Wednesday, May 30, 2007

கமலின் வலி எனக்குப் புரிகிறது!

இன்னிக்கு தமிழ்படங்கள் எடுத்துக்கிட்டா பெரும்பாலான படங்கள் வந்து இந்த பார்முலா படங்கள் எனச் சொல்லக்கூடிய ஒரு சூத்திரத்திற்குள் அடங்கிவிடுகிறது. அதாவது ஒரு ஹீரோ+ அம்மா அல்லது தங்கை செண்டிமெண்ட்+ ஒரு பணக்கார ஹீரோயின்+ அவளோட கெட்ட அப்பா+ 5 பாட்டு + 4 சண்டை + ஒரு பஞ்ச் டயலாக் இதுதானே அந்த சூத்திரம். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை இதையே அரைச்சு அரைச்சு தியேட்டர் பக்கம் போனாலே புளிச்ச வாடை அடிக்குது.

இதுலேர்ந்து கொஞ்சம் வித்தியாசமா படங்கள் தர முயற்சி பண்ணற, விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் முக்கியமான ஒருவர் நம்ம கமல். ஆனாப் பாருங்க அந்த மாதிரி முயற்சிகள் பெரும்பாலும் முழுதும் உள் வாங்கப் படறது இல்லை. பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவுது, சில வெற்றிப் படங்கள் ஆனாலும் அதில் அவர் கவனம் எடுத்து செதுக்கி இருக்கும் காட்சிகள் கண்ணில் படாமலேயே போகுது. உதாரணத்துக்குப் பார்த்தீங்கன்னா, அன்பே சிவம் படம் ஓரளவு வெற்றி பெற்ற படம்தான். ஆனா அதில் அவர் சிரமம் எடுத்து செதுக்கி இருக்கும் சில காட்சிகள் எல்லாம் நம்ம கண்ணில் படவே இல்லை. அவர் வந்து அந்த ஒரிசா ஹோட்டலில் தரையில் படுத்து இருப்பார். அப்போ பார்த்தீங்கன்னா அவரோட ஒரு கால் வந்து மற்றொரு காலை விட குட்டையாகத் தெரியும். இதை நாம எத்தனை பேர் பார்த்து இருப்போம். ஆனா அவ்வளவு உழைப்பு இருக்கு அதற்குப் பின்னாடி.


ஒருத்தரே ஒருத்தர் பார்த்துப் பாராட்டினாலும் போதும். அதுதான் எனக்கு சந்தோஷம் என அவர் சொன்னதாகப் படித்து இருக்கேன். தான் சரியானதைத்தான் செய்கிறோம் என்பது தெரிந்தும், அதற்காக கடினமாக உழைத்தும், அது போய்ச் சேர வேண்டிய அளவிற்குப் போய் சேராதது எவ்வளவு வலியைத் தரும். அதுவும் ஒரு முறை இல்லை. மீண்டும் மீண்டும். இப்படி தொடர்ந்து செய்வதற்கு எவ்வளவு மனத்துணிவு இருக்க வேண்டும். உண்மையில் இவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். இவருடைய முயற்சிக்கு ஆதரவு தந்து இவரை மீண்டும் பார்முலா படங்கள் பக்கம் போகாமல் இருக்கச் செய்வது நம் கடமை.

என்னடா இது ஓவட்டோஸ் புலம்பலா இருக்குன்னு பார்க்கறீங்களா? பின்ன என்னங்க, ரொம்பவே மண்டையை உடைச்சுக்கிட்டு ஒரு பதிவு போட்டா, அந்த ஐடியா சரியாகப் போய் சேராமல் இருந்தால் அவரு படம் ப்ளாப்பாகுறதுதான் ஞாபகத்துக்கு வருது.

உப்புமா பதிவு ஒண்ணு போட்டேன். அதில் வெளிப்படையா தெரியறது ஒரு லேயர், அப்புறம் உள்குத்து ஒரு லேயர் என பல லேயரில் வைத்து ஒரு பதிவு போட்டா முதல் லேயரை மட்டும் பாத்துட்டு இதெல்லாம் ஒரு உப்புமாவான்னு கேட்டுட்டு போயிடறீங்க. அதுவும் கேப், பார்மேட்டிங், வெள்ளெழுத்து, ஹைலைட் அப்படின்னு எவ்வளவுதான் ஹிண்ட் தரது. இப்போ சொல்லறேன் கேட்டுக்குங்க.

மக்களே, அந்த பதிவில் பார்மேட்டிங் பிரச்சனைகள் இல்லை. வெள்ளைக் கலரில் சில பத்திகள் எழுதப் பட்டுள்ளன. முழு பதிவையும் ஹைலைட் செய்தீர்களானால் அந்த எழுத்துகள் தெரியும். பெனாத்தலாரின் குறிப்புகள் அவை. படித்து மகிழுங்கள்.


அப்பாடா. முடியலைடா சாமி!!

டிஸ்கி: வலையுலக வரலாற்றில் முதன் முறையாக என் பதிவுக்கு பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருக்கிறேன். இது 1005க்கு பயந்து என வரும் வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் பின்னூட்டங்கள் போடப்பட வேண்டிய இடம் இது.