருப்பதற்காக வருந்துகிறேன்.
Wednesday, March 26, 2008
நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!
அன்பு வாத்தியாருக்கு வணக்கங்கள். தங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளை ஆவலுடன் படித்துக் கொண்டு வருகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு போன தலைமுறை தலைவர்களைப் பற்றி நீங்கள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் எழும் உணர்ச்சிகள் குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. நிற்க.
நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.
அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.
நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.
உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!
நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.
அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.
நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.
உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!
உங்கள் அளவுக்கு, நீங்கள் சிலாகித்த பேச்சில் எந்த ஒரு ஆழமான பொருளும் இல்லை என்று நினைப்பதால், நேரடியாகவே கேட்டுவிடலாமே என்றே இந்தக்கேள்வி. அண்ணாவைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ பேசும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணாவின் பிம்பமும் கேள்விகள் கேட்கக்கூடாத அளவுக்குக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா, கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன?
Friday, March 21, 2008
பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!
நம்ம வவாசங்கத்தினர் அவங்களோட ரெண்டாவது வயதைக் கொண்டாட பிரம்ம ரசத்தை ஓடவிடும் போட்டி ஒண்ணை அறிவிச்சு இருக்காங்க. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் ஜெயிக்க உங்களுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் நான் சொல்லித் தரப் போவது ஒரு எளிமையான உடற்பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வந்தீங்கன்னா உங்க மூளைக்கு அதிக அளவில் சக்தி கிடைத்து சூப்பர் மூளையாகிடுமாம். அது என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி எதுக்காக உடற்பயிற்சி அப்படின்னு பார்க்கலாம்.
உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.
2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.
3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.
4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.
சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.
எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!
உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.
2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.
3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.
4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.
சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.
எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!
Thursday, March 13, 2008
விண்ணோடும் முகிலோடும்....
லாரா கண்டுபிடித்து இருக்கும் விண்கலத்தில் முதல் முதலாகப் பயணம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி இப்பொழுதுதான் என்னை எட்டியது. இறுதிகட்டத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இருந்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். வரலாற்றில் என் பெயர் இடம் பெறப் போகிறது. சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏனோ என் மனம் வெறுமையாக உணர்கிறது. இதற்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள். இந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமா, இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் மேலிட, அதனை மறக்க சற்றே பழைய காலத்தை அசைப் போடத் தொடங்குகிறேன்.
விஞ்ஞானிகள் பலர் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் தாய். எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை. இதுதான் என் கதையின் ஆரம்பம். தந்தை யாரென்று அறியாமலே பிறந்தோம். ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள். எந்த விதமான கவலையும் இல்லாதபடி நல்லபடியாகத்தான் என் தாயார் எங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது என்றால் சாதாரணமா? மூவரையும் சமாளிக்க முடியாமல் அம்மா கஷ்டப்பட, எங்களை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர் என் குடும்பத்தினர். மற்றவர்களை விட்டாலும் என்னைப் பிரிவதை சற்றும் தாங்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்த இக்குடும்பத்தின் மூத்த பெண் லாராவின் பிடிவாதத்தினால் நான் மட்டுமே தத்துப் போகாமல் தப்பித்தேன். "உன் கண்ணின் அழகில் மயங்கித்தான் பெண்ணே, உன்னைத் தத்துக் கொடுப்பதைத் தடுத்தேன்" என்று இன்னும் என்னைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் சொல்லி மகிழ்வாள் லாரா. இந்த கதை எல்லாமும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், இல்லை என்றால் சிறு வயதில் நிகழ்ந்தது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.
