Tuesday, March 17, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - மார்ச் 2009

போன முறை எல்லாரும் போட்டுத் தாக்கிய பின் இந்த முறை புதிர் போடவே பயமாக இருக்கிறது. சென்ற முறையை விடக் கொஞ்சமேனும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

வாத்தியார் வாஞ்சி, எங்கள் கூகிள் குழுமத்தில் சொல்லிக் கொடுத்ததன்படி இனி இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்பதற்குப் பதிலாக முறையே குறுக்கு, நெடுக்கு என்ற பதங்களைப் பாவிக்கலாம் என இருக்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
  • இந்த புதிரமைக்க பேருதவியாக இருந்த பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


குறுக்கு

3 புத்திரன் தலைமாறியதால் பிள்ளையார் ஆனானே! (5)
6 இந்தப் பண் மதத்தில் ஒரு பாதி (4)
7 யோசித்து ஆரம்பிக்க வேண்டிய இந்த தொழிலில் கண்ணாயிரு (4)
8 உடன்பிறந்தவள் வீசிய வலையில் பாதி பெற்ற பொன் உருவம் (6)
13 சமமில்லா இந்தக் சரணாகதிக்குக் காசும் வேண்டும் (6)
14 உலகத்தில் தலை இழந்த முதல் மகள் (4)
15 கலவரமும் கலகமும் ஆரம்பித்தால் சிரிப்பா? (4)
16 தேர் கொண்ட பூவிற்குமா குலப்பாசம்? (2,3)

நெடுக்கு

1 இசையின் பிறப்பிடத்தை இரவில் மறை (2,3)
2
உலகெங்கும் பரவி தங்கள் முறைகளை எண்ணிப் பார்த்தனர் (5)
4 இந்த ஊர் பேர் தெரியுமெனக் கருதக் கலை ஞானம் வேண்டும் (4)
5
அவன் மம்தாவைக் கண்டான், தீராப்பகை கொண்டான் (4)
9 சிலம்புச் செல்வரின் அடியும் முடியும் அறிந்த கொஞ்சம் பேர் (3)
10 பணமும் உறுதியும் கலந்து வந்த நல்ல நேரம் (5)
11 தாமிரத்தால் செய்த கப்பலில் ஒரு பகுதி சண்டை நடந்த இடம் (5)
12 வசந்தியின் இடை மாறியதாய் வெட்டிப் பேச்சு (4)
13 அவிக்க ஆரம்பித்து சமையலில் முடிந்த கலப்பு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Tuesday, March 10, 2009

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்

மன்னாரும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?

மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.

தேர்தல் வரசொல்லதான் நம்ம கைல காசு பொரளும். ஆனா அதுவரை நம்ம வாயும் வயிறும் சும்மா இருக்குமா? இருக்காது. கட்டிங் கேக்காது? அப்போ நீ இன்னா செய்வே? நேரா நம்ம டாஸ்மேக் கோவாலாண்ட வந்து மாமே கொஞ்சம் கவ்னின்னுவே. செய்வதானே? உன்னிய மாரி எத்தினி பேரு அவனாண்ட வருவானுங்க. அவனும் சரின்னு சொல்லி ரெகுலர் பார்ட்டிங்க எல்லாம் அக்கவுண்ட் வெச்சு கட்டிங் அடிக்கலான்னு சொல்றான்.

உடனே நீ கோயிந்து பீட்டருன்னு உன் தோஸ்த் அல்லாரையும் கூட்டு சேத்துக்கினு கோவாலு கடையே கதின்னு கெடப்பதானே. கோவாலுக்கு பிஸ்னஸ் சும்மா பிச்சிக்கினு போவும். இதான் சாக்குன்னு அவனும் உங்களை மாரி கடனுக்கு குடிக்கிறவங்களுக்கு நைசா ரேட்டை வேற ஏத்திருவான்.

இந்த கடைக்கு எதுத்தா மாரி இருக்கிற பேங்குகாரன் இதைப் பாத்து, கோவாலு கோவாலு, உனக்கு சரக்கெடுக்க காசு தேவைப்படுது. இந்த மாதிரி கடனில் வர வேண்டிய காசை எல்லாம் வெச்சு என்னாண்ட லோன் வாங்கிக்கன்னு சொல்லறான். கோவாலுவும் கொஞ்சம் யோசிச்சு சரி ரொட்டேசனுக்கு காசு தேவப்படுதுன்னு நினைச்சு இவனாண்ட ஒரு லோன் எடுக்கறான்.

இப்போ இந்த பேங்கோட பெரிய ஆபீஸ்ல இருக்கிறவன் ஒருத்தன், நம்ம பேங்கு இருக்கிற காசை எல்லாம் இப்படிக் கடனா குடுத்தா எப்படி சரிப்படும்ன்னு நினைச்சு இந்த கடன் மூலமா வர வேண்டிய காசை எல்லாம் அடமானமா வெச்சு கடன்பத்திரம் தயாரிச்சு அதை பங்குச் சந்தையில் வித்துடறான். அங்க இந்த விவரமெல்லாம் தெரியாமா சொம்மா வாங்கி வாங்கி வித்து இந்த மாதிரி பத்திரங்க ரேட்டை எல்லாம் கன்னாப்பின்னான்னு ஏத்தி விடறாங்க. என்ன விலைக்கு வாங்கினாலும் அதுக்கும் மேல ரேட் ஏறாசொல்லோ அல்லாரும் ஹேப்பியா இருக்காங்க.

இப்டி அல்லாரும் சந்தோசமா இருக்கங்காட்டி, இந்த பேங்க்ல வேலை பாக்கிற ஒருத்தன் கோவாலாண்ட போயி கோவாலு கோவாலு கடன் ரொம்ப ஏறிப் போச்சே, கொஞ்சம் அசலைக் கட்டக்கூடாதான்னு கேட்ருதான். கோவாலு உன்னாண்ட வந்து கபாலி கொஞ்சம் காசு குடுறான்னு கேட்டா நீ இன்னா சொல்லுவே? அட என்னாண்ட இருந்தா தர மாட்டேனா பிரதர். கொஞ்சம் வெயிட் பண்ணு ரெண்டு மாசந்தள்ளி தேர்தல் வருது. மொத்த அக்கவுண்டையும் செட்டில் பண்றேம்ப. கோவாலு பேங்கு ஆள் கிட்ட போயி இப்போ என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லுவான். இந்த பேங்குகாரன் புத்தி எப்டி வேலை செய்யுமுன்னா உன்னாண்ட காசு இருக்கசொல்லோ கடனை வாங்கிக்கோன்னு கெஞ்சுவான். ஆனா உனக்கு எப்போ முடையாக்கீதோ அப்போ வந்து கடன கட்டுன்னு கயுத்து மேல கை வெப்பான். அந்தா மாரி கோவாலு காசு இல்லைன்னு சொன்னதுதான், உடனே கேசை போட்டு அத்தைப் போட்டு இத்தைப் போட்டு கோவாலை ஒரு வயி பண்ணிடுவான். கோவாலு ஒரு ஸ்டேஜ்ல போடாங்கோன்னு சொல்லி மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு கடையை மூடிக்கினு போயிடுவான்.

இப்போ கோவாலுக்கு நடந்ததுதான் அவனுக்கு கடன் குடுத்த பேங்குக்கும் நடக்கும். எப்போ கோவாலு மஞ்சக்கடுதாசி குடுத்தானோ, அப்போவே ஷேர்மார்க்கெட்டுக்கு நியூஸ் போயிரும். இந்தா மாரி இந்த பேங்கு குடுத்த கடன் வராது. அதனால அந்த பேங்கு பத்திரத்தை எல்லாம் வாங்காதீங்கோன்னு சொல்லிருவானுங்க. சக்கைப் போடு போட்டுக்கினு இருந்த பத்திரம் எல்லாம் குப்பையாயிரும். இந்த பேங்கு பத்திரம் எல்லாம் குப்பையாப் போச்சுன்னு நியூஸ் வந்தா உடனே, அதுல டெபாசிட் போட்டவனெல்லாம் உடனே வெளிய எடுக்கப் பாப்பான். ஆனா உடனடியா கேஷ் இருக்குமா? இருக்காது. ஆக அங்கேயும் ஆப்பு. உடனே அரசாங்கம் கைல கால்ல வியுந்து காசு வாங்கி இவங்களை செட்டில் பண்ணுவானுங்க. அரசாங்கமும் வரிப்பணத்தை எல்லாம் வாரி வயங்கி இவனுங்களைக் காப்பாத்தும். ஆனா பத்திரத்தை கடைசியா வாங்குன பரதேசிக்கு ஆப்புதான்.

இதெல்லாம் ஒரு சைடில் நடக்கும் போது, இன்னொரு பக்கம் கோவாலுக்கு கடனுக்கு சரக்கு குடுத்த கம்பெனிக்கும் இப்போ காசு வராதா? அவனுங்க எல்லாம் அப்பீட் ஆவானுங்க. 100 வருசமா இருக்கிற பிராந்தி கம்பெனி படுத்துக்கும். எதிர்கட்சிக்காரன் பீர் பேக்டரியை ஆளுங்கட்சிக்காரன் கம்பெனி வாங்கும். இந்த கம்பெனிக்காரன் கண்ட்ரோலில்கீற மத்த கம்பெனிங்களும் அடி வாங்கும். அவனுங்க செலவைக் கட்டுப்படுத்த ஆளுங்களை வீட்டுக்கு அனுப்புவானுங்க. இந்த வேலை போனவனுங்க வாங்குற கடைங்க, கைவண்டிங்க அல்லாருக்கும் வியாபாரம் படுத்துக்கும். இப்படி மொத்த ஊருக்குமே ஆப்புதான்.

இதுதாண்டா நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு கடனுக்குக் குடுத்த கோவாலு கட்டிங்கைத் திருப்பி கேட்குமுன் வாயில் கவுத்துக் கொண்டு மப்பானான் மன்னாரு.

டிஸ்கி 1:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதால் ஒரு கபாலி, ஒரு கோவாலு, ஒரு வங்கி, ஒரு பத்திரம் எனச் சொல்லி இருக்கிறேன். உண்மையில் உள்ள சிக்கல் ரொம்பவே இடியாப்பம் ரேஞ்ச் என்பது எல்லாருக்கும் தெரியும். இதான் எனக்குத் தெரியுமே எனச் சொல்ல வரும் நிபுணர்களுக்காகவே இந்த டிஸ்கி.

Friday, March 06, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - பிப்ரவரி 2009

இந்த மாதம் தந்த குறிப்புகள் ரொம்பவும் எளிதாக இருந்ததா அல்லது தொடந்து பங்கெடுத்து வருவதால் என்னுடைய குறிப்பெழுதும் விதம் புரிந்து விட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் பின்னி எடுத்துவிட்டனர் மக்கள்! கலந்து கொண்ட 31 பேர்களில் 26 பேர் சரியான விடைகளைத் தந்திருக்கின்றனர்! அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

  1. சீனா
  2. ஹரிஹரன்ஸ்
  3. பாசமலர்
  4. சகாதேவன்
  5. சதீஸ்
  6. தமிழ்ப்பிரியன்
  7. ஜி3
  8. மகேஷ்
  9. இராம்
  10. சந்தானம் குன்னத்தூர்
  11. ச சங்கர்
  12. யோசிப்பவர்
  13. பூங்கோதை
  14. ராசுக்குட்டி
  15. வடகரை வேலன்
  16. மஞ்சுளா ராஜாராமன்
  17. சௌமியா அருண்
  18. வசுப்ரதா
  19. திவா
  20. வாஞ்சிநாதன்
  21. வி ஆர் பாலகிருஷ்ணன்
  22. அரசு
  23. ஏஸ்
  24. கப்பி
  25. லதா சதீஷ்
  26. ராமையா நாராயணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?





இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
சப்பி - உறிஞ்சி என்பதற்கு மற்றொரு சொல். சாபமிடு என்பதை சபி எனக் கொண்டு அதில் குப்பியின் நடுவே இருக்கும் ப் என்ற எழுத்தை நுழைத்தால் சப்பி என வரும்.

5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
ரம்மியம் - கொஞ்சம் ஆங்கிலக் கலப்பு கொண்ட குறிப்பு. ஆனால் தமிழிலும் அவ்விளையாட்டை ரம்மி எனத்தானே சொல்கிறோம். ரம்மி என்ற சீட்டு விளையாட்டுடன் சுயம் என்ற சொல்லின் தலையான சு போய் மீதம் இருக்கும் யம் என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் அற்புதமான அழகு என்ற பொருள் கொண்ட ரம்மியம் வரும்.

6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
தாலி - லலிதா என்ற பெயரில் தாலி திரும்பி இருக்கிறது.

7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
தீபம் - தீவிரவாதம் என்ற சொல்லின் எல்லைகள் தீ மற்றும் ம் என்ற எழுத்துகள். இவைகளிடையே பசுவின் தலையான ப வர தீபம் என்ற விடை கிடைக்கும். விளக்கு என்பதை விளங்கச் செய் என்ற பொருள் இருந்தாலும் தீபம் என்ற பொருளும் இருக்கிறது அல்லவா!

8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
பதக்கம் - பக்குவம் என்பதைப் பதம் என்றும் சொல்லலாம். அதனிடையே மக்கள் என்ற சொல்லின் இடையான க்க என்ற எழுத்துக்களைச் சேர்த்தால் பதக்கம் என வரும். மார்பில் அணிவதுதானே பதக்கம்.

11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
அம்மாஞ்சி - தாய் என்றால் அம்மா. இஞ்சியின் தலையை வெட்ட ஞ்சி என ஆகும். இரண்டும் சேர்ந்தால் அம்மாஞ்சி - மாமம் மகன்.

12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
தகும் - ஈடாகும் என்பதற்கு ஈடான தகும் என்ற சொல் குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
ஆகா - அடடா அருமை எனச் சொல்ல ஆகா என்போம். ஆகாயம் முடியாமல் போனால் ஆகா வரும்.

16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
தந்திரம் - தந்தி எனத் தொடங்கி வீரம் என்பதில் இருந்து ரம் என்ற எழுத்துக்களைச் சேர்த்து உபாயம் என்பதற்கு விடையாக வருகிறது.