சகோதரர்களை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்து கொண்டிருந்த என் வாழ்வில் அடுத்து வீசிய புயல் என் தாயின் சுகவீனம். நன்றாக இருந்த அவரின் சிறுநீரகங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டு, எந்த வித சிகிச்சையும் பயனளிக்காமல் சில நாட்களிலேயே போய் சேர்ந்துவிட்டாள். யாருமே இல்லாமல் நின்ற எனக்கு அன்று தாயாய் இருந்து பார்த்துக் கொண்டது லாராதான். அவள் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இன்று இந்த நிலமைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் பலரைப் போல விஞ்ஞானத்தில் திறமையுடையவளான லாரா தேர்ந்தெடுத்த துறை விண்வெளி ஆராய்ச்சி. பூமியைத் தாண்டிச் சென்றால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும். நம் அண்டத்தின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கூடமே கதி என்று கிடப்பாள். எனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் சுத்தமாய் புரியாது என்றாலும் அவளுக்குத் துணையாக நானும் அங்கேயே இருப்பேன். அவளின் ஆராய்ச்சி பற்றி எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள் லாரா. எனக்குப் புரிகிறதோ இல்லையோ நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன். உன்னிடம் வாய்விட்டுப் பேசும் பொழுது நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரிகின்றன. நான் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றேன் என்றால் அதில் உனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பாள். அவளே உலகம் என வளர்ந்து வந்த எனக்கும் அவள் அப்படிச் சொல்வது பெருமையாகவே இருக்கும்.
ஒவ்வொரு முறை அவள் ஆராய்ச்சி தோல்வி அடையும் பொழுதும் துவண்டுவிடுவாள் லாரா. ஆராய்ச்சிக் கூடத்தின் பக்கமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். அவளை சமாதானப் படுத்தி மீண்டும் அங்கு செல்ல வைக்க வேண்டிய வேலை என்னுடையது. வேலையைத் தொடங்கிய பின் எனக்கு நன்றி சொல்லி அணைத்துக் கொள்வாள். ஆராய்ச்சி வெற்றியை நோக்கிச் செல்லும் பொழுதெல்லாம் ஆனந்தமாய் என்னைக் கட்டிக் கொள்வாள். இப்படி அவளுடனே இருப்பது எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. பல தோல்விகளுக்குப் பின் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள். விண்வெளிப் பயணத்திற்கான கலம் ஒன்றை தயார் செய்து விட்டாள். அதுவரை விண்ணில் ஏவப்பட்ட கலங்களை விட நேர்த்தியான கலம் ஒன்றை வடிவமைத்து விட்டாள். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் பலராலும் சோதனை செய்யப்பட்டு லாராவின் கண்டுபிடிப்பு வெற்றி என்றே அறிவிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அப்பொழுதுதான் அந்த குண்டை வீசினாள் லாரா. அவளே அப்பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் சொன்னாள்.
அந்த கலத்தில் முதன் முறையாகச் செல்லும் பெருமை அவளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அது நம் குடும்பத்தில் ஒருவருக்காவது கிடைக்க வேண்டும். அதனால் நீதான் போக வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள். இந்த ஆராய்ச்சியில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து என்னளவு ஆராய்ச்சிக் கூடத்தில் நேரம் செலவிட்டது நீதான். நான் போக முடியாத கட்டத்தில் நீதான் போயாக வேண்டும் என்று அவள் கூறும் பொழுது எனக்குப் பெருமையாகவே இருந்தாலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா என்று கவலையாகவே இருந்தது. ஆனால் நான் போயாக வேண்டும் என்பதில் லாரா உறுதியாகவே நின்றாள். அப்பொழுதுதான் அவள் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்தான் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவன்.
இந்தப் பயணத்திற்குத் தகுந்தவர் என என்னை விட அறிவு கூர்மையானவர், திறமையானவர் என ஒருவரைச் சொல்லி அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடத் தொடங்கினான். அவனுக்கு ஆதரவாய் ஆராய்ச்சிக் கூடத்தில் பலரும் பேசத் தொடங்கினர். பிரச்சனை பெரிதாகத் தொடங்க அரசாங்கமும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கியது. இத்துறையின் அமைச்சர் தன் சார்பில் ஒருவரைக் கொண்டு வந்து அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மேலும் குட்டையைக் குழப்பினார். இப்படி ஆளாளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்க பிரச்சனை பெரிதாகத் தொடங்கியது. எனக்கு இந்த பயணத்தில் ஆசையே இல்லை. லாராவுடனே இருக்கத்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயம் அவள் வேண்டுமென்றதை மறுக்கவும் மனதில்லை. என்ன செய்ய என்று நான் குழம்பிக் கிடந்த அந்த வேளையில் நாடே இந்த விஷயத்தால் குழம்பி இருந்தது. இறுதியில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்ய ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. லாராவின் சிபாரிசினால் அதில் ஒன்றாக என் பெயரும் இருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என அறிவதற்காக வித விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு இருக்கையில் கட்டி வைத்து மிகுந்த வேகத்தில் சுற்றுவது, தலைகீழாக நெடு நேரம் இருப்பது, எடையில்லாத சூழலில் இருப்பது என எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டன. இரத்தம் தலைக்குப் பாயும் போதும், தலைசுற்றி வாந்தியும் மயக்கமும் வரும் போதும், என்னை விட்டு விடுங்கள் எனச் சொல்லிவிட்டு விலக நினைத்தாலும் லாராவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். அவ்வளவு சோதனைகளையும் முடித்த பின் தேர்வுக்குழு தன் பரிந்துரையை இன்று அளித்துள்ளது. கடைசி வரை பரிசீலிக்கப்பட்ட மூவரில் என் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததை விட லாராவின் எண்ணம் ஈடேறியதனால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவளை விட்டு பிரிந்து செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் உடன் வருவதால்தான் மனதில் அத்தனை வெறுமை.