17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மிதவை - தருமியின் இடையை ஒடித்தால் தமி. அதனைத் தலைகீழாக மாற்றினால் மித. இதோடு வை என்ற சொல்லைச் சேர்த்தால் மிதவை. தெப்பம் என்றாலும் மிதவை.

மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
பரமபதம் - மரம் என்ற சொல்லோடு பதப என்ற மூன்று ஸ்வரங்களை சேர்த்து ஆட்டினால் (எழுத்துக்களின் வரிசையை மாற்றினால்) பரமபதம் என்ற விளையாட்டு வரும்.

2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
திமில் - ரிஷபம் என்றால் காளை என்றும் ரி என்ற ஸ்வரம் என்றும் இரு பொருட்கள் உண்டு. திமிரில் ரி போனால் திமில். அது காளையின் ஒரு உடற்பகுதி.

3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
சம்மதம் - நூறு என்றால் சதம். அதன் நடுவே மரம் என்பதின் நடுவை வெட்டி தலைகீழாக சேர்த்தால் சம்மதம் என்றாகும். ஒப்புக் கொள்கிறீர்களா?

4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
பிதா - அப்பா என்பதற்கு ஈடாக பிதா என்பது குறிப்பினுள்ளேயே இருக்கிறது.

9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
கறி குழம்பு - கறியும் குழம்பும் சாதமுடன் சேர்த்து உண்ணப்படுபவை. அதில் க் என்ற மெய்யெழுத்து சேர்ந்தால் கறிக்குழம்பு என்றாகும். மெய் இருந்தால்தானே அசைவம்!

10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
அஞ்சாதவை - தஞ்சாவூரில் இருந்து ஊரை எடுத்துவிட்டு அவை என்ற சொல்லைச் சேர்த்து எழுத்துக்களின் வரிசையை மாற்றினால் அஞ்சாதவை என வரும்.

13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
சதிர் - உடன்கட்டை ஏறியவர் சதி. ஒருவரில் கடைசி ர். இரண்டும் சேர்ந்தால் வருவது சதிர் என்ற ஆட்டம்.

15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)
காமி - காட்டு என்பதின் பேச்சு வழக்கு. குறிப்பின் உள்ளேயே இருக்கிறது.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

Wednesday, February 25, 2009

புதசெவி - 02/25/2009

வழக்கம் போல புதிரைப் போட்டுவிட்டு விடையளிக்கும் முன் ஒரு புதசெவி பதிவு. ஆஸ்கார், பேரணி, அது இதுன்னு நடந்துக்கிட்டே இருக்கிறப்ப நாம தனியா புதசெவி பதிவு போடணுமான்னு நினைச்சேன். அப்புறம் அப்படி எல்லாம் பார்த்தா நாம பதிவு எண்ணிக்கையை ஏத்தறது எப்படின்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு.. இதோ உங்களுக்கான இந்த மாத புதசெவி பதிவு!

செய்தி 1
நைஜீரியா நாட்டு நடப்பு இது. கார் திருடர்கள் இருவரைப் பிடிக்க போலீஸர் அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். ஒருவன் தப்பிவிட அடுத்தவன் ஒரு நொடியில் தன்னை ஒரு ஆடாக மாற்றிக் கொண்டுவிட்டானாம். அதனால் அந்த ஆட்டைப் பிடித்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். விரிவான செய்தி இங்கே.

பஞ்ச்: ஆட்டையப் போட்டவங்களுக்கு பதிலா ஆட்டை போட்டாங்களா,,
நம்ம ஊர்லே கொலை கொள்ளை பண்ணவன் எல்லாம் காலாகாலத்துல அண்ணல் ஆகறதை அஞ்சாம பாத்தவங்க நாங்க! அண்ணனுங்க அண்ணல் ஆகும்போது ஆட்டைய போட்டவங்க ஆடு ஆக முடியாதா?

செய்தி 2
இது கனடா செய்தி. சமீபத்தில் துளசி ரீச்சர், ஒரு வீட்டை அப்படியே பெயர்த்து எடுத்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கே பாருங்கள், பழங்கால வீடு ஒன்றை வாங்கியவர், அதனை உறைந்த ஏரியின் மேல் அப்படியே கொண்டு செல்வதை! அருமையான நகர்படம். பார்க்க இங்கே சுட்டுங்கள்.

பஞ்ச்: அரசியல்ல இல்ல போலிருக்கு! அதான் சொந்தமா வீட்டை வாங்கி அதைக் கட்டி இழுத்துகிட்டு இவ்ளோ கஷ்டப்படறாரு! நம்மக்கள் கிட்ட கத்துகிட்டிருந்தா இதே ஐஸ் வீட்டை (ஹவுஸ்னு சொல்லமாட்டேன்) தமிழ்வளர்ப்புக்கு உஷார் பண்ணி பர்மணண்ட்டாவே வச்சிருப்பாரு. ஆனா, நம்ம மக்களும் இவர்கிட்ட கத்துக்க மேட்டர் இருக்கு! ரெய்டு கிய்டு வந்தா வீட்டை ஓட்டிகிட்டே இருக்கலாம்!

செய்தி 3
இது இங்கிலாந்தில் நடந்தது. இந்த வார தினமலர் வாரமலரில் பிரியமான நடிகை புகைப்பிடிக்கையில் வட்ட வட்டமாக புகை விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் இம்மாம் பெரிய வட்டம் விட முடியுமா? நல்ல வேளை இது நம்ம ஊரில் நடந்து இருந்தா அன்புமணி ரொம்பவே ரென்சன் ஆகி இருப்பாரு. எதானால் வந்தது எனத் தெரியாத இந்த ராட்சத புகைவட்டங்கள் பற்றிய செய்திக்கு இங்கே போகவும்.

பஞ்ச்: இந்த பஞ்ச் பயத்துக்கே பயத்தை காட்டறவன் - அவனுக்கு ஒரு மேட்டர்லே கருத்து சொல்ல பயம்னா பாதுகாப்பு வளையம், மலர்வளையம் இந்த மாதிரி வளையம் மேட்டர்தான்.. சோ, மீ த எஸ்கேப்பு!

செய்தி 4
ஜெர்மனி செய்தி. தேசீய லாட்டரியின் பரிசுத்தொகை 35 மில்லியன் யூரோக்களாக உயர்ந்து விட நாட்டில் அனைவரும் லாட்டரி மோகம் பிடித்து அலைகிறார்களாம். அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். ஏழ்மை ஒழிப்பு பற்றிய விவாதத்தின் பொழுது அந்நாட்டின் நிதி அமைச்சர் லாட்டரி முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தற்பொழுதுள்ள தேக்க நிலை இவரையும் விட்டு வைக்கவில்லை போல. செய்தி இங்கே.

பஞ்ச்: நாங்க எல்லாம் லாட்டரி நடத்துவோம். இப்போ எலக்‌ஷென் வருதேன்னு நம்ம பெயரில் இருக்கிறதை வேற பெயரில் மாத்தி வைப்போம். இப்படி பிச்சைக்காரன் மாதிரி லாட்டரி டிக்கெட் வாங்கிக்கிட்டு இருக்கறவன் எல்லாம் நிதி மந்திரியா இருந்தா அப்புறம் எப்படி அந்த ஊர் எகானமி இம்ப்ரூவ் ஆகுங்கறேன்.