அப்பொழுது குதூகுலமாக வந்து "லாய்கா, என் கனவு பலித்து விட்டது! என் கலத்தில் முதன் முதலில் செல்லப் போவது நீதான்!" எனச் சொல்லி என்னை ஆரத் தழுவும் லாராவிற்குத் தெரியாமல் என் கண்ணீரை அடக்கிக் கொண்டு நானும் வாலாட்டி, அவள் முகத்தை நக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.
நவம்பர் 1957
விஞ்ஞானிகள் பலர் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் தாய். எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை. இதுதான் என் கதையின் ஆரம்பம். தந்தை யாரென்று அறியாமலே பிறந்தோம். ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள். எந்த விதமான கவலையும் இல்லாதபடி நல்லபடியாகத்தான் என் தாயார் எங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது என்றால் சாதாரணமா? மூவரையும் சமாளிக்க முடியாமல் அம்மா கஷ்டப்பட, எங்களை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர் என் குடும்பத்தினர். மற்றவர்களை விட்டாலும் என்னைப் பிரிவதை சற்றும் தாங்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்த இக்குடும்பத்தின் மூத்த பெண் லாராவின் பிடிவாதத்தினால் நான் மட்டுமே தத்துப் போகாமல் தப்பித்தேன். "உன் கண்ணின் அழகில் மயங்கித்தான் பெண்ணே, உன்னைத் தத்துக் கொடுப்பதைத் தடுத்தேன்" என்று இன்னும் என்னைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் சொல்லி மகிழ்வாள் லாரா. இந்த கதை எல்லாமும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், இல்லை என்றால் சிறு வயதில் நிகழ்ந்தது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.
சகோதரர்களை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்து கொண்டிருந்த என் வாழ்வில் அடுத்து வீசிய புயல் என் தாயின் சுகவீனம். நன்றாக இருந்த அவரின் சிறுநீரகங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டு, எந்த வித சிகிச்சையும் பயனளிக்காமல் சில நாட்களிலேயே போய் சேர்ந்துவிட்டாள். யாருமே இல்லாமல் நின்ற எனக்கு அன்று தாயாய் இருந்து பார்த்துக் கொண்டது லாராதான். அவள் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இன்று இந்த நிலமைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் பலரைப் போல விஞ்ஞானத்தில் திறமையுடையவளான லாரா தேர்ந்தெடுத்த துறை விண்வெளி ஆராய்ச்சி. பூமியைத் தாண்டிச் சென்றால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும். நம் அண்டத்தின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கூடமே கதி என்று கிடப்பாள். எனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் சுத்தமாய் புரியாது என்றாலும் அவளுக்குத் துணையாக நானும் அங்கேயே இருப்பேன். அவளின் ஆராய்ச்சி பற்றி எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள் லாரா. எனக்குப் புரிகிறதோ இல்லையோ நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன். உன்னிடம் வாய்விட்டுப் பேசும் பொழுது நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரிகின்றன. நான் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றேன் என்றால் அதில் உனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பாள். அவளே உலகம் என வளர்ந்து வந்த எனக்கும் அவள் அப்படிச் சொல்வது பெருமையாகவே இருக்கும்.