செய்தி 5
பழங்கால கதைகளில் எல்லாம் ஒருத்தன் தவம் இருப்பான். கடவுள் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் சாகா வரம் வேண்டும் என்பான். ஆண்டவனும் சாரி அது என்னால முடியாதுன்னு சொல்லுவாரு. ஆனா இங்க ஒரு அண்ணாத்த சாகா வரம் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு பாருங்க. செய்தி இங்கே.

பஞ்ச்: சாகாவரம் எல்லாம் யாருக்கு கிடைக்குதுன்றதை பொறுத்து! கோவக்காரனுக்கு கிடைச்சா சண்டைக்கும் சாகாவரம் கிடைக்கும், அரசியல்வாதிக்கு கிடைச்சா வாரிசுக்கு வயிரெரியும், சாதா ஆளுக்கு கிடைச்சா போரடிச்சே செத்துப்போவான் ஆனா சாவமாட்டான். ஆமாம், இப்படி சாகாவரம் வாங்கிட்டு வந்ததுகளை அப்படியே வேகவச்சா வேகுமா வேகாதா?

செய்தி 6
அண்ணன் வெயிட் கிட்டத்தட்ட 325 கிலோ. வெளிய எல்லாம் போக முடியாது. ஆனா வீட்டில் இருந்துக்கிட்டே மருத்தவர் சீட்டு கொண்டு மட்டுமே வாங்க முடியும் மருந்துகளை எல்லாருக்கும் விற்பனை செஞ்சு மாட்டிக்கிட்டாரு. ஆள் மாட்டிக்கிட்ட பின்னாடி, என்னால் கோர்டுக்கு வர முடியாது நீதிபதியை வேணா விட்டுக்கு வரச் சொல்லு எனச் சொல்லி இருக்காரு. அது நடக்காமல் போகவே அண்ணன் கோர்ட்டுக்குப் போக வேண்டியதாப் போச்சு. எதுல போனாராம் தெரியுமா? வீடு மாற்றும் பொழுது சாமான்களைக் கொண்டு செல்லும் யூஹால் எனப்படும் லாரி ஒன்றில். நீதிபதி போனால் போகிறது என்று லாரியை நிறுத்திய இடத்திற்கு வந்து பெயில் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார். செய்தி இங்கே.

பஞ்ச்: மருத்துவர் சீட்டு வாங்கிகிட்டு ஆட்சியே நடத்தறாங்கப்பா எங்க ஊர்லே.. கேவலம் நீதிபதி வெளியே வந்தாராம் - இதெல்லாம் ஒரு மேட்டரு! சரி, கொடுக்கறதுதான் கொடுக்கறாரு, யாருக்கெல்லாம் கொடுப்பாரு? நடக்கறதுக்கே கஷ்டப்படற ஆளுக்கு மட்டுமா, ஸ்ட்ரைக் பண்ணி கஷ்டப்படுத்தற ஆளுங்களுக்குமா? லாரியில வந்த குண்டனுக்கு மட்டுமா, லாரியை ஹைஜாக் பண்ணிக்கிட்டு வர தொண்டர்களுக்குமா?

கடைசியா ஒரு நகர்படம்.

நியூசிலாந்தில் ஒரு விலங்கை இரு கைதிகளின் கையில் பூட்டியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் பொழுது இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குப் பின் நடந்தது நீதிமன்ற வளாக பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.



பஞ்ச்: கட்டுண்டோம் காத்திருப்போம்னு இருந்தாங்களா? நாமார்க்கும் குடியல்லோம்னு ஓடினாங்க ஓடினாங்க! பிணைப்பா, Post ஆ அப்படின்னு காம்படிஷன் வந்தா பிணைப்புதான் ஜெயிக்கும்ன்றது சங்ககாலம் முதல் சமீபகாலம்வரை வரலாறு! இது கூட தெரியாத முட்டாப்பசங்க!!

Wednesday, February 18, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009

எல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்த நேரம் இல்லை. அதனால் கொஞ்சம் கவனமாகவே போடவும்! :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.




1
2
34

5
6






7
89


10


11
12




13

1415
16

17



இடமிருந்து வலம்

3 உறிஞ்சிக் குடி என குப்பியின் நடுவே சாபமிடு (3)
5 சீட்டு விளையாட்டில் சுயத்தின் தலையை இழத்தல் அற்புதமான அழகு (5)
6 லலிதாவைத் திரும்பிப்பார், அவளுக்கு கல்யாணம் ஆனது தெரியும் (2)
7 தீவிரவாதத்தின் எல்லைகளுக்குள் பசு தலையை நீட்டும் என விளக்கு (3)
8 பக்குவம் மக்களிடை வரப்பெறும் மார்பணி (5)
11 தாய் இஞ்சியின் தலை வெட்டி போட மாமன் மகன் வருவான் (5)
12 அடிக்காத கும்மிக்கு ஈடாகும் (3)
14 முடிவில்லா வானம். அடடா அருமை! (2)
16 தலையிழந்த வீரம் தந்தியடிக்கத் தொடங்கி குழப்பிடும் உபாயம் (5)
17 தெப்பம் பார்க்க வந்த தருமியை இடை ஒடித்து தலைகீழாக வை (3)
மேலிருந்து கீழ்

1 மரத்தோடு மூன்று ஸ்வரங்கள் சேர்ந்தே ஆடும் விளையாட்டு (6)
2 திமிரில் ரிஷபம் போனால் துடித்திடும் அதன் பாகம் (3)
3 நூறு மரம் நடுவே வெட்டித் தொங்கிட தரும் ஒப்பு (5)
4 காப்பி தா என்றார் என் அப்பா (2)
9 சோறோடு உண்ணும் பதார்த்தங்கள் இரண்டு, மெய் சேர்த்தால் அசைவ அட்டகாசம் (2,4)
10 தஞ்சாவூரில் ஊரோட அவைதனில் வந்து குழம்பினாலும் பயப்படாதவை (5)
13 உடன்கட்டை ஏறியவர் ஒருவர் கடைசியில் ஆடிய ஆட்டம் (3)
15 சிவகாமியை பேச்சுவழக்கில் காட்டச் சொல்லிப் பார்ப்பது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Thursday, January 29, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஜனவரி 2009

இந்த மாதம் போட்ட புதிரில் எனக்கு நிறைவே இல்லை. வேலைப் பளு அதிகமாக வேறு இருந்தது. இருந்தாலும் விடாது போட வேண்டும் என்பதால்தான் புதிரினை வெளியிட்டேன். அதற்கேற்ற மாதிரியே இந்த முறை பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கையும் சரி, முழுவதற்கும் சரியான விடை அளித்தவர்கள் எண்ணிக்கையும் சரி மிகக் குறைவாகவே இருந்தது. எதனால் இந்த முறை அனைவரையும் கவரும்படியாக புதிர் இல்லை என்பதைச் சொன்னால் அடுத்த முறை திருத்திக் கொள்ள முயல்வேன். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்
  1. ஜி3
  2. ராம்
  3. மஞ்சுளா
  4. ராமையா நாராயணன்
  5. ஏஸ்
  6. திவா
  7. அரசு

அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
மடி
- ஆசாரமாய் இருப்பதை மடி எனச் சொல்வார்கள். மடக்கு என்றாலும் மரணமடை என்றாலும் மடி என்ற பொருள் வருகிறது அல்லவா.