ஒவ்வொரு முறை அவள் ஆராய்ச்சி தோல்வி அடையும் பொழுதும் துவண்டுவிடுவாள் லாரா. ஆராய்ச்சிக் கூடத்தின் பக்கமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். அவளை சமாதானப் படுத்தி மீண்டும் அங்கு செல்ல வைக்க வேண்டிய வேலை என்னுடையது. வேலையைத் தொடங்கிய பின் எனக்கு நன்றி சொல்லி அணைத்துக் கொள்வாள். ஆராய்ச்சி வெற்றியை நோக்கிச் செல்லும் பொழுதெல்லாம் ஆனந்தமாய் என்னைக் கட்டிக் கொள்வாள். இப்படி அவளுடனே இருப்பது எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. பல தோல்விகளுக்குப் பின் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள். விண்வெளிப் பயணத்திற்கான கலம் ஒன்றை தயார் செய்து விட்டாள். அதுவரை விண்ணில் ஏவப்பட்ட கலங்களை விட நேர்த்தியான கலம் ஒன்றை வடிவமைத்து விட்டாள். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் பலராலும் சோதனை செய்யப்பட்டு லாராவின் கண்டுபிடிப்பு வெற்றி என்றே அறிவிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அப்பொழுதுதான் அந்த குண்டை வீசினாள் லாரா. அவளே அப்பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் சொன்னாள்.
அந்த கலத்தில் முதன் முறையாகச் செல்லும் பெருமை அவளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அது நம் குடும்பத்தில் ஒருவருக்காவது கிடைக்க வேண்டும். அதனால் நீதான் போக வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள். இந்த ஆராய்ச்சியில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து என்னளவு ஆராய்ச்சிக் கூடத்தில் நேரம் செலவிட்டது நீதான். நான் போக முடியாத கட்டத்தில் நீதான் போயாக வேண்டும் என்று அவள் கூறும் பொழுது எனக்குப் பெருமையாகவே இருந்தாலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா என்று கவலையாகவே இருந்தது. ஆனால் நான் போயாக வேண்டும் என்பதில் லாரா உறுதியாகவே நின்றாள். அப்பொழுதுதான் அவள் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்தான் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவன்.
இந்தப் பயணத்திற்குத் தகுந்தவர் என என்னை விட அறிவு கூர்மையானவர், திறமையானவர் என ஒருவரைச் சொல்லி அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடத் தொடங்கினான். அவனுக்கு ஆதரவாய் ஆராய்ச்சிக் கூடத்தில் பலரும் பேசத் தொடங்கினர். பிரச்சனை பெரிதாகத் தொடங்க அரசாங்கமும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கியது. இத்துறையின் அமைச்சர் தன் சார்பில் ஒருவரைக் கொண்டு வந்து அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மேலும் குட்டையைக் குழப்பினார். இப்படி ஆளாளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்க பிரச்சனை பெரிதாகத் தொடங்கியது. எனக்கு இந்த பயணத்தில் ஆசையே இல்லை. லாராவுடனே இருக்கத்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயம் அவள் வேண்டுமென்றதை மறுக்கவும் மனதில்லை. என்ன செய்ய என்று நான் குழம்பிக் கிடந்த அந்த வேளையில் நாடே இந்த விஷயத்தால் குழம்பி இருந்தது. இறுதியில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்ய ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. லாராவின் சிபாரிசினால் அதில் ஒன்றாக என் பெயரும் இருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என அறிவதற்காக வித விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு இருக்கையில் கட்டி வைத்து மிகுந்த வேகத்தில் சுற்றுவது, தலைகீழாக நெடு நேரம் இருப்பது, எடையில்லாத சூழலில் இருப்பது என எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டன. இரத்தம் தலைக்குப் பாயும் போதும், தலைசுற்றி வாந்தியும் மயக்கமும் வரும் போதும், என்னை விட்டு விடுங்கள் எனச் சொல்லிவிட்டு விலக நினைத்தாலும் லாராவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். அவ்வளவு சோதனைகளையும் முடித்த பின் தேர்வுக்குழு தன் பரிந்துரையை இன்று அளித்துள்ளது. கடைசி வரை பரிசீலிக்கப்பட்ட மூவரில் என் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததை விட லாராவின் எண்ணம் ஈடேறியதனால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவளை விட்டு பிரிந்து செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் உடன் வருவதால்தான் மனதில் அத்தனை வெறுமை.