6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
தில்லை வாரும்
- இதுதான் எனக்கு சரியாக அமையாத குறிப்பு. நடராசர் பார்க்க தில்லை வாரும். இதில் வருவதில்லை என்பதில் இருந்து தில்லை என்பதும் அதைத் தொடர்ந்து வரும் வந்திடும் என்பதற்கு இணையான சொல்லாக வாரும் என்பதையும் போட்டு இருந்தேன். பலரும் சரியாக சொன்னது எனக்கே ஆச்சரியம்தான்.

7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
விதைத்த
- கிழவி தைத்த என்ற சொற்களின் உள்ளேயே விதைத்த என்ற விடை இருக்கிறது. முளைக்கப் போட்டது என்பது விதைத்த என்ற பொருளை உணர்த்துகிறது.

8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
பெண்ணை
- மகளை என்பதற்குப் பெண்ணை எனச் சொல்லலாம். பெண்ணை என்பது நதியின் பெயரும் கூட.

9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
தாரமா
- கொஞ்சம் க்ரிப்டிக்கான குறிப்புதான். அம்மா என்னும் சொல்லுக்கு ஈடாக மாதா என்ற சொல்லை எடுத்துத் திருப்பினால் தாமா என வரும். அதன் நடுவே கொஞ்சமாய் காரம் என்பதால் அதிலிருந்து ஒரு எழுத்து - ர என்ற எழுத்தைப் போட்டால் மனைவியா என்ற பொருள் தரும் தாரமா என்ற சொல் வரும்.

11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
கமுதி
- நகரத்தின் பெயர். திருப்பிப் போட்டால் திமுக. தற்பொழுது நாட்டை ஆளும் கட்சி.

13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
சகடம்
- சகடம் என்றால் வட்டம். சங்கடம் என்ற சொல்லி ‘ங்’ என்ற எழுத்தை எடுத்தால் சகடம் வந்திடும். ‘ங்’ என்ற எழுத்தை இங்கு என உச்சரிப்பதால் இங்கு இல்லா என்று குறிப்பில் கூறியுள்ளேன்.

16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
விவேகமற்ற
- புத்தியற்ற என்பது இதற்குப் பொருள். புரவியின் இறுதி = வி. மெதுவாக = வேகமற்ற. இரண்டும் சேர்ந்தால் விவேகமற்ற வருதா!

17 இரவில் தெரியும் சூரியன் (2)
ரவி
- மிக எளிதான குறிப்பு. சூரியன் என்பது பொருள் இரவில் என்ற வார்த்தையினுள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்த தெரியும் என்ற குறிச்சொல்லும் இருக்கிறது.

மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
அடிஉதை
- கொஞ்சம் யோசித்தல் ரொம்ப எளிமையான குறிப்புதான். காயம் பட அடி உதை. பாதம் என்றால் அடி. மிதி என்றால் உதை.

2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
பாதித்ததா
- கொஞ்சம் வேண்டுமென்றே குழப்பிய குறிப்பு. அரை என்றால் பாதி. அரை முத்தம் என்றால் முத்தம் என்ற சொல்லி பாதி = த்த. ஆக அரை என்ற சொல் இங்கு டபுள்ட்யூட்டி செய்கிறது. கொடு என்றால் தா. பாதி+த்த+தா = பாதித்ததா. தாக்கியதா என்பது பொருள்.

3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
சிலையா
- கலை என்ற சொல்லின் தலையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது லை. பிச்சை கேள் என்றால் யாசி. இது தலைகீழாக மாற சியா. இதனுள் லை என்ற எழுத்து நுழைய சிலையா. சிற்பமா என்பது பொருள்.

4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
திருமண்
- என்னோட பேவரைட் குறிப்பு இதுதான். திரு என்றால் லட்சுமி. மண் என்றால் நிலபுலன். திருமண் என்பது நாமத்தைக் குறிக்கும்.

10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
மாசற்றது
- மாது சற்றே என்ற எழுத்துக்களை எடுத்து அதில் றே என்பதின் ஓசையைக் குறைத்து ற என மாற்றிப் போட்டால் மாசற்றது என்ற சொல் கிடைக்கும். தூய்மையானது என்பது பொருள்.

12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
முனைவேல்
- இது ரொம்ப எளிதான் குறிப்பு என நினைத்தேன். ஆனால் நிறையா பேர் போடாதது ஆச்சரியம்தான். முப்பத்திருபல் முனைவேல் காக்க என கந்த சஷ்டிக் கவசத்தில் வரும்.

14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
டமாரம்
- உலோக முரசு மற்றும் டமாரச் செவிடு என இரு வகையான அர்த்தம் கொண்ட சொல்.

15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)
சமன்
- சமன்பாடு என்றால் ஈடுகோள். ஆங்கிலத்தில் Equation. அதில் பாடு போக மீதம் இருப்பது சமன். மட்டம் என்பது பொருள். ஈடுகோள் என கூகிளாண்டவரை வேண்டி இருந்தால் எளிதாக இருந்திருக்கும். சமம் என்ற விடையை சரியானதாகக் கருதவில்லை.


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

Tuesday, January 20, 2009

புதசெவி - 01/20/2009 அல்லது பெனாத்தலாருக்கு எச்சரிக்கை!

இந்த மாதம் புதசெவி பதிவு போடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா மாற்றங்கள் எல்லாம் பெரிய இடங்களில்தான் உனக்கென்ன என மனசாட்சி கேட்க, அதுவும் சரிதான் என்று வழக்கம்போல் புதசெவி பதிவு எழுதிட்டேன். இனி இந்த பதிவுக்கான விஷயங்கள்.

செய்தி 1
நீங்க எல்லாரும் நம்ம பெனாத்தலார் எழுதின பதிவைப் படிச்சு இருப்பீங்க. ஜூப்பரு, நெத்தியடி அப்படின்னு எல்லாம் ஏத்திவிட்டு இருக்காங்க நிறையா புண்ணியவானுங்க. ஆனா, ஐயா பெனாத்தலாரே நான் சொல்லறேன். சாக்கிரதையா இருந்துக்குங்க. இப்படித்தான் தாய்லாந்து நாட்டு இளவரசர் பத்தி என்னமோ எழுதினதுக்காக ஒரு அவுஸ்திரேலிய எழுத்தாளரை மூணு வருஷம் உள்ள தள்ளிட்டாங்களாம். அது தாய்லாந்து அதனால மூணு வருஷம். இது தந்தையர் நாடு. சாக்கிரதை மக்கா! செய்திக்கு இங்க போங்க. பெனாத்தலார் பதிவுக்கு இங்க.

பஞ்ச்: உங்களுக்கும் பெனாத்தலுக்கும் பகைன்னா நேரா தீத்துக்கங்க.. இப்படி ஆமையை திருப்பி போடு அடிக்கணும் ரேஞ்சுக்கு சமையல் குறிப்பு போடாதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.

செய்தி 2:
அடுத்தது நம்ம ஊர் மேட்டர் ஒண்ணு பார்க்கலாம். புத்தாண்டு, இல்லை பொங்கல், இல்லை கருத்துக் கந்தசாமி பொறந்த நாளு, இப்படி ஒவ்வொரு ஆட்சியாளரைப் பொறுத்து எதோ ஒரு நாள். நாம எல்லாரும் பொங்கல் பொங்கிச் சாப்பிடுவோம். ஆனா நம்ம ஊர் ஒண்ணு இந்த நாளில் அகில உலக பிரபல்யம் அடைஞ்சு இருக்கு. ஏன் தெரியுமா? எங்க ஊரை எந்த வியாதியும் அண்டக்கூடாதுன்னு 7 வயசு பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் தவளைகளோட கல்யாணம் பண்ணி வெச்சு இருக்காங்க. மேட்டருக்கு இங்க போங்க. இந்தக் கல்யாணமா இல்லை முன்னாடி சொன்ன கட் அவுட் கல்யாணமா? எது பெட்டர்?

பஞ்ச்: தவளைகளுக்கும் பெண்களுக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? இதில் கருத்து சொல்லவேண்டியது பெண் உரிமைக் கழகமும் தவளை உரிமைக் கழகமும்தானே தவிர பஞ்ச் பரமசிவம் கிடையாது

செய்தி 3
சில நாட்களுக்கு முன் விமானி ஒருவர் திறமையாக ஹட்சன் நதியில் ஒரு விமானத்தை இறக்கி 155 உயிர்களைக் காப்பாற்றி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் விமான நிலையத்தில் இறக்காமல் உயிர்களைக் காப்பாற்றிய விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். கார்டிப் நகரத்தில் இருந்து பாரிஸ் வரை வந்த விமானத்தில் தரை இறங்கும் முன் விமானி செய்த அறிவிப்பு "Unfortunately, I'm not qualified to land the plane in Paris." இப்படிச் சொல்லி விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சென்றதாம். செய்தி இங்கே. எகொஇச!

பஞ்ச்: இனிமேல ஒண்ணும் சரி ஆவாதுன்ற நிலைமை வந்ததும், நான் தான் தப்பு.. நான் தான் தப்பு - சத்யமா சொல்றேன்.. என்னை விட்டுடுங்க நான் ஓடிப்போறேன்னு நம்பினவங்களை நட்டாத்துல விடாம, கிளம்பின இடத்துக்கே கொண்டு போய் சேத்தாரே புண்ணியவான்.. அவரைப் பாராட்டுவீங்களா.. அதை விட்டுட்டு..

செய்தி 4
இது நம்ம மேட்டர். தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள் பற்றி எல்லாம் கேட்டு இருப்பீங்க. ஆனா இவங்க தூக்கத்தில் எழுந்து கணினியை துவக்கி, தனது மின்னஞ்சல் கணக்கினுள் போய், நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்காங்களாம். அடுத்த நாள் அந்த மின்னஞ்சல்கள் எல்லாம் பார்த்து அம்மிணிக்கு ஒரே அதிர்ச்சியாம். அந்த கால ஆனந்தவிகடனில் வரும் ஆபீசில் தூங்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வாழ்வுதான்! செய்தி இங்கே.

பஞ்ச்: தூக்கத்துல மின்னஞ்சல்தானே அடிச்சாங்க? இது ஒரு தப்பா? போதையிலே எத்தனையோ பேர் பதிவே போடறாங்க! தூக்கத்துல நாடே ஆளறாங்க.. இதுக்கெல்லாம் அந்த அம்மணி அதிர்ச்சி ஆகறதுதான் அதிர்ச்சியா இருக்கு!

செய்தி 5
கவுஜ எழுத வேண்டாம், கவுஜ எழுத வேண்டாமுன்னு சொன்னாக் கேட்கறாங்களா? இப்படி உடைச்சு உடைச்சு கவுஜ எழுதறது, அதையே யோசிக்கறது எல்லாம் ஒரு மாதிரியாப் போயிடுமுன்னு சொன்னாக் கேட்கறதே இல்லையே. இங்க பாருங்க, கவுஜ எழுதறாங்க, அதைப் படிச்சு அடுத்தவங்களைக் கேட்க வெச்சுக் கொடுமைப் படுத்தறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் -10 டிகிரி குளிரில் தண்ணீரில் போய் குதிக்கிறது எல்லாம் இரண்டாம் மாடி. இதுக்குத்தான் சொல்லறேன் - கவுஜ வேண்டாம்! செய்தி இங்க.

பஞ்ச்: கவுஜ வேண்டாம் என பாசிஸ முரசுகொட்டும் கொத்தனாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கவுஜைன்னா எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இங்கே திட்டறதுக்கும் கவிதைதான்.. வெட்டறதுக்கும் கவிதைதான்.. ஜெயிச்சா மகனை வாழ்த்தவும் கவிதைதான்.. தோத்தா மக்களைத் திட்டவும் கவிதைதான்..நீளமா எழுதி அதை படிக்கட்டா வெட்டி கவுஜ படைச்சுப்பாருய்யா அப்ப தெரியும் கஷ்டம்! உங்களுக்குத் தெரியுமா நீங்க கொடுத்த செய்தியிலே எவ்ளோ பெரிய புரட்சி இருக்குதுன்னு? கவுஜ எழுதின பாவத்தை தொலைக்க உடனே முழுக்கு போட்டிருக்காங்க - நடக்குமா இது நம்ம ஊர்லே?

செய்தி 6
கடைசியா ஒரு சோகச் செய்தி. அவுஸ்திரேலியாவில் ஒரு ரக்பி விளையாட்டின் முதற்பகுதி முடியும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே விழுந்து இறந்துவிட்டாராம். உடன் ஆடியவர்கள் என்ன செய்தார்களாம் தெரியுமா? ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார்களாம். இதனால் இறந்தவர் குடும்பம் மிகுந்த மன கஷ்டத்திற்குள்ளானார்களாம். இங்க படியுங்க.

பஞ்ச்: சே.. இரக்கம் கெட்ட விளையாட்டா இருக்கு! நாமன்னா குறைஞ்சது ஒரு 10 நாள் வீராவேசமா பேசுவோம், 6 மாசம் அமுக்கி வாசிப்போம், ரெண்டு வருஷம் கழிச்சி சமாதானம் ஆவோம்.. அப்புறம்தான் கண்ணு பனிக்கும் இதயம் புளிக்கும் - செத்தவங்களை மறப்போம். நம்மளை மாதிரி ’கருணை உள்ளம்’ அவங்களுக்கு வருமா?

கடைசியா ஒரு போனஸ் மேட்டர். ஆனா இது வயது முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டும்.



பஞ்ச்: என்ன மேட்டரா இருந்தாலும் (முக்கியமா என்னோட கருத்துக்களா இருந்தா) அவசரப்பட்டு கருத்து சொல்லிடக்கூடாதுன்னு சொல்ற அற்புதத் தத்துவமய்யா இது! சரி.. நீரும் பாத்துட்டீர்.. உங்க கலர் கண்ணாடி பல்லை இளிச்சுதா இல்லையா?

Wednesday, January 14, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009

எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம் மொத்தமாக அவுட்சோர்ஸ் பண்ணிவிட ஒரு சான்ஸ் கிடைக்கும். :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.