அப்பொழுது குதூகுலமாக வந்து "லாய்கா, என் கனவு பலித்து விட்டது! என் கலத்தில் முதன் முதலில் செல்லப் போவது நீதான்!" எனச் சொல்லி என்னை ஆரத் தழுவும் லாராவிற்குத் தெரியாமல் என் கண்ணீரை அடக்கிக் கொண்டு நானும் வாலாட்டி, அவள் முகத்தை நக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.
நவம்பர் 1957
Wednesday, March 12, 2008
தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!
"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம தன்னிலைச் செய்தி! அப்படி ஒரு செய்தி போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த தன்னிலைச் செய்தியைத் தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட தயார் ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று. ஆறு மணி நேர விமானப் பயணம். கையில் மடிக்கணினியையும் கூடவே கடந்த இரு மாதங்களாக படிக்காமல் வைத்திருந்த தென்றல் இதழ்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது. (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தென்றல் இதழைப் படித்துப் பாருங்கள். நல்ல மாத இதழ். அதிலும் என்னைக் கவர்ந்தது நண்பர் வாஞ்சி தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்.)
இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!
அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .
என்ன சொல்லறீங்க?
டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.
இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!
அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன். என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு. நம்மிடையே கூட படிக்கும் காலத்தில் வேப்பங்காயாகத் தமிழ் கசந்தது எத்தனை பேருக்கு என நம்மை நாமே கேட்டுக் கொண்டு பாருங்களேன். எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது. அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம். அப்படி ஆகுமே ஆனால் தமிழை விரும்பி படிப்பவர் எண்ணிக்கை தன்னால் ஏறும். இன்று பல இடங்களில் நாம் காணும் கட்டாயத் தமிழ் பாடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு தமிழார்வலரின் எண்ணமும் அது போல் இருப்பது ஆச்சரியமே!
பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.
பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.
கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)
அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .
என்ன சொல்லறீங்க?
டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.
Friday, February 22, 2008
IP, பதிவு, அறிவு, திருட்டு - ஒரே கொயப்பமாக் கீதே!
எல்லா விவாதங்களிலும் பங்கேற்று பல கருத்துக்களை தரும் வவ்வால்அவர்களின் இரு பின்னூட்டங்களைப் பார்த்ததினால் வந்த எண்ணங்கள் இவை. இரு விஷயங்களுமே அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Rights, இதுக்கு வேற தமிழ்ச் சொல் இருக்கா?) பற்றியவை என்பதால் இது பற்றி கொஞ்சம் பேசலாமே என்றுதான் இந்தப் பதிவு. எந்த விதமான தலைப்பென்றாலும் சளைக்காமல் தகவல்களை அள்ளி வீசும் வவ்வால் அவர்களுடைய கருத்தே தவறோ என்ற எண்ணம் வரும் பொழுது மற்ற சாமான்யர்களுக்கும் (சாமான்யன் சிவா, உங்களை மட்டும் இல்லை) இது பற்றிய புரிதல் எந்த அளவு இருக்கும் என்ற சந்தேகமும் உடன் எழுகிறது. அந்த இரு விஷயங்கள் எவை, அதில் எனக்கு புரியாத விஷயங்கள் எது என்று பார்த்துவிடுங்கள். கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்கள் பதிலைக் கட்டாயமாகச் சொல்லுங்கள்.
பின்னூட்டம் 1: என்றென்றும் அன்புடன் பாலா ஒரு பதிவு போட்டு இருக்காரு. பதிவு வழக்கம் போல மென்பொருள் துறையை போட்டுத் தாக்கும் பதிவுதான். வழக்கம் போல நம்ம பதிவர்களும் இரண்டு பக்கமும் நின்னுக்கிட்டு தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அப்படின்னு பல விஷயங்களைச் சொல்லி பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. நானும் வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவனா நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க வவ்வால்போட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.
//அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//
அதாவது பொதுமக்கள் கடையில் சென்று வாங்கினாதான் மென்பொருள் மற்றவை எல்லாம் மென்பொருள் சார்ந்த சேவைகள் அப்படின்னு பொருள் வருவது மாதிரி சொல்லி இருக்காரு. அதுக்கு எடுத்துக்காட்டா அவர் சொல்லி இருக்கும் மென்பொருட்கள் எல்லாமே பொதுவாக பலரும் பயன்படுத்துவையாகவே இருக்கின்றன. அவர் குறிப்பிட்டிருக்கும் சிட்டி பேங்க் பற்றிய குறிப்பு என்னவென்றால் வேறொருவர் சிட்டி பேங்க் பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பற்றிச் சொல்லி இருந்ததற்குப் பதில். இதில் வவ்வால் அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால் நானும் ஒரு பின்னூட்டம் போட வேண்டியதாகப் போயிற்று. அது இதுதான்.
ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.
எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.
இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கிகளுக்கான மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.
ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்டம் 2: இது வந்து வவ்வால் எழுதின பழைய பதிவு ஒண்ணு. இது சமீபத்தில் பின்னூட்டமிடப்பட்டதால் மீண்டும் தமிழ்மண முகப்பில் வந்து நம்ம கண்ணில் பட்டது. அதில் ஜிரா சொல்லியிருந்த ஒரு தகவலுக்கு வவ்வால்சொல்லி இருக்கும் பதில் இது .
//மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//
ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?
இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அதைப் பத்தி யாராவது சொல்லி இருக்காங்களான்னு பார்க்க வவ்வால் பதிவு, அங்க இருந்து ஜிரா பதிவு, அங்க இருந்து இசை இன்பம் அப்படின்னு போய் பார்க்கும் போது சந்தேகம் அதிகமாச்சே தவிர பதில் கிடைக்கலை. சரி இதில் என்னென்ன கேள்வின்னு பார்க்கலாமா? முதலில் அந்த மூணு ஸ்வரங்களில் பாட்டு போட்டது நான் மட்டுமேன்னு இளையராஜா சொல்லலை. அது மகதி ராகம் என்றும் சொல்லலை. அந்த இசைஇன்பம் பதிவில் கே.ஆர்.எஸ் சொன்னா மாதிரி மகதி நாலு ஸ்வரம் அப்படின்னுதான் இந்தத் தளமும் சொல்லுது. ஆனா திரச அவர்கள் வந்து மகதிக்கும் மூணு ஸ்வரங்கள் எனச் சொல்ல இளையராஜா போட்ட மூணு ஸ்வரப் பாட்டும் மகதி ராகம் அப்படின்னு முடிவுக்கு வந்துட்டாங்க போல!!
அது எல்லாத்தையுமே விட்டுடலாம். எம்.எஸ்.வி. ஒரு பாடலில் பயன்படுத்திய ராகத்தில் இளையராஜா வேறு ஒரு பாட்டு போட்டா அது அறிவுத் திருட்டா? அப்படிப் பார்த்தால் எந்த ஒரு ராகத்திலும் முதலில் பாடல் புனைந்தவருக்கு அந்த ராகத்துக்கான அறிவுசார் காப்புரிமை தரணுமா? கர்நாடக சங்கீதத்தில் (ராகங்கள் என வந்ததால்தான் இதைப் பத்தி சொல்லறேன். இதுக்காக தனியா முத்திரை எல்லாம் குத்தாதீங்கப்பா!) தோடி, கல்யாணின்னு போனா நூத்துக்கணக்குல பாட்டு இருக்கே. அந்த ராகத்தில் எல்லாம் யாரு முதலில் பாடினாங்க அப்படின்னு பார்த்து மத்தவங்க மேல எல்லாம் அறிவுத் திருட்டு அப்படின்னு வழக்கு போடணுமா?
இப்போ சொல்லுங்க
1) மென்பொருள் என்றால் என்ன, மென்பொருள் சார்ந்த சேவை என்றால் என்ன என எப்படி வரையறுப்பது?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரையறுப்பது?
பின்னூட்டம் 1: என்றென்றும் அன்புடன் பாலா ஒரு பதிவு போட்டு இருக்காரு. பதிவு வழக்கம் போல மென்பொருள் துறையை போட்டுத் தாக்கும் பதிவுதான். வழக்கம் போல நம்ம பதிவர்களும் இரண்டு பக்கமும் நின்னுக்கிட்டு தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அப்படின்னு பல விஷயங்களைச் சொல்லி பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. நானும் வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவனா நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க வவ்வால்போட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.
//அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//
அதாவது பொதுமக்கள் கடையில் சென்று வாங்கினாதான் மென்பொருள் மற்றவை எல்லாம் மென்பொருள் சார்ந்த சேவைகள் அப்படின்னு பொருள் வருவது மாதிரி சொல்லி இருக்காரு. அதுக்கு எடுத்துக்காட்டா அவர் சொல்லி இருக்கும் மென்பொருட்கள் எல்லாமே பொதுவாக பலரும் பயன்படுத்துவையாகவே இருக்கின்றன. அவர் குறிப்பிட்டிருக்கும் சிட்டி பேங்க் பற்றிய குறிப்பு என்னவென்றால் வேறொருவர் சிட்டி பேங்க் பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பற்றிச் சொல்லி இருந்ததற்குப் பதில். இதில் வவ்வால் அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால் நானும் ஒரு பின்னூட்டம் போட வேண்டியதாகப் போயிற்று. அது இதுதான்.
ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.
எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.
இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கிகளுக்கான மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.
ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பின்னூட்டம் 2: இது வந்து வவ்வால் எழுதின பழைய பதிவு ஒண்ணு. இது சமீபத்தில் பின்னூட்டமிடப்பட்டதால் மீண்டும் தமிழ்மண முகப்பில் வந்து நம்ம கண்ணில் பட்டது. அதில் ஜிரா சொல்லியிருந்த ஒரு தகவலுக்கு வவ்வால்சொல்லி இருக்கும் பதில் இது .
//மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//
ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?
இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அதைப் பத்தி யாராவது சொல்லி இருக்காங்களான்னு பார்க்க வவ்வால் பதிவு, அங்க இருந்து ஜிரா பதிவு, அங்க இருந்து இசை இன்பம் அப்படின்னு போய் பார்க்கும் போது சந்தேகம் அதிகமாச்சே தவிர பதில் கிடைக்கலை. சரி இதில் என்னென்ன கேள்வின்னு பார்க்கலாமா? முதலில் அந்த மூணு ஸ்வரங்களில் பாட்டு போட்டது நான் மட்டுமேன்னு இளையராஜா சொல்லலை. அது மகதி ராகம் என்றும் சொல்லலை. அந்த இசைஇன்பம் பதிவில் கே.ஆர்.எஸ் சொன்னா மாதிரி மகதி நாலு ஸ்வரம் அப்படின்னுதான் இந்தத் தளமும் சொல்லுது. ஆனா திரச அவர்கள் வந்து மகதிக்கும் மூணு ஸ்வரங்கள் எனச் சொல்ல இளையராஜா போட்ட மூணு ஸ்வரப் பாட்டும் மகதி ராகம் அப்படின்னு முடிவுக்கு வந்துட்டாங்க போல!!
அது எல்லாத்தையுமே விட்டுடலாம். எம்.எஸ்.வி. ஒரு பாடலில் பயன்படுத்திய ராகத்தில் இளையராஜா வேறு ஒரு பாட்டு போட்டா அது அறிவுத் திருட்டா? அப்படிப் பார்த்தால் எந்த ஒரு ராகத்திலும் முதலில் பாடல் புனைந்தவருக்கு அந்த ராகத்துக்கான அறிவுசார் காப்புரிமை தரணுமா? கர்நாடக சங்கீதத்தில் (ராகங்கள் என வந்ததால்தான் இதைப் பத்தி சொல்லறேன். இதுக்காக தனியா முத்திரை எல்லாம் குத்தாதீங்கப்பா!) தோடி, கல்யாணின்னு போனா நூத்துக்கணக்குல பாட்டு இருக்கே. அந்த ராகத்தில் எல்லாம் யாரு முதலில் பாடினாங்க அப்படின்னு பார்த்து மத்தவங்க மேல எல்லாம் அறிவுத் திருட்டு அப்படின்னு வழக்கு போடணுமா?
இப்போ சொல்லுங்க
1) மென்பொருள் என்றால் என்ன, மென்பொருள் சார்ந்த சேவை என்றால் என்ன என எப்படி வரையறுப்பது?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரையறுப்பது?
Subscribe to:
Posts (Atom)