1
2
3
4
5
6





7

8



910


1112

1314


15


16
17






இடமிருந்து வலம்
5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
17 இரவில் தெரியும் சூரியன் (2)


மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Wednesday, December 24, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008

அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துகள்! இந்த முறை குறுக்கெழுத்துப் புதிர் கொஞ்சம் கடினமாகவே இருக்க வேண்டும் என முனைந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டேன் என்பது உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது. வழக்கத்தை விட குறைந்த அளவு பங்கேற்பாளர்களால்தான் அனைத்து விடைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் முனைந்திருந்தால் இன்னும் பலரும் முடித்து இருக்கலாம். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

  1. பெனாத்தல் சுரேஷ்
  2. ஸ்ரீதர் நாராயணன்
  3. யோசிப்பவர்
  4. அரசு
  5. வடகரை வேலன்
  6. மிஸஸ் யோசிப்பவர்
  7. சின்ன அம்மிணி
  8. திவா
  9. ஏஸ்
  10. மஞ்சுளா ராஜாராமன்
  11. பாச மலர்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
அதிகாரம்
- மிளகாய் அதிகமானால் அதி காரம். ஆளுகை என்றால் அதிகாரம். பங்கேற்றவர்கள் அனைவரும் சரியான பதில் சொன்ன குறிப்பு என்பதால் மேலும் விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
ரயிலடி
- பெனாத்தல் விடை தமிழ் வார்த்தையா என்று கூட கேட்டுவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை எனப் போட்ட குறிப்பு இது. ரயில்வே ஸ்டேஷனை ரயிலடி என்றே பலரும் குறிப்பிடுவர். புகைவண்டியின் கீழே என்பதையும் ரயிலடி எனக் குறிப்பிட முடியும் அல்லவா?

7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
சரக்கு
- அவசரக்குடுக்கை என்ற சொல்லின் உள்ளேயே சரக்கு என்ற சொல் இருக்கிறது. அதனைக் குறிப்பிடும் வகையில்தான் பார்த்த என குறிப்பு வருகிறது. சரக்கு என்பதற்கு விளக்கமாய் பொருள் என்பதும் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.

8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
பரிசுத்தம்
- பலரும் சரியாகப் போட்ட விடைதான். பரி என்றால் குதிரை. குதிரையைக் குளிப்பாட்டினால் அது சுத்தமாகும். ஆக பரிசுத்தம். இதற்கு விளக்கமாக தூய்மை என்பதும் குறிப்பில் வருகிறது.

13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
சம்பாதித்து
- ஈட்டி என்பதற்கு சம்பாதித்து என்பது பொருள். சம்பா என்பது அரிசி வகை எனவும் தொடங்காமல் உதித்து என்பது தித்து என்ற எழுத்துக்களையும் தருகிறது. அனைவரும் சரியான பதில் சொல்லிய மற்றொரு குறிப்பு இது.

14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
அம்பாரி
- யானையின் மேல் அமரப் பயன்படும் இருக்கையின் பெயர் அம்பாரி. அம்பா என்றால் தாயே எனப் பொருள். பெரும்பாலும் பாடல்களில் வரும். இதனோடு ஏழு ஸ்வரங்களில் ஒன்றான ’ரி’யைச் சேர்த்தால் அம்பாரி என்ற சொல் கிட்டும்.

15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
சாதித்து
- சாதிப்பது என்றால் அடம் பிடிப்பது. சாதித்து என்ற சொல்லுக்குப் பொருளாக அடம் பிடித்து என்று குறிப்பு தந்திருக்கிறேன். மூடு என்பதற்கு சாத்து என்று சொல்லுவோம். அதனோடு திறந்த என்ற சொல்லின் முதலான தி என்ற எழுத்தைச் சேர்த்துக் கொண்டால் சாதித்து என்ற சொல் கிடைக்கும்.

16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)
பார்த்திடு
- நோக்கிடு என்றால் பார்த்திடு. அனேகமாகப் பார்த்தனை என்று சொல்லும் பொழுது பார்த்தனை என்ற சொல்லின் பெரும்பாலான எழுத்துக்களைக் கொண்டு என புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ’பார்த்’ என்ற எழுத்துக்கள் விடையின் முதல் பகுதியாக வருகின்றன. இவற்றோடு திடுக்கென என்ற சொல் முடிவில்லாமல் போக, அதாவது திடு என்ற எழுத்துக்கள் சேர பார்த்திடு என்ற விடை கிடைக்கிறது.

மேலிருந்து கீழ்

1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
பிரதாபம்
- பெரும்பாலானவர்கள் தவறு செய்த விடை இது. பரம்பரை என்றே பலரும் பதில் சொல்லி இருந்தார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை! அப்பா என்றால் பிதா. பம்பரத்தின் தலை எடுத்து என்றால் பம் என்ற எழுத்துக்கள் விலகி பரம் என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இவற்றைக் கலைத்தால் பெருமை என்ற பொருள் கொண்ட பிரதாபம் என்ற விடை கிடைக்கும்.

2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
வலஞ்சுழி
- கூகிளாண்டவரை வேண்டிக் கேட்டிருந்தால் விடை எளிதாகக் கிடைத்து இருக்கும்.

ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
என்பது தேவாரம். திருவலஞ்சுழி என்ற ஊரில் இருக்கும் வலஞ்சுழிநாதரைக் குறித்துப் பாடிய பதிகம். Clockwise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் கடிகாரச்சுற்றுக்குத் தமிழில் வலஞ்சுழி என்று சொல்வார்கள். இந்த குறிப்பிற்கு உதவிய பெனாத்தலாருக்கு ஒரு தனி நன்றி.

4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
திவசம்
- எளிமையான குறிப்புதான். திவசம் என்றால் திதி. வம்சத்தினை என்ற வார்த்தையில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை (வம்சதி) எடுத்துக் கலைத்தால் திவசம் என்ற விடை கிடைக்கும்.

5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
ரசிக்க
- குறிப்பினுள்ளே ரசிக்க என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுவைக்க என்றால் ரசிக்க. எளிமையான குறிப்புதான்.

9. மனைவியின் காலொடித்த குணம் (3)
தரம்
- மனைவி என்ற சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் தாரம். இதில் தா என்ற எழுத்தைக் குறுக்கி த எனச் செய்தால் தரம் என்ற சொல் கிட்டும். இதைத்தான் காலொடித்து எனக் குறிப்பில் தந்திருந்தேன். தரம் என்றால் குணம். இதற்கு விடையைச் சொல்லாமல் எனக்கும் என் தங்கமணிக்கும் சிண்டு முடியப் பார்த்த சின்ன அம்மிணியை என்ன செய்யலாம்? :))

10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
பாதித்திடு
- அரை என்றால் பாதி. தொடங்காமல் குத்திடு என்பதில் இருந்து த்திடு என்ற எழுத்துக்கள் கிடைக்கின்றது. இரண்டையும் சேர்த்தால் பாதித்திடு என்ற விடை கிடைக்கும். பாதிப்பு என்றால் தாக்கம் என்பதால் பாதித்திடு என்பது தாக்கிடு என குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆனால் அரை தொடங்காமல் என குறிப்பை பலரும் பிரித்து விடை போடமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
புதுத்துணி
- எளிமையான குறிப்புதான். பயன்படுத்தா ஆடை என்பது புதுத்துணி. தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணியும் பட்டாசும்தானே தேவை. நாங்க எல்லாம் பொங்கலுக்குத்தான் புதுத்துணி எடுக்கறது என்று அரசியல் பேசும் இடம் இது இல்லை! :)

12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
சாம்பார்
- இட்லிக்கு சரியான சைட் டிஷ் சாம்பார்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனை சாம்பார் என்று சொல்பவர்கள் உண்டு. இது இரண்டையும் சேர்த்துதான் குறிப்பு உருவானது. வாஞ்சி அவர்கள் இதனை சரியாக அமையும்படி செய்தார். அவருக்கு நன்றி.

13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)
சரிபாதி
- சராசரி, பாதிப்பு என்ற இரண்டு சொற்களிலும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டால் இரண்டில் ஒரு பங்கு என்ற பொருள் வரும் சரிபாதி கிடைக்கும்!


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

Monday, December 15, 2008

புதசெவி - 12/15/2008

எழுதறது சுத்தமா நின்னு போச்சு. மாசத்துக்கு ஒரு குறுக்கெழுத்துப் போட்டுட்டு பேசாமப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா உலக நடப்புகள் நம்மை அப்படிச் சும்மா இருக்க விடுதா? எதையாவது செஞ்சு இப்படி புதசெவி பதிவு போட விட்டுடறாங்க. எஞ்சாய்!!

செய்தி 1
நம்ம காரை யாராவது தீ வெச்சுக் கொளுத்தினா நாம போலீஸ் கிட்ட போவோம். நிறையா பணம் இருக்கறவங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை எடுப்பாங்க. இவங்களும் கார்கள் இரண்டு முறை எரிக்கப்பட்டவுடன் இப்படி தனியார் பாதுகாவலர்களை வெச்சுக்கலாமான்னு யோசிக்கறாங்க. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இவங்கன்னு நான் இங்க சொல்வது போலீஸ். தனியார் பாதுகாப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு! எகொஇச!! இங்க போய் பாருங்க.

பஞ்ச்: இதிலென்ன சுவாரஸ்யத்தைக் கண்டீங்க? நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா? சரி, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துல யாராச்சும் திருடிட்டா எங்க போயி புகார் கொடுப்பாங்க?

செய்தி 2
சினிமாவில் பல முறை பார்த்த காட்சி. பொம்மைத் துப்பாக்கியை எடுத்துவிட்டு நிஜ துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். யாராவது அதை எடுத்து சுட்டுக் கொண்டு சாவார்கள். அது சினிமாவில் சரி. ஆனால் நாடகத்தில் நடந்தால்? அப்படி நடந்து போச்சே! அட்டைக் கத்திக்குப் பதில் நிஜக் கத்தியை வெச்சு ஒரு நடிகரை மருத்துவமனைக்கே அனுப்பிட்டாங்கய்யா!! இங்க படியுங்க.

பஞ்ச்: இதுவும் நம்ம ஊருக்கு ஓல்டு நியூஸ். மருத்துவமனைக்கு மட்டும்தான் அவங்க அனுப்பினாங்க.. நாம கோட்டைக்கே அனுப்பினோம்! ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..

செய்தி 3
மும்பை தாக்குதல் மாதிரி நியூயார்க் நகரில் நடக்கக்கூடாது, அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 போலீசருக்கு தானியங்கி துப்பாக்கிகள் இயக்கக் கற்றுத் தருகிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் பயிற்சி வெறும் மூன்று நாட்களுக்குத்தானாம். அது மட்டுமில்லாமல் தற்பொழுது பணியில் இருப்பவர்களுக்குத் தராமல் இப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சியாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஒரே இடத்தில் இருக்கிறார்களாம். பயிற்சி தருவது எளிதாம். பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தம் பல இடங்களில் இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி தருவது கஷ்டமாம். இங்க படியுங்க.

பஞ்ச்: என்ன நீங்க? எல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்ட நியூஸாவே கொடுக்கறீங்க? வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல? அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க? இவங்களையே மறுபடியும் கூப்பிடுவாங்களா?

செய்தி 4
ஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டது நமக்கு எல்லாம் நல்லாத் தெரியும். வேறு பலர் என்னென்ன ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னா கிசுகிசு. இவங்களும் அது மாதிரிதான் ஆப்புரேஷன் செஞ்சுக்கறாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் இவங்களுக்கு ஆப்புரேஷன் உயிர் போனதுக்குப் பின்னாடி. ஆமாம், இறந்த பின் காட்சிக்கு வைக்கப்படும் பொழுது சிக்கென தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக இறந்த உடன் அழகு சிகிச்சை செய்யச் சொல்லி உயில் எழுதி வைக்கிறார்களாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில நெக்ரோபிலிக்குங்களுக்கும் அங்கீகாரம் கிடச்சா? அப்ப இறந்தபிறகும் அழகா இருக்கவேண்டியது அவசியமாப் போயிடும் இல்லையா?

செய்தி 5

உலகில் பலவிதமான நோய்கள் இருக்கிறது. சிலது உடல்நிலை சார்ந்தது சில மனநிலை சார்ந்தவை. இவற்றில் சில மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. குடிப்பழக்கம் கூட இப்படித்தான். அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் நிச்சயம்தான். என்னடா இப்படி தெரிஞ்ச மேட்டரைச் சொல்லறானேன்னு பார்க்கறீங்களா? இவர் கதையைப் படியுங்க. இவரும் குடிப்பழக்கத்தால்தான் இறந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவர் அளவுக்கதிகமாகக் குடித்தது வெறும் தண்ணி. இங்க படியுங்க.

பஞ்ச்: தண்ணியில போதை இல்லையா? விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு? (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை? வெறும் தண்ணியக் குடிச்சாலும் சாவு வருது.. எனவே க்ளோஸ் த மேட்டர், ஓப்பன் த குவார்ட்டர்!

செய்தி 6
நம்ம ஊர் மேட்டரே சொல்லலையேன்னு வருத்தப்படறவங்களுக்காக இது. பதின்ம வயதில் தலையாய பிரச்சனை என்னன்னு கேட்ட முகத்தில் பரு வருவதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க கல்யாணமான பெண் ஒருவருக்கு அது எவ்வளவு பிரச்சனையா இருக்கு பாருங்க. கல்யாணம் முடித்துத் தேன்நிலவு சென்ற இடத்தில் இவர் முகத்தில் பரு பிரச்சனை வந்ததாம். திரும்பி வந்த கணவன் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் எனச் சொல்லி மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாராம். முதலில் இந்த வழக்கு சென்ற குடும்ப நல நீதிமன்றம் "repulsive condition of the wife is undoubtedly tragic for the wife but this is traumatic for the spouse" என்றும் இந்நோய் இருப்பதை சொல்லாமல் மறைத்தது தவறே என்றும் தீர்ப்பு அளித்ததாம். நல்ல வேளையா உயர்நீதி மன்றம் இந்த மாதிரி தீர்ப்பில் சொன்னதை நீக்க வேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு அளித்ததாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஆமாமாம்.மறைக்கிறது பெரிய பிரச்சினைதான். ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு! பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி!